Saturday, March 21, 2026

ஈரான்- கமேய்னிக்கு ஆதரவும் தருபவர்கள் ஈரான் போக வேண்டும் பங்கரில் ஒளிந்த பாகிஸ்தான் பெயில்டு மார்ஷல் அஸிம் முனீர்

 ‘Go To Iran’: Asim Munir’s Iftar Shia Insult Sparks Sectarian Storm In Pakistan | Exclusive Details Reported By : CNN-News18Last Updated:March 20, 2026,

In his Friday sermon, Pakistani religious leader Syed Jawad Naqvi declared a metaphorical 'war' against what he termed an anti-Shia agenda. 

In what is being described as a watershed moment for sectarian relations in Pakistan, a high-profile Iftar gathering on March 19 has ignited a nationwide firestorm. CNN-News18 has accessed exclusive details of the meeting bwhere Pakistan’s Army Chief, General Syed Asim Munir, reportedly delivered a direct and humiliating rebuke to the country’s top Shia ulema. Sources present at the event describe a tense, one-hour monologue in which the General refused to allow the religious scholars even a single minute to respond or raise the pressing concerns of their community. The encounter has left the Shia leadership feeling fundamentally insulted, with Maulana Hasnain Abbas Gardezi noting that the General’s tone and the triviality of some of his remarks were entirely unbecoming of an officer holding such a high-profile constitutional office.

The ‘Go to Iran’ Ultimatum

The crux of the outrage stems from a specific, inflammatory remark made by General Munir during the session. While addressing the scholars, he reportedly told them, “If you love Iran so much, then go to Iran." This framing has been interpreted by the community as an attempt to equate religious and emotional solidarity with a foreign spiritual centre as proof of disloyalty to the Pakistani state. Allama Nazir Abbas Taqvi, who attempted to intervene multiple times during the speech to seek a dialogue, expressed shock at the General’s manner. Despite being promised a follow-up session after dinner, the scholars were reportedly left waiting as the Army Chief made a sudden exit, further deepening the sense of professional and personal disrespect.

Erasing History and the Legacy of the Founders

Shia leaders have hit back with a firm historical reminder, asserting that their hearts beat for Islam and Pakistan, not merely for a foreign geopolitical entity. They argue that General Munir’s rhetoric effectively erases the foundational role of Shia personalities in the very creation of Pakistan. Critics point out that the country’s founder, several key Muslim League leaders, and significant financial resources during the independence movement were provided by the Shia community. By suggesting that Shia loyalties belong elsewhere, the military establishment is accused of ignoring a centuries-old religious connection to spiritual sites in Makkah, Madina, Iraq, and Iran—a connection they maintain is entirely compatible with their deeper historical stake in the Pakistani nation.

https://www.news18.com/world/go-to-iran-asim-munirs-iftar-shia-insult-sparks-sectarian-storm-in-pakistan-exclusive-details-9989137.html

கிறிஸ்துவ மதம் தொடங்கிய பவுல் - யார்? தெரியாதே!

அப்போஸ்தலர் பவுல் யார்??

கிறிஸ்துவ தொன்மத்தின் சுவிசேஷக் கதைகளை வரலாற்று நோக்கில் ஆராய்ச்சி செய்பவர் உணர்வது,  பொஆ 30ல் இறந்த ஏசு எனும் மனிதனை தெய்வீகராக உயர்த்தி புனைந்தவர் பவுல் என்பவர்.

சுவிசேஷக் கதையின் மரண தண்டனையில் இறந்த மனிதன் ஏசுவின் மறுவருகை மிக அருகில் உள்ளதால் திருமணம் ஆண ஆண்கள் கூட மனைவியோடு உடல் உறவை நிறுத்தவும் எனக் கூறியவர் பவுல்.

சு யூதராகப் பிறந்து  அடிப்படைவாத யூதராகவே இறந்து போனார், சு இறந்து 30 வருடம் பின்பும் சீடர்கள் அனைவரும் ஜெருசலேம் ஆலயத்தை போற்றி அங்கேயே வாழ்ந்தனர். ஆனால் பவுல் என்பவர் சுவின் கருத்திற்கு மாறுபட்டு யூதர் அல்லாதவர்களை சேர்ப்பதை காசு பண்ணும் தொழிலாக செய்தார். பவுல் யார்?

பவுல் பற்றி 4 வெவ்வேறு விதமான குறிப்புகள் அப்போஸ்தலர் நடபடிகள் தொன்மத்தில் உள்ளது. அவை நான்கும் வேறுவேறு நபர் என ஆக்கும்; எதை நம்புவது. 

 கூடாரம் கட்டும் தொழில் செய்தவர் 

 அப்போஸ்தலர் 18:1 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். 2 கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்து கொரிந்துவுக்கு வந்திருந்தனர்.  கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். 3 அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

பவுல் ஒரு ரோமன் குடிமகன் 

 அப்போஸ்தலர் 22 : 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான். 26அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளை  டுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான். 27அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான். 28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான். ஆனால் பவுல், “நான் பிறப்பால் ரோமன் குடிமகன்” என்றான். 29. பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு  விலகினர். ரோமன் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

யூத மதப் பாதிரிகள் விசாரணை சங்க உறுப்பினர்-சதுசேயர் 

 அப்போஸ்தலர் 26: 9 நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். 10 இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமை  பாதிரிகளிடம் அதிகாரம்  பெற்றேன்.   அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். 
(அப்போஸ்தலர் 5: 17 தலைமை பாதிரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.)  

 யூத மதப் பாதிரியாகும்படி விவிலியம் கற்ற பரிசேயன்

 அப்போஸ்தலர் 22 :3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன்நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார்.
பிலிப்பியர் 3: நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன்.நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.

இந்த நாலில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கலாம், அல்லது நான்குமே பொய்யாக இருக்கலாம். 

1கொரிந்தியர் 15:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது மரன தண்டனையில் சிலுவையில் இறந்த கிறிஸ்து கதையை. இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.  

ஏசு எந்த அதிசயமும் செய்யவில்லை, அவர் மீது தான் தீர்க்க தரிசனம் நிறைவேறியது என்பதும் இல்லை என மேலுள்ள வசனம் உறுதி செய்கிறது

ஏசுவிடம் பவுல் பெற்றதாகப் பரப்பிய தெய்வீக போதனை

1 கொரிந்தியர் 7: 29 கர்த்தரின் தீர்ப்பு நாள் மிகவும் அருகில் உள்ளது. எனவே மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல உறவு இல்லாமல் தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும்.   
பவுல் இந்த கர்த்தரின் நாளில் எப்படி என்ன நடக்கும் என்றது 
1கொரிந்தியர்15:51 ..நாம் யாவரும் பூமியில் ம்  அடைய மாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்று உரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும் போது  இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்று உரு பெறுவோம்
 No belief is more characeristic of Paul or more fundamental to every thing he wrote and did than his belief that the World was very soon coming to end. It is the absolute foundation of his thought. A reader who misses this point can understand very little else about Paul.
Page- 244 The Bible As Literature: An Introduction  John B. Gabel (Author), Charles B. Wheeler (Author), Anthony D. York Oxford University Press
It never occured to Paul that Parousia or 2nd coming (the Day of Jesus Christ Phil1:6) might be postponed beyond his own age in the distant hardly imaginable future as the Church eventually had to acknolege. 
Page- 245 The Bible As Literature: An Introduction  John B. Gabel (Author), Charles B. Wheeler (Author), Anthony D. York Oxford University Press 

யூத மோசே சட்டப்படி அவரவர் பாவத்திற்கு அவரவர்கள் தான் சாக முடியும்

 உபாகமம்  24.16   “பிள்ளைகள் செய்தக் பாவத்திற்காகப் பெற்றோர்கள் கொலை செய்யப் படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.  

 மனிதர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள் 

பவுல் ஜெருசலேம் வந்து யாக்கோபு, பேதுர் மறும் மூர்களிடம் கடிதம் வாங்கி சென்றதாகக் கதை

23 அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். 25 நாங்கள் பர்னபா, பவுல் ஆகியோரை

உங்களிடம் அனுப்புகிறோம். 26இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். 28  நீங்கள் செய்ய வேண்டியவை விஐயே, வேறு சுமை உங்கள் மேல் சுமத்தவில்லை. 29சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்” என்று எழுதி இருந்தார்கள்.

30யூதாவும் சீலாவும் விடைபெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.

