Saturday, September 19, 2026

மனு ஸ்ம்ருதி சொல்வதும் ஈவெரா வழி வேசித்தன திராவிடியார் பயித்திய அறிவு உளறலும்

மனு ஸ்ம்ருதி மனுதர்மம்- சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று சொல்லுகிறதா?- Udayakumar

மனு ஸ்ம்ருதியில் 8 வது அத்தியாயம் 415 வது ஸ்லோகம் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று சொல்லுவதாக ஹிந்துமதத்தை எதிர்க்கும் இயக்கங்கள் 1927 முதல் சொல்லிவருகின்றன.
மனு ஸ்ம்ருதி நூல் 1865 இல் தமிழில் மொழிபெயர்ப்பு நூலாக வந்தது. .மொழி பெயர்த்தவர் திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியார், அவரை மொழி பெயர்ப்புச் செய்ய சொன்னவர் புதுவை நா முத்துரங்க செட்டியார். மொழி பெயர்ப்பைப் பிழையற திருத்தியவர்கள் செட்டியாரின் சகோதரர் முத்து கோவிந்த செட்டியார் மற்றும் பு.க.சுப்பராய முதலியார் இருவரும்., மொழி பெயர்க்கச் சொன்னவரும், மொழி பெயர்ப்பை திருத்தியவர்களும் பிராமணர்கள் அல்ல.
மொழி பெயர்ப்புச் செய்யும் போது மனு ஸ்ம்ருதியின் வியாக்யானமாகிய குல்லுக பட்டீயம், கோவிந்த ராஜீயம், மேதாதிதியம் என்னும் மூன்று வியாக்யானங்களை வைத்து
மொழி பெயர்க்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது . ஆனால் இந்த மூன்று வியாக்யானங்கள் தவிர மற்ற நான்கு வியாக்யானங்கள் ஸர்வஜ்ஞ, நாராயணர், ராகவாநந்தர், நந்தந ராமசந்த்ரர் இவர்களின் வியாக்யானம் பிற்காலத்தில் 1886 இல் பிரசுரமாகியது.
மொத்தமுள்ள இந்த ஏழு வியாக்யானங்களையும் சேர்த்து ஒரே புஸ்தகமாக கவர்னர் ஜெனரல் சபையில் மெம்பராக இருந்த ராவ்ஸாஹப் விஸ்வநாத நாராயண மண்டலீக சர்மா என்ற பிராமணர் 1886 இல் (பம்பாயில்) மும்பையில் நாகரலிபியில் அச்சிட்டார்.
ஏழுவகை வேலைக்காரர்களில் மூன்றாவதாக உள்ளதைத் தன்னுடைய தேவடியாள் மகன் என்று தமிழ் மொழி பெயர்ப்பு செய்ததே பிரச்சனைக்குக் காரணம்.
ஏழு வியாக்யானங்களில் தேவடியாள் மகன் / வேசி மகன் என்ற பொருளில் மனு ஸ்ம்ருதியின் எட்டாவது அத்தியாயம் 415வது ஸ்லோகத்தில் வார்த்தைகள் அல்லது கருத்து எதுவும் இல்லவே இல்லை.
ஏழு தொழிலாளிகள் யார்? என்று சரியாக மொழி பெயர்ப்பு செய்தவர்கள் கூறுவது 1.யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், 2.பக்தியால் வந்தடைந்தவன், 3.(தன்) வேலைக்காரி மகன், 4.விலைக்கு வாங்கப்பட்டவன், 5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 6.பாகம் பிரித்ததால் கிடைத்தவன் 7.தான் கொடுக்கவேண்டிய அபராதம் அல்லது கடன் தொகையை ஈடுகட்ட வேலை செய்பவன் என்றுதான் வேலைக்காரர்கள் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
இந்த ஸ்லோகம் ஒருவன் அந்நியனுக்கு “தாஸ்யம்”(DONDAGE) கட்டுப்பட்டு வேலை செய்தலை விவரிக்கிறது. இந்த ஏழுவகைக்குள் ஒன்றாகத்தான் வேலை செய்பவர்கள், இருப்பார்கள் என்பதை விளக்கிட வந்ததே இந்த 8-415 ஸ்லோகம் . சூத்ர என்ற சொல்லின் அர்த்தத்தினை நிரூபிக்க /விவரிக்க இந்த ஸ்லோகம் வரவில்லை. சூத்ர என்ற சொல்லுக்கும் இந்த ச்லோகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தாஸிமகன் என்று குறிப்பிட்டால் ஸம்ஸ்க்ருத சொல்லாகும் என்று நினைத்துள்ளார் மொழி பெயர்ப்பாளர்.. தாஸன் என்றால் புல்லிங்கம் (ஆண்பால்) இதற்கு ஸ்திரீ லிங்கம் அதாவது பெண்பால் தாஸி என்பது.
