Thursday, April 16, 2026

தமிழக பள்ளிகளில் - தமிழ் ஹிந்து, கிறிஸ்துவ, முஸ்லிம், நாத்தீக, கம்யூனிச மதவாத கூட்டம் தடை செல்லும் - ஹைகோர்ட்


 

245 Crore Gold captured in Adyar Chennai



 

DMK Senthil Balaji continues Fraud Dravidian Model

 


Delimitation and Womens Reservation benefits Southern States

 


 

திமுக ஊழல் சர்ச் பிஷப்களை வைத்து மதவாத அரசியலிற்கு கிறிஸ்துவர் எதிர்ப்பு



https://www.facebook.com/photo.php?fbid=26657919283894620&_rdr
தமிழக ஆயர் பேரவையின் சார்பாக கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி என்று திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று துண்டறிக்கை ஒன்றை தயார் செய்து கிறித்தவர்கள் மத்தியிலே பரப்பி வருகிறார்கள். இந்த துண்டறிக்கை கிறித்தவர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நடவடிக்கை இரண்டு தவறுகளை கொண்டுள்ளது.

ஒன்று இந்திய குற்றவியல் சட்டத்தின் 171 வது பிரிவு சி மற்றும் எப் ன்படி மத அடிப்படையில் அதன் தலைவர்களோ அல்லது மதம் சார்ந்த அமைப்புகளோ எந்த ஒரு குடிமகளையும் இன்னாருக்கு தான் ஓட்டு செலுத்த வேண்டும் என்று சொல்வோ அல்லது அவர்களுக்கு பரிந்துரைப்பதோ கூடாது என்று சட்டம் சொல்கிறது இந்திய குற்றவியல் சட்டத்தை தமிழக ஆயர் போவை மீறி இருப்பதால் உடனடியாக துண்டறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

இரண்டாவதாக 11.04.2026 அன்றைக்கு திருச்சியில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத சூழ்நிலையில் திமுக கூட்டணியான மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று கிறித்தவர்களுக்கு பரிந்துரை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது இதை செய்த தமிழக ஆயர் பேரவையின் சட்ட ஆலோசகர் அருள்தந்தை சேவியர் அருள்ராஜ் அவர்கள் மேலும் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினுடைய செயலர் அருள் தந்தை ஜேம்ஸ் விக்டர் அவர்கள் மேலும் ஆயர் பேரவை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழகமெங்கும் மேல் கொள்ள இரண்டு தந்தையர்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி தண்டிக்க எல்லா காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்படும்.