  யோபு 25:4 மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது  பெண்ணின் யோனியில் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?                                                                                      6அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

பவுலுடைய அடிப்படை நம்பிக்கை தன் வாழ்நாளின் உலகம் அழியும் என, அதனால் திருமணம் செய்து கொள்ளதவர்கள் இனிமேல் திருமணம் அவசியமில்லை என்கிறார்.

 1 கொரி 7:29  சகோதர சகோதரிகளே, இந்த பூமி உலக முடிவின் கர்த்தரின் நியாயத் தீர்பு நாள் மிக அருகில் உள்ளது.இப்போது முதல் திருமணம் ஆகி  மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 


கேரளாவில் எழுத்தாளர்களுக்கு தரும் மரியாதை

 2022ம் ஆண்டிற்கான ஞானபீட விருது கொங்கணி மொழி எழுத்தாளரான தாமோதர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சில வருடங்களுக்கு முன்னர் கேரளாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஒரு இலக்கியக் கருத்தரங்கில் அவரை சந்தித்தேன்.பல் வேறு மாநிலங்களிலிருந்து முக்கிய படைப்பாளிகள் கலந்து கொண்டார்கள்.தமிழ் நாட்டிலிருந்து நானும் எழுத்தாளர் சல்மா அவர்களும் கலந்து கொண்டோம்.
மூன்றாவது நாள் எழுத்தாளர்களுடன் கேரள முதல்வர் தோழர்.பினராய்விஜயன் அவர்கள் கலந்து கொண்டு எங்களில் ஒருவராக நின்று கொண்டே எழுத்தாளர்களுடன் உரையாடிக் கொண்டே உணவருந்தினார்.அவருடைய எளிமையும் இயல்புத்தன்மையும் ஆச்சரியமாக இருந்தது.
மூன்றாவது நாள் மாலை நான் தெலுங்கு மொழியில் எழுதுகின்ற மதிப்பிற்குரிய எழுத்தாளர் சிவரெட்டி,கொங்கணி மொழி எழுத்தாளர் தாமோதர் ஆகிய மூவரும் வித்தியாசமாக ஏதாவது திண்பண்டங்கள் வாங்கிப் போகலாம் என்று ஒரு பெரிய பேக்கரிக்குள் நுழைந்தோம்.அவர்கள் இருவரும் அப்போதே சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்கள்.மூன்று பேரும் ஜிப்பா அணிந்திருந்தோம்.எங்கள் மூவரையும் கண்டவுடன் அந்த பேக்கரியின் உரிமையாளர் கல்லாவிலிருந்து இறங்கி ஓடி வந்து வரவேற்றார்.அவர் மலையாளத்தில் கேட்டது எனக்கும் புரிந்தது.
"நீங்கள் மூன்று பேரும் எழுத்தாளர்கள்தானே"
ஆம் என்று சொன்னவுடன் அவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.மூவரையும் கை குலுக்கி கட்டித் தழுவி வரவேற்று உட்கார வைத்தார்.ஏதோ காணாததை கண்டு விட்டது மாதிரி பேக்கரிக்குள் வருகிற வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
"என்னுடைய பேக்கரிக்குள்ளே மூன்று எழுத்தாளர்கள்"
ஒவ்வொருவருக்கும் ஐநூறு ரூபாய் மதிப்புள்ள கிஃப்ட் பாக்ஸ் கொடுத்தார்.நாங்கள் பணம் கொடுத்த போது வாங்க மறுத்து விட்டார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் எங்களை எழுத்தாளர்கள் என்று மட்டும்தான் அறிவார்.எங்கள் எழுத்தை அவர் படித்ததில்லை.எங்கள் மூவரையும் இதற்கு முன் சந்தித்ததும் இல்லை.அவரோ மலையாளம் பேசும் கேரளத்துக்காரர்.எங்களில் யாரும் மலையாளிகள் இல்லை.ஒரே அடையாளம்"எழுத்தாளர்கள்".
இங்கே எழுத்தாளர் என்று சொன்னால் பத்திரம் எழுதுபவரா என்றும் ரைட்டர் என்று சொன்னால் எந்த ஸ்டேஷனில் வேலை பார்த்தீர்கள் என்றும் கேட்கிறார்கள்.
மிகக் குறைந்த மக்கள் தொகையினர் பேசக் கூடிய கொங்கணி மொழிக்கு ஞானபீடம் விருது மூலம் பெருமை சேர்த்திருக்கும் எழுத்தாளர் தாமோதருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஞானபீட விருதுக்கு பரிந்துரைக்க - Writer. சோ தர்மன்

