Tuesday, July 23, 2024

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில்கள் வைன்சாராயம் விற்பனை;ரூ250 கோடிகள் - ஆண்டிற்கு ரூ.6 லட்சம் கோடிகள்

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில் வைந்சாராயம் விற்பனை

https://minnambalam.com/tamil-nadu/daily-sale-of-70-lakh-liquor-bottles-judges-shocked/ https://www.dinamani.com/tamilnadu/2024/Jul/05/70-lakh-liquor-bottles-sold-daily-in-tamil-nadu-tasmac-data 


பழனி கோவில் போலி செப்பேடு பெயரில் வெறுப்பு தூண்டுவது நிற்குமா?

பழனி கோவில் போலி செப்பேடு பெயரில் வெறுப்பு தூண்டுவது நிற்குமா?-கருத்து - பேராசிரியர் சங்கரநாராயணன்; ஆசிரியர் - சோழர் செப்பேடுகள்- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வெளியீடு



பழனி கோயிலை ஆதிசைவர்கள் கைப்பற்றினரா? https://www.facebook.com/sankaran.ganapathy.3/posts/pfbid0RZ48MZFHtAmRqkfNPmnHjEQYcsBfQ7JwrmP4Jg8F2XBLWYeVH792BFuiana95uoTl?__cft__[0]=AZXEGmT-PBfAkMPKqSWi24_ETjlRE-IgJVAhPUwauv9E0aswx943TvC5dAmGA0ZjhCEQby4EBU41KFE5XuXg33X4lgQ0xNoFQQsx3UQYcq4BLYhmCcyXSQgS3W_9dcm9nSo&__tn__=%2CO%2CP-R
கீழ்க்கண்ட செப்பேட்டை வெளியிட்ட பழனித் தல வரலாற்றை வெளியிட்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் அதுவரை புலிப்பாணி வழியினர் பூசை செய்ததாகவும் திருமலை நாயக்கரின் காலத்தில் ராமப்பையர் அவர்கள் கையால் ப்ரஸாதம் வாங்க மறுத்து அவர்களை நீக்கி கொடுமுடியிலிருந்து ஐயர்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு ஆதிசைவர்கள் புகுந்த வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்.

பழனி சைவ சித்தாந்த சபை இதனை வெளியிட்டிருக்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டே, பல கோயில்களை ஆதி சைவர்கள் கைப்பற்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் செப்பேட்டின் நிலையைப் பாருங்கள். சாலிவாஹன சகாப்தம் 1366 அதாவது பொயு 1444. கலியுக வர்ஷம் 4578 அதாவது பொயு 1476. இரண்டு வருடங்களும் ஒத்தே வரவில்லை. ஒன்று தவறென்று கொண்டாலும் இரண்டுமே திருமலைநாயக்கர் காலமில்லை.
திருமலைநாயக்கர் 1623-இலிருந்து 1659 வரை ஆண்டவர். அதாவது போகட்டும். கூட்டி வந்தவர்கள் அனைவரும் ஐயர்கள். அதாவது ஸ்மார்த்தர்கள். அப்படியானால் கோயில் ஸ்மார்த்தர்கள் கையில் இருந்திருக்கவேண்டும். அதோ இல்லை. இதற்கு மாறாக மல்லிகார்ஜுன ராயரின் காலத்தில் பழனியில் த்ரிஸந்த்யா காலமும் மஹாபூஜை நிகழ்ந்ததை அந்தக் கோயில் கல்வெட்டே காட்டுகிறது.
ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு. ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும் ஒவ்வாத செயல்.
இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு.
இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் அறியாமையின் உச்சமன்னியில் வேறில்லை.



Wednesday, June 5, 2024

Pakistan Parliament discussions













 

முஸ்லிம் பெண்கள் - மாதம் ரூ.8,500 என்ற இத்தாலி காங்கிரஸ் வாக்குறுதி நோக்கி படை

முஸ்லிம் பெண்கள் - மாதம் ரூ.8,500 என்ற இத்தாலி காங்கிரஸ் வாக்குறுதி நோக்கி படை

உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 1 லட்ச ரூபாய்க்கான உத்தரவாத அட்டைக்காக பெண்கள் வரிசையில் நிற்கின்றனர்.

ராகுல் காந்தியின் டகா டக்... டகா டக் இலவச வாக்குறுதியை நம்பி வாக்களித்துள்ளனர். 

 
https://www.youtube.com/watch?v=G-YriuImGDU
 

 

  

 

  

  

 

  

 

 

 

 

ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் தலைவிக்கும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பல வீடுகளுக்கு 'உத்தரவாத அட்டைகளை' விநியோகித்தது.   https://www.youtube.com/watch?v=E8W5LyZgZb4



ரூ.8,500 வரவு வைப்ப‌தாக வதந்தி: பெங்களூருவில் அதிகாலை அஞ்சல‌கத்தில் குவிந்த பெண்கள்

https://www.hindutamil.in/news/india/1256904-bengaluru-women-rush-to-open-india-post-accounts.html https://www.hindutamil.in/news/india/1256904-bengaluru-women-rush-to-open-india-post-accounts.html 

Tuesday, June 4, 2024

Sunday, June 2, 2024

முஸ்லிம் ஜாதிகள் -தீண்டாமை

 இந்திய முஸ்லிம்களும் சாதிவாரியாக பிரிந்து உள்ளார்களா?

சாதிகள் இல்லாத, பாகுபாடு இல்லாத, அனைவரும் சமம் என்று சொல்லப்படும் முஸ்லிம் சமூகம், உண்மையில் அப்படிப்பட்டதா?

மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ள இந்த நேரத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. வியாழன் அன்று மாநில அமைச்சரவையும் இந்த முடிவுக்குத் தனது ஒப்புதலை அளித்தது.

"சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு' எனப் பெயரிட உள்ளோம். இதில், ஒவ்வொரு மதம், சாதியில் இருந்து வருபவர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். அவர்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுவார்கள்," என்றார் நிதிஷ்குமார்.

இந்த சாதிவாரியான கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும், அதன் அளவுகோல் என்ன என்பது குறித்து பிகார் அரசு அதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பிறகு, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களுடன் இணைத்தார் என்பது வேறு விஷயம்.

புதன்கிழமை முடிவடைந்த பாஜகவின் மாநில செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிரிராஜ் சிங், கடிஹார் சென்றிருந்தார்.

கடிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், முஸ்லிம்களுக்குள் சாதிகள் மற்றும் துணை சாதிகளைக் கணக்கிட வேண்டும் என்றார். முஸ்லிம்களின் சாதி கணக்கெடுப்பின் மூலம் ரோஹிங்கியா மற்றும் வங்கதேச ஊடுருவல்காரர்களையும் அரசால் அடையாளம் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

முஸ்லிம்களுக்குள் சாதிகள் மற்றும் உட்பிரிவுகளின் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கிரிராஜ் சிங் என்ன காரணத்திற்காகச் சொல்லியிருந்தாலும், பொதுவாக முஸ்லிம்களுக்குள் சாதிகள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்பதும் உண்மை.

முஸ்லிம்களிடையே சாதியின் அடிப்படையில் பாகுபாடு இல்லை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அதே சமயம், முஸ்லிம்களிடையே கூட சாதிகள் இருப்பதாகவும் ஆனால் இந்துக்களிடையே உள்ளது போன்ற தீவிர வேறுபாடுகள் அவர்களிடையே இல்லை என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் சமூகத்தின் அமைப்பு முறை என்ன? மேலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இடையே உறவுகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளதா?

இப்படி சில கேள்விகளுக்கு விடை காண முயன்றோம். பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் இம்தியாஸ் அகமது, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் தன்வீர் ஃபசல் மற்றும் மாநிலங்களவை முன்னாள் எம்பியும் பஸ்மந்தா முஸ்லிம் இயக்கத்தின் தலைவருமான அலி அன்வர் அன்சாரி ஆகியோரிடம் பிபிசி பேசியது.

முஸ்லிம்களில் எத்தனை சாதிகள் உள்ளன?

இந்திய முஸ்லிம்கள் முக்கியமாக மூன்று சாதிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவை 'அஷ்ரஃப்', 'அஜ்லாஃப்' மற்றும் 'அர்ஃஜால்' என்று அழைக்கப்படுகிறது. இவை வெவ்வேறு சாதிகளை உள்ளடக்கிய குழுக்கள். இந்துக்களில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே வழியில்தான் அஷ்ரஃப், அஜ்லாஃப், அர்ஃஜால் ஆகியோரும் பார்க்கப்படுகிறார்கள்.

அஷ்ரஃப்பில் சையத், ஷேக், படான், மிர்சா, முகலாயர் போன்ற உயர் சாதியினர் அடங்குவர் என்று மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் பஸ்மந்தா முஸ்லிம் இயக்கத்தின் தலைவருமான அலி அன்வர் அன்சாரி கூறினார். முஸ்லிம் சமூகத்தின் இந்த சாதிகள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் அடங்கிய இந்துக்களின் உயர் சாதிகளுடன் ஒப்பிடப்படுகின்றன.

இரண்டாவது வகை அஜ்லாஃப். இதில் நடுத்தர சாதிகள் எனப்படுபவர்கள் அடங்குவர். குறிப்பாக அன்சாரி, மன்சூரி, ரெய்ன், குரேஷி போன்ற பல சாதிகளை உள்ளடக்கிய ஏராளமானோர் இதில் உள்ளனர்.

குரேஷி என்பவர் இறைச்சி வியாபாரி மற்றும் அன்சாரி என்பவர் முக்கியமாக துணி நெசவு செய்யும் தொழிலுடன் தொடர்புடையவர். அவர்களை இந்துக்களில் உள்ள யாதவ், கோரி, குர்மி போன்ற சாதிகளுடன் ஒப்பிடலாம்.

மூன்றாவது பிரிவு - அர்ஃஜால். இதில் ஹலால்கோர், ஹவாரி, ரஸாக் போன்ற சாதிகள் அடங்குவர். கையால் துப்புரவு பணிகளை மேற்கொள்பவர்களை, முஸ்லிம் சமுதாயத்தில் ஹலால்கோர் என்றும் சலவை செய்பவர்களை, தோபி என்றும் அழைக்கிறார்கள்.

அர்ஃஜாலில் உள்ளவர்களின் தொழில், இந்துக்களில் பட்டியல் சாதி மக்கள் செய்யும் வேலைகளை ஒத்திருக்கிறது என்று விளக்குகிறார் பேராசிரியர் தன்வீர் ஃபசல். இந்த முஸ்லிம் சாதிகளின் பின்தங்கிய நிலை, இந்துக்களின் இதே சாதிகளின் பின்தங்கிய நிலையைப் போலவே உள்ளது.

இந்திய முஸ்லிம்கள் தங்கள் சொந்த சாதிக்குள் திருமணம் செய்து கொள்கிறார்களா?

பேராசிரியர் இம்தியாஸ் அகமத், முஸ்லிம்களிடையே உள்ள சாதிய அமைப்பும் இந்துக்களைப் போலவே செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். திருமணம் மற்றும் தொழில் தவிர, முஸ்லிம்களிடையே வெவ்வேறு சாதிகளின் பழக்கவழக்கங்களும் வேறுபட்டவை.

முஸ்லிம்களும் கூட தங்கள் சொந்த சாதியைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். முஸ்லிம் பகுதிகளிலும், காலனிகள் சாதி அடிப்படையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. சில முஸ்லிம் சாதிகளின் காலனி ஒருபுறமும் வேறு சில முஸ்லிம் சாதிகள் வசிக்கும் காலனி, மறுபுறமும் இருந்து வருகிறது என்று டாக்டர் தன்வீர் ஃபசல் கூறுகிறார்.

"மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பலில், துர்க் மற்றும் லோதி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையே நிறைய பதற்றம் உள்ளது. அவரவருக்கு சொந்த பிரதேசங்கள் உள்ளன. இது அரசியலிலும் காணப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்லாம் அதை அனுமதிக்காததால், மசூதியில் சாதி முறை பொருந்தாது என்கிறார் அவர். டெல்லியின் பல மசூதிகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இமாம்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பரஸ்பர உறவுகள் குறித்து மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் அலி அன்வர் அன்சாரியின் கருத்து சற்று வித்தியாசமானது. "வாழ்வது முதல் இறக்கும் வரை, முஸ்லிம்கள் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். திருமணம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர வேறு எந்த உறவும்கூட பராமரிக்கப்படுவது இல்லை," என்று அவர் கூறுகிறார்.

சாதியின் அடிப்படையில் பல மசூதிகள் கட்டப்பட்டுள்ளன என்கிறார் அவர். "ஒவ்வொரு கிராமத்திலும் சாதிவாரியாக மயானங்கள் கட்டப்பட்டுள்ளன. ஹலால்கோர், ஹவாரி, ரஸாக் போன்ற முஸ்லிம் சாதியினருக்கு சயீத், ஷேக், படான் சாதியினரின் கல்லறைகளில் அடக்கம் செய்ய இடம் வழங்கப்படுவதில்லை. சில நேரங்களில் காவல்துறையை அழைக்க வேண்டியிருக்கிறது," என்கிறார் அலி அன்வர் அன்சாரி.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறதா?

முஸ்லிம்களில் ஒரு சாதி எவ்வளவு பின்தங்கியிருந்தாலும், அது பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்தைப் பெறாது. ஆனால், முஸ்லிம்களின் சில சாதிகள், OBC இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுகின்றன.

"அரசியலமைப்புச் சட்டத்தின் 341-வது பிரிவின் மூலம், பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். ஆனால், குடியரசுத் தலைவரின் உத்தரவு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்துக்களில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் சாதியினருக்கு மட்டுமே அதன் பலன் கிடைக்கும். பின்னர் அதில் இரண்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன் கீழ் சீக்கிய மற்றும் பெளத்த சமயத்தினர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதுவரை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் சாதிகள் இதில் சேர்க்கப்படவில்லை," என்று பேராசிரியர் தன்வீர் ஃபசல் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களில் குறைந்தபட்சம் 15 சாதிகள் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஓபிசி பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஹலால்கோர் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் இதனால் எந்தப் பலனும் பெறுவதில்லை. அதேநேரம் அவர்களின் பின்தங்கிய நிலை இந்து தலித்துகளைப் போன்றது என்று அவர் தெரிவித்தார்.

"பட்டியலிடப்பட்ட சாதிகளில் மட்டுமல்ல, பட்டியல் பழங்குடியினரிலும் எந்த முஸ்லிம்களும் வருவதில்லை. ஹிந்துக்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் மீனா சாதியினர் இடஒதுக்கீடு பெறுகிறார்கள். ஆனால், முஸ்லிம்களில் உள்ள மீனா சாதியினரை ஒத்த மேவ் சாதியினருக்கு, பட்டியல் பழங்குடியினர் ஒதுக்கீடு கிடைப்பதில்லை. அவர்களுக்கு OBC அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது" என்று அலி அன்வர் அன்சாரி தெரிவித்தார்.

இந்தியா முழுவதிலும் எங்கோ ஒரு சில இடங்களில் முஸ்லிம்களின் சில சாதிகள் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்பதும் உண்மைதான்.

இந்துவில் இருந்து முஸ்லிமாக மாறினால் இட ஒதுக்கீடு கிடைக்காது.

இந்து மதத்தைப் பின்பற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு பட்டியல் சாதிகளின் கீழ் இட ஒதுக்கீடு கிடைக்காது.

எந்தவொரு தலித் நபரும் தனது மதத்தை சுதந்திரமாகத் தேர்வு செய்ய முடியாது என்று தன்வீர் ஃபசல் விளக்குகிறார். ஏனெனில் இந்து மதத்தில் அவர் பட்டியல் சாதியின் கீழ் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுகிறார். அதே நேரத்தில் முஸ்லிம் மதத்தில் சேர்ந்த பிறகு, OBC ஒதுக்கீட்டின் கீழ் மட்டுமே இடஒதுக்கீட்டின் பலனை அவர் பெறமுடியும்.

இது சுதந்திரமாக மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நேரடியாக மீறுவதாகும் என்று பேராசிரியர் ஃபசல் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம்களிடையே சாதி அமைப்பு எப்படி வந்தது?

சாதி அமைப்பு இந்திய சமூகத்தின் சமூக கட்டமைப்பின் மையத்தில் உள்ளது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. வர்ண அமைப்பு பற்றிய பேச்சு இந்து மத நூல்களில் காணப்படுகிறது. ஆனால் அது இஸ்லாத்தின் மையத்தில் காணப்படவில்லை.

வர்ண அமைப்பு இஸ்லாத்தில் இல்லாவிட்டாலும், இந்திய முஸ்லிம்களின் சமூகத்தைப் பார்த்தால், அவர்களிடையே சாதி அமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது தெரிகிறது என்கிறார் தன்வீர் ஃபசல்.

துருக்கி மற்றும் இரான் வழியாக இஸ்லாம் இந்தியாவை அடைந்தபோது, அது ஒரு விரிவான சுத்திகரிப்பு வளர்ச்சியை அடைந்திருந்தது. இந்த மதம் இந்து சாதி அமைப்புடன் தொடர்பு கொண்டபோது, அது வலுப்பெற்றதாக இம்தியாஸ் அகமது விளக்குகிறார்.

இதற்குப் பின்னால் இருக்கும் வேறு சில காரணங்களையும் தன்வீர் ஃபசல் கூறுகிறார்.

"மதமாற்றத்தின் போது, மக்கள் தங்கள் சொந்த சாதியினரையும் தங்களுடன் அழைத்து வந்தனர். இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகும், அவர்கள் சாதியை விட்டு வெளியேறவில்லை. முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்ட உத்தரபிரதேச ராஜபுத்திரர்கள் இன்றும் தங்கள் பெயர்களுடன் செளஹான் என்று எழுதுகிறார்கள். தங்களை ராஜபுத்திரர்களாகக் கருதுகிறார்கள்," என்று பேராசிரியர் தவீர் ஃபசல் கூறினார்.

துருக்கியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆப்கானியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, ஆட்சி அமைப்பில் தனது மக்களுக்கு உயர்ந்த பதவியை அளித்து இங்குள்ள மக்களை இழிவாகப் பார்த்தனர். ஆகவே இது அங்கிருந்தும் தொடங்கியிருக்கலாம் என்று பேராசிரியர் ஃபசல் கருதுகிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு நன்மை?

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதில் எந்த சாதியின் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் இருக்காது. முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தொகையும் மத அடிப்படையில் செய்யப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், எல்லா மதங்களிலும் உள்ள சாதிகள் என்ன என்பது தெரியவரும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு நடத்தினால், சமூக, பொருளாதார நிலையையும் அது பார்த்துக் கொள்ளும் என்கிறார் தன்வீர் ஃபசல். இது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சாதிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் அடிப்படையில் இடஒதுக்கீடு பெற உதவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ENJOY Videos














 

DMK Stalin Videos

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, May 31, 2024

சவார்க்கர் குறித்த உண்மை

 சவார்க்கர் குறித்த  உண்மை தெரியாம  தவறாக சித்தரித்து வருகிறார்கள் ,தனிமை சிறையில் அடைத்து கொடுமை செய்தார்கள் .


நேரு காந்தி -மற்றவர்கள் சிறையில் சுகம் அனுபவித்தார்கள். சுய சரிதைகள் எழுதும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது .

ஜெயலலிதா உறுதியான ஹிந்து தான்

சென்னை: "ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி தான்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று சொல்வதற்கான காரணங்களையும் ஆதாரங்களுடன் அண்ணாமலை அடுக்கியுள்ளார்.

சென்னையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று நீங்கள் கூறியதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே.." என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:


இப்போதும் சொல்கிறேன்.. ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவவாதி தான். அதிமுக நண்பர்கள் யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால், 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா பற்றி கொடுத்த தீர்ப்பை போய் படிக்க சொல்லுங்க. இந்துத்துவா என்றால் என்ன என்பதுதான் அன்றைக்கு நடந்த வழக்கு. ஒரு தலைவர் தேர்தல் களத்தில் இந்துத்துவா என்ற வார்த்தையை பயன்படுத்தினால், அது மதப் பிரச்சாமா இல்லையா? இந்துத்துவா என்றால் ஒரு மதமா? இந்துத்துவா என்றால் இந்துவா? இப்படி பல கேள்விகளை உச்ச நீதிமன்றம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.

அப்பொழுது உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குகிறது. அதில், "இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது கிடையாது. அது ஒரு வாழ்வியல் முறை. இந்த மண்ணின் கலாச்சாரம்" என்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் 2013-இல் மேல்முறையீடு செய்கிறார்கள். ஆனால், அந்த தீர்ப்பை ஆராய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், 1995-இல் இந்துத்துவா பற்றி உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புதான் இன்றைக்கும் பைபிளாகவும், கீதையாகவும் இருக்கிறது. அதை வைத்துதான் நான் பேச முடியும்.
 
இனி ஜெயலலிதாவை பற்றி சொல்றேன் கேளுங்க. 1984 ஜூலை மாதம் 26-ம் தேதி அன்று ராஜ்ய சபா எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது அவர், காஷ்மீரில் 370-வது சட்டத்தை நீக்க வேண்டும் என்று அவர் பேசி இருக்கிறார். அது மட்டுமா? 1992-இல் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா கூறியதை இங்கு நான் சொல்கிறேன் கேளுங்கள். கரசேவை என்பது தவறான வார்த்தை கிடையாது. பாபர் மசூதியில் நடந்த கரசேவையை காரணம் காட்டி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிக கலைக்கப்பட்டதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன் என்று பேசியவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்தான்.. காரணத்தை சொல்றேன் கொஞ்சம் கேளுங்க.. பொங்கிய தமிழிசை செளந்தரராஜன்

1993-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் கையெழுத்து இயக்கும் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் நிறைவு விழா சென்னையில் நடந்த போது, எல்.கே. அத்வானி அதில் கலந்து கொள்கிறார். 2003-இல் ஒரு பிரஸ் மீட்டில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லும் ஜெயலலிதா, ராமர் கோயிலை இந்தியாவில் கட்டவில்லை என்றால், பாகிஸ்தானிலா கட்ட முடியும்?" என்று கேட்கிறார். ஆனால், இன்றைக்கு அதிமுக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள். எனக்கு மூட்டு வலி இருக்கிறது.. அதனால் ராமர் கோயிலுக்கு வர முடியவில்லை என்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால், முதல் ஆளாக ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்

அமீர் சுல்தான் எனும் இஸ்லாமிய மத வெறியர்






  


































 

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில்கள் வைன்சாராயம் விற்பனை;ரூ250 கோடிகள் - ஆண்டிற்கு ரூ.6 லட்சம் கோடிகள்

திமுக ஆட்சியில் தினமும் 70 லட்சம் பாட்டில் வைந்சாராயம் விற்பனை https://minnambalam.com/tamil-nadu/daily-sale-of-70-lakh-liquor-bottles-judge...