Wednesday, February 18, 2026

மாற்றுத் திறனாளிகளை தாக்கிய திமுக அரசு காவல் துறை -மார்க்சிஸ்ட் கண்டனம்

 

மாற்றுத் திறனாளிகளை தாக்கியது மனித உரிமை மீறல்: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வெற்றி மயிலோன் Updated on: 18 Feb 2026, 4:16 pm
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய மாற்றுத் திறனாளிகளுக்கு குடிக்க தண்ணீரோ, உணவோ வழங்காமல் அலைக்கழித்து, தாக்கி சித்ரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையின் செயலை வன்மையாக கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) பிப்ரவரி 10-ஆம் தேதி மாநிலம் முழுவதும் காலவரையற்ற மறியல் போராட்டத்தைத் தொடங்கியது. பிப்ரவரி 12-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 32,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டமன்ற கூட்டம் தொடங்க இருந்ததை முன்னிட்டு நேற்று (17.02.2026) சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த சங்கம் திட்டமிட்டிருந்தது. காவல் துறை கேட்டுக்கொண்ட அடிப்படையில் சிவானந்தா சாலைக்கு இப்போராட்டம் மாற்றப்பட்டது.

மதியம் 2,700-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளை அமர வைக்க ஏற்பாடு, கழிப்பறைகள் எதுவும் இல்லை.

இந்நிலையில், இரவு 7 மணியளவில் போலீஸார் திருமங்கலம் அருகே உள்ள பெரியார் சமூகக் கூடத்திற்கு அழைத்துச் செல்வதாக அறிவித்து, மாநில தலைவர்கள் உள்ளிட்ட சிலரை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு, மற்ற மாற்றுத்திறனாளிகளை 20 பேருந்துகளில் ஏற்றிய பிறகு, பேருந்துகளை பூட்டி, எங்கும் நிறுத்தாமல் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அலைக்கழிக்கப்பட்டனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப காவல் துறை முயற்சி செய்தது.

மாற்றுத் திறனாளிகள் உறுதியாக மறுத்துப் போராட்டம் நடத்திய பிறகு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணி அளவில் கொண்டு வந்து பேருந்துகளோடு மாற்றுத்திறனாளிகளை விட்டுவிட்டு காவல் துறையினர் சென்றுள்ளனர். இதற்கிடையில், சங்கத்தின் மாநில தலைவர்கள் வைக்கப்பட்டிருந்த ராஜரத்தினம் மைதானத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டு யாரும் அணுக முடியாத நிலையில் இருட்டில் வைக்கப்பட்டிருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில், காவல் துறையினர் அவர்களை பேருந்துகளில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். வலுக்கட்டாயமாக காவல்துறை இழுத்து தூக்கி கீழே போட்டதில் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் போலீசார் தெருவில் விட்டுச் சென்றனர்.

மற்றவர்கள் ஆம்புலன்ஸ் அழைத்து வந்து ஜான்சிராணியை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இரவு முழுவதும் குடிக்க தண்ணீரோ, உணவோ வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து, தாக்கி சித்ரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய மோசமான நடவடிக்கைகளுக்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும், அவர்களது உரிமைகள் மனித உரிமைகளுக்கு ஈடானது என உறுதி அளிக்கும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மாற்றுத்திறனாளிகள் உரிமை சாசனத்தை 7-வது நாடாக கையெழுத்திட்டு ஏற்ற நாடு இந்தியா என்ற அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய தற்போது ஆந்திர மாநில அரசு வழங்குவது போன்று தமிழ்நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், இது சம்பந்தமாக உடனடியாக சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போலியான கல்விச்சான்று கொடுத்து ஊழியர்கள்

 இந்து சமய அறநிலையத்துறை..

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் போலியான கல்விச்சான்று கொடுத்து ஊழியர்கள் பணியில் சேர்ந்ததாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், குற்றச்சாட்டிற்கு உள்ளான ஊழியர்களை பணி ஓய்வில் அனுமதித்திருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை..
படித்து வேலையில்லாமல் லட்சக்கணக்கில் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை ஊக்குவிப்பது போல, முறையாக விரைவாக விசாரிக்காமல் அவர்களை பணி ஓய்வில் அனுமதிக்கிறது.
அவ்வாறு பணி ஓய்விற்கு அனுமதித்தால் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.
போலியான கல்விச் சான்றிதழ் கொடுத்து வேலையில் அமர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது...
https://tamil.samayam.com/latest-news/madurai/meenakshi-amman-temple-many-employees-have-joined-using-fake-documents/articleshow/79677879.cms

மீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்!

Samayam Tamil

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியிலிருந்த மேலும் ஒரு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செல்போனை திருடிய மற்றொருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்!
மீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்!(புகைப்படங்கள்- Samayam Tamil)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் கல்விச் சான்றிதழ்களை போலியாகக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் காமாட்சி என்ற ஊழியர் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோயிலில் பணிபுரியும் ஊழியர்களின் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானதா? எனச் சரிபார்ப்பதற்காக அவரவர் பயின்ற கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் கோயிலில் சேவகராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்ற ஊழியரின் சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் வியாழக்கிழமை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மீனாட்சி கோயில் வருமானம் என்னானு தெரியுமா?: கொரோனாவால் சரிவு!

இதற்கிடையே கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் மாயமான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் கோயிலில் ஓதுவாராக பணிபுரியும் அம்ரிஷ் ராம் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அம்ரிஷ் ராமும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கோயிலில் பணிபுரியும் ஊழியர் சிலரின் கல்விச்சான்றிதழ்கள் சந்தேகம் ஏற்பட்ட தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதனை அனுப்பி வைத்து ஊழியர்கள் சிலரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப் பள்ளிகளில் ஆவணங்கள் கேட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

India had much better Social Justice always proves British records prior to Maculay education

 In the 1820s, William Adam, a Scottish Baptist missionary came to Bengal, India to harvest heathen souls. By the mid-1830s, he was commissioned by the British Governor-General William Bentinck to conduct official surveys on the state of education in native Hindu schools of Bengal and Bihar.


Between 1835 and 1838, he submitted three official survey reports on education. The “native schools” that he documented were not operated under British administrative control. They were local institutions run exclusively by Hindus - primarily in villages managed by local teachers, funded by parents or village committees and conducted in native languages like Bengali or Hindi. A few Missionary schools also operated separately from these “native schools.” The data that Adam recorded, definitively challenges the insidious colonial myth that Hindu upper castes, especially Brahmins held an exclusive monopoly over education. The statistics demonstrate in stark contrast, that lower castes not only had comprehensive access to education in native Hindu schools, but that they also outnumbered upper castes in the student body. In Burdwan district (Figure 1), out of 12,408 Hindu students - Brahmins represented only 27.6% of the student body, all upper castes together made up 44.8%. While Shudra students dominated at 49%, and Avarna student participation was at 6%. The breakdown: Brahmins: 3,429 students - 27.6% Other UCs: 2,132 students - 17.2% Shudras : 6,087 students - 49.1% Avarnas: 760 students - 6.1% (Including Chandal, Dom, Muchi, Hari, Bagdhi, Dhoba, Jalia, Tior, Garar, Mal, Pashi, & others labelled “very low castes”by Adam) ---------------------------------- In South Behar district (Figure 2) the difference was even more striking. Brahmins & other UCs together made up LESS than 1/5 (17%) of students in native Hindu schools. Shudras constituted 81% of the entire student body and Avarnas represented 2.3% The breakdown: Brahmins: 250 students - 8.6% Other UCs: 238 students - 8.1% Shudras : 2,364 students - 81.0% Avarnas: 66 students - 2.3% (Dosad, Pashi, Luniar - explicitly described by Adam as “very low castes”) ----------------------- Thus, Adam's surveys of native Hindu schools in districts Burdwan and South Behar demonstrated a student composition where Brahmins represented only about a quarter of the student body, and total UCs were less than half, while Shudras were the most numerous (upto 80% in some districts), and hundreds of students from “very low castes” as defined by Adam were also enrolled in native schools. Adam records similar trends in the composition of student bodies in other districts like Nadia, Murshidabad and Birbhum as well. Adam himself explicitly notes that “all the castes, both high and low, partake of the increase,” and that even communities such as Tior, Garar, and Mal appear in the schools”. This was not any superficial observation - it was a grudging testimonial to the diverse nature of the student body - proving that Hindus from all castes were mixing freely and equitably in native educational institutions. Strikingly, Adam’s comparison between missionary and native schools (Figure 3) also showed that out of 760 students of the lowest castes, only 86 went to Missionary schools, while the remaining 674 were all studying in native Hindu schools. Adam himself emphasizes that the total number in native schools was “so considerable” that it proved native schools already encouraged humbler classes to seek education. In other words, Avarna participation in education was higher in native schools and significantly higher than missionary institutions! This poses two important implications. 1. It proves that the lower castes trusted their own Hindu brethren far more than missionaries when it came to educating their children. An overwhelming 75% of lower castes chose to send their children to native Hindu schools instead of Missionary schools. This could only be the case if there was no evidence of any caste based discrimination or conflict in native Hindu schools. 2. It highlights the fact that Hindus were not just capable but actively collaborating in providing equitable community education across all castes, without any supervision from the “enlightened” Christian colonial administration. This busts the myth that Hindus were too divided to be capable of displaying any form of social unity by themselves. So much for the myth of Christian missionaries as saviors of the lowest castes. The survey of teacher data (Figure 4) revealed even more startling evidence. While Kayasthas and Brahmans served as the majority of instructors, Adam records striking evidence of several teachers from lower castes such as Sunri, Kalu, Dhoba, Bagdhi, and even Chandal - groups that the British had categorized as completely “excluded from literacy” by UC Hindus. In fact, Adam goes even further and observes that Hindu parents of “good caste” did not hesitate at all to send their children to schools where they were taught by teachers of inferior caste or even of a different religion! In summary, Adam’s surveys of indigenous schools in Bengal in the 1830s, provide detailed statistical evidence clearly indicating that native Hindu institutions enrolled students from the entire range of caste backgrounds and that teachers likewise came from multiple social strata. The data does NOT support the claim that Brahmins maintained exclusive monopoly over education or systematically barred lower castes from access to learning. Despite this, the British colonial administration ignored these important implications and deliberately continued to propagate the false myth of Hindu Brahmins systematically denying education to lower castes. The agenda of portraying Hindus as a divided society of rigidly caste-bound groups was perpetuated to justify the British “civilizing” intervention and drive conversion to Christianity. William Adam’s surveys unintentionally undermined a central pillar of the colonial justification for educational intervention - the charge that indigenous Hindu schools functioned primarily as instruments of caste exclusion. Adam’s own empirical record clearly puts that assertion into question. At a minimum, his data suggests a far more complex and socially permeable educational landscape than the colonial portrayal allowed. The colonial British regime amplified false myths of caste discrimination in education to divide Hindus and entrench their rule, shaping malicious narratives that continue to influence our public discourse today. The problem arises when such insidious historical claims are treated as settled fact and used to rationalize modern policies like reservations, that collectively blame and punish Brahmins and UC Hindus for unsubstantiated crimes. Public policy in today’s India should not be built on false historical narratives and unwarranted moral indictments, especially those which were deliberately manufactured to divide Indian society and perpetuate colonial rule.