https://www.facebook.com/photo/?fbid=2199602037238978&set=a.161393474393188

ஒவ்வொரு வருஷமும் ஞானபீட விருதுக்கு பரிந்துரைக்க கடிதம் அனுப்புவார்கள்.இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.நானும் இலக்கியத்தில் ஞானபீட விருதுக்கு   தகுதியானவர் என நான் நினைக்கும் எழுத்தாளரை பற்றிய ஒரு பெரிய கட்டுரை எழுதி அவர் எழுதியிருக்கிற நூல்களின் பட்டியலை வரிசைப்படுத்தி அவர் வாங்கியிருக்கிற விருதுகளின் பட்டியல் அதற்கான சான்றுகள் இத்தனையும் சேர்த்து அவைகளை கோர்வையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து (எனக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிற அளவுக்கு புலமை இல்லை.)

          இருக்கவே இருக்கிறார்‌ எங்க ஊர் ஜாம்பவான் தேவதச்சன்.அனுப்பி வைப்பேன்.இனி இரண்டு ஆண்டுகளுக்கு பரிந்துரைகள் கேட்டு கடிதங்கள் வராது.ஞானபீட விருது பெறுகிற மொழிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த விருது இல்லை. ஞானபீட விருதுக் கமிட்டியின் விதி.

          ஏற்கனவே ஒவ்வொரு மொழியிலிருந்தும் வருகிற பரிந்துரைக் கடிதங்களை பரிசீலித்து அவைகளிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மொழியிலிருந்தும் மூன்று பேர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஞான பீடம் நியமிக்கும்.இந்தாண்டு தமிழிலிருந்து நியமிக்கப்பட்ட அந்த மூன்று பேர் யாரென்று தெரியவில்லை.அவர்களை தெரிந்து கொள்வதுதான் மிக முக்கியம்.

      அனைத்து மொழிகளிலிருந்தும் ஒவ்வொருவர் தேர்வான பின்னர் பொதுவான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருதுக்குரியவரை அறிவிக்க ஆறு பேர் கொண்ட ஒரு கமிட்டி இருக்கும்.அதில் யார் யார் இடம் பெற்றிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

  குறிப்பு:ஞானபீட விருது பெறுபவர்களின் ஒழுக்கம் பற்றியோ நன்னடத்தை விதிகள் பற்றியோ விதிகளில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

விளாத்திகுளம் பள்ளி மாணவி பலாத்காரம் & படுகொலை வழக்கு

விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவியின் கொலை வழக்கை திறமையாக விசாரித்து குற்றவாளியை கைது செய்த இருபதுக்கு மேற்பட்ட தனிப்படையினரை தென்மண்டல ஐ.ஜி.அவர்கள் பாராட்டி பாராட்டுப் பத்திரங்கள் வழங்கிய செய்திகள் பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி.
அதே நேரம் ஒன்பது நாட்களாக எவ்வித தடயங்களும் கிடைக்காமல் காவல்துறை திணறிக் கொண்டிருந்த போது தொடர்ந்து நாலைந்து நாட்களாக காட்டுக்குள் மணிக்கணக்காக தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை தான் போட்டோ எடுத்து வைத்திருப்பதாக சொல்லி அந்த போட்டோவை காவல் துறையிடம் ஒரு நபர் ஒப்படைத்ததாகவும் அதனடிப்படையில் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை விசாரித்து அதனடிப்படையிலேயே குற்றவாளியை காவல்துறை கைது செய்தார்கள் என்று சில முகநூல் பதிவுகள் பார்த்தேன்.
போட்டோ கொடுத்த நபரின் பெயர் சோலையப்பன் என்றும் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருவதாகவும் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.உண்மையான செய்தி என்றால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கௌரவப் படுத்த வேண்டும்.இது காவல்துறையின் கடமையும் கூட.
தமிழ் நாடெங்கும் பெரிய பிரச்சினையை உருவாக்கியதோடு தமிழக காவல்த்துறைக்கு சவாலாக இருந்த ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க உதவிய நபரை பாராட்டுவதில் தவறு ஒன்றுமில்லையே.