Tuesday, November 11, 2025

சோழர்களின் பூர்வீகம்?

சோழர்களின் பூர்வீகம்?

http://www.worldtamilswin.com/read-tamil-news/3498/தெலுங்கு-சோழர்களும்-ஆரிய-சோழர்களும்--3498#.WxVIxb1X40M

சோழர்கள் எந்தளவுக்குத் தமிழர்கள் என்ற கேள்வி தான் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. மொழி அடிப்படையில் பார்த்தால் சோழர்களில் ஒரு பிரிவினர் தமிழர்களாகவும், மறு பிரிவினர் தெலுங்கர்களாகவும் இருந்துள்ளனர். அல்லது தமிழ் மரபணுக்களைத் தான் தேடுவேன் என கங்கணம் கட்டுவோரின் பிரகாரம் பார்த்தால் சோழர்களின் ஆதி மூலம் வட மேற்கு இந்தியாவில் இருந்து வந்தததாகவே பலரும் கருதுகின்றனர்.



சோழர்கள் பற்றிய குறிப்பு அசோகனது கல்வெட்டுகளில் இருந்தே காணப்படுகின்றன. சோழர்கள் பற்றி அறிய முற்படுவோர் சங்க இலக்கியங்கள், இந்திய புராணங்கள், இலங்கையின் மகாவம்ச நூல், தொலமி உட்பட வெளிநாட்டுப் பயணர் குறிப்புக்கள், பல்வேறு கல்வெட்டுக்கள், சோழ மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகள், சோழர்கள் குறித்து ஆராயப்பட்டு எழுதப்பட்ட ஐரோப்பிய மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள விரிவான நூல்கள் துணைக் கொண்டே அறிய இயலும்.
சோழர்கள் காவிரி நதி பாயும் இன்றைய தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளடங்கலான சோழமண்டலத்தையே ஆட்சி செய்து வந்துள்ளனர். கிழக்கே கடல், தெற்கே புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் தென் வெள்ளாறு, மேற்கே கோட்டைக்கரை (மதிள்கரை - மதுக்கரை), வடக்கே கடலூர் மாவட்டத்தில் இருக்கும் வடவெள்ளாறு ஆகியவை சோழநாட்டு எல்லை என கம்பர் பாடிய சோழமண்டல சதகம். 10-ம் பாடல் கூறுகின்றது. இதனை பிற்காலத்திய கிருஷண்தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டும் உறுதி செய்கின்றது.

செம்பியன் என்ற சிபி மன்னன்
அது போக இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் சோழர்களின் முன்னோராக சிபிச் சக்கரவர்த்தியை கூறுகின்றனர். சிபிச் சக்கரவர்த்தி வட நாட்டில் வாழ்ந்த அரசனாக மகாபாரதம், பௌத்த ஜாதக கதைகள், சீனக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளது. சிபி மன்னன் இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியை ஆண்டு வந்தவன். இன்று கூட சிபி என்ற ஊர் அங்குள்ளது. சீன பயணி பாசியான் இந்தக் கதையை பதிவு செய்துள்ளார். புறா ஒன்றைக் காக்க தன் தசையை வெட்டிக் கொடுத்த உத்தமன் என்று புகழுரைக்கின்றது. ஏன் இவன் வழி வந்தவர்களாக புறநானூறு சோழர்களை பதிவு செய்ய வேண்டும்.
இதனை புறநானூரு மட்டுமில்லை வடமொழி நூல்கள் எழுதிய தண்டின், வராகமிகிரர் ஆகியோரும் சோழர்கள் சிபி வம்சாவளி என்றே கூறுகின்றனர். அதே போல திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டும் சோழர்கள் தம்மை வடநாட்டோடு தொடர்பு படுத்திக் கூறியுள்ளார்கள்.
இவற்றை எல்லாம் உண்மை என ஏற்பதும், ஏற்காததும் வரலாற்று ஆசிரியர்களின் விருப்பம். ஆனால் எல்லா மன்னர்களை விடவும் சோழர்கள் அதிகளவு பிறமொழி , பிறக் கலாச்சார கலப்புடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். அத்தோடு இவர்கள் உண்மையில் ஒரு தமிழ் குடி வந்த மன்னர்கள் தானா என்ற ஐயமும் பலரால் எழுப்பப் படுகின்றது.
ஜடா சோழனின் மகன் கரிகாலச் சோழன்
முனைவர் யசோதா தேவி அவர்கள் தமது நூலான " The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D " என்பதில் தெலுங்குச் சோழர்களால் வெளியிடப்பட்ட பொப்பூதி கல்வெட்டுக் குறிப்பு ஒன்றைத் தருகின்றார். அந்த குறிப்பின் பிரகாரம் கங்கை நதிப் புறத்தில் அமைந்துள்ள அயோத்தியா தேசத்தை ஆட்சி செய்த ஜடா சோழன் என்பவன் தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பாஞ்சகத்தையும் ( ஐந்து தமிழ் நாடுகள் ) காவிரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி தஞ்சை தரணியையும் கைப்பற்றிக் கொண்டான் எனவும். இவனது புதல்வனே முதலாம் கரிகாலச் சோழன் என கோணித்தேயா குறிப்புக்களும், தெலுங்கு கவி திக்கணாவின் பாடல்களும் கூறுகின்றன. இந்த கரிகாலனின் வழி வந்தோரை கரிகாலகுலவம்சம் எனவும் அழைக்கின்றனர்.
