Sunday, June 7, 2026

ஆந்திராவுக்கு மாறிய மசாகான் டாக் ரூ.29,000 கோடி மதிப்பிலான பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!

 ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!

https://www.facebook.com/photo/?fbid=122167865096953293&set=a.122124622178953293

தமிழ்நாடு மீண்டும் ஒரு பெரிய தொழில் திட்டத்தை இழந்துள்ளது. முன்பு தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருந்த மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம், இப்போது ஆந்திரப் பிரதேசத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த மாற்றம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
மேலும் தவெக அரசு, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் உடனடியாகச் செயல்பட்டு இந்தத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
மசாகான் டாக் திட்டம் ஆந்திராவுக்கு
ஆந்திரப் பிரதேசத்தில் துகராஜபட்டினத்தில் ரூ.29,000 கோடி மதிப்பிலான பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை திட்டத்திற்கு மசாகான் டாக் நிறுவனம் முக்கிய முதலீட்டாளராக இணைய உள்ளது. இந்தத் திட்டம் ஆண்டுக்கு 1.2 மில்லியன் டன் கப்பல் கட்டும் திறனை கொண்டதாகவும், 3,500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆந்திராவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தமிழ்நாட்டுடன் முந்தைய ஒப்பந்தம்
கடந்த 2025 செப்டம்பர் 19ஆம் தேதி, மசாகான் டாக் நிறுவனம் தமிழ்நாடு அரசின் முதலீட்டு அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தொழிற்சாலையை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தத் திட்டம் 45,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் 5,000 நேரடி வேலைகளும், 40,000 மறைமுக வேலைகளும் அடங்கும். ஆனால் இப்போது அந்தத் திட்டம் ஆந்திராவுக்கு நகர்ந்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில், இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, மசாகன் டாக் நிறுவனம் தற்போது ஆந்திரா அல்லது மகாராஷ்டிர மாநிலங்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து மசாகான் டாக் நிறுவனம் எவ்விதமான அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை.
முன்னர் இழந்த AMCA திட்டம்
தமிழ்நாடு ஏற்கனவே ஒரு முக்கிய பாதுகாப்பு தொழில் திட்டத்தை ஆந்திராவிடம் இழந்துள்ள நிலையில் இது 2வது திட்டமாகும். இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டமான AMCA-வின் சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையம் ஆந்திராவுக்கு வழங்கப்பட்டது.
கடந்த மே மாதம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புத்தபர்த்தியில் ரூ.15,000 கோடி மதிப்பிலான AMCA திட்டத்தின் அடிக்கல் நாட்டினர். முன்பு இத்திட்டம் தமிழ்நாட்டில் முக்கிய தொழில்நகரமான ஓசூரில் அமைக்க திட்டமிட்டு இருந்த நிலையில் ஆந்திராவுக்கு சென்றது. தற்போது மசாகான் டாக் நிறுவனத்தின் முடிவு தமிழ்நாட்டுக்கு இரட்டை அடியாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் முன் சவால்
தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கப்பல் கட்டும் தொழிற்சாலை திட்டத்தை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை தக்கவைக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆந்திராவுக்கு திட்டங்கள் நகர்வது, தமிழ்நாட்டின் செயல்பாட்டில் மாற்றம் மற்றும் வேகம் தேவை என்பதை உணர்த்துகிறது

No comments:

Post a Comment

New testament manuscripts fails

Ealuating ancient literature through bibliographical , internal , and external evidence tests —faces severe academic criticism when applied ...