Sunday, February 22, 2026

கர்நாடக பாகல்கோட்டையில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணியில் மதவெறி முஸ்லிம்கள் கல்வீச்சு -பதற்றம்

 கர்நாடகாவில் சிவாஜி ஜெயந்தி பேரணியில் கல்வீச்சு: பாகல்கோட்டையில் 144 தடை உத்தரவு 21 Feb 2026 

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணியில் இரு தரப்பினரிடையே கல்வீச்சு நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள நியூ டவுனில் நேற்று முன் தினம் இரவு சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணி நடைபெற்றது. கிலா காளி பகுதியில் உள்ள மசூதி அருகே பேரணி சென்றபோது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தில் வந்த இளைஞர்களும் கற்களை வீசியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாகல் கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்தனர். இரு தரப்பினர் மீதும் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நியூ டவுன் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அங்கு சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகல் கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல் கூறுகையில், “பாகல்கோட்டையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவத்துக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சிசிடிவி காட்சிகளின்படி 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முதல்வர் சித்தராமையா கூறுகையில், “பாகல்கோட்டையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மத ரீதியான மோதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்றார்.

தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டு எதிலும் பார்ப்பனர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்ட செய்தி இல்லை -மா.மாரிராஜன்.

தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டு எதிலும் பார்ப்பனர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்ட செய்தி இல்லை