முதலாம் கரிக்காலச் சோழனின் வழி வந்த மகிமானச் சோழன் என்ற பேரன் இருந்ததாகவும், அவன் இரண்டாம் கரிகாலச் சோழன் என்றழைக்கப்பட்டான். அவனே காவிரி நதிக்கரையில் கல்லணைக் கட்டியவன் எனவும், காடுகளை அழித்து கழனியாக்கியவன் எனவும் கூறுகின்றது. இரண்டாம் கரிக்காலச் சோழனுக்கு இரு சகோதரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தசாவர்மன், தொண்டமானன். தசாவர்மன் பகராஷ்ட்ராவை கைப்பற்றி பொத்தாப்பி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். தொண்டமானன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவ்வாறு Buddhist Remains in Andhra and the History of Andhra Between 225 and 610 A.D என்ற நூலில் K. R. சுப்பிரமணியன் கூறுகின்றார். வேலூர் பாளைய செப்பேடுகளைக் கொண்டு பல்லவர்களின் தமிழக படை எடுப்பை ஆராய்ந்த போது இரண்டாம் கரிகாலச் சோழனின் காலமானது, காஞ்சியை கைப்பற்றிய பல்லவ மன்னன் குமாரவிஷ்ணுவின் காலத்துக்கு ( கிபி 325 - 350 ) முந்தையதாக இருக்க வேண்டும் என கருதப்படுகின்றது.
இந்த மகிமானச் சோழனின் புதல்வர்கள் தான் தொண்டமானன், தசாவர்மன். தொண்டை நாட்டை தொண்டமானன் என்பவனும், அதற்கு மேல் இருந்த மொழி பெயர் தேயம் என்றழைக்கப்படும் இன்றைய ராயல்சீமா பகுதிகளை தசாவர்மனுன் ஆண்டனர். ராயல்சீமாவை ஆண்ட ரேணாட்டுச் சோழர்கள் இந்த கரிகால குலவம்சம் வழியில் தோன்றிய தசாவர்மனின் வம்சம் என அறியப்பட்டனர். ஆந்திராவை ஆண்ட கோணித்தேனா சோழகர்கள் தசாவர்மனின் வழித்தோன்றல்கள் என அறிவிக்கின்றார்கள். இந்த தசாவர்மனே ரேணாட்டுச் சோழ அரசை நிறுவினான் எனவும், இவன் கரிகால குலவம்சம் என அறிவித்தும் இருந்தான்.
ஆனால் கரிகாலன் எப்போது ஆண்டான் என்ற குறிப்பு ஏதுமில்லை. சிலர் கிபி இரண்டாம் நூற்றாண்டவன் என்பதை ஏற்கின்றனர். ஆனால் தமிழக குறிப்புக்களை பார்த்தோமானால் இந்த கரிகாலச் சோழனே உறையூர் உட்பட தஞ்சையில் ஆண்ட குறும்ப பழங்குடிகளை விரட்டி விட்டு, காடுகளை கைப்பற்றி கழனியாக்கி சோழ நாட்டை நிறுவியவன். ஜடா சோழனின் குறிப்புக்களும் அயோத்தியில் இருந்து வந்து உறையூர் அரசனை கைப்பற்றினான் என்று கூறுவது இங்கு பொருந்தத் தக்கது..
கயவாகு காலம்காட்டி
கயவாகு காலம்காட்டி என்பது வி. கனகசபைப் பிள்ளை என்னும் வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் எடுத்த போது சிங்கள மன்னன் கஜபாகு என்பவரும் வந்திருந்தார் என கூறுகின்றது. மகாவம்சம் நூல் இந்த கஜபாகு மன்னனின் காலப் பகுதியை கிபி 113 - 134 எனக் கூறுகின்றது.
“சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என கூறப்படுகிறது. தமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்ற ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவரின் ஆராய்ச்சி முடிவைக் கொண்டு கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.
ஆக அனைத்துக் குறிப்புக்களையும் கொண்டு பார்க்கும் போது முதலாம் கரிகாலனின் தந்தையாக அறியப்படும் ஜடா சோழன் என்பவன் அயோத்தியில் இருந்து வந்து சோழவள நாட்டை குறும்பர்களிடம் இருந்து கிமு -விலேயே வந்து கைப்பற்றி சோழ நாட்டை அமைத்துள்ளான் என்பது தெரிகின்றது.
முசுகுந்த சோழன்
காவிரிக் கரையில் பூம்புகார் நகரத்தை நாகர்கள் ஆட்சி செய்து வந்ததாகவும், முசுகுந்த சோழன் என்ற மன்னன் வடக்கில் இருந்து வந்து காவிரிக் கரைகளில் இருந்த நாகர்களை விரட்டி விட்டு புகார் நகரை கைப்பற்றியதாக மணிமேகலை நூல் கூறுகின்றது. இந்திரனின் துணை கொண்டு நாகர்களிடம் இருந்து புகாரை கைப்பற்றிக் கொண்டதால் தான் இந்திரனை சிறப்பிக்கும் இந்திர விழாவை சோழர்கள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளனர் என்பதை சிலப்பதிகார குறிப்புக்கள் ஊடாக அறிய இயலுகின்றது. இதன் ஊடாக முசுகுந்த சோழன் ஒரு அயலவன் எனவும் காவிரிக்கரையில் அமைந்திருந்த நாகநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.
அமராவதியில் இருந்த அசுரர்களை அழிப்பதில் இந்த முசுகுந்த சோழன் இந்திரனுக்கு உதவியதாகவும் அதற்கு மறு உபகாரமாகத் தான் இந்திரன் முசுகுந்த சோழன் தெற்கின் நாகநாட்டைக் கைப்பற்ற உதவியதாகவும் எனவும் The Origin of Saivism and Its History in the Tamil Land என்ற நூலில் கே. ஆர். சுப்ரமணியன் கூறுகின்றார். புகார் நாகர்களால் ஆளப்பட்டமையால் நகரம் என்றழைக்கப்பட்டதாகவும், அந்த புகார் நகரத்தைப் பூர்விகமாக கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் பின்னர் அவ்விடம் நீங்கி பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட சிவகங்கைச் சீமைக்கும் இடம் பெயர்ந்ததாகவும் அறியப்படுகின்றது. இன்றளவும் இந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நகரத்தார்கள் என அழைக்கப்படுகின்றது இவர்கள் சோழருக்கு முந்தைய நாகர்களின் வழி வந்தோராகவும் அறியப்படுகின்றது.
