Friday, March 27, 2026

ஈவெராமசாமி - இசை, சினிமா, நாடகம் வெறுக்க வேண்டும்; விபச்சாரம் என்பது தப்பல்ல. குடிப்பதும், கூத்தியாளுடன் கும்மாளமடிப்பதும் சரியாம்

ஈவெராமசாமி சொன்னது, "நம் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெரும் கேடாய் இருந்து வரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப்புக் காட்சிகளாகும். இவை இசையைவிடக் கேடானவையாகும் என்பது என் கருத்து. மானமுள்ள நாடாக- மானத்தில் கவலையுள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்திருக்குமானால் இந்த நாடகம் சினிமா முதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும். இதை நான் வெகு காலமாகச் சொல்லிவருகிறேன். இசையினால் காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால் காது. கண் ஆகிய இரு கருவிகள் மூலம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்துபோகிறது. - விடுதலை 19-02-1944.
https://www.facebook.com/photo.php?fbid=1673274620611953&_rdr
ஈவெராமசாமியின் "இசை மற்றும் சினிமா" என்பனவற்றை வெறுக்கும் மேற்கண்ட அருள்வாக்கை வாசித்ததும் - நமக்கு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் - தங்கள் மதக்கோட்பாடுகளுக்கு எதிரானவை - ஹாரம் என இசைக் கருவிகளை உடைத்ததும், எரித்ததும் - திரையரங்குகளில் குண்டு வைத்த நிகழ்வும் தான் ஞாபகத்திற்கு வந்தது. பகுத்தறிவாதி என சொல்பவனின் யோக்கியதையும், மதவாதிகளின் யோக்கியதையும் ஒன்றாக இந்த விஷயத்தில் இருந்தபோதும், ஒரு விஷயத்தில் - ஈவெராமசாமியைவிட மதத் தீவிரவாதிகள் மேலானவர்கள். என்ன காரணமென்றால் "மனிதனின் அறிவை முடமாக்குகிறது - அதனால் சினிமாவும், இசையும் அழிக்கப்பட வேண்டும் என சொன்ன ஈவெராமசாமி - மானங்கெட்டு போய் விபச்சாரத்தையும், மதுவையும் ஆதரித்தார்.

ஆனால் தாலிபான்களோ இசையையும், சினிமாவையும் எங்கே வைத்தார்களோ அங்கே தான் விபச்சாரத்தையும், மதுவையும் வைத்தார்கள். ஆனால் ஈவெராமசாமியின் ஊனமடைந்த அறிவுக்கு விபச்சாரமும், குடியும், அதனால் விளையும் அனர்த்தமும், சமூக குற்றங்களும் மானங்கெட்ட செயலாக தெரியவில்லை. ஆனால் - ஒருவன் இசையை கேட்பதும் அல்லது பாடுவதும், ஒருவன் சினிமா பார்ப்பதும் அல்லது சினிமாவில் நடிப்பதும் தான் மானங்கெட்ட செயலாக தெரிகிறது. என்ன அறிவய்யா ஈவெராமசாமிக்கு என வியக்காமல் இருக்க முடியவில்லை. "மானமுள்ள நாடாக- மானத்தில் கவலையுள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்தால் - குடியை, விபச்சாரத்தை ஒழி" என சொல்ல ஈவெராமசாமிக்கு வாய்வரவில்லை. இசையையும், சினிமாவையும் வெறுத்த ஈவெராமசாமி குடிப் பழக்கத்தையும், விபச்சாரத்தையும் ஏன் ஆதரித்தார் என பார்ப்பதற்கு முன் - இரண்டுக்கும் ஆதரவாக அவர் பேசிய பேச்சை முதலில் பார்ப்போம். ஈவெராமசாமியின் குடிக்கு ஆதரவான பேச்சு.