தாஸன், தாஸி என்ற ஸம்ஸ்க்ருத சொற்களுக்கு வேலைக்காரன் என்றும் வேலைகாரி என்றுதான் பொருள் சொல்லவேண்டும். இன்றும் கூட வைஷ்ணவர்கள் மற்றொரு வைஷ்ணவரை ஸந்திக்கும்போது தங்களை “அடியேன் ராமானுஜ தாஸன்”. ஸ்ரீ ராமானுஜருக்கு தொண்டு செய்பவன் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எந்த வர்ணத்தில் பிறந்த வைஷ்ணவர்களாக இருந்தாலும் அடியேன் ராமானுஜதாஸன் என்றுதான் சொல்லுவார்கள்.
தேவதாஸி என்றால் ஆலயத்திற்கு தொண்டு/ வேலை செய்பவள் என்று தமிழில் பொருள். பின் இந்த தேவதாஸி என்ற புனிதமான சொல் தேவடியாள் என்று கொச்சையான சொல்லாக மாறியது, புனிதமான அந்தச் சொல் அர்த்தமும் மாறி இன்று கெட்டவார்தையாகிவிட்டது.
வேலைக்காரன், வேலைக்காரி என்று சரியாகத் தமிழில் மொழி பெயர்க்காமல் தேவடியாள் என்பது எப்படி கோயிலுக்கு ஊழியம் / வேலை செய்பவர்களைக் குறிப்பதை மனதில் கொண்டு வேலைக்காரர்களைக் குறிக்க தேவடியாள் என்று மொழி பெயர்த்துவிட்டார் மொழி பெயர்த்த அய்யங்கார்.
மொழி பெயர்த்தவரும் மொழி பெயர்ப்பை சரிபார்த்தவரும் செய்த தவறால் வந்த பிரச்சனை இது பிற்காலத்தில் இது பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்று மொழி பெயர்த்தவரும், மொழி பெயர்த்ததை சரி பார்த்தவர்களும் எண்ணியிருக்கமாட்டார்கள்.
இது பற்றி அஹோபிலமடத்து மாத இதழ் வேதாந்த தீபிகை ஸம்புடம் 18- பக்கம் 335 இல் மாயூரம் ஸ்ரீ டி எஸ் நடேச சாஸ்திரிகள் கட்டுரை தரும் செய்திகள்..
வியாக்யாங்களில் உள்ளதுஇந்த வார்த்தை
மூலத்தில் உள்ள வார்த்தை
மொழி பெயர்க்கப்பட்ட நூலில் உள்ள 8-415 ஸ்லோகத்தின் பகுதி
இது எப்படியிருக்கிறது என்றால் சென்னையில் ஹாமில்டன் வாராவதி (Hamilton’s Bridge) என்றிருப்பதை மக்கள் பேச்சு வழக்கில் கொச்சையாக அம்பட்டன் வாராவதி என்று சொல்லி கடைசியாக இப்போது அதற்கு (Barber’s Bridge) அம்பட்டன் ப்ரிட்ஜ் என்று மாறிவிட்டது.
மனுவுக்கு உருவான ஏழு வியாக்யானங்களிலும் 8-415 ஸ்லோகத்துக்கு தேவடியாள் என்று பொருள் கொள்ளும் அர்த்தத்தில் வார்த்தைகளே இல்லை, தேவதாஸி என்றும் இல்லை.
8- 415 வது ஸ்லோகத்தில், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன் என்று உள்ளது. பிராமணன் ராஜாவாக இருக்கவில்லை, இருக்க மனுவும் அனுமதிக்கவில்லை. எனவே பிராமணனுக்கு யுத்தத்தில் ஜெயித்துவரப்பட்டவன் வேலைக்காரனாக இருக்க வாய்ப்பில்லை. இதை பிராமண வெறுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை ஆதாரமில்லாமல் பிராமணர்களையும், மனுவையும் திட்டுவது ஆராய்ச்சியற்ற வசவுக்கே வழிவகுக்கும்.
மனு எட்டாவது அத்தியாயம் 415 வது ஸ்லோகத்துக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை பார்த்தால் உண்மை தெரியும்.