இக்சாவாகு அரசர்கள் ஆட்சி செய்த ஆந்திராவின் பல்நாடு பகுதிகளில் முசுகுந்த சோழன் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுவதும். முசுகுந்த சோழன் தம்மை இக்சவாகு வழித்தோன்றலாக அறியப்படுவதும். முசுகுந்த சோழன் தோற்றுவித்த முசிறி நகரம் இன்றளவும் திருச்சிராபள்ளி மாவட்டத்தில் காணப்படுகின்றது. முசுகுந்தன் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. அத்தோடு சோழ மண்டலத்தில் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய கோவில்களை கட்டினான் என இன்றளவும் அந்த கோவில் தலபுராணங்கள் கூறுகின்றன. இந்த முசுகுந்தனின் காலப் பகுதியை கிமு 3-ம் நூற்றாண்டு எனக் கூறுவாரும் உளர்.
இந்த குறிப்புக்கள் அனைத்தும் ஊடாக வடக்கில் இருந்து வந்த ஜடா சோழன் உறையூரில் இருந்த குறும்பரை விரட்டியதும், வடக்கில் இருந்து வந்த முசுகுந்த சோழன் புகார் நகரில் இருந்த நாகர்களை விரட்டியதும் அறியப்படுகின்றது. இதன் மூலம் ஜடா சோழன், முசுகுந்த சோழன் ஆகிய இருவரும் ஒருவரோ என்ற ஐயமும் எழுகின்றது. அதே போல குறும்பர்கள், நாகர்கள் தஞ்சைப் பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடி இனமாக கருதுவதற்கும் இடம் உண்டு. சோழர்களும் நாகர்களும் இனக்கலப்படைந்ததைக் கூறும் கதைகள் சில சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாகர்களோடு சோழர்கள் கலப்படைந்து உருவாக்கிய பரம்பரையை ‘நாகபல்லவ சோழர்கள்’ என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) அழைப்பார்.
நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று புராணங்கள் கூறும். ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள். ஆக ஆரியர்கள் வாழ்ந்த பகுதிக்கு வெளியே இருந்த மக்களை ஆரியர்கள் நாகர்கள் என்றே அழைத்துள்ளனர். ஏனெனில் ஜாவாத் தீவில் வாழ்ந்த மக்களையும் நாகர்கள் எனவும், அவர்களது தலைநகரத்தை நாகபுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளதை மணிமேகலைக் கூறுகின்றது. ஆகையால் ஆரியர் ஆட்சிக்கு உட்படாத தெற்கு தென் கிழக்காசியா பழங்குடிகளை நாகர்கள் என்றழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என கருத இடமுண்டு. எது எதுவானாலும் சோழர்கள் வெளியில் இருந்து வந்து காவிரிக்கரையின் பூர்வ குடிகளை விரட்டி நாடு பிடித்துள்ள தகவல்களை அறிய இயலுகின்றது.
முற்காலச் சோழர்கள் தஞ்சையின் மண்ணின் மைந்தர்களான குறும்பர்களை விரட்டி விட்டு காடுகளை அழித்து கழனியாக்கி ஆட்சி செய்தவர்கள். களப்பிரர்கள் வருகையோடு காணாமல் போனவர்கள் திடுதிடுப்பென எட்டாம் நூற்றாண்டில் வந்திறங்கிய பிற்காலச் சோழர்கள் தமிழகத்தை ஆள போட்டிப் போட்டுக் கொண்டிருந்த பல்லவரையும், பாண்டியரையும் ஒதுக்கியதோடு அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு போரிடுவதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தார்கள்.
தெலுங்கு சோழர்கள்
தமிழகத்தைப் போன்று ஆந்திராவின் பகுதிகளையும் சோழ மனவாடுக்கள் தெலுங்கு சோழர்கள் என்றழைக்கப்பட்டு தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளதோடு, கிழக்கு சாளுக்கிய அரசக் குலத்தோடு ஒன்றிணைந்து கிழக்கு சாளுக்கிய அரசையும் ஆண்டுள்ளார்கள். தெலுங்கு சோழர்கள் தொண்டைமண்டலத்துக்கும் வேங்கை நாட்டுக்கும் இடைப்பட்ட ஆந்திராவின் ராயல்சீமை பகுதிகளில் கிபி 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் கிழக்கு சாளுக்கியர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் ஆகியோருக்கும் கீழும் இருந்து வந்துள்ளனர். இந்த தெலுங்குச் சோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வேலநாட்டுச் சோழர்கள், ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேணாச் சோழர்கள், நன்னூர் சோழர்கள், நெல்லூர் சோழர்கள்.
இவர்கள் பல சமயங்களில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியும் ஆட்சி செய்துள்ளனர். பல்லவர்கள் காஞ்சியை முழுமையாக கைப்பற்ற முன்னர் அங்கு தெலுங்குச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர். தெலுங்குச் சோழர்களில் வேலநாட்டுச் சோழர்களைத் தவிர மற்ற அனைவரும் தம்மை கரிகாலச் சோழனின் வழி வந்தோர் எனக் கூறுகின்றனர்.
இடைப்பட்ட காலத்தில் இந்த சோழர்கள் எங்கே இருந்தார்கள். தமிழகத்தையோ கிபி 300 - 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள். கிபி 600 - கிபி 850 வரை பல்லவர்களும், பாண்டியர்களும் கூறு போட்டார்கள். தஞ்சை தரணியிலோ களப்பிரர் வழி வந்த முத்தரையர்கள் பாண்டியருக்கு கப்பம் காட்டி ஆண்டார்கள். இந்த நிலையில் வெறும் பழையாறையில் போய் ஒழிந்து கொண்டு வாழ்ந்தார்கள் என்ற கதை எந்தளவுக்கு நம்பக் தகுந்ததோ? பொன்னியின் செல்வன் படைக்க கல்கிக்கும், சோழர்கள் புகழ் பாட சிலருக்கும் இது ஏற்புடையதாக இருக்கலாம்.
