அண்ணாமலை அவர்கள் வந்தார்கள் சென்றார்கள் கடினமாக உழைத்தார் அதை மறுப்பதற்கு இல்லை
ஆனால் அதனுடைய பலன் கட்சிக்கு கிட்டவில்லை
அவர்கள் வழியில் சொல்வதென்றால் அதிரடியாக அரசியல் செய்தார்
என் மண் என் மக்கள் யாத்திரை சென்றார்
அதன் மூலமாக கட்சி அடிமட்டம் வரை போய் சேர்ந்தது
பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் விவாதத்தில் ஜெயித்தார்
இரண்டு திராவிட கட்சிகளையும் தெறிக்க விட்டார்
மக்களின் நம்பிக்கையை பெற்றார்
மிகவும் திறமையானவர்
அறிவானவர்
படித்தவர்
மேலே சொன்ன விஷயங்கள் அவர்கள் சொன்னது
ஆனால் இதனுடைய பிரதிபலிப்பு மக்களிடம் சென்று சேர்ந்ததா என்றால்
இல்லை
எப்படி ஒரு மாணவன் படிக்கிறான்
இரவிலும் படிக்கிறான் காலையிலும்
படிக்கிறான் மத்தியானமும் படிக்கிறான்
எங்கு சென்றாலும் புத்தகம் கையுமாக அலைகிறான் என்று
அவனை பார்க்கக் கூடிய அந்த ஊர்காரர்கள்
எவ்வளவு பெரிய படிப்பாளி
எங்கு சென்றாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறான்
அப்படி என்று பெருமையாக பேசுவார்கள்
அவருக்கு மரியாதை மதிப்புகள் மிக அதிகமாக கொடுப்பார்கள்
ஆனால் அவர் அவ்வாறு செய்த அந்த செயல் நேர்மை படிப்பு ஆகியவற்றினுடைய பலன் என்பது அவர் தேர்வில் எத்தனை மதிப்பெண் வாங்குகிறார் என்பதை பொறுத்துதான் அமையும்
இல்லை என்றால் அதே ஊர் மக்கள்
இவன் ஏமாற்றிக் கொண்டு அலைந்தான்
படிக்கிறான் என்று சொல்லிக்கொண்டு ஊர் சுற்றினான்
என்று பேசுவதற்கு ஒரு நிமிடம் ஆகாது
இந்த எதார்த்தத்தை இந்த கால நிலவரத்தை அண்ணாமலை ஆதரவாளர்கள் என்று போகக்கூடிய சில கூமுட்டைகள் புரிந்து கொள்வதில்லை
நான் போன பதிவிலே கூறியிருந்தேன் அண்ணாமலை அவர்கள் வரும் போது கட்சி இருந்ததை விட
அவர் இவ்வளவு அதிரடிகளும் ஆரவாரங்களும் செய்த பிறகும் கட்சியினுடைய ஓட் பேங்க் என்பது கூடவில்லை
நீங்கள் எல்லாம் கேட்கலாம் எப்படி இதை நீ சொல்கிறாய் என்று
இங்கே விஜய் கட்சியினர் எப்படி ரூட் மாபியா என்ற ஒரு அமைப்பை வைத்து மக்களை முட்டாளாக்கி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்களோ
அதுபோல அண்ணாமலை நல்லவர்தான் நமக்கு அதில் மாற்றுக் கருத்து கிடையாது
திறமையானவர் தான் படித்தவர் தான்
ஆனால் அவருக்கு அடுத்த லெவலில் இருக்கக்கூடிய இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்ளக் கூடியவர்கள் செய்த செயல் என்பது
அதுதான் வார் ரூம் பாய்ஸ் அவர்கள் நினைத்தது
எப்படியாவது அண்ணாமலை முதல்வராக வேண்டும்
விஜயை போல அதுவும் குறிப்பிட்ட காலத்தில் ஒரு மூன்று வருடங்களோ 5 வருடங்களுக்குள்ளோ ஆக வேண்டும்
நாம் விஜய் கட்சியில் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் போல் நாமும் அமைச்சர்களாக பதவி ஏற்க வேண்டும்
என்ற ஒரு கேடுகெட்ட ஆசையில் விபரீதமான புத்தியில் அண்ணாமலை இடம் தவறுதலான விஷயங்களை கூறி அவரது படித்த அறிவையும் மழுங்க செய்து விட்டார்கள்
அதனுடைய வெளிப்பாடு அண்ணாமலை அவர்கள் கட்சியை விட்டு விலகியதற்கு காரணம்
இது அவர்களுடைய சுயநலத்திற்காக அண்ணாமலை பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்
அதை கட்சியினுடைய மூத்த நிர்வாகிகள் கூறும்போது அவர் புரிந்து கொள்ளக் கூடிய மன நிலையில் இல்லை
ஏனென்றால் நீங்கள் தான் அடுத்த முதல்வர் என்று கூறும் போது இந்த உலகில் உள்ள எவருக்கும் ஒரு ஆசை என்பது வரும் அதற்கு அண்ணாமலையும் விதிவிலக்கு அல்ல
வெளியில் சொல்லலாம் பதவிக்கு எனக்கு ஆசை இல்லை என்று ஆனால் அந்த சூழ்நிலை ஒரு வாய்ப்புகள் வரும்போது அதை எவராலும் தட்டிக் கழிக்க முடியாது
ஏனென்றால் எல்லோரும் பெருந்தலைவர் காமராஜர் ஆக முடியாது
ஆகவே அவரும் அவர்களுடைய பேச்சுக்கு மயங்கிவிட்டார்
அதற்கான அடுத்தடுத்த கட்டங்களில் இறங்கி வேலை செய்து விட்டார்
தற்போது தனியாக போய்விட்டார்
நாமும் சென்று வாருங்கள் வாழ்த்துக்கள் என்று கூறி வழியனுப்பி வைத்து விட்டோம்
ஆனாலும் இந்த பதிவினுடைய அவசியமும் நோக்கமும் ஏனென்றால்
அண்ணாமலை ஆதரவாளர்கள் என்று சொல்லி போகக்கூடிய இந்த கேடுகெட்ட சில பேர்
அவர்களுடைய பதிவுகள் அவர்களுடைய வீடியோக்கள் அவர்களுடைய AI படத்தை வைத்து கேலி செய்யக்கூடிய சித்திரங்கள் இவை எல்லாம் பொதுவெளிகளில் வலைதளங்களில் உலாவ விடுகிறார்கள்
அதனாலே நாம் இந்த பதிவை எடுத்து போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்
மற்றபடி அண்ணாமலை அவர்கள் மீது நமக்கு எந்த விதத்திலும் தனிப்பட்ட கோவமோ பகையோ பொறாமையோ கிடையாது
ஆனால் இது போன்ற இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு நாம் பதில் சொல்லாமல் இருக்க முடியாது
அதற்காகவே நாம் இங்கு ஒரு சில கணக்கு வழக்குகளை அவர்களுக்கு காண்பிக்க வேண்டி இருக்கிறது
கீழே விவரங்களை தந்துள்ளேன் அதை பார்த்துவிட்டு பின்பு மீண்டும் உரை எழுதுகிறேன்
2014 5.5%/9 சீட்=0.61%
2019 3.58%/5 சீட்=0.72%
2024 11.24%/23=0.49%
2014 தேர்தலில் 9 சீட்டு 5.5% ஓட்டு இதை நீங்க ஆவரேஜ் பண்ணா ஒரு தொகுதிக்கு 0. 61% ஓட்டு வரும்
2014 பாராளுமன்றத் தேர்தல்ல நாம தமிழிசை அவர்கள் மாநில தலைவராக இருக்கும்போது தேமுதிக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி பாரிவேந்தர் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து தனியா போட்டியிட்டோம்
2019 தேர்தலில். 5 சீட் 3.58% இதை நீங்க ஆவரேஜ் பண்ணா 0. 72% வரும்
2024 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கும்போது தாமரைச் சின்னத்துல 23 இடத்தில் நின்றோம் 11.24% ஓட்டு வாங்கினோம் இதை நீங்க ஆவரேஜ் பண்ணினால் 0. 49% வரும்
2024 பாராளுமன்றத் தேர்தலில் நம்ம கூட 2014இல் சேராத தினகரன் அவர்கள் சேர்ந்தார்கள் திருமாறன் ஜி அவர்கள் சேர்ந்தார்கள் திரு ஓபிஎஸ் அவர்கள் சேர்ந்தார்கள் பாரிவேந்தர் அவர்கள் இருந்தார்கள் இன்னும் மிகப்பெரிய பலத்துடன் அண்ணாமலை அவர்கள் தலைமையில் இந்த தேர்தலை நாம் சந்தித்தோம்
