Saturday, May 23, 2026

வேலூர் கணியம்பாடி புதூர் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகள்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார்!

மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகள்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார்!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கட்டாய மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக எழுந்துள்ள புகார் அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகளைப் பிடித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்

தமிழகத்தில் செங்கல் சூளைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தங்களை தவெக நிர்வாகிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் சூளைகளுக்கு நேரடியாகச் சென்று மாமூல் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகியோர் வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களைச் சந்தித்து, கட்சி வளர்ச்சி நிதியாக கட்டாயமாகப் பெரும் தொகையை மாமூலாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சில உரிமையாளர்களை, "ஆட்சியில் இருப்பது எங்கள் கட்சி, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் சூளைகளை நடத்த விடமாட்டோம்" என ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுற்றி வளைத்துப் பிடித்த உரிமையாளர்கள்

மாமூல் கேட்டு தொடர் மிரட்டல்களால் செங்கல் சூளை உரிமையாளர்கள், தங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வரும் தவெக நிர்வாகிகளை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டிய வீடியோவுடன் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

"ஏற்கனவே பல்வேறு நஷ்டங்களுக்கு இடையே தான் இந்தத் தொழிலை நடத்தி வருகிறோம். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சிலர் வந்து மாமூல் கேட்டு மிரட்டுவது எங்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக பாய்ச்சல்

"இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்.. யாரையும் தப்பு செய்ய விட மாட்டான் என வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்களே உங்க கட்சி நிர்வாகிகள் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்கும் லட்சணத்தை பாருங்க.." என திமுக ஐடி விங், இந்த வீடியோவை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

இதேபோல, பல்லாவரத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள பழக்கடையில் எம்.எல்.ஏவின் பி.ஏ எனக் கூறி தவெக நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ளார். பழக்கடைக்காரர் அவரை பிடித்து அமர வைத்த நிலையில், அவர் கட்சி நிர்வாகியிடம் போனில் பேசி, செல்வாக்கை காட்ட முயன்றுள்ளார். விசாரணையில், அந்த நபர் தவெக பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சியின் கணவரின் உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0TmYCWMZnZbmqHNNZaGRsjwU1vNP8EJgj7qZtauVAXwrhUoNg9u2ynRuqY7KozKPwl&id=61578598803847&__tn__=%2CO*F

புதிய ஏற்பாட்டுக் கதைகளும் இயேசுவின் வாழ்வும்: ஒரு மதச்சார்பற்ற விமர்சனப் பார்வை

புதிய ஏற்பாட்டுக் கதைகளும் இயேசுவின் வாழ்வும்: ஒரு மதச்சார்பற்ற விமர்சனப் பார்வை 

                                 


   

புதிய ஏற்பாட்டுக் கதைகளும் இயேசுவின் போதனைகளும் உலக வரலாற்றில் பெரும் செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், மதச்சார்பற்ற, பகுத்தறிவு மற்றும் வரலாற்று ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும்போது அவை பல விமர்சனங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உள்ளாகின்றன. ஆன்மீகப் புனைவுகளைத் தவிர்த்து, ஒரு சமூக-அரசியல் மற்றும் தத்துவக் கண்ணோட்டத்தில் அணுகும்போது புதிய ஏற்பாட்டில் காணப்படும் எதிர்மறையான தாக்கங்கள் மற்றும் பலவீனங்கள் இங்கே ஆராயப்படுகின்றன.

## 1. வரலாற்று நம்பகத்தன்மை மற்றும் முரண்பாடுகள்

மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்களின் முதன்மை விமர்சனம், புதிய ஏற்பாட்டு நூல்களின் வரலாற்றுத் துல்லியம் குறித்ததாகும்.

 * முரண்பட்ட சாட்சியங்கள்: இயேசுவின் பிறப்பு, வம்சாவளி மற்றும் இறுதி நாட்களைப் பற்றி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களும் ஒன்றோடொன்று முரண்படும் பல தகவல்களைக் கொண்டுள்ளன.

 * ஆதாரங்களின்மை: இயேசு வாழ்ந்ததாகக் கூறப்படும் முதலாம் நூற்றாண்டில், ரோமானிய அல்லது யூத வரலாற்றுப் பதிவுகளில் (ஜோசிபஸ் போன்றவர்களின் பிற்காலப் பதிவுகளைத் தவிர) அவரது சமகால நேரடி வரலாற்றுச் சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான கதைகள் வாய்மொழி மரபிலிருந்து பல தசாப்தங்களுக்குப் பிறகே எழுதப்பட்டன.

 * அமானுஷ்யக் கதைகள்: கன்னிப்பிறப்பு, தண்ணீரில் நடப்பது, இறந்தவர்களை உயிர்ப்பிப்பது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத அற்புதக் கதைகள், ஒரு வரலாற்றுப் பதிவாக புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.

## 2. சமூகப் பிற்போக்குத்தனமும் சமத்துவமின்மையும்

இயேசு எளியவர்களுக்காகப் பேசினார் என்று கூறப்பட்டாலும், புதிய ஏற்பாட்டின் சில பகுதிகள் அக்கால சமூகக் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டதுடன், அவற்றுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.

 * அடிமைமுறைக்கு ஆதரவு: புதிய ஏற்பாட்டில் எங்குமே அடிமைமுறை (Slavery) ஒழிக்கப்பட வேண்டும் என்றோ, அது பாவம் என்றோ இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ கூறவில்லை. மாறாக, "அடிமைகளே, உங்கள் உலகப்பூர்வமான எஜமானர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்" (எபேசியர் 6:5) போன்ற கருத்துக்களே வலியுறுத்தப்பட்டுள்ளன. இது பிற்காலத்தில் அடிமை வணிகத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

 * பெண்ணடிமைத்தனம்: புதிய ஏற்பாட்டின் பல பகுதிகள் பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றன. சபைகளில் பெண்கள் பேசக் கூடாது என்றும், கணவர்களுக்குப் பணிந்திருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 14:34, எபேசியர் 5:22) என்றும் கூறப்பட்டுள்ள போதனைகள் பாலினச் சமத்துவத்திற்கு எதிரானவை.

## 3. நடைமுறைக்குச் சாத்தியமற்ற மற்றும் ஆபத்தான போதனைகள்

இயேசுவின் சில போதனைகள் மனித இயல்புக்கும், ஒரு சமூகத்தின் தற்காப்பிற்கும் நடைமுறை ரீதியாகச் சாத்தியமற்றவை என்ற விமர்சனம் உண்டு.

 * தீமையை எதிர்க்காதே: "தீமை செய்பவனை எதிர்க்காதே, வலது கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்ற போதனை, அநீதிக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராகப் போராடும் மனித ஆற்றலை மழுங்கடிக்கச் செய்கிறது. இது ஒடுக்கப்பட்ட மக்களை எப்போதும் அடிமைகளாக வைத்திருக்கவே உதவும்.

 * பொருளாதாரப் பார்வையின்மை: "நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்", "செல்வந்தன் இறைவனுடைய அரசில் நுழைவது கடினம்" போன்ற போதனைகள் மனிதர்களின் உழைப்பையும், பொருளாதாரத் திட்டமிடலையும், பொருள்சார் முன்னேற்றத்தையும் முடக்கும் எதிர்மறைச் சிந்தனைகளாக விமர்சிக்கப்படுகின்றன.

 * குடும்ப உறவுகளைத் துறத்தல்: "என்னிடம் வருபவர் தன் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகளை வெறுக்காவிட்டால் எனக்குச் சீடராக இருக்க முடியாது" (லூக்கா 14:26) போன்ற தீவிரவாதப் போதனைகள் குடும்பக் கட்டமைப்பைக் குலைப்பதாக உள்ளன.

## 4. மதவெறி மற்றும் பிற மத வெறுப்புக்கான விதstate

புதிய ஏற்பாடு அன்பு பற்றிப் பேசினாலும், கடுமையான மதப் பிரிவினையையும் நரக அச்சத்தையும் விதைக்கிறது.

> "என் மூலமாக அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6)

 * மத மேலாதிக்கம்: தன்னை நம்பாதவர்கள், தன் வழியை ஏற்காதவர்கள் நித்திய நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்ற போதனை மாற்றுச் சிந்தனையாளர்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கியது.

 * யூத எதிர்ப்பு (Anti-Semitism): இயேசுவின் மரணத்திற்கு யூத மக்களே காரணம் என்பது போன்ற புதிய ஏற்பாட்டுச் சித்தரிப்புகள், வரலாற்றில் ஐரோப்பா முழுவதும் யூத மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும், நாஜிக்களின் யூத ஒழிப்புப் பேரழிவிற்கும் (Holocaust) ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

முடிவுரை

மதச்சார்பற்ற நோக்கில் பார்க்கும்போது, புதிய ஏற்பாட்டுக்கதைகள் உலகளாவிய மனிதநேயத்தை மட்டும் போதிக்கவில்லை; மாறாக, அவை பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகளையும், சமூகப் பிற்போக்குத்தனங்களையும், சகிப்புத்தன்மையற்ற மதவெறிக்கான கூறுகளையும் தங்களுக்குள் கொண்டுள்ளன. மனித முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இத்தகைய கருத்துக்களை விமர்சனப் பார்வையோடு அணுகுவது அவசியமாகிறது.