ராயல்சீமையில் ஆட்சி செய்த சோழர்கள் ஏன் தமிழை வளர்க்கவில்லை. இவர்கள் தான் தங்கத் தமிழ் மன்னர்கள் ஆச்சே, ஆனால் ரேணாட்டுச் சோழர்கள் என அழைக்கப்பட்ட இவர்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்து தெலுங்கு மொழியை வளர்த்துள்ளார்கள். இந்த ரேணாட்டுச் சோழர்கள் பிற்காலத்தில் ஐந்து சோழ வம்சத்தை ஆந்திராவில் நிறுவியனார்கள், அவை முறைய பிற்கால ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேனா சோழர்கள், நன்னூர் சோழர்கள், நெல்லூர் சோழர்கள். இவர்கள் யாவரும் கரிகாலச் சோழன் வம்சம் எனவும் அறிவித்துக் கொண்டார்கள்.
பிற்காலச் சோழர்கள்
இப்போது தான் தமிழகத்தில் சீன் மாறுகின்றது. கிபி எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் தூண்டுதலின் பேரில் விஜயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சையை கைப்பற்றி பிற்காலச் சோழ ஆட்சியை நிறுவினான். இவர்கள் வழி வந்தோர் தான் ராஜ ராஜ சோழன், ராஜந்திரே சோழன் முதலியோர். முத்தரையரையும், அவர்களுக்கு பெரும் உதவி செய்த பாண்டியரையும், பின்னர் பல்லவரையும் திடு திடுப்பென தோற்கடிக்க விஜயாலயனுக்கு எங்கிருந்து வந்தன இத்தனை படை பலமும், ஆயுத பலமும், செல்வமும். பழையாறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களுக்கு வானில் இருந்தா பலம் வந்தது. அல்லது தெலுங்கு தேசத்தில் போய் சாளுக்கியர்களோடு கலப்புற்ற சோழர்களே மீண்டும் தஞ்சைக்கு வந்து ஆட்சியை பிடித்தார்களா?
ராஜ ராஜ சோழன் தனது மகள் குந்தவையை கிழக்கு சாளுக்கிய மன்னன் விமலாதித்தியனுக்கு மணந்த படியால் தான் சோழரும் சாளுக்கியரும் ஐக்கியப்பட்டனர் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
ஆனால் இந்த சம்பவங்கள் நடைபெற முன்னரே, ராஜ ராஜ சோழன் வேங்கி நாட்டுக்குள் படை எடுத்தான். எதற்காக படை எடுத்தான். கிழக்கு சாளுக்கிய அரியணையை யார் ஏற்பது என்ற சிக்கல் வந்தது சக்தி வர்மனுக்கும் ஜடா சோழ பீமனுக்கும். இந்த நிலையில் ஜடா சோழ பீமன் அரசை கைப்பற்றியதும், சக்தி வர்மன் ஓடோடி போய் ராஜ ராஜனிடம் முறையிட, ராஜ ராஜனும் ஜடா சோழ பீமனை தோற்கடித்து, கொன்று சக்தி வர்மனை அரியணையில் ஏற்றினன். இந்த சக்தி வர்மனின் மகன் தான் விமலாதித்தியன், இவனுக்கு தான் ராஜ ராஜ சோழன் தமது மகள் குந்தவையை மணம் முடித்துக் கொடுத்தான்.
ஆனால் பாருங்கள், ஏற்கனவே வேங்கி நாட்டை ஆண்ட ஜடா சோழ பீமனும் சோழ அடைமொழியை கொண்டிருக்கின்றார்ன் அல்லவா? அப்போது கிழக்கு சாளுக்கிய அரசர்களோடு சோழர்கள் நெடுங்காலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும் தானே. எத்தனையோ மன்னர்கள் இருந்தும், ஏன் சக்தி வர்மன் ராஜ ராஜனிடம் அடைக்கலமானான்.
பாருங்கள் கிழக்கு சாளுக்கிய மன்னனின் பெயர் விஜயாதித்திய, அதே காலத்தில் வந்திறங்கிய சோழ மன்னனின் பெயர் விஜயாலயா, அவனுக்கு பின் வந்தோரின் பெயர் எல்லாம் முழுமையான சமற்கிருத பெயர்கள். தெலுங்கு சோழர்கள், தமிழ் சோழர்களிடம் காணப்பட்ட கண்டா, ஆதித்யா ஆகிய பெயர்கள் தெலுங்கு பல்லவர்களிடம், கிழக்கு சாளுக்கியர்களிடம் காணப்படுகின்றது.
சோழர்கள் தமிழர்களா?
யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் வாழ்ந்தார்கள், ஆட்சி செய்துள்ளார்கள் ஆக தமிழர்கள் தான் என்று துணிய வேண்டும். சோழர்கள் தமிழர்களாகவும், தெலுங்கர்களாகவும் இருந்துள்ளார்கள். ஏனெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரத்தையும் ஒரு சோழ வம்சம் ஆண்டுள்ளதே. குலோதுங்கனுக்கு பின் சோழ சாளுக்கிய வம்சமாக அனைத்தும் மாறியும் உள்ளதே.
பின்னர் இந்த சோழர்களின் வம்சமானது இலங்கை யாழ்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்தி பேரரசுகள் வரை நீளுகிறது.
நன்றிசோழர்களின் பூர்வீகம்?
சோழர்கள் எந்தளவுக்குத் தமிழர்கள் என்ற கேள்வி தான் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. மொழி அடிப்படையில் பார்த்தால் சோழர்களில் ஒரு பிரிவினர் தமிழர்களாகவும், மறு பிரிவினர் தெலுங்கர்களாகவும் இருந்துள்ளனர். அல்லது தமிழ் மரபணுக்களைத் தான் தேடுவேன் என கங்கணம் கட்டுவோரின் பிரகாரம் பார்த்தால் சோழர்களின் ஆதி மூலம் வட மேற்கு இந்தியாவில் இருந்து வந்தததாகவே பலரும் கருதுகின்றனர். சோழர்கள் பற்றிய குறிப்பு அசோகனது கல்வெட்டுகளில் இருந்தே காணப்படுகின்றன. சோழர்கள் பற்றி அறிய முற்படுவோர் சங்க இலக்கியங்கள், இந்திய புராணங்கள், இலங்கையின் மகாவம்ச நூல், தொலமி உட்பட வெளிநாட்டுப் பயணர் குறிப்புக்கள், பல்வேறு கல்வெட்டுக்கள், சோழ மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகள், சோழர்கள் குறித்து ஆராயப்பட்டு எழுதப்பட்ட ஐரோப்பிய மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள விரிவான நூல்கள் துணைக் கொண்டே அறிய இயலும்.
சோழர்கள் காவிரி நதி பாயும் இன்றைய தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளடங்கலான சோழமண்டலத்தையே ஆட்சி செய்து வந்துள்ளனர். கிழக்கே கடல், தெற்கே புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் தென் வெள்ளாறு, மேற்கே கோட்டைக்கரை (மதிள்கரை - மதுக்கரை), வடக்கே கடலூர் மாவட்டத்தில் இருக்கும் வடவெள்ளாறு ஆகியவை சோழநாட்டு எல்லை என கம்பர் பாடிய சோழமண்டல சதகம். 10-ம் பாடல் கூறுகின்றது. இதனை பிற்காலத்திய கிருஷண்தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டும் உறுதி செய்கின்றது.
செம்பியன் என்ற சிபி மன்னன்
அது போக இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் சோழர்களின் முன்னோராக சிபிச் சக்கரவர்த்தியை கூறுகின்றனர். சிபிச் சக்கரவர்த்தி வட நாட்டில் வாழ்ந்த அரசனாக மகாபாரதம், பௌத்த ஜாதக கதைகள், சீனக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளது. சிபி மன்னன் இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியை ஆண்டு வந்தவன். இன்று கூட சிபி என்ற ஊர் அங்குள்ளது. சீன பயணி பாசியான் இந்தக் கதையை பதிவு செய்துள்ளார். புறா ஒன்றைக் காக்க தன் தசையை வெட்டிக் கொடுத்த உத்தமன் என்று புகழுரைக்கின்றது. ஏன் இவன் வழி வந்தவர்களாக புறநானூறு சோழர்களை பதிவு செய்ய வேண்டும்.
இதனை புறநானூரு மட்டுமில்லை வடமொழி நூல்கள் எழுதிய தண்டின், வராகமிகிரர் ஆகியோரும் சோழர்கள் சிபி வம்சாவளி என்றே கூறுகின்றனர். அதே போல திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டும் சோழர்கள் தம்மை வடநாட்டோடு தொடர்பு படுத்திக் கூறியுள்ளார்கள்.
இவற்றை எல்லாம் உண்மை என ஏற்பதும், ஏற்காததும் வரலாற்று ஆசிரியர்களின் விருப்பம். ஆனால் எல்லா மன்னர்களை விடவும் சோழர்கள் அதிகளவு பிறமொழி , பிறக் கலாச்சார கலப்புடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். அத்தோடு இவர்கள் உண்மையில் ஒரு தமிழ் குடி வந்த மன்னர்கள் தானா என்ற ஐயமும் பலரால் எழுப்பப் படுகின்றது.
ஜடா சோழனின் மகன் கரிகாலச் சோழன்
முனைவர் யசோதா தேவி அவர்கள் தமது நூலான " The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D " என்பதில் தெலுங்குச் சோழர்களால் வெளியிடப்பட்ட பொப்பூதி கல்வெட்டுக் குறிப்பு ஒன்றைத் தருகின்றார். அந்த குறிப்பின் பிரகாரம் கங்கை நதிப் புறத்தில் அமைந்துள்ள அயோத்தியா தேசத்தை ஆட்சி செய்த ஜடா சோழன் என்பவன் தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பாஞ்சகத்தையும் ( ஐந்து தமிழ் நாடுகள் ) காவிரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி தஞ்சை தரணியையும் கைப்பற்றிக் கொண்டான் எனவும். இவனது புதல்வனே முதலாம் கரிகாலச் சோழன் என கோணித்தேயா குறிப்புக்களும், தெலுங்கு கவி திக்கணாவின் பாடல்களும் கூறுகின்றன. இந்த கரிகாலனின் வழி வந்தோரை கரிகாலகுலவம்சம் எனவும் அழைக்கின்றனர்.
முதலாம் கரிக்காலச் சோழனின் வழி வந்த மகிமானச் சோழன் என்ற பேரன் இருந்ததாகவும், அவன் இரண்டாம் கரிகாலச் சோழன் என்றழைக்கப்பட்டான். அவனே காவிரி நதிக்கரையில் கல்லணைக் கட்டியவன் எனவும், காடுகளை அழித்து கழனியாக்கியவன் எனவும் கூறுகின்றது. இரண்டாம் கரிக்காலச் சோழனுக்கு இரு சகோதரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தசாவர்மன், தொண்டமானன். தசாவர்மன் பகராஷ்ட்ராவை கைப்பற்றி பொத்தாப்பி நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். தொண்டமானன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவ்வாறு Buddhist Remains in Andhra and the History of Andhra Between 225 and 610 A.D என்ற நூலில் K. R. சுப்பிரமணியன் கூறுகின்றார். வேலூர் பாளைய செப்பேடுகளைக் கொண்டு பல்லவர்களின் தமிழக படை எடுப்பை ஆராய்ந்த போது இரண்டாம் கரிகாலச் சோழனின் காலமானது, காஞ்சியை கைப்பற்றிய பல்லவ மன்னன் குமாரவிஷ்ணுவின் காலத்துக்கு ( கிபி 325 - 350 ) முந்தையதாக இருக்க வேண்டும் என கருதப்படுகின்றது.
