Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Wednesday, February 11, 2026
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை அழித்து
வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி மாடம்பாக்கம் நிலம் அபகரிப்பு: சாா்-பதிவாளா், தந்தை, மகன்கள் மீது வழக்கு
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக சாா்-பதிவாளா், தந்தை, மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். 11 பிப்ரவரி 2022, 12:59 am
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக சாா்-பதிவாளா், தந்தை, மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதில் சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் ரூ.258 கோடி மதிப்புள்ள 9.86 ஏக்கா் நிலம் கோயில் பெயரில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து ஆக்கிரமித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன.
லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மாடம்பாக்கத்தில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 9.86 ஏக்கா் நிலம் கடந்த 1943-இல் முருக பக்தா் பங்காரு சுவாமி நாயுடு தானமாக வழங்கியது. இந்த நிலத்தை பங்காரு சுவாமி நாயுடு, டி.ஆா்.நாகவேலு பிள்ளையிடம் 1937-இல் வாங்கியுள்ளாா்.
தானமாக பெறப்பட்ட நிலம்: வடபழனி முருகனின் தீவிர பக்தரான பங்காரு சுவாமி நாயுடு பத்திரப் பதிவு ஆவணத்தில், ‘கோயிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவில் 9 நாள் நிகழ்வுகளை தனது குடும்பத்தினா், வாரிசுகள் நடத்தத் தவறினால், தான் தானமாக வழங்கிய அந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நிலத்தின் பாதுகாவலராகவும், வருவாயையும் தனது குடும்பத்தினா் அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் அவா்கள், ஐப்பசி திருவிழா 9 நாள் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை எனில் நிலத்தில் கிடைக்கும் வருவாய் கோயிலுக்குச் சொந்தமாகும். எக் காரணம் கொண்டும் அந்த நிலத்துக்கு எனது குடும்பத்தினா் உரிமை கோர முடியாது. அந்த நிலம் கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமானது’ என குறிப்பிட்டுள்ளாா்.
இந்நிலையில், அண்மையில் இரு பட்டா எண்களில் இருந்த 9.86 ஏக்கா் நிலத்தின் பட்டாவையும் தனது மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோா் பெயருக்கு மாற்றும்படி தாம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அவா்களது தந்தை விழுப்புரம் மாவட்டம் வானூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி என்பவா் மனு கொடுத்தாா். அந்த மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், வடபழனி முருகன் கோயில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அந்த நிலத்தை வருவாய் ஆவணங்களை மாற்றுவதற்கு முயற்சி நடைபெறுவது தெரியவந்துள்ளது.
இதில், தாம்பரம் சாா்-பதிவாளராக இருந்த விவேகானந்தன், பத்திரப் பதிவுத்துறையின் பல்வேறு விதிமுறைகளை மீறியும், போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் கோயில் நிலத்தைத் தனி நபா்களுக்கு பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
முக்கிமாக, நிலத்துக்குரிய உண்மையான மற்றும் மூலப்பத்திரத்தை பாா்க்காமலும் நகலை பெறாமலும் விவேகானந்தன் பத்திரங்களை பதிவு செய்துள்ளாா். அதேபோல சொத்துப் பதிவு செய்யப்படும் முன் 10 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட வில்லங்க சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற பத்திரப்பதிவுத்துறையின் விதிமுறையையும் விவேகானந்தன் மீறியுள்ளாா். மேலும் போலி ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவேகானந்தன் பத்திரப்பதிவு செய்துள்ளாா்.
4 போ் மீது வழக்கு: இது தொடா்பாக பத்திரப் பதிவுத்துறை விதிமுறைகளை மீறியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது, மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விவேகானந்தன், கந்தசாமி, அவரது மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோா் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கில் சிக்கியுள்ள விவேகானந்தன் தற்போது வேளச்சேரி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்களில் நந்தர் & மௌரியர் குறிப்புகள் முற்கால் தொன்மத் தன்மையானவை
பாட்டுத்தொகை நூல்களான சங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்களில் நந்தர் ஆட்சி மற்றும் மௌரியர் பற்றிய குறிப்புகள் பற்றி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு நூல் தரும் தெளிவான விளக்கம்
மகாபலிபுரம் -சாளுவன் குப்பம் பல்லவர் கால முருகன்கோவில்
சாளுவன் குப்பம் மகாபலிபுரம் புலிக்குகை அருகே பல்லவர் கால முருகன்கோவில்
Śāḷuvān̤kuppam excavations, 2005-07 https://ia803102.us.archive.org/31/items/saluvankuppamexc00badh/saluvankuppamexc00badh.pdf2004 .ஆம்ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடல் நீர் பின்வாங்கியது. அப்போது வெளிப்பட்ட பாறைகளில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளைக் கொண்டு இப்பகுதியில் ஒரு முருகன் கோவில் இருக்கவேண்டும் என முடிவு செய்யப் பட்டது.
by Badhreenath, Sathyabhama -ஆராய்ச்சி நூல் முன்னுரை
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் அலைகள் குறைந்து வருவதால், குலோத்துங்க III (1178 - 1218 CE) இன் முந்தைய நகலெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கு அருகிலுள்ள ஒரு பாறைப் பாறையில் ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரின் (939 - 967 CE) கல்வெட்டின் புதிய வரிகள் வெளிச்சத்திற்கு வந்தன. இரண்டு கல்வெட்டுகளும் தற்செயலாக ஒரு சுப்பிரமணிய கோயிலைப் பற்றி குறிப்பிடுகின்றன. இந்த இடத்திற்கு அருகில் எங்கும் எந்தக் கோயிலும் இல்லை, மேலும் ஒரு விசாரணை அந்த இடத்தை நெருக்கமாகப் பார்க்க வழிவகுத்தது, இது அதிர்ஷ்டவசமாக ஆரம்பகால பல்லவர் காலத்திற்கு ஒதுக்கப்பட்ட சுப்பிரமணியருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆரம்பகால கோயில்களில் ஒன்றை முறையான அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப் படுத்தியது.
இதுவரை அறியப்படாத தகவல்களுக்கு இது பங்களித்ததால், இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத் தக்கதாக இருந்தது. ஒரு சிறிய செங்கல் கோயில் ஒரு முழுமையான வளாகமாக பரிணமித்தது, ஒருவேளை அது பெற்ற ஆதரவின் காரணமாக இங்கே வெளிப்படுத்தப்பட்டது. கோயில் வளாகத்தின் முழுமையான அமைப்பு அம்பலப்படுத்தப்பட்டது, இது ஆரம்பகால பல்லவர் முதல் பிற்பகுதி சோழர் காலம் வரையிலான மூன்று கட்ட கட்டமைப்பு செயல்பாடுகளை வெளிப் படுத்தியது. ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரின் கல்வெட்டு மாமல்லபுரம் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது இதுவே முதல் முறை. இந்தப் பகுதியில் இன்றுவரை பிரபலமான தெய்வமான சுப்பிரமணியரின் ஈட்டி (வேல்), ஆயுதம் (ஆயுதம்) கல்லில் கண்டு எடுக்கப் பட்டது இதுவே முதல் முறை.
இந்த அகழ்வாராய்ச்சியின் கதை, ரோமானிய நாணயங்கள் மற்றும் நடனப் பெண்களுடன் கூடிய டெரகோட்டா தகடு உள்ளிட்ட ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருட்களைக் குறிப்பிடாமல் முழுமை அடையாது. இந்தப் பகுதியில் கடல் அலை நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள புவியியல் ஆய்வு மூலம் பலதரப்பட்ட அணுகுமுறை முயற்சிக்கப் பட்டு இந்த அறிக்கையில் இணைக்கப் பட்டுள்ளது.
இறுதியாக, இந்த அகழ்வாராய்ச்சி மூலம் தளத்தின் முழுமையான ஆய்வு புகழ்பெற்ற உலக பாரம்பரிய தளமான மாமல்லபுரத்தின் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது என்பதை மட்டும் நான் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
Sathyabhama Badhreenath-Chennai 27-5-2010









