
Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Friday, July 10, 2026
பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாய்!
பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாய்!
இணை ஆணையர் தகவல்

பழநி முருகன் கோயில்
Updated on:
1 min read
பழநி: பல்வேறு கட்டண சேவைகள், நன்கொடைகள், சொத்துக்கள் மூலம் பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. அதில், 28 கட்டணமில்லா சேவைகளுக்காக ரூ.145.26 கோடி செலவிடப்பட்டுள்ளது என கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பழநி முருகன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து விவரிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச மற்றும் கட்டண சேவைகளை வழங்கி வருகிறது.
அதில், சிறப்பு கட்டண தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்கத் தொட்டில் பிராத்தனை, பூஜை பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிராசதம் விற்பனை, நன்கொடைகள், சொத்துக்கள், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை என 33 இனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் கோயிலுக்கு ரூ.1414.83 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.353.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21-ல் ரூ.110.61 கோடியாக இருந்த ஆண்டு வருமானம், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 மடங்கு அதிகரித்து (ரூ.243.28 கோடி ) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பக்தர்கள் நலன் கருதி நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், தேவஸ்தான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 வேளை உணவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் இலவசமாக பயணிக்க வசதி உட்பட 28 கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.145.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர்,” என்றார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசாங்க பணி கொடுப்பது தவறான முன்னுதாரணம்.
கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசாங்க பணி நியமனம் தொடர்பாக (lengthy post. TLDR at the end)
1. அரசாங்கத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயிரிழப்பவர்கள் இரு வகைப் படுவர். முதல் வகை martyrs. இரண்டாம் வகை victims.
Martyrs - தியாகிகள்
2. முதல் வகையான martyrs எனப்படும் தியாகிகள் நாட்டுக்காகவோ அல்லது நாடு முன்போ பின்போ கொண்டிருக்கும் விழுமியங்களுக்காக மரணிப்பவர்கள். நாட்டை காக்க உயிர்விடும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் தெரிந்த உதாரணம். அவர்களின் வாரிசுகளுக்கு பப்ளிக் செக்டரிலும் இன்ன பிற வேலைகளிலும் இடஒதுக்கீடு உண்டு. பணியில் இருக்கும்போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கும் இதே போன்ற சலுகை உண்டு.
3. ஆட்சி மாற்றத்திற்கு பின்பு வரும் அரசாங்கம் தனக்கு முந்தைய ஆட்சிக்காலத்தில் தற்போதைய அரசின் கொள்கைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும். மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான வேலை கொடுக்கும். இங்கிலாந்திடம் இருந்து இந்திய அரசாங்கம் பெற்றது transfer of power என்ற கோணத்தில் பார்க்கும்போது சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் ஆகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும் பணியும் நியாயமாகிறது. தமிழ்நாட்டு மொழிப்போர் தியாகிகளையும் அவ்வாறு சொல்லலாம்.
4. இதில்லாமல் பல வகை தியாகிகள் நாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நாட்டிற்கான தியாகிகள் அல்ல. மூழ்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை காப்பாற்றி உயிர் விடும் இளைஞர், பேரிடரில் மக்களுக்காக உயிர்விட்ட பொதுஜனம் என பலர் இந்தவகையில் வருவார்கள். அவர்கள் தியாகிகள். பொதுநலத்திற்கான தியாகிகள், வீரர்கள். ஆனால் per se அவர்கள் நாட்டிற்காக உயிர் நீத்தவர்கள் அல்ல. அவர்களுக்கு விருதுகள், பணம் உண்டு. ஆனால் அரசாங்க வேலை என்பது அரிதிலும் அரிது.
5. நாட்டின் சேவைக்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் சிலருக்கு வேலை கொடுக்கப்படுவது உண்டு.