இந்த மகிமானச் சோழனின் புதல்வர்கள் தான் தொண்டமானன், தசாவர்மன். தொண்டை நாட்டை தொண்டமானன் என்பவனும், அதற்கு மேல் இருந்த மொழி பெயர் தேயம் என்றழைக்கப்படும் இன்றைய ராயல்சீமா பகுதிகளை தசாவர்மனுன் ஆண்டனர். ராயல்சீமாவை ஆண்ட ரேணாட்டுச் சோழர்கள் இந்த கரிகால குலவம்சம் வழியில் தோன்றிய தசாவர்மனின் வம்சம் என அறியப்பட்டனர். ஆந்திராவை ஆண்ட கோணித்தேனா சோழகர்கள் தசாவர்மனின் வழித்தோன்றல்கள் என அறிவிக்கின்றார்கள். இந்த தசாவர்மனே ரேணாட்டுச் சோழ அரசை நிறுவினான் எனவும், இவன் கரிகால குலவம்சம் என அறிவித்தும் இருந்தான்.
ஆனால் கரிகாலன் எப்போது ஆண்டான் என்ற குறிப்பு ஏதுமில்லை. சிலர் கிபி இரண்டாம் நூற்றாண்டவன் என்பதை ஏற்கின்றனர். ஆனால் தமிழக குறிப்புக்களை பார்த்தோமானால் இந்த கரிகாலச் சோழனே உறையூர் உட்பட தஞ்சையில் ஆண்ட குறும்ப பழங்குடிகளை விரட்டி விட்டு, காடுகளை கைப்பற்றி கழனியாக்கி சோழ நாட்டை நிறுவியவன். ஜடா சோழனின் குறிப்புக்களும் அயோத்தியில் இருந்து வந்து உறையூர் அரசனை கைப்பற்றினான் என்று கூறுவது இங்கு பொருந்தத் தக்கது..
கயவாகு காலம்காட்டி
கயவாகு காலம்காட்டி என்பது வி. கனகசபைப் பிள்ளை என்னும் வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் எடுத்த போது சிங்கள மன்னன் கஜபாகு என்பவரும் வந்திருந்தார் என கூறுகின்றது. மகாவம்சம் நூல் இந்த கஜபாகு மன்னனின் காலப் பகுதியை கிபி 113 - 134 எனக் கூறுகின்றது.
“சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என கூறப்படுகிறது. தமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்ற ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவரின் ஆராய்ச்சி முடிவைக் கொண்டு கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.
ஆக அனைத்துக் குறிப்புக்களையும் கொண்டு பார்க்கும் போது முதலாம் கரிகாலனின் தந்தையாக அறியப்படும் ஜடா சோழன் என்பவன் அயோத்தியில் இருந்து வந்து சோழவள நாட்டை குறும்பர்களிடம் இருந்து கிமு -விலேயே வந்து கைப்பற்றி சோழ நாட்டை அமைத்துள்ளான் என்பது தெரிகின்றது.
முசுகுந்த சோழன்
காவிரிக் கரையில் பூம்புகார் நகரத்தை நாகர்கள் ஆட்சி செய்து வந்ததாகவும், முசுகுந்த சோழன் என்ற மன்னன் வடக்கில் இருந்து வந்து காவிரிக் கரைகளில் இருந்த நாகர்களை விரட்டி விட்டு புகார் நகரை கைப்பற்றியதாக மணிமேகலை நூல் கூறுகின்றது. இந்திரனின் துணை கொண்டு நாகர்களிடம் இருந்து புகாரை கைப்பற்றிக் கொண்டதால் தான் இந்திரனை சிறப்பிக்கும் இந்திர விழாவை சோழர்கள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளனர் என்பதை சிலப்பதிகார குறிப்புக்கள் ஊடாக அறிய இயலுகின்றது. இதன் ஊடாக முசுகுந்த சோழன் ஒரு அயலவன் எனவும் காவிரிக்கரையில் அமைந்திருந்த நாகநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.
அமராவதியில் இருந்த அசுரர்களை அழிப்பதில் இந்த முசுகுந்த சோழன் இந்திரனுக்கு உதவியதாகவும் அதற்கு மறு உபகாரமாகத் தான் இந்திரன் முசுகுந்த சோழன் தெற்கின் நாகநாட்டைக் கைப்பற்ற உதவியதாகவும் எனவும் The Origin of Saivism and Its History in the Tamil Land என்ற நூலில் கே. ஆர். சுப்ரமணியன் கூறுகின்றார். புகார் நாகர்களால் ஆளப்பட்டமையால் நகரம் என்றழைக்கப்பட்டதாகவும், அந்த புகார் நகரத்தைப் பூர்விகமாக கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் பின்னர் அவ்விடம் நீங்கி பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட சிவகங்கைச் சீமைக்கும் இடம் பெயர்ந்ததாகவும் அறியப்படுகின்றது. இன்றளவும் இந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நகரத்தார்கள் என அழைக்கப்படுகின்றது இவர்கள் சோழருக்கு முந்தைய நாகர்களின் வழி வந்தோராகவும் அறியப்படுகின்றது.
