ஆந்திரா சாமுவேல் ஜெகன் ஆட்சியில் பல கோயில்களுக்கு கலப்பட நெய் விநியோகம்: SIT விசாரணை அறிக்கையில் தகவல்
13 Feb 2026,
ஏலூரு: ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்தது உறுதியானது.
இந்நிலையில், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் மற்றும் ஏலூரில் உள்ள சின்ன திருப்பதி என்றழைக்கப்படும் துவாரகா திருமலை கோயிலிலும் பிரசாதங்களில் இதே கலப்பட நெய் உபயோகப்படுத்தப்பட்டதாக சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு அளித்துள்ள அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
போலே பாபா பால் நிறுவனம் திருப்பதியில் உள்ள விநாயகா ஏஜென்சிஸ், சுமதி டிரேடர்ஸ் ஆகிய 2 நிறுவனங்களில் இருந்து ரசாயனங்கள் வாங்கி, அதனை நெய் போன்ற திரவத்தில் கலந்தது அம்பலமாகி உள்ளது. இந்த 2 ஏஜென்சிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நெய் போன்ற ரசாயனம் கலந்த திரவத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மட்டுமல்லாது, ஆந்திராவில் உள்ள பல முக்கிய கோயில்களுக்கும் சுமதி டிரேடர்ஸ் மற்றும் விநாயகா ஏஜென்சிஸ் மூலமாக வாங்கிச் சென்று கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது பக்தர்கள் தங்களின் கோபத்தை சமூக வலைதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணமாக இருந்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment