Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Monday, March 9, 2026
உயில்கள் கட்டாய நீதிமன்றத்தில் பதிவு -சோதனை நாடு முழுவதும் நீக்கம்
நாடு முழுவதும் உயில்கள் கட்டாய நீதிமன்றத்தில் பதிவு -சோதனைக்கான தேவை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது இதனை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
Sunday, March 8, 2026
காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய திராவிட முரட்டு பக்தர்
காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய திராவிட முரட்டு பக்தர்
ராமச்சந்திரா அறக்கட்டளையின் நிர்வாகி டி.ஆர்.முரளி சார்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரங்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலுக்குள் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னாலான எம்ஜிஆரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக யாக சாலைகள் அமைத்து விக்னேஷ்வர பூஜை, வருண பகவான் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் கோபுரத்துக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,
எம்ஜிஆர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் சேகர் ரெட்டி, பொதுமக்கள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் பலர் பங்கேற்றனர்.
உள் ஒதுக்கீட்டால் எஸ்சி பட்டியல் ஜாதியினர் பாதிப்பு: கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
கர்நாடகாவில் உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்கள் பாதிப்பு: 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி - சி ஆகிய 3 பிரிவுகளாக பிரித்துள்ளது. மொத்தமுள்ள 17 சதவீத இட ஒதுக்கீட்டில் எஸ்சி - ஏ 6 சதவீதம், எஸ்சி - பி 6 சதவீதம், எஸ்சி - சி 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 புள்ளிகளைக் கொண்ட இன சுழற்சி முறையும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்சி - ஏ பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல் இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி - பி பிரிவுக்கு 14 இடமும், எஸ்சி - சி பிரிவுக்கு 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எஸ்சி பி மற்றும் எஸ்சி சி பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு இடங்கள் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்சி பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பேசும் ஆதி திராவிடர், பறையர், வள்ளுவர், சாம்பவர் உள்ளிட்ட சாதியினர் பாதிக்கப்படுவதால், அம்மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கர்நாடக அரசின் முடிவை கண்டித்து மைசூருவில் பல்கலைக்கழக பாபாசாகேப் அம்பேத்கர் மாணவ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷிமோகாவில் உள்ள ஆதி திராவிடர் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆதி திராவிட மகாஜன சபையின் மூத்த தலைவர் கோ.தேசிகன்பிள்ளை கூறுகையில், "தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்கீட்டால் அங்குள்ள பறையர் உள்ளிட்ட 76 சாதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கர்நாடக அரசு முடிவால் இங்குள்ள எஸ்சி- பி பிரிவில் உள்ள சுமார் 1.5 கோடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதகம் ஏற்படும்.
அதிலும் குறிப்பாக தமிழ் ஆதி திராவிடர்கள் கர்நாடகா முழுவதும் சுமார் 60 லட்சம் பேருக்கு உயர் கல்வி நிலையங்களில் கற்கும் உரிமையும், ஊக்க தொகையும், அரசு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இதனை திரும்ப பெறாவிட்டால், வருகிற தேர்தலில் கடும் பின் விளைவை சந்திக்க நேரிடும்" என்றார்.
முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவில் போராட்டம் நடப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவும், எஸ்சி பி பிரிவில் உள்ள சாதி அமைப்பினரும் காங்கிரஸுக்கு எதிராக திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மைசூருவில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றது.
மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பா? - நடந்தது என்ன?
மானாமதுரை: மானாமதுரையில் 2 தொழிலாளர்களை வெட்டிய வழக்கில் கைதாகி, கால் முறிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
போலீஸார் தாக்கியதில் இறந்ததாகக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 5-ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் மீது அதே பகுதியைச் சேர்ந் பொறியியல் பட்டதாரி ஆகாஷ்டெல்சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், கிருஷ்ணராஜபுரம் மயானம் அருகே ஜெயக்குமார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோர் இருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மேலப்பசலையில் இருந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெல்சன் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
கைதான இருவரையும் மார்ச் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆகாஷ் டெல்சன் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை போலீஸார் விசாரிக்கின்றனர். இதனிடையே, போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்ததாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை- ராமேசுவரம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்என வலியுறுத்தினர். அவர்களிடம் நகாட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்து முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியல் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
இதையடுத்து, மதுரை, ராமேசுவரம் வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் அனைத்தையும் போலீஸார் சிவகங்கை, கமுதி உள்ளிட்ட வேறு வழித்தடங்களில் மாற்றிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஆகாஷ்டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், தாயார் ஆனந்தி ஆகியோர் கூறியதாவது: எங்களது மகனை ஒரு வழக்கில் தேடுவதாகக் கூறி போலீஸார் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போதே உங்களது மகன் கையில் கிடைத்தால் கொன்றுவிடுவோம் என்றனர்.
சிறிது நேரத்தில் எங்களது மகனை கைது செய்துவிட்டதாகக் கூறி, எங்களை விடுவித்தனர். தொடர்ந்து எங்கள் மகனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகக் கூறினர். அவனை சென்று பார்த்தபோது போலீஸார் தன்னை அடித்ததாகக் கூறினான்.
இந்நிலையில் திடீரென எங்களது மகன் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, எங்களது மகனின் காலை உடைத்துவிட்டனர். அதனால் தான் உயிரிழந்துவிட்டான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே இந்த மறியல் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவமனையிலும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
உயில்கள் கட்டாய நீதிமன்றத்தில் பதிவு -சோதனை நாடு முழுவதும் நீக்கம்
நாடு முழுவதும் உயில்கள் கட்டாய நீதிமன்றத்தில் பதிவு - சோதனைக்கான தேவை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது இதனை உடனடியாக அமல்படுத்த தமிழ்நா...







