Thursday, May 21, 2026

கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

 கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..! Author : Thiraviaraj RM Published : Feb 05 2020,

https://tamil.asianetnews.com/cinema/vijay-engaged-in-conversion-with-japier-s-daughter-stunning-it-raid-background-q588iv

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை  அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை  அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்படியே விஜயையும் தூக்கி வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த ரெய்டு, விஜயிடம் விசாரணை என பின்னணியில் அதிரடி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம், ஜேப்பியார் குழுமத்திற்கு உள்பட்ட 32 இங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் இரவு, பகலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அப்போது கசிந்தன. ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் நன்கொடை மற்றும் கட்டணங்கள் ரொக்கமாகவே அதாவது கணக்கில் காட்டாத கருப்பு பணமாகவே வசூல் செய்துள்ளனர். இந்த பணங்களை பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாக வெள்ளையாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. நரேந்திர மோடி அரசு, ரொக்க பண பரிவர்தனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்த போதிலும், தனியார் கல்வி நிறுவனங்கள், எதுவும் இதை பின் பற்ற வில்லை. ஜேப்பியார் குழும கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, எஸ்.ஆர்.எம், ஸ்டெல்லா மேரிஸ், லயோலா உள்பட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம், கட்டணம் மற்றும் நன்கொடை என்ற பெயரில் வாங்கும் தொகைகள், ரொக்க பணமாகவே அதாவது கருப்பு பணமாக வாங்கியது வெளிச்சத்துக்கு வந்தன. 

இது ஒருபுறம் இருக்க, என்ஜிஓ என்ற பெயரில் காலம் காலமாக வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி வந்த பல்வேறு மத மாற்ற கும்பல்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பினாமி அமைப்புகள் போன்றவற்றுக்கு, மோடி அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதால், அவர்கள் இப்போது கல்வி நிறுவனங்கள் நடத்தும் அறக்கட்டளைகள் மூலமாக தங்களின் வெளிநாட்டு பணங்களை கொண்டு வரும் வேலையில் இறங்கி உள்ளன. மதமாற்ற கும்பல்கள், ஜேப்பியார் கல்வி குழுமத்தின் அறக்கட்டளைகள் மூலமாக, முறைகேடாக வெளிநாட்டு பணத்தை இங்கு கொண்டு வந்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். 

இதுதவிர, மதமாற்ற கும்பல்களுக்கு பின்புலத்தில் இருந்து ஜேப்பியார் குழுமம் இயங்கி வந்துள்ளதையும் அந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.  இதற்காக சினிமா பிரபலங்களை கொண்ட நெட்வொர்க், கல்வியாளர்களை கொண்ட நெட்வொர்க், பாதிரியார்களைக் கொண்ட நெட்வொர்க், அரசியல்வாதிகளை கொண்ட நெட்வொர்க் போன்றவை இயங்கி வந்ததும் வருமான வரித்துறை கண்டு பிடித்தது. இதில் முஸ்லிம் நண்பர்களையும் இணைத்துள்ளனர். சென்னை லயோலா கல்லூரி இதற்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.  

இவர்களில் சினிமா துறையில் உள்ள விஜய், ஆர்யா, இயக்குனர்கள் அட்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி  போன்றவர்கள் முக்கியமாக இருந்து இயங்கி வருவதையும் வருமான வரித்துறை ஸ்மெல் செய்தது. ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ரெஜினா இதனை செயல்படுத்தி வந்தது அந்த விசாரணையில் வெளியானது. சினிமா துறையை சேர்ந்த ஒரு பெரும் பட்டாளமே ரெஜினாவின் பின்னால் உள்ளதையும் அறிந்து கொண்டார்கள்.

இவர்களின் மூலமாக ஆண்டுதோறும் சினிமா கலைஞர்களுக்கு என்று சிறப்பு கிறிஸ்தவ ஆராதனை கூட்டம் என்ற பெயரில் வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் மத்தியில் பிரபலமான மதமாற்ற பாதிரியார்களைகொண்டு மூளைசலவையை அரங்கேற்றி வந்துள்ளனர்.

இதன் மூலம், நடிகை ஆர்த்தி, ரமேஷ் கண்ணா போன்ற ஏராளமான சினிமா பிரபலங்களை மதம்மாற்றி வந்துள்ளனர். இதற்காக பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதேபோல, சினிமாவிற்கு மறைமுகமாக பைனான்ஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் விஜயின் பிகில் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தாலும் ஜேப்பியார் மகள் ரெஜினாதான் பைனான்ஸ் செய்து கொடுத்துள்ளார். அதோடு அந்த படத்தின் மூலம் கிறிஸ்தவ ஜெப மாலை, சிலுவை போன்றவற்றை விஜயின்  இந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களை மூளைசலவை செய்யும் ஐடியாவும் ரெஜினாவின் மூளையில் உதயமானதும் அறிய வந்தது. இதற்காக பெரும் தொகை இறைக்கப்பட்டதாக ரகசிய தகவல். விஜய் அணிந்திருந்த உடை, சிலுவை, ஜெபமாலை ஆகியவற்றை இலவசமாக வழங்கியதாகௌம் கூறப்படுகிறது. 

இதனால்தான், விஜயின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டபோது, அதில் சிலுவையும், ஜெபமாலையும் இடம்பெற்றதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது. ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் பங்களாவில் சினிமா பிரபலங்களுக்காக அடிக்கடி பார்ட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் அட்லி, நடிகர் ஆர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டதும் அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. 

இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் அப்போதே சிக்கி விட்டதாம். நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் அட்லி ஆகியோருக்கு அப்போதே  குறி வைக்கப்பட்டு விட்டது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் தான் விஜயை அவரது காரிலேயே வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கையோடு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளம்ப இருக்கிறதோ என இதில் தொடர்புடைய மேலும் பலர் கிலையடித்துக் கிடக்கின்றனர்.

‘போய் வேற வேலைய பாருங்கடா’: வெகுண்ட விஜய் சேதுபதி   Published On:

நடிகர் விஜய்யின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கு ‘கிறிஸ்தவ மதமாற்றம்’ தான் காரணம் என்ற கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.   https://minnambalam.com/vjay-sethupatghi-tweet-about-conversion/

நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துவரும் நடிகர் விஜய், வருமான வரித் துறை சோதனைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 23 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ‘விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததன் உண்மைப் பின்னணி’ என்ற தலைப்பில் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

அதில், ‘ஜேப்பியாரின் மகள் ரெஜினா, தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளார். சில கிறிஸ்தவ மத குருக்களின் உதவியுடன் ஒரு மாயவலை உருவாக்கப்பட்டு விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மற்றும் சில பிரபலங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதற்கான விழா சமீபத்தில் வடபழனியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்வாறு மதமாறிய நடிகர்களுக்கு, பிற திரை நடிகர்கள், திரைத்துறையில் வேலை செய்யும் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இதர தொழிலாளர்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் விதமாக பிரச்சாரம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோடி மற்றும் அமித்ஷாவால் பல தடைகள் கொண்டுவரப்பட்டும், இதற்கான நிதி உதவி சில என்.ஜி.ஓ-க்களில் இருந்து வருகிறது. மேலும் இந்தப் பணப்பரிமாற்றத்திற்கு சில கல்வி நிலையங்கள் வாகனம் போல செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் தயாரிப்புக்குத் தேவைப்பட்ட மொத்த பணமும் ரெஜினாவால் வழங்கப்பட்டது. ஆனால் அந்த உண்மையை மறைக்கும் விதமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டது. பிகில் படத்தின் முழு வியாபாரமும் முடிவடைந்த பின்னர் விஜய், தயாரிப்பு நிறுவனம், அன்புச் செழியன் ஆகியோர் இணைந்து பணத்தை ரெஜினாவிற்கு அனுப்பி உள்ளனர். இவை அனைத்தையும் வருமான வரி துறை கடந்த ஒரு வருடமாக கூர்மையாகக் கவனித்து வருகிறது. பிகில் படம் ரிலீசானபோது இந்த தகவல் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் பிகில் ரிலீசுடன் தொடர்புடைய கல்வி நிலையங்களான ஜேப்பியார் டிரஸ்ட், எஸ்.ஆர்.எம், லயோலா கல்லூரி டிரஸ்ட் மற்றும் பிற கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும், சமீபத்தில் மதம் மாறிய பிற நடிகர்கள் வீட்டிலும் வருமான வரி துறை சோதனை நடத்தத் திட்டமிட்டது. வரும் நாட்களில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” என்பதாக அந்த தகவல் இருந்தது.