Victims - பாதிக்கப்பட்டவர்கள்
6. இரண்டாம் வகையான victims எனப்படும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பல வகையினர் உண்டு. முன்பு அரசாங்கத்திற்கு sovereign immunity இருந்தது. இங்கிலாந்து அரசன் கொலை செய்தாலும் அவனை தண்டிக்க முடியாது ஏனெனில் அவன் சட்டத்திற்கு மேலானவன். ஆனால் காலப்போக்கில் அரசாங்கம் liabilities ஐ ஏற்றுக்கொண்டுவிட்டது. சாலை விபத்து, கூட்ட நெருக்கடியில் மரணம் என பல வகை இறப்புக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குகிறது.
7. முந்தைய திமுக அரசாங்கம் உண்மையில் இந்த victims மற்றும் martyrs ஆகியவற்றின் அர்த்தங்களை தன் செயல்பாடுகளில் கொஞ்சம் குழப்பிவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் victims. அரசாங்கம் martyrs க்கு பொதுவாக கொடுக்கப்படும் கருணை அடிப்படையிலான பணியை கொடுத்தது. கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்கள் victims ஆ என்பது குழப்பம் தான். அவர்கள் அராசாங்க மதுபுட்டிகளில் விற்கப்பட்ட மதுவையோ அல்லது அரசாங்க தயாரிப்பு என்று நம்பிய மதுவை குடித்து இறந்திருந்தால் அரசாங்கத்தின் victims எனலாம். ஆனால் அதில் இருக்கும் அபாயம் தெரிந்து குடிப்பவர்கள் victims என்பது அதன் அர்த்தத்தை இன்னமும் விஸ்தீகரிப்பது.
8. அவர்களோடு ஒப்பிடும்போது கரூரில் இறந்த 41 பேர் நிஜமான victims. பலர் இங்கே அவர்கள் நடிகரை பார்க்க கூடினார்கள், திரைக்கவர்ச்சி என்றெல்லாம் எழுதுவது இறந்தவர்களையும் நம் ஜனநாயகத்தையும் அவமானப்படுத்துவது. அரசியலும் தேர்தல் செயல்பாடும் ஜனநாயகத்தின் அடிப்படை. விஜய் ஒரு கட்சித் தலைவராக தான் கூட்டம் நடத்தியிருக்கிறார். அதற்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது அரசாங்கம். அதற்கான வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டியது தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சி.
9. இரு தரப்பிலும் தவறுகள் இருக்கின்றன. இரு தரப்புகளும் பொருளாதார நிதியுதவிகளை அறிவித்திருக்கின்றனர். 30-35 லட்சம் இரு தரப்பும் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். இறந்தவர்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் நலிந்தவர்கள் என்னும்போது அது முழுமையான நிவாரணம் இல்லையென்றாலும் அருகில் நெருங்கி வருவது. உயிரிழப்பை திருப்பி உயிர் கொடுக்கும் ஒரே வழியை தவிர பிற அனைத்தும் நஷ்ட ஈடு தான்.
10. இத்துடன் ஒப்பிட நெருக்கமான ஒன்று என்றால் மொழிப்போர் தியாகிகள் தாம். உண்மையில் மொழிப்போர் தியாகிகள் போராடியது நிறுவப்பட்ட மத்திய அரசாங்கத்தின் சட்டத்திற்கு எதிராக. அப்போதைய மாநில அரசும் அதற்கு துணை நிற்கவில்லை. ஆனால் அடுத்த மாநில அரசாங்கம் அவர்கள் போராட்டத்தை மாநிலத்தின் கொள்கைகளுக்கு நிகரான ஒன்றாக கண்டது. அவர்களுக்கு ஓய்வூதியம், அரசாங்க பணிகளில் முன்னுரிமை ஆகியவற்றை கொடுத்தது. அதே நேரம் இந்திரா காந்தியின் எமெர்ஜன்ஸியினை எதிர்த்து போராடியவர்களுக்கோ அவர்களின் குடும்பத்திற்கோ இது போன்ற சலுகைகள் எதுவுமில்லை. சில மாநில அரசாங்கங்கள் மாதாந்திர பென்ஷன் போன்றவற்றை கொடுக்கிறார்கள் ஆனால் கருணை அடிப்படையிலான பணியை கொடுப்பதில்லை.
11. இவற்றுடன் ஒப்பிடும்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் victims மட்டுமே. அவர்கள் மொழி போராட்டத்தினர் போலவோ மிசாவில் தண்டனை பெற்றவர்கள் போலவோ தங்கள் உயிருக்கு ஆபத்தான விஷயத்தை செய்யவில்லை. அவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். அதனால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தவர்கள்.
12. தினம் தினம் அராசாங்கத்தின் தவறினால் மரணிப்பவர்களும் அரசாங்க பணியில் இருக்கும்போது மரணிப்பவர்களும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். நேற்று கூட தஞ்சாவூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் விழுந்து ஒருவர் பலி. அவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் மட்டுமே நிவாரணம். கடந்த வருடம் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு காரில் திரும்பிய அதன் உறுப்பினர்கள் சிலர் சாலை விபத்தில் இறந்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அதிமுக அராசாங்க பணி கொடுத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
கரூர் துயரத்தில் இன்னமும் முழு உண்மை வெளிவரவில்லை
13. மேலும் கரூர் வழக்கில் இன்றைய முதல்வர் பெயர் இணைக்கப்படவில்லை. ஆனால் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த், அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா போன்றோர் இணைக்கப்பட்டனர். விஜய் பெயர் விடுபட்டது புதிரானது. தேர்தலில் விஜய் அனுதாபம் பெற உதவியிருக்கும் என்று திமுக நினைத்திருந்தால் அது கோழைத்தனம். விஜய் பெயர் சேர்க்கப்பட்டால் அது பொது அமைதியை குலைக்கும் என்று நினைத்திருந்தாலும் அது கோழைத்தனம். ஜெயலலிதாவின் 2011-2016 ஆட்சிக்காலத்தில் சித்திரை முழுநிலவு கூட்டத்திற்கு பின் ஜெ குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். டாக்டர் ராமதாஸ் கூட அதே ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டார். அவர்கள் கைதையே அராசாங்கம் சமாளிக்க முடியுமென்றால் விஜய் பெயரை சேர்ப்பதில் என்ன மாநிலத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுவிடும்? ஜெயலலிதா அவரின் தவறுகளை தாண்டியும் நிற்க அந்த தைரியமான நிர்வாக அணுகுமுறை தான் காரணம். கோழை வாழ்வதே இல்லை, வீரன் சாவதே இல்லை என்று கருணாநிதி எழுதியிருக்கிறார். அன்று கரூர் துயரத்தின்போது சாணக்யத்தனமாக நடந்ததால் என்ன மாறிவிட்டது? அதே ஆட்சி இழப்பு. முதல்வரே சொந்த தொகுதியில் தோல்வி.
14. இதில் இன்னொரு சிக்கல் வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆதவ் அர்ஜுனா முன்பே கரூர் துயரத்திற்கு ஒரு சதிக்கோட்பாட்டை முன்வைத்தார். அமைச்சரான பின்பும் அதை ஒரு முறை சொன்னார். இன்று மாநில அரசின் சீனியரிட்டியில் இரண்டாம் இடத்தில இருக்கும் என்ஆனந்த் வழக்கில் இருக்கிறார். அப்படியிருக்கையில் அராசாங்கம் இதை செய்வது முறையற்றது.
15. ஆதவ் அர்ஜுனா கரூர் துயரத்தின் போது பங்களாதேஷில் நடந்த ஜென் ஸி புரட்சி பற்றி குறிப்பிட்டார். அன்று பங்களாதேஷில் மாணவர்கள் போராடியதன் முக்கிய காரணங்களில் ஒன்று நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் வாரிசிற்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் அரசுப் பணிகள். இதனால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். இன்று தவெக அரசாங்கமே நேரடி பணி நியமனம் மூலம் அவ்வாறே செய்கிறது. ஒரு வேலை வாய்ப்பு என்றால் கரூர் சம்பவத்தின் குடும்பத்தினரை விட அதில் தேர்வடைய அரசாங்க தேர்வுகளுக்கு தயாரான போட்டியாளர்களுக்கே அதிக தகுதி உண்டு. அது க்ரூப் 4 என்றாலுமே.