"குடிப்பது தவறில்லை. கள் குடிச்சுச் செத்தவங்க எவ்வளவு பேர், சொல்லுங்களேன்? நான் குடிக்கிறதில்லை. எப்படியோ அந்தப் பழக்கம் எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு. ஆனால், நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். சனங்கள் சோம்பேறியாய் ஆனதற்குக் காரணமே மது ஒழிப்புத்தான். கூலி உயரக் காரணம் இதுதான். சினிமாவுக்குப் போறதைவிட இது நல்லது தான்”. இது தான் குடி விஷயத்தில் ஈவெராமசாமியின் யோக்கியதை, நிலைப்பாடு. (பெரியார் ஈ வெ ரா வின் சிந்தனைகள், தொகுதி 2, பக்கம் 1227. பதிப்பாசிரியர். வே ஆனைமுத்து. நேர்காணல் தேதி 27.12.1972)

இங்கேயே சொல்லிவிட்டு போய்விட்டார் - சினிமாவுக்கு போவதைவிட குடிப்பது நல்லது தான். என்னய்யா நல்லது. ஏன் ஈவெராமசாமி குடியை ஆதரிக்கிறாரென்றால் - ஒன்றில் மூலம் மனிதனுக்கு கிடைக்கிற இன்பத்தை தடை செய்யக்கூடாதாம். அவ்வாறாக செய்வது அடிமைத்தனம் என்கிறார். அதனாலேயே அறிவுக்கெட்டுப்போய் விபச்சாரத்தையும் ஆதரித்தார். சினிமாவும் அதே போன்ற ஒரு சந்தோஷத்தை தானே கொடுக்கிறது. மனிதனுக்கு பொழுது போக்கு அது. குடும்பத்தாருடன் வெளியே செல்வதில் உள்ள ஒரு சந்தோஷம். ஈவெராமசாமிக்கு குடும்பத்தாருடன் மக்கள் சினிமாவுக்கு போவதும் பிடிக்காது, பண்டிகைகள் கொண்டாடுவதும் பிடிக்காது. ஆனால் குடும்பத்தை சாகடிக்கும் குடிப் பழக்கம் - மிகச் சரியானது என அரைவேக்காட்டுதனமாக வாதாடுவார்.

"ஒரு மனிதனைப்பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”
(விடுதலை18.3.71) எதோடு எதனை ஒப்பிடுகிறார் சற்றும் அறிவு நாணயமில்லாத ஈவெராமசாமி. கலவியால் இருவருக்கும் மகிழ்ச்சி. சாராயத்தால் ஒருவர் சந்தோஷமும், இன்னொருவர் வேதனையும், மொத்த குடும்பமும் சித்திரவதையையும் தானே அனுபவிக்கிறது. ஈவெராமசாமி அறிவு பழுதுடன் நிறைய பேசி இருக்கிறார். அதில் இந்த குடித்து நாசமாக போகிற விஷயத்தை ஆதரித்ததும் ஒன்று. குடிப்பது சரி, இசை கேட்பது தான் தவறு என கடைதெடுத்த முட்டாளால் தான் கூற முடியும். அடுத்ததாக ஈவெராமசாமியின் விபச்சார ஆதரவு பேச்சை கேட்டால் - அது இன்னும் ஈனத்தனமானதாக இருக்கும்.

"விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது. இளைஞர் கெட்டுபோவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கெட்டுப் போவது என்றால் என்ன? கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள். - ஈவெராமசாமி 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973). ஆக ஈவெராமசாமிக்கு ஒருவன் பாட்டு கேட்பதும், சினிமா படம் பார்ப்பதும் தான் பிடிக்காதே தவிர - மற்றப்படி குடிப்பதும், கூத்தியாளுடன் கும்மாளமடிப்பதும் இஷ்டமானதாகும். பல நேரங்களில் ஈவெராமசாமி ஒரு பகுத்தறிவாதி தானா என்கிற சந்தேகம் அனேகம் பேருக்கு வருவது இந்த அருவருப்பூட்டும் அறிவினால் தான்.

பகுத்தறிவாதி என கூறிக் கொண்டு ஒரு விஷயம் பேசுகிறோம். அது 'அ முதல் ஃ வரை' அனைவராலும் ஏற்று கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என ஈவெராமசாமி நினைத்திருக்க வேண்டும். ஆனால் நினைக்கவில்லை. நிச்சயம் மெய்யான பகுத்தறிவு கொண்டவனாக இருந்தால் அவ்வாறாக நினைத்திருக்க சாத்தியம். போலி பகுத்தறிவு பேசி கொண்டு திரிந்தால் - அதெப்படி சாத்தியம். ஈவெராமசாமியோடு ஒப்பிடும்போது - தாலிபான்கள் சற்று மேலானவர்கள் தான் - விபச்சாரத்தையும், குடியையும் அருவருப்பதால். சரி - மத தீவிரவாதிகளும் சரி, ஈவெராமசாமியும் சரி - இசையை, சினிமா, நாடகம் என்பனவற்றை ஏன் வெறுக்க வேண்டும். ஈவெராமசாமி - அது மூடநம்பிக்கையை உண்டு பண்ணுவதாக சொல்வார். பத்தில் ஒரு படம், நூறில் ஒரு படம் - அப்படி வந்தால் பெரிய விஷயம். ஆனால் - அது நிச்சயம் மது, மாது என கெட்டழியும் சீரழிவைவிட ஒன்றும் நாசகரமானவை அல்ல. அறிவு வரும்போது திருந்திவிடுவான்.

ஆனால் ஈவெராமசாமி முழுவதுமாக - கல்லறைக்கு அனுப்பப்பட வேண்டியது என்கிறார். சினிமாவின் மூலம் மூடநம்பிக்கையை ஒழிப்பதாக சொன்ன திராவிட கூத்தாடிகள் கூட - தனி மனித ஒழுக்கமில்லாத - மது, மாது என வாழுகிற நடத்தை கெட்ட ஆட்களாக தானே இருந்தார்கள். தன்னளவில் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்கிற அறிவில்லாதவன் மூடநம்பிக்கையை ஒழிப்பதாக சொன்னால் - அதிலும் போலிதனம் தானே இருக்கும். மதத் தீவிரவாதிகள் - இசையை, சினிமாவை வெறுக்க ஒரே ஒரு காரணம் தான் உள்ளது. சினிமாவாவது விஞ்ஞானத்தின் வெளிப்பாடு. ஒரு நூற்றாண்டுக்கு முன் தான் வந்தது. ஆனால் இசை? ஏன் வெறுக்கப்பட வேண்டும். மனிதர்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய வல்லமை இசைக்கு உள்ளது.

நிம்மதியற்று சஞ்சலத்துடன் வாழ்ந்து சலிப்புற்று மன அழுத்தத்திற்கு ஆளாகிறவனுக்கு இசை அருமருந்து. இசை மட்டுமல்ல - எந்த பொழுது போக்கு அம்சமும் - அவனது துயரப்படும் வாழ்க்கைக்கு வடிகால். அது இல்லையெனில் - அவன் மன அழுத்தத்தால் வேறு பல குற்றங்கள் புரிய காரணமாவான். எதன் மீதும் ஆர்வம் காட்டாமல் பூட்டு போட்டு வைத்திருக்கும் மனநிலை, அதி தீவிரவாதத்திற்கு கூட காரணமாகிறது. அந்த அழுத்தத்தை அந்த இசையையோ இதர பொழுது போக்குகளையோ அருமருந்தாய் அவன் அனுபவிக்கிறபோது - மதத்தின் மீதான பிடிப்பு, தனி மனிதனை துதி பாடும் கேடு கெட்டத்தன்மை என யாவும் குறைந்து அவனொரு உலகத்தில் வாழ துவங்குகிறான். ஈவெராமசாமி ஆதரித்த - குடி, விபச்சாரத்தைவிட சொற்பமான பாதிப்பே கலைகளின் மூலம் சிற்சில மூடநம்பிக்கைகள்.

தாலிபான்கள் ஏன் இசையை ஹாரம் என்றார்கள். மதத்தின் மீது, பிடிப்பு குறைய எதெல்லாம் காரணமாக அமைய வாய்ப்புள்ளதோ - அவை அனைத்தும் தடை செய்யப்படுகிறது. ரேடியோ கேட்காதே, பாட்டு கேட்காதே என. 80களில் முதல் முதலில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது ரேடியோ பெட்டிகளை உடைத்தது தானே. அதே காரியத்தை தான் பகுத்தறிவாதி என சொல்லி கொண்ட ஈவெராமசாமியும், "இசையை கேட்காதே, நாடகம் பார்க்காதே" என்றார். இதனினும் அபாயகரமான சாராயத்தையும், விபச்சாரத்தையும் இதே போல் ஒழிக்கப்பட வேண்டியது என கூறி இருந்தால் - ஈவெராமசாமியின் அறிவை மெச்சி இருக்கலாம். ஒன்றை ஆதரித்துவிட்டு, ஒன்றை எதிர்ப்பதில் பகுத்தறிவு தெரியவில்லை. பம்மாத்துதனம் தான் தெரிகிறது. 
 

Bagdhar, மத தெரசார் பள்ளி முதல்வர் - இலா இவான் கோல்வின், நர்சரி குழந்தையை "ராதே-ராதே" என்று கூறி அடித்ததற்காக ரூ.50,000 அபராத்ம் செலுத்தும்படி கேட்கப்பட்டார்.