ஜேப்பியார் மகள்கள், மருமகன் மீது ரூ.150 கோடி வங்கி மோசடி புகார் - போலீஸ் வழக்கு 

 By Mayura Akilan Updated: Friday, September 15, 2017,  

https://tamil.oneindia.com/news/tamilnadu/cheating-case-filed-against-jeppiar-s-daughters-son-law-295942.html

சென்னை: ஜேப்பியார் மகள்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது ரூ.150 கோடி வங்கி மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. ஜேப்பியார் அறக்கட்டளை பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 ஜேப்பியார் மகள் ஷீலா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னை சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஜேப்பியார் ஆவார். சத்தியபாமா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஜோசப் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பொறியியல் கல்லூரி, புது கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் பாலிடெக்னிக் என ஜேப்பியார் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். 

ஜேப்பியாரின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. 

ஜேப்பியாரின் இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்துக்கு அவருடைய 4 மகள்கள்தான் வாரிசுகள். இந்த கல்வி நிறுவனங்களை ஜேப்பியாரின் மகள்கள் மற்றும் மருமகன்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் ஜேப்பியாரின் குடும்பத்தினர் சத்தியபாமா பல்கலைக்கழகத்துக்குள் இருக்கின்ற அவர்களுடைய பங்களாவில் வசித்து வருகின்றனர். 

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் ஜேப்பியார் காலமானார். ஜேப்பியாரின் மறைவுக்குப் பிறகு ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலமாக அவருடைய குடும்பத்தார் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர் 

இந்த நிலையில் ஜேப்பியார் ஷீலா,49 கடந்த ஜூன் மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

நான் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜேப்பியாரின் இரண்டாவது மகளாவேன். எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். எனது கணவர் என்னுடன் வாழ விரும்பாமல் என்னை விட்டு பிரிந்து புனித ஜோசப் கல்லூரியை நிர்வகித்து வருகிறார். 

நான் எனது தந்தை ஜேப்பியார் இல்லமான சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் உள்ளே அமைந்துள்ள வீட்டில் வசித்து வந்தேன். எனது தந்தை இறந்த பிறகு என் தாயார் ரெமி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் என் தாயார் ரெமி எனக்கு நல்லது செய்வது போல் என்னிடம் ஆசைவார்த்தை பேசி, எனக்கு ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் கல்லூரி மற்றும் மாமல்லன் கல்லூரி இவற்றை நடத்த புதிதாக ஒரு கல்வி அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி தருவதாகவும், அதற்கு கைமாறாக நான் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்திர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

நானும் மறுப்பு தெரிவிக்காமல் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன். பின் கடந்த ஒரு வருடத்தில் என் தாயார் ரெமி அவர் வாக்குறுதி தந்தபடி நடந்து கொள்ளும்படியும், மேலும் ஜேப்பியாரின் நான்கு பெண் வாரிசுகளில் நானும் ஒருவர் என்று எனக்கு ஜேப்பியாரின் சொத்துக்களில் மற்ற வாரிசுகளுக்கு என்ன உரிமை வழங்கப்பட்டுள்ளதோ அதேபோல் எனக்கும் வழங்கும்படி கேட்டுக்கொண்டேன். 

அதற்கு போதுமான பதில் தராமல் என் தந்தை முதலாம் ஆண்டு நிறைவு நாள் வரை அமைதியாக இருந்தனர். பின்னர் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் 22 ம் தேதி வரை என்னை வீட்டிற்குள் கைதியை போல் சிறை வைத்தார்கள். எனக்கு உணவு, மின்சாரம், தண்ணீர், கழிப்பிடம் செல்லவழி இல்லாமல் எல்லாவற்றையும் உள்நோக்கத்துடன் நிறுத்திவிட்டார்கள். பின் என்னை யாரும் சந்திக்க முடியாமல் எல்லாவாசல் கதவுகளையும் மூடிவிட்டார்கள். பின்னர் என்னை அடியாட்கள் மூலம் வெளியேற்றிவிட்டார்கள். 

நான் என் தந்தை சொத்துகளில் எந்த உரிமையும் கோரக்கூடாது என்ற சதிதிட்டத்தை என் குடும்ப நபர்களை எல்லோரும் சேர்ந்து உருவாக்கி என் தாயார் ரெமி மூலம் நிறைவேற்றியுள்ளார்கள். எனவே என்னால் தனியாக அவர்களிடம் போராட முடியவில்லை. எனவே நான் எனது தந்தை வாழ்ந்த இல்லத்தில் தொடர்ந்து வசிக்க போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். 

இதனிடையே ஜேப்பியார் மகள் ஷீலா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜேப்பியார் மகள்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது ரூ.150 கோடி வங்கி மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. ஜேப்பியார் அறக்கட்டளை பெயரில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

  கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!  Author : Thiraviara...