எது உண்மையான பைபிள்?

🍁 இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் பழைய ஏற்பாடே கிரித்தவப் பிரிவுகளிடையே இன்னும் செந்தரப்படவில்லை; எடுபட்டுப்போன யூதச் சட்டங்கள் நிரம்பிய பழைய ஏற்பாடே தேவையில்லை எனும் கருத்தும் கிரித்தவரிடையே நெடுங்காலமாக நிலவி வருகிறது. பைபிள் மொழிபெயர்ப்புகளும் காலத்துக்குக் காலம் வேறுபடுகிறது.

*ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே எண்ணிக்கை 100ஐத் தாண்டுகிறது.

*தமிழ்க் கதோலிக்கர் , தமிழ் ப்ரொடெஸ்டன்ட், தமிழ் Evangelical Lutheran Church - மூன்று கிரித்தவப் பிரிவினரும் பின்பற்றும் தமிழ் மூல விவிலியப் பதிப்புகள் மூன்றுமே மூன்று விதங்களில் அமைந்திருக்கக் காரணம் என்ன? இவை தவிரப் பிற பதிப்புகளும் எதற்காக?

எது உண்மையான பைபிள்?

🍁உலகில் இன்று நடையாடும் இத்தனை விவிலியப் பதிப்புகளிலும் பிரிடிஷ் வாசகசாலையில் உள்ள கிரேக்க மொழி மூல விவிலியத்தை ஒத்துப்போகும் பைபிள் எது?

🍁 கிரித்தவப் பழைய ஏற்பாடும் யூதர்களின் புனித 'தனக்' நூலின் அப்பட்டமான காப்பிதான். யூத மறை 24 புத்தகம்; ப்ரொடஸ்டன்ட் பழைய ஏற்பாடு 39 புத்தகங்கள். கத்தோலிகப் பழைய ஏற்பாடு இன்னும் விரிவானது.

🍁யூத தீர்க்கதரிசிகளை அப்படியே காப்பி அடிக்கும் கிரித்தவம் யூத மதத்தை ஏன் வெறுக்க வேண்டும்? யூதர் வெறுக்கத்தக்கவர் என்றால் அவர்களது நூல்கள் மட்டும் கிரித்தவத்துக்குத் தேவையாவது எப்படி?

🍁 கிரித்தவம் எடுத்தாள்வது யூதரின் தோராவை, நவிம் என்ற யூத தீர்க்கதரிசிகளின் பட்டியலை; ஸநாதந வேத ஆகமங்களுக்கும் கிரித்தவ மத நூல்களுக்கும் கடுகளவும் தொடர்பு கிடையாது. 


கேரளாவுக்கு கனிம வளம் சென்றால் என்ன தவறு.? - திமுக MLA அனிதா ராதாகிருஷ்ணன்

 கேரளாவுக்கு கனிம வளம் சென்றால் என்ன தவறு.? -அனிதா ராதாகிருஷ்ணன்


♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு..? - முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்எல்ஏ உடன் இணைந்து பேட்டி..!

♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரை நேரில் சந்தித்த நிலையில் "கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனிம வளம் கொண்டு வர முடியாதே" என்ற கேள்விக்கு "அது அவர்கள் தவறு" "அந்த தவறை நாம் செய்யக்கூடாது" கனிமவளம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற நிலையில் பதில் அளித்ததால் அதிர்ச்சி..!!

♦️கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிமவளம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அதிக அளவு விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள், உடல் உறுப்புகள், உடைமை இழப்பு என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வந்தனர். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் தீவிர முயற்சியால் கனிமவள வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு குமரி மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக இருந்து வருகிறது. கனிமவள வாகன விபத்தால் ஏற்படும் உயிர் பலிகளும் பூஜ்ஜியமானது.

♦️ஆனால் கடந்த 5 வருடங்களாக மிகப்பெரிய அளவில் கனிம வளம் கேரளாவுக்கு சென்றதும் அதற்கு கடந்த கால அரசு தான் முக்கிய காரணம் என்பதும் குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேட்டியால் வெளிவந்து உள்ளது.