1. By Man Matha Nath Dutt. M.A. Author of English translation of 2௦ Smritis and other Sanskrit works 1909.
“ A captive of war, a slave for maintenance the son of a female Slave , one purchased for money, a slave obtained as a present, a hereditary one, one condemned to slavery for any offence, these are the seven kinds of slaves ( lit. The sources of slavery).
2. (S.B.E. Vol. XXV, 1886, The Laws of Manu translated with extracts from seven commentaries by G.Buhler.”
There are slaves of seven Kinds, (Viz) he who is made a slave under a standard, he who serves for his daily food, he who is born in the house (the son of a female Slave), he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslave by way of punishment.
.............................................................................................................................
இனியும் மனுவில் சூத்திரன் என்றால் வேசி மகன், விபச்சாரி மகன் என்று சொல்லியுள்ளதாகவும் இதற்காகத் தவறான மொழி பெயர்ப்பை கையில் எடுத்து அதுவும், ஒரு பிராமணர் செய்த மொழி பெயர்ப்பு என்று பிரிண்ட் போட்டு விற்பத்தும், பிரிண்ட் போட்ட புத்தகத்தினை மனு நூல் எரிப்பு என்று எரிப்பதுமான செயல், அறமற்றது.
இதே எட்டாவது அத்தியாயத்தில் 410 ,414 இதே மொழி பெயர்ப்பு நூலில் சூத்திரன் என்பதற்கு வேசி மகன் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் இதே மொழி பெயர்ப்பு நூலில் இதே எட்டாவது அத்தியாயத்தில் 416 இல் வேலைக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஒப்பு நோக்கினால் மொழி பெயற்பினால் உண்டாகியதே 8-415 ஸ்லோகத்தில் உள்ள தவறு தேவடியாள் மகன் என்னும் சொல் என்பது புரியும்.
1889இல் இரண்டாவது பதிப்பு இதில் மூலம் இல்லாமல் மொழிபெயர்ப்புப் பகுதியான தமிழ் வடிவம் மட்டும் நூலாக வெளியானது , மூன்றாவது வது பதிப்பு 1919இல் நான்காவது பதிப்பு 1934இல் வெளியானது .
1919 இல் வெளியான பதிப்பைத்தான் ஸ்கேன் செய்து அப்படியே மாற்றம் இன்றி தருகிறோம் என்று திராவிடர் கழகம் கி வீரமணி ஆய்வுரையுடன் வெளியிடுகிறது . ஆய்வுரை செய்தவர் கண்களுக்கு ஏனோ அந்த மொழி பெயர்ப்புத் தவறு தெரியவில்லை ?! ஏனென்றால் அந்த தவறு அவர்களுக்கு சாதகமாக உள்ளது.
ஸம்ஸ்க்ருத மூலமும் தெரியாது, மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஸம்ஸ்க்ருதத்தை வெறுக்க உணர்ச்சியை தூண்டி ஸமஸ்க்ருத தீண்டாமையை உண்டாக்கி ஏமாற்றியது போதும்.
மனு ஸ்ம்ருதியை அறிந்துகொள்ள நாம் ஸம்ஸ்க்ருதம் படிக்கவேண்டும் ..

No comments:

Post a Comment

மதூரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பாசீச தவெக அமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது உயர் நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் உயர் ...