 NHRC member Priyank Kanoongo Orders Compensation to Nursery Kid Assaulted for Saying 'Radhe Radhe' at Missionary School after Rashtra Jyoti's Complaint


https://timesofindia.indiatimes.com/city/raipur/i-said-radhe-radhe-but-she-shouted-at-me-chhattisgarh-school-principal-held-for-assaulting-nursery-student-taped-her-mouth-hit-with-stick/articleshow/123055811.cmshttps://x.com/RashtraJyoti/status/2037490528829202823WHAT HAPPENED
In a significant order dated 18 March 2026, the National Human Rights Commission has directed the Government of Chhattisgarh to pay Rs 50,000 as compensation to a nursery student who was beaten up by the school principal for greeting her with “Radhe Radhe”. The school, Mother Teresa English Medium School located in Bagdhar, is a missionary-run school while the child belongs to the Hindu community. The principal is named Ila Evan Colvin. The order was passed by the bench of NHRC Member Priyank Kanoongo (
), who took cognizance of a complaint filed by Rashtra Jyoti (). The order states that the Chhattisgarh government is free to recover the compensation amount from the school. The matter dates back to August 2025 when the child, who is just 3.5 years old, was beaten on her arm and had her mouth taped for 15 minutes by Colvin, after the child greeted her with ‘Radhe Radhe’ as per the culture in her house. After the incident came to light, Rashtra Jyoti filed a complaint with NHRC, stressing the need for an impartial investigation and justice. The complaint flagged issues of child abuse, religious discrimination and institutional impunity. Priyank Kanoongo, member of NHRC, took cognizance of the complaint and issued a notice under Section 12 of the Protection of Human Rights Act, 1993 to the District Magistrate and Superintendent of Police, Durg, after finding prima facie “serious violations of the human rights of the victim and the provisions of the RTE Act, 2009”. Now, after several exchanges with the Durg administration, the Commission ordered compensation for the victim. Meanwhile, Sewa Nyaya Utthan (), has helped the girl’s parents pull her out of that school and enrol her in a new school of their choice. Next month, the girl enters KG.

தெலுங்கானா துணை முதல்வர் மீது கிறிஸ்துவர் தாக்குதல்- ராமர் கோவில் சீரமைப்பு செய்வதால்

 AP Deputy Speaker Raghurama Krishna Raju is attacked by a Christian convert mafia in Andhra Pradesh.

 
Reason: He was rebuilding a Sri Rama temple which is in dilapidated state Women and youth were used to carry out the attack; his supporters were injured in stone pelting.

துரந்தர் படத்தில் காட்டியது போலே கள்ள நோட்டு அடிக்கும் பாகிஸ்தானியர் பற்றி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பதில்

 Dhurandhar is PROPAGANDA Movie .. Really ..??

https://x.com/AstroCounselKK/status/2037374325343526958?s=20
Remember Khanani from Dhurandhar smuggling fake currency through Nepal? - It was TRUE. Cong Govt ACCEPTED it in the Parliament in 2012
🤯 RJD MP questions how Pakistan prints fake Indian currency with the same INK, PAPER & INTAGLIO tech, smuggling via Nepal. Chidambaram (then FM) casually replies: "How can we stop them? The source is in another country. We can only try to prevent entry through borders" This was India’s Law & Order admitting defeat inside Parliament.. And remember the minister and his son who actual gave the notes master copy ..

குழந்தைகளுக்கு ஜாதிப்படி வெவ்வேறு அங்கன்வாடி ஈவெரா மண்ணில் - எஸ்சிடி குழந்தைகளுக்கு தனியாகவும், திராவிட ஆதிக்க ஜாதிக் குழந்தைகளுக்கு தனியாக

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாக அங்கன்வாடி, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியா அங்கன்வாடி பல ஆண்டுகளாக என இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

https://x.com/annamalai_k/status/2037061837846700291/photo/1

21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி. உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈவெராமசாமி - இசை, சினிமா, நாடகம் வெறுக்க வேண்டும்; விபச்சாரம் என்பது தப்பல்ல. குடிப்பதும், கூத்தியாளுடன் கும்மாளமடிப்பதும் சரியாம்

ஈவெராமசாமி சொன்னது, "நம் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெரும் கேடாய் இருந்து வரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப...