Friday, February 6, 2026

குழந்தைத் திருமணம் செய்தவர்கள் C.N.அண்ணாதுரை & ஈவெராமசாமியார்

பால்ய விவாகம் பசெய்தவர் பெயர் C.N.அண்ணாத்துரை. கல்லூரியில் பட்டம் படித்தவருக்கு 14 வயது குழந்தையை மணக்க கூடாது என்கிற உணர்வும் அறிவும் இல்லையா?
இவ்வளவுக்கும் இந்த திருமணம் 1930 இல் நிகழ்ந்தது, ஆனால் அதற்கு ஓராண்டு முன்பே அதாவது 1929 இல் பால்ய விவாக தடுப்புச் சட்டம் வந்துவிட்டது.

சட்டப்படி, அண்ணாத்துரை ஒரு கிரிமினல்? https://www.facebook.com/photo/?fbid=884827851114623&set=a.108807238716692

 

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி GRS பெயரில் பாசீச இடது சாரிகள் அருவருபான நூல் வெளியிடவில்லை வழக்கு முடித்து வைப்பு

 




அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது ஹைகோர்ட்டில் 2.26 ஏக்கர் நில அபகரிப்பு புகார்

 மொத்தம் 2.26 ஏக்கர்.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது ஹைகோர்ட்டில் நில அபகரிப்பு புகார்
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மதுரை மாவட்டம் கொடிக்குளத்தில் 2.22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், இதுதொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் பாலாஜி சுப்பிரமணியன். இவருக்கு வயது 42. இவரது மனைவி பெயர் கலாவதி. இந்நிலையில் தான் ஜெய் பாலாஜி சுப்பிரமணியன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நானும், எனது மனைவி கலாவதியும் மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள கொடிகுளம் கிராமத்தில் 2.26 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறோம். இதனை கடந்த 2024 மே மாதம் 20ம் தேதி வாங்கினோம். இந்த நிலத்தை குடியிருப்பு மனையாக மாற்ற முடிவு செய்தோம்.
ஆனால் நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்ககம் (DTCP), ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) போன்ற பல்வேறு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய சட்டப்பூர்வமான அனுமதிகள் குறித்து எங்களிடம் தெளிவு இல்லாமல் இருந்தது.
இந்த வேளையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தானாகவே முன்வந்து நிலம் சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் அறிந்தவர்கள் தனக்கு தெரியும். இதனால் உதவி செய்வதாக உறுதியளித்தார்.
இதனை நம்பி 2024 ஜூன் 24ம் தேதி சார்ட்டடர் அக்கவுண்ட்ன்ட் பெயரில் பவர் பத்திரம் செய்யப்பட்டது. மேலும் டிசிசிபி, ரெராவிடம் ஒப்புதல் பெற ஆவணங்கள் தேவை என்பதால் ஒரிஜினல் ஆவணங்களையும் வழங்கினோம். ஆனால் 2025ம் ஏப்ரல், மே மாதத்தில் எனது சொத்தை சட்டவிரோதமாக கைப்பற்றும் வகையில் பவர் பத்திரம் தவறாக பயன்படுத்தபட்டது. போலி லைப் சான்றிதழ் பயன்படுத்தி நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக 2025 டிசம்பர் 9ம் தேதி லோக்ஆயுக்தாவிடம் புகார் அளுிக்கப்பட்டது. ஆனால் லோக்ஆயுக்தா போலீசார் விசாரிக்கவில்லை. லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்ட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பிடி ஆஷா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜரானார். அப்போது அவர், ''இந்த மனு முற்றிலும் தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியாயமான காரணம் இன்றி இந்த மனு உள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் நான் முழுமையாக அம்பலப்படுத்துவேன்'' என்றார்.

இதற்கிடையே தான் மனுவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். இதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி பிடி ஆஷா அனுமதி வழங்கினார். திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வழக்கை பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த மனுவை மனுதாரர் கடந்த ஜனவரி 23ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பிப்ரவரி 2ம் தேதி இந்த மனு பட்டியலிடப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு லோக்ஆயுக்தா சார்பில் மனுதாரரருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் அமைச்சர் வற்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உறுதியானதாக இல்லை. ஏன் புகாரை நிராகரிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் மனுவில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளதாக மனுதாரர் காலஅவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

மதுரை:  அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி,  ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர் அரு​கில் உள்ள கலைநகரில் வசிப்​பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக இருந்​தது முதல் அவரிடம் உதவி​யாள​ராக (பிஏ) இருந்​து வந்தவர்.

ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி​யும் காதலித்து திரு​மணம் செய்​தவர்​கள். கலா​வதி பட்​டயக் கணக்​காள​ராக உள்​ளார். நிதி அமைச்​ச​ராக பழனிவேல் தியாக​ராஜன் பொறுப்​பேற்​றதும், செல்​வாக்கு மிக்க நபராக ஜெய்பாலாஜி வலம் வந்​தார். அமைச்​சரின் பெயரை தவறாக பயன்படுத்தி மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல வேலைகளை கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார்.  இப்படி கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை  தனது பெயரிலும், மனைவி மற்​றும் பினாமி பெயர்​களில் முதலீடு செய்​தார்.

இதற்கிடையில் பிடிஆர் உதவியாளர் ஜெய் பாலாஜி​ மீது அடுக்கடுக்கான புகார்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வந்தது.   இதை தொடர்ந்து அமைச்​சர் அவரை எச்​சரித்​து, பணி​யில் இருந்து நீக்கினார்.

இந்த சூழலில்,  மதுரை​யில் உள்ள பிரபல கட்​டு​மான நிறுவன உரிமை​யாளரிடம் பல்​வேறு வேலைகளைச் செய்து தரு​வ​தாகக் பணம் பெற்றது.  மாநக​ராட்​சி​யில் சில வேலைகளைச் செய்து கொடுக்க ரூ.50 லட்​சம் வரை பெற்​றுள்​ளது தெரிய வந்தது.

அதுபோல, மருதம் ரியல் எஸ்​டேட் பெயரில், தவணை முறை​யில் பணம் செலுத்​தி​னால் வீட்டு மனை வழங்​கு​வ​தாக கணவன், மனைவி இரு​வரும் பொது​மக்​களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்​றி​யுள்​ளதாகவும் புகார்கள் வந்தது.

மேலும் பலரிடம் அமைச்​சரின் பெயரைக் குறிப்​பிட்​டும், ரியல் எஸ்​டேட் பெயரிலும் ரூ.100 கோடி வரை மோசடி செய்​துள்​ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி இருவரும் சேர்ந்து சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடாக பணம் சம்பாதித்தது  உறுதி செய்தனர்.  இதையடுத்து, அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி மற்​றும் பினாமிகள் பெயர்​களில் உள்ள அசை​யும், அசையா சொத்​துகளின் ஆவணங்​களைச் சேகரித்து வருவதாகவுமை,  இந்த சொத்​துகளைப் பறி​முதல் செய்​து, பாதிக்​கப்​பட்​டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






 

தெரு பெயர்களில் ஜாதிகளை நீக்கும் திமுக செயல் பயன் இல்லாதது -ஹைகோர்ட்

தெரு பெயர்களில் ஜாதிகளை நீக்கும் திமுக செயல் பயன் இல்லாதது -ஹைகோர்ட்

 

துணை வேந்தர் நியமனம் - தமிழக அரசு சட்டம் செல்லுமா?- மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 துணை வேந்தர் நியமனம் - தமிழக அரசு சட்டம் செல்லுமா?- மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. தமிழக அரசின் பதில் பெறாமல் அவசர்ச் தீர்ப்பு எனவே முழுமையான மறு விசாரணை, அந்த விசாரணை முடியும் வரை  துணை வேந்தர் நியமனம் செய்யக் கூடாது






குழந்தைத் திருமணம் செய்தவர்கள் C.N.அண்ணாதுரை & ஈவெராமசாமியார்

பால்ய விவாகம் பசெய்தவர் பெயர் C.N. அண்ணாத்துரை . கல்லூரியில் பட்டம் படி த்த வருக்கு 14 வயது குழந்தையை மணக்க கூடாது என்கிற உணர்வும் அறிவும் இ...