Friday, April 10, 2026

கொடைக்கானல் மாப்பிள்ளை முதலி கிராமம் அரசு நிலம் ஆக்கிரமிப்பு - ஹைகோர்ட் ஆணைப்படி இரவில் சட்ட விரோத சர்ச் அகற்றம்

 கொடைக்கானல் மாப்பிள்ளை முதலி கிராமம் -எம்.எம். தெருப் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த சட்ட விரோத கிறிஸ்தவ சர்ச் இரவோடு இரவாக இடித்து அகற்றிய அதிகாரிகள்

https://x.com/sunnewstamil/status/2042416215419953269
ஆக்கிரமிப்பு தொடர்பான தனிநபர் வழக்கில், சிற்றாலயத்தை இன்று பகல் 1.15 மணிக்குள் இடித்து அகற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது; தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் தெரிவித்தனர் ஏற்கனவே, அப்பகுதியினர் எதிர்ப்பு காரணமாக இடிப்பு முயற்சியை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சுமார் 300 போலீசார் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
https://www.youtube.com/watch?v=dhx4gfxZk0E&t=1384s