16. தமிழ்நாட்டில் கருணை அடிப்டையில் பணியை பெற்ற ஒரு பிரபலம் சவுக்கு ஷங்கர். அவரது தந்தை பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால் விஜிலென்ஸ் பிரிவில் கிளெர்க்காக சேர்ந்தார். அவர் பிரகாலத்தில் நிறைய அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தினார். ஆனால் அவர் சேர்ந்த பணிக்கு அவர் எந்த வகையிலும் நல்லதை செய்யவில்லை. அதற்கு பாதகமே செய்தார். பொதுவாக ஒன்றை இலக்குடன் முயல்பவர்களுக்கு அதன் மேல் இருக்கும் ஈடுபாடு இவ்வாறு பணி பெறுபவர்களுக்கு இல்லை.
17. கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் சமூக பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்கள். அவர்கள் குடும்பத்தினர் பெரும் படிப்போ வசதியோ இல்லாதவர்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் பணிகள் covetable அல்லது lucrative அல்ல என்றாலும் in principle அராசாங்கம் செய்வது தவறு. இன்று தவெக பெரிய கட்சி. ஆளும் கட்சி. அவர்களின் அலுவலக பணிகள் முதல் பல பணிகள் இருக்கின்றன. அதில் வேலை கொடுக்கலாம். இன்னொன்று அவர்கள் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் என்றால் அடுத்த சில தேர்தல்களுக்கு கரூரில் ஒரு தொகுதியில் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வைக்கலாம். நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் அந்த குடும்ப உறுப்பினர்களை போட்டியிட்டு வெற்றி பெற வைக்கலாம். அரசாங்க பணி மட்டுமே மக்களுக்கான சேவை அல்ல.
TLDR: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசாங்க பணி கொடுப்பது தவறான முன்னுதாரணம். அவர்கள் victims(பாதிக்கப்பட்டவர்கள்). அவர்கள் martyrs(தியாகிகள்) அல்ல. அவர்களுக்கு உதவ பலவழிகள் இருக்கின்றன இந்த பணி நியமனங்கள் அவற்றில் ஒன்று அல்ல. இது பொது நம்பிக்கை மேலே அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
https://www.facebook.com/dvaipayana.krishna/posts/pfbid0irmviMJzQdoi3BwZTcANT1mtRfeyXMokfmxWCjRYGVyGWfEfKceYNgAuzExpQk5tl?__cft__[0]=AZaHF6bn-H-BBc9ydeWBvL2Ojih_Tw6A70Ku_XWAa5Rx0jtlnbzU0jowze8khG0QQMJifZpzAjJ2HEuvsBhmxMn6KTZ1Fsrs3wunTiHVuYysc9I6xa_Gc_kUPysgzOoxn_GYDGYntzYe5pSNl2bGllTG&__tn__=%2CO%2CP-R
வழிபாட்டில் தமிழ் - மொழி பெயரால் பிரிவினை, வெறுப்பு அரசியல்
* 1. இப்போது தனித்தமிழ் வழிபாடு என்பது தமிழகத்திலும் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பரவியிருக்கிறது. நீங்கள் அதை எப்படி கருதுகிறீர்கள்?
பதில் - இன்றைக்கு சீரடி வழிபாடு, அம்மா பகவான், அது, இது என்று ஏதேதோ வருகிறது. அவற்றோடு ஒப்பிடுகையில் தமிழ் வழிபாடு என்று நம் சமயாச்சார்யர்கள் அருளிய திருமுறைகளை ஓதி வழிபடுவது எத்தனையோ மடங்கு உயர்வுடையது.
