தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு
(Historical & Theological view based on International University researches)
ஏமனில் சமஸ்கிருத கல்வெட்டுகள்!
கலித்தொகை அறிமுகமும்- காலமும்
சங்க இலக்கியம் கலித்தொகை 99 பாடல் (8ம் நூற்றாண்டு) அசுரர்கள்- தேவர்கள் பற்றிய விளக்கம்
மதுரை தீக்கிரையான நாள் ஆடி வெள்ளிக்கிழமை நாளானது, ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.
திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம்
முக்கிய அம்சங்கள்:
- செயினியரேஜ் கட்டணம் (Seigniorage Fee) ₹25/டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- குவாரி லீஸ் பகுதிகளில் அதிகமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு இரட்டிப்பு கட்டணம் மற்றும் ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படும்.
- லீஸ் இல்லாத பகுதிகளில் எடுக்கப்பட்ட கற்களுக்கு ஐம்படிகள் கட்டணம் வசூலிக்கப்படும்.
- அனைத்து குவாரிகளுக்கும் ட்ரோன் சர்வே கட்டாயம். 1,845 குவாரிகளில் 904 குவாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
- திட்டம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்.
எதிர்ப்பு குரல்கள்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரப்போர் இயக்கம் போன்ற அமைப்புகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
- இது சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்கும் முயற்சி என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- 1957 ஆம் ஆண்டு Mines and Minerals Act-ஐ மீறுவதாகவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
சமூக விளைவுகள்:
இந்த திட்டம் அரசு வருவாயை அதிகரிக்கும் என்றாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
- இயற்கை வளங்களை பாதுகாப்பது முக்கியமா?
- அல்லது அரசின் வருவாய் அதிகரிப்பதா?
இது குறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு ஆகியோருக்கிடையே தீவிரமான விவாதம் நடைபெறுகிறது.
👉 இந்த விவகாரத்தில் மக்கள் கருத்துகளை தொகுத்து, சமூகத்தின் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான பதிவை உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், நான் அடுத்த கட்டுரையில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விரிவாக எழுத முடியும்.

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தில் ஆயிரம் கோயில்களை இணைக்க ரூ.25 கோடி நிதி, அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.1.500 மற்றும் 19 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூஜை உபகரணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 18 ஆயிரம் கோயில்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நிதி வசதியற்ற 1,000 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் விதமாக, வைப்புநிதியாக முதலீடு செய்யும் வகையில், மின்விசை நிதி நிறுவனத்தின் இயக்குநரிடம் ரூ,25 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, ஒருகால பூஜை திட்ட கோயில்களின் அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத் தொகையான ரூ.1,500 வழங்கும் அடையாளமாக 10 அர்ச்சகர்களுக்கு காசோலையை வழங்கினார்.
பூஜை உபகரணங்கள்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூ.8.58 கோடி செலவில் 19 ஆயிரம் ஒருகால பூஜை திட்ட கோயில்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பூஜை உபகரணங்களை வழங்கும் அடையாளமாக 50 கோயில்களின் அர்ச்சகர்களிடம் வழங்கினார்.
ஒவ்வொரு கோயிலுக் கும் ரூ.4,515 செலவில் பித்தளை தாம்பாளம், தட்டு (3 கிண்ணங்களுடன்), சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சிவிளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அறநிலையத் துறைச் செயலர் க.மணிவாசன், துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், கோ.செ.மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ சர்ச் பேராயா் உயிரிழந்தாா்.
ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ சர்ச்களின் பேராயராக இருந்தவா் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பேராயராக பதவியேற்றாா். ஈரோட்டில் குடியிருக்கும் இவா் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை தனது காா் ஓட்டுநருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.
அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலையில் விழுந்தாா். அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், அருகே இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால் வரும் வழியிலேயே ஜேக்கப் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதையறிந்த சிஎஸ்ஐ சர்ச் நிா்வாகிகள், உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா். மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியோடு குதித்தாரா? அல்லது கால் தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் ஒருவர் ரூ.50 லட்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நீதிபதி, இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2008-09ம் ஆண்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, இந்திய உலோகம் மற்றும் கனிமங்கள் வர்த்தக கழகத்தை ரூ.113.38 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக, சென்னை என்எஸ்சி போஸ் சாலையைச் சேர்ந்த தந்தை, மகனான நரேஷ் பிரசாத் அகர்வால் மற்றும் கணேஷ் அகர்வால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கணேஷ் அகர்வாலும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நரேஷ் பிரசாத் அகர்வாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது, இந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற, நீதிபதிக்கு கொடுக்க வேண்டுமெனக்கூறி ரூ.50 லட்சத்தை பெற்றுள்ளதாக, இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரான முரளிகுமரன் மீது குற்றம்சாட்டி நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தங்களுக்கு புகார் மனு வந்துள்ளதாகக் கூறி, அதன் நகலுடன் மத்திய சட் டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக, நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதையடுத்து, நீதிபதி சம்பந் தப்பட்ட மூத்த வழக்கறிஞரை அழைத்து இதுதொடர்பாக விசாரித்தார். அப்போது, இந்தச் குற்றச்சாட்டுகளை பகிரங்க மாக மறுத்த மூத்த வழக்கறிஞர் முரளிகுமரன், இதுதொடர்பாக தனக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன், நீதித் துறையின் கண்ணியத்துக்கு ஊறுவிளைவிக்கும் இது போன்ற கடிதத்தை புறம் தள்ள வேண்டும் என்றும், மூத்த வழக் கறிஞர் மீது குற்றம்சாட்டி மனு அனுப்பிய நபரை கண் டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரினார்.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி வி சாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத் தரவிட்டுள்ளார்.
இடது சாரி கம்யூனிஸ்ட் நாசியர்கள் தன்மை புரிய - முன்னாள் நீதிபதி சந்துரு - மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி Ms.தஹீல் ரமணி மேகாலாயா மாற்றம் போதும்(அவர் ஏற்காது ராஜினாமா) பிறகு சஞ்சீப் பேனர்ஜி மாற்றம் போதும் கட்டுரை தலைப்பு கூறும்.

திமுக பேச்சாளாரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் எதிர்க்கட்சிகளை ஆபாசமான வார்த்தைகளால் திமுக பொதுக்கூட்டங்களில் பேசுவதன் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவர், கடந்த 2023ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் மீது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செயல்பாடு காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு கட்சி தலைமையிடன் மன்னிப்புகோரியாதாக கூறி மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இந்தசூழலில் அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அவர், மீண்டும் ஆபாசமாக பேசிவருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் தான், 2023ஆம் ஆண்டு குஷ்பு மற்றும் ஆர்.என்.ரவியை ஆபாசமாக பேசியதற்கான வழக்கு நீண்டகாலமாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்தநிலையில் இன்று, எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு பிரம்மாண்ட ஏற்பாடுகள்