♦️நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டினுடன் இணைந்து ஆட்சியர் அழகு மீனாவை சந்தித்த பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர் ஒருவர் ...தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கடந்த ஆட்சி காலத்தில் அதிக அளவில் கனிமவளம் கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே, இதை தடுக்கத்தான் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,

♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு..? கேரளா இந்தியாவில் தானே இருக்கிறது..? வெளிநாட்டிலா இருக்கிறது...? அல்லது துபாய்லா இருக்கு..! எல்லா பொருளும் அங்கேயும் போகும். இங்கேயும் வரும். என்று பேசினர். உடனே செய்தியாளர் மீண்டும்... கேரளாவில் இருந்து கனிம வளம் தமிழகத்திற்கு கொண்டுவர இயலாதே என்று கேட்டபோது "அது அவர்கள் தவறு" "அந்த தவறை நாம் செய்யக்கூடாது" என்று கனிமவளம் கொண்டு செல்ல உடந்தையாக பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

♦️ஏற்கனவே கடந்த ஆட்சி காலத்தில் கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் போராடிய நிலையிலும் கேரளாவுக்கு அதிக அளவு கனிம வளம் கொண்டு செல்லப்படுவது நடந்து வந்தது. அதன் பின்னர் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவு விபத்துக்களை ஏற்படுத்திய கனிமவள டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலையான 4 வழி சாலை பணிகள் முடியும் வரை கனிம வள வாகனங்கள் கேரளாவுக்கு குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை வழியே செல்வதை அனுமதிக்க முடியாது என்று மாவட்ட ஆட்சியர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

♦️ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவரே தற்போதைய நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உடன் இணைந்து குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேரளாவுக்கு கனிமவளம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மட்டுமின்றி, குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு...? என்று பேட்டி அளித்து இருப்பது, குமரி மாவட்ட மக்கள் மத்தியில் கனிம வளம் கேரளா செல்ல யார் காரணம் என்பதை அடையாளம் காட்டியுள்ளது என்கின்றனர் வேதனையுடன்..!!!😥

படம்: கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்எல்ஏ உள்ளிட்டோர்.

ROOT_MAFIA | ரூட் மாஃபியா என்றால் என்ன- As received

 ROOT_MAFIA | ரூட் மாஃபியா என்றால் என்ன ?  ☠️☠️☠️☠️


இவர்கள் லட்சக்கணக்கான போலியான Facebook அக்கவுண்ட் , Instagram அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். இவர்கள் ஒருவர் மட்டுமே பல லட்சக்கணக்கான இணையதள அக்கவுண்ட்களை ஒரு கணினியின்  மூலமாக பல போலி அக்கவுண்ட்களை இயக்குகிறார்கள் . இதன் மூலமாக யார் அரசியலுக்கு வரவேண்டும் யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று போலி பார்வையாளர்கள் மற்றும் போலி லைக்குகளை பெற்றுக்கொண்டு புரிதல் இல்லாத மக்கள்களை கவர்ச்சியான மற்றும் கலர்ஃபுல்லான வீடியோக்களை பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள்..!!! 
இது போல்தான் இருக்கும்...

தவெக அமைச்சர் - முஸ்லிம் லீக் ஷாஜகான் வெளிநாட்டு/ பயங்கரவாத தொடர்புகள்


IUML MLA shajahan (wearing sherwani and cap third from risahd badiudin who was arrested in Easter case)
Extreme left is Dr MLAM.Hizbullah, SL Politician / Supreme council member Rabita Al Alami Al islam and ISI agent. Sitting next is Justice Akbar Ali and right is Prof KM. Standing is Rauf Hakeem. Rishad Badiudin and Rauf belong to different and rival Muslim  political parties. Their gathering under Prof KM shows a deeper planning by ISI Saudi
With Pak HC Maj.Gen Khatak
Meeting held on 21-11-2024
The former Governor was questioned regarding videos of a controversial statement he had made during a public gathering in the aftermath of the terror attacks which targeted Catholic churches and hotels. 

Responding to questions regarding Zahran Hashim, the leader of the National Thowheed Jamath (NTJ) which is responsible for the attacks, Hizbullah admitted that he had met Zahran once a long while back.
https://www.adaderana.lk/news.php?nid=55736







 

வேலூர் கணியம்பாடி புதூர் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகள்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார்!

மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகள்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார்! தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று சில நாட்களே ...