Wednesday, October 23, 2013

தோமா இந்தியா வருகை - போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக்கதை- முனைவர் மு.தெய்வநாயகம்

 http://tamizhthoothu.com/karuththukalam/

(பேராசிரியர் எஸ்றா சற்குணம்) கேள்வி: முதலில் தோமா தமிழ் நாட்டிற்கு வந்தாரா என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள்!
முனைவர் மு.தெய்வநாயகம் . பதில்: தமிழகத்திற்குத் தோமா வந்தாரா என்ற கேள்வியிலேயே தமிழகத்திற்கு தோமா வரவில்லையா என்ற கேள்வியும் தொக்கி இருக்கிரது அல்லவா?
[மு.பெ.சத்தியவேல் முருகனார் கருத்து: கேட்ட கேள்விக்கு இது எப்படி பதிலாகும் என்று தெரியவில்லை]
தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு
தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு
கேள்வி: இதற்கு ஆதாரம் என்ன?
மு.தெ. பதில்: போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபின் தான் தோமாவைப் பற்றி இன்று நாம் கேட்கும் வரலற்றினை அறிய வருகிறோம். அது வரலாறில்லை; போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக் கதை. அவர்கள் இதனால் பெற்ற லாபம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தோமா வந்தார்; மயிலையில் சமாதி ஆனார் என்ற கதை போர்த்துகீசியர் தமிழகத்திற்கு வந்த போது அதாவது ஏறத்தாழ கி.பி. 12ஆம் நூற்றாண்டு தான் வெளிவருகிரது.  எனவே இது உண்மையா அல்லது பொய்யா என்பதை நிரூபிப்பது போர்த்துகீசியர்கள் தொடர்புடைய கத்தோலிக்கத் திருச்சபை அடியார்கள் திருச்சபையிடம் தான் கேட்டுத் தெளிய வேண்டுமே அல்லாது எனக்கு இதில் பதிலளிக்கும் பொறுப்பு இல்லை.
 