இக்சாவாகு அரசர்கள் ஆட்சி செய்த ஆந்திராவின் பல்நாடு பகுதிகளில் முசுகுந்த சோழன் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுவதும். முசுகுந்த சோழன் தம்மை இக்சவாகு வழித்தோன்றலாக அறியப்படுவதும். முசுகுந்த சோழன் தோற்றுவித்த முசிறி நகரம் இன்றளவும் திருச்சிராபள்ளி மாவட்டத்தில் காணப்படுகின்றது. முசுகுந்தன் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. அத்தோடு சோழ மண்டலத்தில் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய கோவில்களை கட்டினான் என இன்றளவும் அந்த கோவில் தலபுராணங்கள் கூறுகின்றன. இந்த முசுகுந்தனின் காலப் பகுதியை கிமு 3-ம் நூற்றாண்டு எனக் கூறுவாரும் உளர்.
இந்த குறிப்புக்கள் அனைத்தும் ஊடாக வடக்கில் இருந்து வந்த ஜடா சோழன் உறையூரில் இருந்த குறும்பரை விரட்டியதும், வடக்கில் இருந்து வந்த முசுகுந்த சோழன் புகார் நகரில் இருந்த நாகர்களை விரட்டியதும் அறியப்படுகின்றது. இதன் மூலம் ஜடா சோழன், முசுகுந்த சோழன் ஆகிய இருவரும் ஒருவரோ என்ற ஐயமும் எழுகின்றது. அதே போல குறும்பர்கள், நாகர்கள் தஞ்சைப் பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடி இனமாக கருதுவதற்கும் இடம் உண்டு. சோழர்களும் நாகர்களும் இனக்கலப்படைந்ததைக் கூறும் கதைகள் சில சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாகர்களோடு சோழர்கள் கலப்படைந்து உருவாக்கிய பரம்பரையை ‘நாகபல்லவ சோழர்கள்’ என்று ந.மு.வேங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) அழைப்பார்.
நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று புராணங்கள் கூறும். ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள். ஆக ஆரியர்கள் வாழ்ந்த பகுதிக்கு வெளியே இருந்த மக்களை ஆரியர்கள் நாகர்கள் என்றே அழைத்துள்ளனர். ஏனெனில் ஜாவாத் தீவில் வாழ்ந்த மக்களையும் நாகர்கள் எனவும், அவர்களது தலைநகரத்தை நாகபுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளதை மணிமேகலைக் கூறுகின்றது. ஆகையால் ஆரியர் ஆட்சிக்கு உட்படாத தெற்கு தென் கிழக்காசியா பழங்குடிகளை நாகர்கள் என்றழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என கருத இடமுண்டு. எது எதுவானாலும் சோழர்கள் வெளியில் இருந்து வந்து காவிரிக்கரையின் பூர்வ குடிகளை விரட்டி நாடு பிடித்துள்ள தகவல்களை அறிய இயலுகின்றது.
முற்காலச் சோழர்கள் தஞ்சையின் மண்ணின் மைந்தர்களான குறும்பர்களை விரட்டி விட்டு காடுகளை அழித்து கழனியாக்கி ஆட்சி செய்தவர்கள். களப்பிரர்கள் வருகையோடு காணாமல் போனவர்கள் திடுதிடுப்பென எட்டாம் நூற்றாண்டில் வந்திறங்கிய பிற்காலச் சோழர்கள் தமிழகத்தை ஆள போட்டிப் போட்டுக் கொண்டிருந்த பல்லவரையும், பாண்டியரையும் ஒதுக்கியதோடு அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு போரிடுவதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தார்கள்.
தெலுங்கு சோழர்கள்
தமிழகத்தைப் போன்று ஆந்திராவின் பகுதிகளையும் சோழ மனவாடுக்கள் தெலுங்கு சோழர்கள் என்றழைக்கப்பட்டு தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளதோடு, கிழக்கு சாளுக்கிய அரசக் குலத்தோடு ஒன்றிணைந்து கிழக்கு சாளுக்கிய அரசையும் ஆண்டுள்ளார்கள். தெலுங்கு சோழர்கள் தொண்டைமண்டலத்துக்கும் வேங்கை நாட்டுக்கும் இடைப்பட்ட ஆந்திராவின் ராயல்சீமை பகுதிகளில் கிபி 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் கிழக்கு சாளுக்கியர்கள், பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் ஆகியோருக்கும் கீழும் இருந்து வந்துள்ளனர். இந்த தெலுங்குச் சோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வேலநாட்டுச் சோழர்கள், ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேணாச் சோழர்கள், நன்னூர் சோழர்கள், நெல்லூர் சோழர்கள்.
இவர்கள் பல சமயங்களில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியும் ஆட்சி செய்துள்ளனர். பல்லவர்கள் காஞ்சியை முழுமையாக கைப்பற்ற முன்னர் அங்கு தெலுங்குச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர். தெலுங்குச் சோழர்களில் வேலநாட்டுச் சோழர்களைத் தவிர மற்ற அனைவரும் தம்மை கரிகாலச் சோழனின் வழி வந்தோர் எனக் கூறுகின்றனர்.
இடைப்பட்ட காலத்தில் இந்த சோழர்கள் எங்கே இருந்தார்கள். தமிழகத்தையோ கிபி 300 - 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள். கிபி 600 - கிபி 850 வரை பல்லவர்களும், பாண்டியர்களும் கூறு போட்டார்கள். தஞ்சை தரணியிலோ களப்பிரர் வழி வந்த முத்தரையர்கள் பாண்டியருக்கு கப்பம் காட்டி ஆண்டார்கள். இந்த நிலையில் வெறும் பழையாறையில் போய் ஒழிந்து கொண்டு வாழ்ந்தார்கள் என்ற கதை எந்தளவுக்கு நம்பக் தகுந்ததோ? பொன்னியின் செல்வன் படைக்க கல்கிக்கும், சோழர்கள் புகழ் பாட சிலருக்கும் இது ஏற்புடையதாக இருக்கலாம்.
ராயல்சீமையில் ஆட்சி செய்த சோழர்கள் ஏன் தமிழை வளர்க்கவில்லை. இவர்கள் தான் தங்கத் தமிழ் மன்னர்கள் ஆச்சே, ஆனால் ரேணாட்டுச் சோழர்கள் என அழைக்கப்பட்ட இவர்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்து தெலுங்கு மொழியை வளர்த்துள்ளார்கள். இந்த ரேணாட்டுச் சோழர்கள் பிற்காலத்தில் ஐந்து சோழ வம்சத்தை ஆந்திராவில் நிறுவியனார்கள், அவை முறைய பிற்கால ரேணாட்டுச் சோழர்கள், பொத்தாப்பிச் சோழர்கள், கோணிதேனா சோழர்கள், நன்னூர் சோழர்கள், நெல்லூர் சோழர்கள். இவர்கள் யாவரும் கரிகாலச் சோழன் வம்சம் எனவும் அறிவித்துக் கொண்டார்கள்.
பிற்காலச் சோழர்கள்
இப்போது தான் தமிழகத்தில் சீன் மாறுகின்றது. கிபி எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் தூண்டுதலின் பேரில் விஜயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சையை கைப்பற்றி பிற்காலச் சோழ ஆட்சியை நிறுவினான். இவர்கள் வழி வந்தோர் தான் ராஜ ராஜ சோழன், ராஜந்திரே சோழன் முதலியோர். முத்தரையரையும், அவர்களுக்கு பெரும் உதவி செய்த பாண்டியரையும், பின்னர் பல்லவரையும் திடு திடுப்பென தோற்கடிக்க விஜயாலயனுக்கு எங்கிருந்து வந்தன இத்தனை படை பலமும், ஆயுத பலமும், செல்வமும். பழையாறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களுக்கு வானில் இருந்தா பலம் வந்தது. அல்லது தெலுங்கு தேசத்தில் போய் சாளுக்கியர்களோடு கலப்புற்ற சோழர்களே மீண்டும் தஞ்சைக்கு வந்து ஆட்சியை பிடித்தார்களா?
ராஜ ராஜ சோழன் தனது மகள் குந்தவையை கிழக்கு சாளுக்கிய மன்னன் விமலாதித்தியனுக்கு மணந்த படியால் தான் சோழரும் சாளுக்கியரும் ஐக்கியப்பட்டனர் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
ஆனால் இந்த சம்பவங்கள் நடைபெற முன்னரே, ராஜ ராஜ சோழன் வேங்கி நாட்டுக்குள் படை எடுத்தான். எதற்காக படை எடுத்தான். கிழக்கு சாளுக்கிய அரியணையை யார் ஏற்பது என்ற சிக்கல் வந்தது சக்தி வர்மனுக்கும் ஜடா சோழ பீமனுக்கும். இந்த நிலையில் ஜடா சோழ பீமன் அரசை கைப்பற்றியதும், சக்தி வர்மன் ஓடோடி போய் ராஜ ராஜனிடம் முறையிட, ராஜ ராஜனும் ஜடா சோழ பீமனை தோற்கடித்து, கொன்று சக்தி வர்மனை அரியணையில் ஏற்றினன். இந்த சக்தி வர்மனின் மகன் தான் விமலாதித்தியன், இவனுக்கு தான் ராஜ ராஜ சோழன் தமது மகள் குந்தவையை மணம் முடித்துக் கொடுத்தான்.
ஆனால் பாருங்கள், ஏற்கனவே வேங்கி நாட்டை ஆண்ட ஜடா சோழ பீமனும் சோழ அடைமொழியை கொண்டிருக்கின்றார்ன் அல்லவா? அப்போது கிழக்கு சாளுக்கிய அரசர்களோடு சோழர்கள் நெடுங்காலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும் தானே. எத்தனையோ மன்னர்கள் இருந்தும், ஏன் சக்தி வர்மன் ராஜ ராஜனிடம் அடைக்கலமானான்.
பாருங்கள் கிழக்கு சாளுக்கிய மன்னனின் பெயர் விஜயாதித்திய, அதே காலத்தில் வந்திறங்கிய சோழ மன்னனின் பெயர் விஜயாலயா, அவனுக்கு பின் வந்தோரின் பெயர் எல்லாம் முழுமையான சமற்கிருத பெயர்கள். தெலுங்கு சோழர்கள், தமிழ் சோழர்களிடம் காணப்பட்ட கண்டா, ஆதித்யா ஆகிய பெயர்கள் தெலுங்கு பல்லவர்களிடம், கிழக்கு சாளுக்கியர்களிடம் காணப்படுகின்றது.
சோழர்கள் தமிழர்களா?
யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் வாழ்ந்தார்கள், ஆட்சி செய்துள்ளார்கள் ஆக தமிழர்கள் தான் என்று துணிய வேண்டும். சோழர்கள் தமிழர்களாகவும், தெலுங்கர்களாகவும் இருந்துள்ளார்கள். ஏனெனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆந்திரத்தையும் ஒரு சோழ வம்சம் ஆண்டுள்ளதே. குலோதுங்கனுக்கு பின் சோழ சாளுக்கிய வம்சமாக அனைத்தும் மாறியும் உள்ளதே.
பின்னர் சோழர்களின் வம்சமானது வடக்கே கலிங்கத்தின் சோழ கங்கர் முதல் தெற்கே இலங்கை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்தி அரசர்கள் வரை நீட்சி பெறுகிறது.
நன்றி

No comments:

Post a Comment

கிட்னி திருட்டு- மருத்துவமனை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

மதனப்பள்ளி மருத்துவமனையில் விசாகப்பட்டினம் பெண் இறந்ததையடுத்து சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஆந்திர போலீசார் முறியடித்தனர் பெங்...