பைஜாமாவை கழற்றுவதும் வன்கொடுமை முயற்சியே' - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பைஜாமாவை கழற்றுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சியே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 Byமாலை மலர்18 பிப்ரவரி 2026

குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது.

 பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் இருக்க வேண்டும்.

அலகாபாத் உயர் நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தறவு அளித்த நபர் மீதான போக்சோ வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில், தகாத முறையில் தொடுவதும், பைஜாமாவை கீழிறக்குவதும் பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தம் மட்டுமே என்றும், அது வன்புணர்வு முயற்சி அல்ல என்றும் கூறியிருந்தது.

இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது. இந்த தீர்ப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியது 

இதை கண்டித்து மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா எழுதிய கடிதத்தை ஏற்று, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது.


தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டக் கொள்கைகளை மட்டும் கொண்டிருக்கக் கூடாது; பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் அதில் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். 


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற அமர்வு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை முயற்சி என்ற கடுமையான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.


மேலும், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் இதற்காகப் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறும் தேசிய நீதித்துறை அகாடமியின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/national/taking-off-pajamas-is-also-an-attempt-at-sexual-assault-supreme-court-ruling-809860


ஓஷோ - மதர் தெரேசாவை ஏன் எதிர்க்கிறேன்

 நீங்க மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள்?

என்ற கேள்விக்கு... *ஓஷோவின் பதில்* https://x.com/Brasilwale/status/2024012269298778141?s=20 அன்னை தெரேசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதி ஒருவர் ஓர் குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள். ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர் அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை தத்தெடுக்கலாம் எனக்கூறிவிட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார். அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிகொண்டு, இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் எனக்கூறிவிட்டு, உள்ளே சென்றார். உள்ளே சென்றவர் திரும்ப வரவே இல்லை! சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம், மன்னிக்கவும் நீங்கள் தத்தெடுக்க தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை என்றதும் அமெரிக்க தம்பதிகளுக்கு அதிர்ச்சி! இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னாங்க அதற்குள் என்ன நடந்தது? என்று வந்தவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை சொல்லி விட்டேன் எனக்கூறிவிட்டு கிளம்பிவிட்டார். தத்தெடுக்க வந்தவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என குறிப்பிட்டிருந்தனர். ஒரு வேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கே 700 குழந்தைகள் இருந்திருக்கும் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர். நான் இது பற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியானது. இது பற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார். இங்கு உள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறித்து குழந்தைகளாக வளர்பவை அவை பிராட்டஸ்டண்ட் கிறித்துவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும் எனக் கூறி இருந்தார். அதற்கு தெரேசாவுக்கு இவ்வாறு நான் பதில் எழுதினேன். கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்க படும் என சொல்ற நீங்கள் ஏன் இந்து, முகமதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள் என்று! மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம். நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம். குழந்தைகளுக்கு எதிரான குற்றம், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று எழுதி இருந்தேன். இதைப் படித்த தெரேசா பயங்கர கோபமடைந்தார் பின்பு அவர் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என எழுதியிருந்தார். இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார்? என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம்? இது குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்.

மாற்றுத் திறனாளிகளை தாக்கிய திமுக அரசு காவல் துறை -மார்க்சிஸ்ட் கண்டனம்

  மாற்றுத் திறனாளிகளை தாக்கியது மனித உரிமை மீறல்: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் கோப்புப் படம் வெற்றி மயிலோன்   Updated on:  18 Feb 202...