மு.பெ.சத்தியவேல் முருகனார்  கருத்து: தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார். ஆனால் இவரோ பல்லாண்டுகளாக, அவரே கூட்டத்தில் ஒரு சமயத்தில்சொன்னபடி 45 ஆண்டுகளாக, தோமா தமிழ்நாட்டிற்கு கி.பி. 52ல் வந்து 20 ஆண்டுகளாக சமயக் கொள்கைகளைப் பரப்பினார் என்று போர்த்துகீசியர்கள் 12 ஆம் நூறாண்டில் கட்டிய கதையை நம்பியும் அதைப் பரப்பியும் அதையொட்டி ஒரு நூல் எழுதி முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால் இப்போது அது கட்டுக்கதை என்கிறார்; அதற்குத் தான் பதிலளிக்க வேண்டியதில்லை என்று அடாவடியாகத் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த வகை நியாயம் என்று நடுநிலையாளர்களைத் திகைக்கச் செய்கிறார்.]
மு.தெ. பதில்:இன்னும் சொல்லப் போனால், கத்தொலிக்கத் திருச்சபையில் யாரும் எவரும் எவரையும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் தண்டனை தான். அதனால் தான் மக்கள் இன்று உலகெங்கணும் திருச்சபைகளில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால் சர்ச்சுகள் எல்லாம் தியேட்டர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஐரொப்பியர்களுக்கு கிறித்துவிடம் இயல்பாகவே எப்போதும் விசுவாசமில்லை.
மு.பெ.ச கருத்து: தோமா கிறித்து காலத்தவர்; அவர் பெயர் எப்படி பழைய ஏற்பட்டில் வரும்? இப்படியே அவரது உரை கத்தோலிக்கத் திருச்சபைகளைச் சாடுவதாகவே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. அதற்குள் அவையிலிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றும் பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று நீதிபதிகளாகிய எங்களுக்கு சீட்டு வந்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவையில் இருந்த அனைவரும் கிறித்துவர்கள்; அவர்களில்70 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் தெய்வநாயகத்தின் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்; மீதி 30 விழுக்காட்டினர் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள்.]
கேள்வி: தாங்கள் தோமா தமிழகத்திற்கு வந்தார என்பதற்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளியுங்கள்! இது அவையினர் அனுப்பியுள்ள சீட்டில் வந்துள்ள வேண்டுகோள் அல்லது முணுமுணுப்பு.
முனைவர் தெய்வநாயகம் இதற்கு கோபப்பட்டுப் பேசினார். மேலும் சுமார் 20 நிமிடங்கள் அவரது பேச்சு அதே பாணியில் மற்றொன்று விரித்தலாய்ச் சென்று கொண்டிருந்தது. அப்போது ககல் 1.00 மணி ஆனதால் உணவு இடைவேளி அறிவிக்கப்பட்டு மேடை கலைந்தது. 
இடைவேளையில் அவையிலிருந்த பலரும் வந்து தெய்வநாயகம் அவர்கள் செய்வது கொஞ்சமும் சரியல்ல என்ரும் இது முறையாக நடைபெறுகிற ஆய்வரங்கமாகத் தெரியவில்லை என்றும், கேள்விகளுக்கு விடை அளிக்கப்படும் என்று அறிக்கையில் சொல்கிறார்; இன்னும் பேச்சிடையேயும் கூறுகிறார்; ஆனால்எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்றனர்.
கேள்வி: கிறித்துவத்தில் மூவொருமைக் கோட்பாடு உள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த Trinity என்ற கோட்பாடு கான்ஸ்டள்ளடன் மன்னன் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) காலத்திலேயே கிறித்துவத்தை உலக மதங்களில் காணப்படும் மூன்று கடவுள் கோட்பாட்டைப் போலப் புகுத்திப் போதிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. இதனை மறுக்கமுடியுமா?
மு.தெ. பதில்: (இதற்கும் அவர் நேரிடையான பதில் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசினார்.) அவர் பேசியதின் சாரம் இது: அதாவது Trinity என்பது இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் என்பதாம்.
மு.பெ.ச இடைமறிப்பு: ஐயா! இந்த Trinity பற்றி கிறித்துவச் சபைகளிலேயே வேறு ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றிக் கேட்கலாமா?
[மீண்டும் அவையோர் தோமா தமிழகத்திற்கு வந்தாரா என்பதை பற்றி ஆதாரத்துடன் கூறுங்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.]
Photo   
இதன் பிறகு உப்புக் சப்பில்லாமல் சில கேள்விகளும் அதற்கு தெய்வநாயகத்தின் பதிலும் நடந்தேறின. இறுதியில் தெய்வ நாயகம் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு முன் தான் பேச வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி கேட்டு பேசத் தொடங்கினார்.
மு.தெ: இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதப் போகிறார்கள். முதல் நாள் வந்த ஷம்சுதீன் என்ற இஸ்லாம் பெரியார் வயிற்று வலி காரணமாக இன்று இரண்டாம் நாள் வரவில்லை. [இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது இவரது வழக்கறிக்கை நீதிபதிகள் மேசைமீது வழங்கப்பட்டது.] இப்போது எனது வழக்கறிக்கையை அளித்துள்ளேன். நீதிபதிகளுக்கு வழக்கின் சாராம்சங்களை அறிய எனது 5 நூல்களை அளித்துள்ளேன். அவற்றை முழுவதுமாகப் படித்தால் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும்.  ஏறத்தாழ ஒன்றரை நாட்களில் இந்த ஐந்து நூல்களையும் நீதிபதிகளால் படித்து முடிக்க முடியாது. இருந்தாலும் அவற்றைப் படிக்காமல் தீர்ப்பளித்தால் அது ஒரு தீர்ப்பாகவே இருக்க முடியாது. எனவே வேறு ஒரு சமயத்தில் சுமார் 15 நாட்கள் விவாதிக்கலாம். நீதிபதிகளும் அவற்றைப் படித்து விட்டு விவாதத்தில் கலந்து கொள்ளலாம். இந்தச் சூழ்நிலையில் தீர்ப்பு இன்றே வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவையே சொல்லட்டும்!
[அவையில் சிலர் தீர்ப்பு பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும், இரு நாட்கள் பணம் கொடுத்துக் கலந்து கொண்ட காரணத்தால் இன்றேதீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.]
தீர்ப்பு வழங்குவதற்கு முன் அரைமணி நேரம் நீதிபதிகள் நால்வருக்குள்ளே விவாதித்து முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் எங்களுக்குள் விவாதித்தோம். நீதிபதிகளை அழைத்து வந்து திரு.தெய்வநாயகம் அவமதித்ததை மிகவும் வருத்தத்தோடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். படித்து விட்டு வா என்பதும், மேலும் 15 நாட்கள் விவாதிக்க வேண்டும் என்பதும், இரு நாட்களாக தமிழகத்திற்கு தோமாவின் வருகை பற்றியே எவ்வித ஆதாரமும் காட்டாததையும், ‘இந்தியா புனித தோமா வழிக் கிறித்துவ நாடே’ என்று இவரே தேற்றேகாரம் கொடுத்து தமக்குத் தாமே தீர்ப்பு செய்து கொண்டு போலியாக ஆய்வரங்கத்தைக் கூட்டியதும் ஆகிய இவற்றை மிகுந்த கவலையோடும் வேதனையோடும் பேசி, இது முறையற்ற ஓர் ஆய்வரங்கம் என்று முடிவு செய்தோம்.
Icon of the Martyrdom of St. Thomas (taken from the Metropolis of Artis website: http://www.imartis.gr/imartis/texni.php)


The martyrdom of St. Thomas the Apostle(http://pravicon.com/images/sv/s2173/s2173006.jpg)
இறுதியில் நீதிபதிகள் பிரதிநிதியாக பேராசிரியர் ப.ஜீவானந்தம் அவர்கள் தீர்ப்பை வழங்குமுன் சிற்றுரை ஆற்றி தீர்ப்பை வழங்கினார். அது இது தான்:
   
முறைமாறாக வழக்கறிக்கையே தீர்ப்பு சொல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் வழங்கப்பட்டதாலும், 5 நூல்கள் படித்துவிட்டு வந்த பிறகு 15 நாட்கள் விவாதம் வைத்தப்பின் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்பவர் கூறுவதாலும்தீர்ப்பைத் தள்ளி வைக்கிறோம்”
வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டியதே ஏற்புடையது என்றாலும் ஏற்பாட்டாளர்கள் மனம் புண்பட வேண்டாம் என்று தள்ளி வைக்கப்பட்டது என்றோம். [29-08-2013 ஆம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.]
ஆய்ந்து பார்த்தால் இயேசு கிறிஸ்து கூறியவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இருப்பது உண்மை. ஆனால் இயேசு வழி, தோமா வழியில் சைவம் உருவானது என்பது பாட்டியை பேத்திதான் பெற்றெடுத்தாள் என்பதாக அல்லவா இருக்கிறது??!! இந்தப் பொருளில்லா கூற்றை ஒருவர் 45 ஆண்டுகளாக அறைகூவி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
சரி! தோமா தமிழகத்திற்கு வந்தது பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று முணுமுணுக்காதீர்கள்!. இதன் தொடர்ச்சியாக அந்த ஆய்வை மேற்கொள்கிறோம்! விரைவில் எதிர் பாருங்கள்!!!


Thursday, October 17, 2013

செயின்ட் தாமஸ்- தோமையர்- புனித தோமாவின் உண்மையான மண்டை ஓடு கொண்ட கிரேக்க பட்மொஸ் ஆர்த்தடக்ஸ் சர்ச்

http://www.johnsanidopoulos.com/2010/10/skull-of-holy-apostle-thomas-in-patmos.html

http://www.patmosislandgreece.com/patmosapocalypse/holymonasteryofsaintjohnthetheologianonpatmosisland/index.html

                Holy Monastery of St. John the Theologian on Patmos Island
மண்டை ஓடு மேலுள்ள பேழை   பட்மொஸ் ஆர்த்தடக்ஸ் சர்ச்
http://www.patmos-island.com/en/monasteries/info/monastery-of-st-john

கிரேக்க பட்மொஸ் ஆர்த்தடக்ஸ் சர்ச் பல நூற்றாண்டுகளாக ஏசுவின் சீடர் தாமஸ் உடலின் உண்மையான மண்டை ஓடு மேலுள்ள பேழையில் உள்ளதாம்.

அக்டோபர் 6ம் தேதி தாமஸ் மரண நினைவு நாள் என்பதாக வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. ஏசுவின் சீடர் தாமஸ் மண்டை ஓடு ஊர்வலம் செல்கிறது.
.
தோமா நடபடிகள் நூலின்படி தோமா மேரியின் வயிற்றில் ஏசுவோடு ஒட்டிப்பிறந்த இரட்டையர்.ஏசுவுடைய சகோதர சகோதரிகள் என சுவிசேஷங்களில் உள்ளது கீழே
மாற்கு6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா,சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
சீடர்களில் தோமா தவிர, ததேயு என ஒரு சுவிசேஷத்தில் உள்ளதை மற்றவர் யூதா என்பார், மேலும் யூதாஸ் ஸ்காரியோத்து என்று ஒரு நபர். சர்ச் பாரம்பரியப்படி இவர்கள் ஏசுவைப் போலவே பார்க்க இருப்பர் எனில் இரட்டையர் என ஆகும், தோமா -யூதா-யூதாஸ் ஸ்காரியோத்து மூவரும் ஒருவராகவே இருக்கலாம் எனவும் சில பைபிளியலாளர் கருதுவர்.
தோமா பற்றிய இந்தக் கட்டுரையில் தோமாவிற்கு பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், மலாக்க, திபேத் மற்றும் சீனாவில் இவருக்கு கல்லறைகள் உள்ளது.
There are six tombs for St. Thomas worldwide: one in Brazil, a second in Germany, a third in Japan, a fourth in Malacca, a fifth in Tibet, and a sixth in China. These were created as part of converting the natives to Christian fold based on the principles of incultration. In all these places myths of St. Thomas’s arrival is prevalant.

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
இப்புத்தகம் தரும் கதைப்படி, தோமா, ஏசுவுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர். ஏசு மறைவிற்குப்பின் சீடர்கள் சீட்டு குலுக்கிட, தோமாவிற்கு இந்தியா வர, எனக்கு மொழி தெரியாது என மறுக்க, ஏசு காட்சி தந்தும் மறுக்க, பின்னர் ஏசு தோமாவை ஒரு அடிமையாக கோந்தபோரஸ் மன்னனின் தூதர் ஹப்பனிடம் 30 வெள்ளிக்கு விற்றார். அவர் தன்னை ஒரு ஆசாரி எனச் சொல்ல, மன்னன் அரண்மனை தந்த பணத்தினை மக்களுக்கு வினியோகம் செய்திட, சிறையில் அடைக்கப்பட, பின் மன்னரின் அண்ணன் க்கெட் மரணமடைய, சொர்கத்தில் மன்னருக்கு அரண்மனை தயாரை இருப்பதை கண்டு, அதை வாங்க வர, மன்னன் கோந்தபோரஸ் கிறிஸ்துவராகத் தானும் தன் மக்கள் பலரையும் கிறிஸ்துவராகிட, அங்கே தோமா இயங்கி வந்தார்.
Holy Monastery of St. John the Theologian on Patmos Island
பக்கத்து நாடான மாஜ்தாய் மன்னன் ஆளும் நாட்டிற்கு சென்றார். மன்னன் இல்லதபோது அவரது மனைவி சரிஷியாவையும் மகன் வாஸனையும் அவர் மதம் மாற்றினார். சூனியம் செய்கிறார் எனப் பார்த்து மன்னர் மரண தண்டனை தர,  மலை மேல் அழைத்து  வீரர்கள்சென்று அடிக்க மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
மன்னர் மகன் நோய் வந்திட, மன்னர் தோமா கல்லறை சென்று எலும்பைத் தேட, கல்லறைக் காலி, தோமா சீடர்கள், அடக்கம் செய்த உடனே உடலை எடிச்சவிற்கும் பின் மேற்கத்திய நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்றனர். 
Icon of the Martyrdom of St. Thomas (taken from the Metropolis of Artis website: http://www.imartis.gr/imartis/texni.php)


The martyrdom of St. Thomas the Apostle(http://pravicon.com/images/sv/s2173/s2173006.jpg)
மாஜ்தாய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மாஜ்தாய்  நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, thou art come into a desert country, for we live in the desert; being like to brute beasts in our conversation, but now shall we be saved by thy hands; I beseech thee, therefore, take thought of me, and pray for me, that the compassion of the God whom thou preachest may come upon me, and I may become his dwelling place and be joined in prayer and hope and faith in him, and I also may receive the seal and become an holy temple and he may dwell in me.
மேலுள்ள கதையில் உள்ள கொண்டோபரஸ் என்றபடி ஒரு மன்னன்,  இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை பொ.மு. முதல் அல்லது பொ.கா. முதல் நுற்றாண்டில் ஆண்டார் என ஏற்க சில ஆதரங்கள் கிடைத்துள்ளன.
 கத்தோலிக்க ரோமன் சர்ச் தோமா மரண நினைவு நாள் டிசம்பர் 21 என்கிறது

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.
தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமொ நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி