சர்வதேச போதை பொருள் கடத்தல் நாகப்பட்டினத்தை சேர்ந்த 55 வயது புல்லட் மகாலிங்கம் என்ற திமுக நிர்வாகி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் கடத்தி 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்த நாகப்பட்டினம் திமுக நிர்வாகி #புல்லட்மகாலிங்கம் பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு சின்னவர் உட்பட மேலிட நபர்கள் அனைவருக்கும் மெத்தபெட்டமைன் என்கிற பயங்கரமான போதை பொருளை சப்ளை செய்தவன் இந்த புல்லட் மகாலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.500 கோடி சொத்துகள்!- ’புல்லட்’ மகாலிங்கத்தின் அதிர வைக்கும் பின்னணி!
ஒருபக்கம் கடத்தல் வழக்கில் சிறை; மறுபக்கம் குடும்பத்தினர் பெயரில் குவித்ததாகக் கூறப்படும் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள்! நாகப்பட்டினத்தில் நடந்த இ.டி சோதனை, ‘புல்லட்’ மகாலிங்கத்தை மீண்டும் பரபரப்பின் மையத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
நாகப்பட்டினத்துக்கு அருகே விழுந்தமாவடியைச் சேர்ந்த 55 வயது மகாலிங்கம், முன்னாள் தி.மு.க பிரமுகர். உள்ளூரில் ‘புல்லட்’ மகாலிங்கம் என அழைக்கப்படும் இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், அலெக்ஸ், யோகேஸ்வரன் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.
மெத்தபெட்டமைன், கஞ்சா, தங்கக்கட்டிகள் உள்ளிட்டவற்றைக் கடத்தியதாக மகாலிங்கத்தின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மெத்தாம்பேட்டமைன் வழக்கில் கைதான மகாலிங்கம் மும்பை சிறையிலும், மகன் அலெக்ஸ் நாகை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மகாலிங்கம், அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான வீடுகள், இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்தியப் பாதுகாப்புப் படையினருடன் சோதனை நடத்தினர். இதில், குடும்பத்தினரின் பெயரில் ரூ.500 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
சேலம் சர்ச் பெயரில் ரூ.500 கோடி மோசடி, கிறிஸ்துவ பெண்கள் போராட்டம்
சேலம் அம்மாபேட்டையில் மதபோதகர் (பாஸ்டர்) செந்தில்குமார் என்பவர் Dinakaran என்ற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி, கோடிக்கணக்கில் பண மோசடி செய்...

No comments:
Post a Comment