ஆனால் நமக்கு வந்திருக்கக்கூடிய ஓட்டு என்பது மிக மிக குறைவு
இதில் எப்படி அண்ணாமலை அவர்கள் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார் என்று சொல்ல முடியும்
உடனே கம்பு சுத்து நிறைய பேர் வருவீங்க
அதுக்கு இன்னொரு கணக்கும் வைத்திருக்கிறேன்
2014 0.61*23=14.3%
2019 0.72*23=16.56
2024 0.49*23=11.27
2024 இல் அண்ணாமலை அவர்கள் வாங்கிய இந்த ஓட்டு சதவீத அடிப்படையில் 2014ல் பாரதிய ஜனதா கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் 14.03% ஓட்டு வாங்கியிருக்கும்
இதே அண்ணாமலை அவர்கள் வாங்கிய ஓட்டு பர்சன்டேஜ் போல 2019 பாராளுமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் 16.56% போட்டு வாங்கி இருப்போம்
இதே அண்ணாமலை அவர்கள் வாங்கிய அந்த ஓட்டு 0.49 * 23 தொகுதியில 11.27%
இப்போது அண்ணாமலை ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு செல்லக்கூடிய சில கூமுட்டைகளுக்கு இந்த கேள்வி இதற்கு பதில் சொல்லுங்கள்
அண்ணாமலை அவர்கள் வாங்கிய அதே ஓட்டு சதவீத அடிப்படையில் தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் பாரதிய ஜனதா கட்சி 2014இல் 14 சதவீத ஓட்டையும்
2019ல் 16.5 சதவீத ஓட்டையும்
அண்ணாமலை அவர்கள் தலைமையில் 11.27 சதவீத ஓட்டையும் வாங்கி இருக்கும்
இதில் அண்ணாமலை அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அதிரடியாக பேசி நடை பயணம் நடந்து எல்லாம் செய்தாலும் ஓட்டு சதவீதம் என்பது அவர்களை விட கம்மிதான் குறைவுதான்
இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் அறிவுபூர்வமாக விரும்பவில்லை
இன்னும் ஒரு கணக்கு இருக்கிறது
2014 2222090/9 =246899
2014 இல் வாங்கிய மொத்த ஓட்டுக்களை போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளால் ஆவரேஜ் பண்ணா 2 லட்சத்து 46 ஆயிரத்து 898 ஓட்டு ஒரு தொகுதியில வாங்கி இருக்கிறோம்
2019 1467024/5=293405
அதே 2019 தேர்தலில் மொத்தம் வாங்கிய ஓட்டுக்கள்ல போட்டியிட்ட அஞ்சு தொகுதியில ஆவரேஜ் பண்ணா ஒரு தொகுதிக்கு ரெண்டு லட்சத்து 93 ஆயிரத்து 405 ஓட்டு வாங்கியிருக்கிறோம்
2024 4918293/23=213839
அதே 2024ல அண்ணாமலை அவர்கள் தலைமையில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் போட்டியிட்ட 23 தொகுதியால் ஆவரேஜ் பண்ணுனா ஒரு தொகுதியில் வாங்கின ஓட்டு 2 லட்சத்து 13 ஆயிரத்து 839 ஓட்டு வாங்கி இருக்கிறோம்
இப்ப சொல்லுங்க மக்களே 2014ல தமிழிசை அவர்கள் மாநிலத் தலைவராக இருக்கும்போது தனியா போட்டி போடுறோம்
அப்ப நம்ம கூட அமுமுக கிடையாது
ஓபிஎஸ் கிடையாது
இந்த அளவுக்கு கட்சி பிரபலமும் கிடையாது
நிறைய ஆட்கள் வந்து நம்ம கிட்ட சேரவும் கிடையாது
அப்படி இருக்கும்போது ஒரு தொகுதிக்கு ஆவரேஜா 2 லட்சத்து 46 ஆயிரத்து 8 99 ஓட்டு வாங்கி இருக்கோம்
2019 ல அதே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட கூட்டணி அஞ்சு தொகுதில போட்டியிட்டு கிட்டத்தட்ட 2 லட்சத்து 95 ஆயிரம் ஓட்டுக்கு பக்கத்துல வாங்கி இருக்கோம்
ஆனா 2024ல இதே அண்ணாமலை அவர்கள் தலைமையில மிகப்பெரிய கூட்டணி அமைத்தோம்
நடைப்பயணம் போயி அதிரடியாக பேசி அரசியல் பண்ணி நிறைய ஆட்கள் கட்சியில சேர்ந்து
இளைஞர்கள் சேர்ந்து
பெரியவர்கள் சேர்ந்து
பெண்கள் சேர்ந்து
நம்ம தலைமையில் கூட்டணியும் வச்சு 23 தொகுதியில போட்டியும் போட்டு ஆனா நாம ஒரு தொகுதிக்கு ஆவரேஜா வாங்குன ஓட்டு 2 லட்சத்து 13 ஆயிரத்து 839 ஓட்டு
இப்ப நீங்க சொல்லுங்க தமிழிசை வானதி நைனார் பொன்னார் இவங்க நாலு பேரும் சேர்ந்து அண்ணாமலைய ஓரங்கட்டிட்டு பழைய மாதிரி பிஜேபியை கொண்டு சென்று விடுவார்கள் என்று வாய் கூசாமல் இப்படி அவதூறுகளை அள்ளி தெளிக்கும் அந்த அறவேகாட்டு கூமுட்டைகள் ஆதரவாளர்கள் என்ற பெயரில் அவர் பின்னால் செல்லக் கூடியவர்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்
தமிழிசை அவர்கள் வாங்கியதை விட ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 33 ஆயிரம் ஓட்டு கம்மியாக வாங்கி இருக்கின்றோம் ஏன்
2014-லயும் 2024 -லயும் ஏன் நான் கம்பேர் பண்ணி சொல்றேன்னா இது ரெண்டும் நாம கூட்டணி இல்ல
இங்க நம்ம தலைமையில் 2024 பெரிய கூட்டணி நிறைய ஆட்கள் நிறைய கட்சிக்காக உழைச்சிருக்கிறோம்.
அண்ணாமலை அவர்கள் நிறைய உழைப்பே போட்டு இருக்கிறார்
ஆனால் பரீட்சையில் தேர்தல்களில் தமிழிசை வாங்கியதை விட ஆவரேஜா ஒரு தொகுதிக்கு 33 ஆயிரம் ஓட்டு குறைவா வாங்கி இருக்கிறோம்
அடுத்து எல் முருகன் தலைவரா இருந்த சமயத்துல 2019 ல வாங்கின ஓட்டுல இருந்து 80 ஆயிரம் ஓட்டு ஒரு தொகுதிக்கு குறையா வாங்கி இருக்கின்றோம்
அது கூட கூட்டணி நம்ம அதை கணக்குல எடுத்துக்க வேண்டாம் ஏனென்றால் அது கூட்டணி தேர்தல்
இப்ப சொல்லுங்க அண்ணாமலை 3% இருந்த பாரதிய ஜனதா கட்சியை வளர்ச்சிக்கு கொண்டு வந்தாரு
11 சதவீதம் ஓட்ட வாங்கி கொடுத்தார்
என்று சொல்லக்கூடியவங்க இந்த கணக்கு பதில் சொல்லுங்க
எப்படி வாங்கி கொடுத்தார் இங்கே நீங்கள் எல்லோரும் வாக்கு சதவீதத்தை பார்க்கிறீர்கள்
போட்டியிட்ட இடங்களை பார்க்க மறந்து விட்டீர்கள்
ஆனால் இந்த விஜய் கட்சியில் எப்படி ரூட் மாபியா என்ற ஒரு கூட்டத்தால் தவறாக தமிழக மக்கள் வழிநடத்தப்பட்டார்களோ
அதே போல ஃபிராடு மாபியா என்ற கூமுட்டை கூட்டத்தால் அண்ணாமலை அவர்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்
தற்போது பாரதிய ஜனதா கட்சியில்
முன்னாள் தலைவர்கள்
நிர்வாகிகள்
அடிமட்ட தொண்டர்கள்
அத்தனை பேரையும் மனக்குழப்பத்திலும்
மனவேதனையிலும் தள்ளக்கூடிய வார்த்தைகளும்
பதிவுகளும்
எங்களை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும்
இதெல்லாம் அண்ணாமலை அவர்களுக்கு தெரியவில்லையா?