* 2. தேவதா சாந்நித்யம் ஏற்படுமா?
பதில் - சந்தேகமே வேண்டாம். திருமுறை ஒலிக்கும் இடத்தில் சிவபெருமானின் பிரசன்னம் இருக்கும் என்பதே சைவ நம்பிக்கை.
அது போலவே நாலாயிரம் கேட்டால் நாராயணன் ஓடி வருவான். திருப்புகழ் ஒலித்தால் திருமுருகன் முன் நிற்பான்.
* 3. அப்படியாகில் வேத மந்திர வழிபாடு தேவையில்லையா?
பதில்- "வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.." என்பது திருஞானசம்பந்தப்பெருமான் திருவாக்கு.
இப்படி பல நூறு இடங்களில் திருமுறைகளே வேதத்தை போற்றுகின்றன. (அந்த வேதம் வேறு இந்த வேதம் வேறு என்று சொல்வதை நான் சிறிதும் ஏற்பதில்லை. அது நகைப்புக்குரிய ஒன்று)
எனவே, பொதுவாக கிரியைகளுக்கு வேதம் சிறப்பு. பிரார்த்தனைக்கு திருமுறை / தமிழ் சிறப்பு.
* 4. ஆகமங்கள் என்ன சொல்கின்றன?
பதில்- எமக்கு இப்போது ஆகமங்கள் சம்ஸ்க்ருதத்தில் தான் கிடைக்கின்றன. ஆகம மந்திரங்களும் அவ்வாறு தான் கிடைக்கின்றன.
எனவே ஆகம கிரியைகளை வடமொழியில் தான் சிறப்பாகவும் முறையாகவும் செய்யக் கூடியதாக உள்ளது.
இன்று வரை பஞ்சாக்ஷரம் - பஞ்சபிரம்ம - க்ஷடங்க மந்த்ரங்களை அக்ஷர எண்ணிக்கை குன்றாமல் - திருமுறை ஆசிரியர்களின் வாக்கியப்படி மொழிபெயர்க்க முடியவில்லை. அது முடியாதது என்பதே என் எண்ணம்.
* 5. கத்தோலிக்க வழிபாட்டை மேற்கோள் காட்டுகிறார்களே?
பதில்- முதலில் சொன்னது போல பிரார்த்தனைக்கு தமிழ் மிக நெருக்கமானது. நானும் பிரார்த்தனைக்கு பெரும்பாலும் தமிழையே பயன்படுத்துவேன்.
எனவே கிறிஸ்தவ திருச்சபை பூசைகள் என்பவை பெரும்பாலும் பிரார்த்தனை வடிவில் இருப்பதால் அது சாத்தியமாகிறது.
இங்கு சைவ மரபில், யாக- வேதிகார்ச்சனை ,அக்னி ஆராதனை, கும்ப பூஜை, மண்டலார்ச்சனை, நியாசம், அது, இது என்று இருப்பதால் சம்ஸ்க்ருதத்தில் உள்ள மரபான மந்திரங்களே இயல்பாக பொருந்துகின்றன.
* 6. அப்படியாகில் தமிழில் கிரியை தவறா?
பதில்- புதிதாக அமைக்கப்பட்ட ஆகம மரபுக்கு உட்படாத சிற்றாலயங்கள், மடங்கள், ஆன்மார்த்த பூசை இவற்றில் இத்தகு கிரியை ஏற்புடையது.
பழைமையான நீண்ட மரபுடைய கோயில்களில் இப்போதைக்கு கிரியை மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. அது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகிறேன்.
*7. உங்கள் தொழில்களம் சார்ந்து அஞ்சுகிறீர்களா?
பதில் -நான் தமிழில் கவிதை, பேச்சு என்று இயங்குபவன். திருமுறைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவன். என்னால் தமிழ் அர்ச்சகர்களாக தம்மை காட்டிக்கொள்பவர்களை விட சிறப்பாக அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆகவே பிரச்சினை தனிச்சுயநலம் அல்ல. பொது நலம் நோக்கியதே ஆகும்.
* 8. முடிவாக உங்கள் பதில் என்ன?
பதில்- தமிழ் வழிபாட்டை நான் எதிர்க்கவில்லை. அது ஏற்புடையதே. ஆனால் மரபார்ந்த கோயில்களில் அது கிரியைகளுக்குள் நுழைவது ஏற்புடையது அல்ல.
அங்கே வேதமும் ஆகம மந்திரங்களும் திருமுறையும் ஒருங்கே இணைந்து ஒலிக்க வேண்டும். அதுவே சிறப்பாக இருக்கும்.
* 9. அப்படி எங்கேனும் நடக்கிறதா?
பதில் - பல இடங்களில் அப்படி நடக்கிறது. சில நாட்களுக்கு முன் ஈழத்து சிதம்பர கும்பாபிஷேகம் நடந்தது.
சிதம்பரத்திலிருந்து நான்கு தீக்ஷிதர்கள் வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேக காலங்களில் முறையாக பல மணி நேர்ம் சதுர்வேதம் ஓதப்பட்டது.
ஈழத்து சாதகாச்சார்யர்கள் சிவாகம மந்திரங்களை தெளிவாக ஓதினர்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருத்தணி சுவாமிநாதன் உள்ளிட்ட மூன்று ஓதுவா மூர்த்திகள் நாள் தோறும் பல மணிநேரம் பக்க வாத்தியங்கள் உடன் திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
மூன்றில் எந்த ஒன்றையும் வேறு ஒன்றும் ஆக்கிரமிக்கவில்லை.
* 10. இந்தியாவில் இருந்து வரவழைக்கப்படாமல் இங்கு உள்ள ஆளுமைகளை வைத்தும் இது சாத்தியமா?
பதில் - ஆம். சாத்தியம். இப்போது இங்குள்ள பிரபல சாதகாச்சார்யர்கள் பலரும் தமிழ் ஆற்றலும் இசை ஆர்வமும் கொண்டவர்கள்.
வேத பாகங்களையும் மூலாகம சுலோகங்களையும் படித்தவர்கள். கிரியா நுட்பங்களையும் தேடி தேடி அறிகிறார்கள்.
எனவே இது பெரும்பாலான கும்பாபிஷேகங்களில் இயல்பாக பொருந்துகிறது. சாதாரண கோயில் வழிபாட்டு நாட்களில் தான் இதில் ஒருவித தொய்வை சில இடங்களில் காண்பீர்கள்.
அதுவும் எதிர்காலத்தில் மாறும் என்பதே எனது நம்பிக்கை.
* 11. வெறுப்பை ஏற்படுத்துவது எது?
பதில் - சைவ சமயாச்சார்யரில் நால்வரில் மூவர் அந்தணர். சந்தனாச்சார்யரில் நால்வரில் மூவர் அந்தணர். கச்சியப்பர் - திருமுறை தொகுத்த நம்பி போன்றோரும் அந்தணர்.
ஆனால் இவர்கள் தந்த திருமுறையை வைத்து பிராமண த்வேஷ கருத்துக்களையும் வடமொழி வெறுப்பையும் கக்கி பேசுவது சைவ மரபுக்கே முரணானது. இதுவே சிலரை விட்டு விலகி நிற்க காரணம்.
*12. இணைந்து பயணிக்க முடியுமா?
பதில்- நிச்சயம். அவரவர் நம்பிக்கைகளுக்கு அப்பால் பிற சமயிகளுடனேயே நாம் இணைந்து பயணிக்கிற போது இது ஏன் சாத்தியமாகாது? எனவே பரஸ்பர நம்பிக்கை மரியாதையுடன் இணைவது நிச்சயம் அவசியமான ஒன்று.
அன்புடன்,
மயூரகிரிக்குருக்கள்
Subscribe to:
Posts (Atom)