இல்லை மக்களை கஷ்டப்படுத்தி தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் ரசித்தாரே
அதேபோல இவரும் தனது ஆதரவாளர்களை விட்டு இதுபோல பேச வைத்து ரசித்துக் கொண்டிருக்கிறாரா
ஏன் கண்டிக்கவில்லை
நீங்கள் சொன்ன அந்த 11% வாக்கு என்பது மிகவும் கம்மிதான்
நீங்கள் இல்லை வேறு யார் இருந்திருந்தாலும்
23 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் நிச்சயமாக இதைவிட அதிகமான வாக்குகள் வாங்கி
அதிக சதவீத ஓட்டுக்களை வாங்கி சாதித்திருக்கலாம்
அதனால்தான் நான் சென்ற பதிவிலேயே கூறியிருந்தேன்
அண்ணாமலை அவர்கள் கட்சிக்கு வரும்போது எப்படி இந்த கட்சி இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது
ஆனால் அவர் வந்தார்
அவருக்கு தேவையான ஆட்களை எடுத்துக் கொண்டார்
அவருக்கு தேவையான ஒரு அடையாளத்தையும் கட்சியின் மூலமாக மக்களிடம் பெற்றுக் கொண்டார்
அவர் தனியாக சென்று விட்டார்
அவரால் கட்சிக்கு எந்தவித லாபமும் இல்லை
கட்சி வளர்ச்சி என்பதும் இல்லை
இதை ஏதோ அவர் மேல உள்ள கோபத்துல பகையில சொல்லல
உங்க கண்ணு முன்னாடி ஆதாரம் வைத்திருக்கிறேன்
இல்லை தப்பு அப்படின்னு சொல்றவங்க இதே மாதிரி வேற ஏதாவது ஆதாரம் குடுங்க
இதுல ஆதாரமாக உள்ள ஓட்டுசதவீதம்
வாங்குன மொத்த ஓட்டுக்கள்
எல்லாமே இந்திய தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்ல இருந்து எடுத்து இருக்கிறேன்
தப்பா இருக்கும் என்று நினைக்கிறவர்கள் நீங்க செக் பண்ணிக்கலாம்
ஒன்னு ரெண்டு இந்த பாயிண்ட் சம்திங்(0.2356) வரக்கூடியதா ரவுண்ட் பண்ணி இருப்பேன்
உடனே அதுக்கு தூக்கிக்கிட்டு வந்துறாதீங்க சரியா?
மீண்டும் சொல்கிறேன் அண்ணாமலை அவர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை
அவர் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை
அவர் பின்னால் போகக் கூடியவர்கள் உங்களுக்கு என்ன காரணம் பிடித்திருக்கிறது
அதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் தாராளமாக செல்லுங்கள்
அப்போதும் சொன்னேன் இப்போதும் சொல்கிறேன் எப்போதும் சொல்வேன்
சென்று வாருங்கள்
வாழ்த்துக்களும்
வணக்கங்களும்
தயவுசெய்து
இனிமேலும் அவர் கட்சிக்காக உழைத்தார்
அவருக்கு கட்சியினுடைய மூத்த நிர்வாகிகள் துரோகம் செய்து விட்டார்கள்
கட்சியை படுபாதாளத்தில் தள்ளிவிட்டார்கள்
கட்சியை அழித்து விட்டார்கள்
இந்த திராவிட கட்சிகளோடு சேர்ந்து கொண்டு அவரை பலி வாங்கி விட்டார்கள்
இதுபோன்ற வார்த்தைகளை தயவுசெய்து நிறுத்திவிட்டு
உங்கள் தலைவரிடம் போய் அவருடைய கொள்கையை கேளுங்கள்
அவருடைய சித்தாந்தத்தை கேளுங்கள்
உங்க கட்சியை எப்படி நீங்க அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டு போகலாம்னு யோசிங்க
நிர்வாகிகளை தேர்ந்தெடுங்க
ஆலோசனை கூட்டம் போடுங்க
உங்களுடைய போக்கஸ் அதுல தான் இருக்கணும்
தயவு செய்து எந்த ஒரு சூழ்நிலையிலும் இனி
பாரதிய ஜனதா கட்சியை
அல்லது அதனுடைய மூத்த நிர்வாகிகளையோ
கட்சி கொள்கையோ
சித்தாந்தத்தையோ
தவறாகவோ இழிவாகவோ எவரும் பேசவும் வேண்டாம்
நீங்கள் பதிவிடவும் வேண்டாம்
ஏனென்றால் நீங்கள் இப்போது வேறு ஒரு இயக்கம் அல்லது கட்சியின் உறுப்பினர்
இது எங்களுடைய இயக்கம் எங்களுடைய காட்சி
இதில் நீங்கள் சொல்வது போல் அவர்கள் இன்னும் (பேச்சுக்காக கூறுகிறேன்)
நூறு வருடம் கழித்துக் கூட தமிழகத்தில் ஆட்சியை அமர வைத்தாலும்
அதை பொறுமையாக கேட்டு நடந்து கொள்ளக்கூடிய
மனப்பக்குவமும்
மனப் பொறுமையும்
மனப்பொருமையும்
அமைதியும்
பாரதிய ஜனதா கட்சியின் உடைய தொண்டர்களிடமும் நிர்வாகிகளும் உண்டு
அதை கண்டு நீங்கள் பொங்கி எழ வேண்டாம்
உங்களுடைய இயக்கத்தை பற்றி கட்சியை பற்றி சிந்தியுங்கள்
தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் (நீங்களும் எங்கள் சகோதரர் என்ற உரிமையில்)
மீண்டும் சொல்கிறேன்
சென்று வாருங்கள்
வாழ்த்துக்களும்
வணக்கங்களும்
வாழ்வோ சாவோ
வறுமையோ பணமோ
நல்லதோ கெட்டதோ
இருக்கிறதோ இல்லையோ
எங்கள் உயிர் இருக்கும் வரை நாங்கள்
பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள்
இந்துத்துவாவாதிகள்
எங்களுடைய பொறுமையின் பொருள் என்ன என்று அந்த இறைவனுக்கு ஒரு நாள் கேட்கும்
அப்போது தமிழகத்தில் எல்லாம் மாறும்
எங்களுக்காக ஒருவர்
எங்களுக்காக ஒரு தலைவன்
இந்த மண்ணை நேசிக்கக் கூடியவர்
என் தேசத்தை நேசிக்க கூடியவர்
கொள்கையில் சமரசம் இல்லாதவர்
நம்பியவர்களை அடிமட்ட தொண்டர்களை பாதி வழியில் விட்டுவிட்டு ஓடாதவர்
எப்போதாவது
எப்படியாவது
எங்கள் கட்சிக்கு கிடைத்தே தீருவார்
அப்படி கிடைக்கும் போது
அவரது தலைமையில் நாங்கள் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்வோம்
அதுவரை நாங்கள்
கட்சியினுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு
பொறுமையாக இருப்போம்
பொறுமையாக இருப்போம்
அதை மிகவும் பெருமையாக நினைப்போம்
என்று கூறி உங்களிடம் விடைபெறுகிறேன்
இந்த பதிவு என்பது அண்ணாமலை அவர்களுக்கு எதிராகவோ
அல்லது அவர்கள் மீது கோபத்திலையோ அல்ல
மீண்டும் கூறுகிறேன் வந்து வன்மத்தை காக்க வேண்டாம்
இது அவருடைய ஆதரவாளர்கள் என்று சொல்லி கட்சியையும் சித்தாந்தத்தையும் தலைவர்களையும் கேவலமாக பதிவிடக்கூடிய அந்த அரவேக்காட்டு கூமுட்டைகளுக்கு மட்டுமே என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்
பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளும் தொண்டர்களும் அல்லது முன்னாள் இந்நாள் தலைவர்களும்
நீங்கள் யாரும் எந்த விதத்திலும் மனக் குழப்பமும் அல்லது வேதனையோ பட வேண்டாம்
நமது கட்சிக்கு என்று உள்ள வாக்குகளும் தொண்டர்களும் நிர்வாகிகளும் என்றும் எப்போதும் இப்போதும் இருக்கிறோம்
உங்களுடன் நாங்கள் பயணிப்போம்
நீங்கள் இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் கட்சியினுடைய அடுத்த கட்ட வேலைகளை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று ஒரு அன்பான வேண்டுகோளையும் வைத்துக் கொள்கிறேன்
நாம் நமது வேலையை பார்ப்போம்
இதுவே முதலும் முடியுமான பதிவாக இருக்கும்
இனி கட்சி வளர்ச்சியை பற்றியும் சித்தாந்தத்தை பற்றியும் பதிவுகளை நீங்கள் எதிர் பார்க்கலாம்
நாம் என்றும் நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்
பாரத் மாதா கி ஜே
வந்தே மாதரம்
ஜெய்ஹிந்த்
என்றும் தேசப்பணியில்
தென்மலை க. தங்கராஜ்
No comments:
Post a Comment