" புலவரின் பொய்யும் புரட்டும் "
வரலாற்றுச் செய்திகளை பொய்யாக, வன்மமாகத் திரித்து பதிவிடும் பலரில் ஒருவர் புலவர் ஐயா அவர்கள்.
புலவர் ஐயா சற்று சாமர்த்தியசாலி. ஒரு பொய்யான வரலாற்றுச் செய்தியை பதிவிட்டு அதற்கு ஆதாரம் என்று ஒரு வரலாற்று நூலை மேற்கோள் காட்டுவார். இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் பதிவிட்ட செய்திக்கும் அவர் மேற்கோள்காட்டிய நூலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.
சமீபத்திய அவரது பதிவு ஒன்றில் இராஜராஜன் மேல் இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு வைத்தார்.
//.தஞ்சைப் பெரிய கோவிலில் மாமன்னன் இராஜராஜசோழன், அவர் மகன் இராஜேந்திர சோழன் ஆகிய இருவராலும் பார்ப்பனருக்கு வழங்கப்பட்ட நிலப்பட்டாக்கள் 500 -க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இதுபோல ஏழை எளிய மக்களுக்கு இந்த அரசர்கள் நிலத் தானம் வழங்கியதாக உள்ள சான்று ஒன்றையாவது காட்டமுடியுமா?//
இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய். தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுச் செய்திகளில் எந்த ஒரு கல்வெட்டிலும் பார்ப்பனர்களுக்கு நிலம் தரப்பட்ட செய்தி இல்லை. இல்லவே இல்லை.
பெரியகோவில் கல்வெட்டுகள் பதிவு செய்யும் செய்திகளின் விபரம்,
கோவிலுக்கு நிவந்தம், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், அவற்றின் பரப்பு, அதன் மூலம் கோவிலுக்குக் கிடைக்கும் வருவாய், கோவில் பணியாளருக்கு வழங்கப்பட்ட ஊதியம், எழுந்தருள செய்த செப்புத்திருமேனிகள், விளக்கெரிக்க ஆடு, மாடு, காசு கொடுத்த விபரம், கோவில் திருவிழாக்கள்..
இது போன்ற செய்திகள்தான் உள்ளன.
எந்த ஒரு கல்வெட்டும் பார்ப்பனர்களுக்கு நிலம் கொடுத்த செய்தியை சொல்லவில்லை.
S.I.I. VOL 2 -
எண் 1 - 96 வரை உள்ள கல்வெட்டுகள்
தரும் செய்திகளின் சுருக்கம்.
========================
இக்கல்வெட்டு ஸ்ரீவிமானத்தின் வடபுறச் சுவரிலும் மேற்குப்புற சுவரிலும் உள்ளது.
தஞ்சை பெரியகோவிலின் முதல் கல்வெட்டு இது. இராஜராஜர் பெரியகோவிலை எடுப்பித்த செய்தியுடன் பெருவுடையாருக்கு இராஜராஜன் கொடுத்த தானம் பற்றிய அனைத்து விபரங்களும் இக்கல்வெட்டில் உள்ளன.
107 வரிகள் கொண்டதாக இக்கல்வெட்டு உள்ளது.
ஸ்ரீவிமானத்தின் மேற்குச் சுவற்றில் உள்ள 59 வரிகள் கொண்ட கல்வெட்டு.
இராஜராஜன் தமக்கையார், வல்லவரையன் வந்தியதேவர் மகாதேவியார் குந்தவை நாச்சியார் செய்த கொடை பற்றிய செய்தியைக் கொண்ட கல்வெட்டாகும்.
தட்சிணமேறு விடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரி திருமேனிக்கு குந்தவை நாச்சியார் கொடுத்த ஆபரணங்கள் பற்றிய செய்தி உள்ள கல்வெட்டு.
ஸ்ரீவிமான வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு.
15 வரிகள் கொண்ட 38 பகுதிகளாக உள்ள நீண்ட கல்வெட்டு. 570 வரிகள் கொண்ட கல்வெட்டு. இராஜராஜன், பெருவுடையாருக்குக் கொடுத்த திருவாபரணங்கள் கொடுத்த விரிவான செய்திகளை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.
ஸ்ரீவிமானத்தின் தென்புறச்சுவற்றிலும் வடபுற சுவற்றிலும் உள்ளது. தஞ்சை பெரியகோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விபரங்கள், அவற்றின் பரப்பு, அவற்றின் எல்லைகள், அந்நிலத்தின் மூலம் கோவிலுக்கு வரும் வருவாய் பற்றிய விரிவான விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வலதுபுற கிழக்குத் திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு. சண்டிகேஸ்வரர் திருமேனியை இராஜராஜர் எடுப்பித்த செய்தியை பதிவு செய்கிறது.
தென்புறத் திருச்சுற்றில் உள்ள ஒரு தூண் கல்வெட்டு. பஞ்சதேகமூர்த்தி என்னும் திருமேனீயை இராஜராஜர் எடுப்பித்த செய்தியை பதிவு செய்கிறது.
#எண் 31, 33, 45
தெற்குத் திருச்சுற்று தூண் கல்வெட்டு.
கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயன் திருச்சுற்று மாளிகையை எடுத்த செய்தி.
மேற்குத் திருச்சுற்றில் முதல் கோட்டத்தில் உள்ள கல்வெட்டு. ஆலயத்துப் பிள்ளையாருக்கு வாழைப்பழப் படையல் பற்றிய செய்தி.
வடபுறத் திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு. சுப்பிரமணியர் திருமேனி எடுக்கப்பட்ட செய்தி.
வடபுறத் திருச்சுற்றில் உள்ள ஒரு தூண் கல்வெட்டு. தட்சிணாமூர்த்தி திருமேனி எடுக்கப்பட்ட செய்தி.
வடபுறத் திருச்சுற்றில் உள்ள தூண் கல்வெட்டு. மகாவிஷ்ணு திருமேனி எடுக்கப்பட்ட செய்தி.
இராஜராஜன் வாயிலின் வடபுறம். மெய்க்காப்பாளன் நியமிக்கப்பட்ட செய்தி.
சண்டிகேசுவரர் ஆலயக் கல்வெட்டு. பெருவுடையாருக்கு இரத்தின திருவாபரணம் கொடுக்கப்பட்ட செய்தி.
வடக்குத் திருச்சுற்றின் வெளிப்புறம் உள்ள கல்வெட்டு. திருவிளக்கு எரிப்பதற்கு தரப்பட்ட கொடைகள்.
வடக்கு திருச்சு சுவர். விளக்கெரிக்க கொடுக்கப்பட்ட கால்நடைகள் தானம் .
திருச்சுற்றின் வடபுறத்தில் உள்ள கல்வெட்டு. தேவாரத் திருப்பதிகம் பாட 48 பிடாரர்களை நியமித்த செய்தி.
திருச்சுற்றின் வடக்குப்புறம். தளிச்சேரி பெண்கள் பற்றிய விபரம் மற்றும் பல்வேறு பணியாளர்களின் ஊதியம் பற்றிய விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவிமா கிழக்குச்சுவர்.
பெரியகோவில் கணக்கெழுதுவோர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்ட செய்தி.
திருச்சுற்றின் கிழக்குச் சுவர். பெரியகோவிலுக்கு திருமெய்க்காப்பாளர் நியமிக்கப்பட்ட செய்தி.
மேலை திருச்சுற்று தூண் கல்வெட்டு. கணபதியார் செய்புத்திருமேனி எடுக்கப்பட்ட செய்தி.
மேற்கு திருச்சுற்றில் உள்ள தூண் கல்வெட்டு.
பரிவாராலயத்துப் பிள்ளையாருக்குத் தரப்பட்ட தானம் பற்றிய செய்தி.
ஸ்ரீவிமானத்தின் வடபுறச் சுவர். பெருவுடையாருக்குத் தரப்பட்ட வெள்ளி பாத்திரங்கள் பற்றிய செய்தி.
ஸ்ரீவிமான தென்புறச்சுவர்
பெருவுடையாருக்கு சொந்தமான ஊர்கள் பற்றிய செய்தி.
ஸ்ரீவிமான தென்புறச் சுவர். பெருவுடையாருக்கு கொடுக்கப்பட்ட ஆபரணம் பற்றிய செய்தி.
வடக்குத் திருச்சுற்று தொடர் கல்வெட்டு. விளக்கெரிக்க ஆடு, மாடுகள் தானம் தரப்பட்ட செய்தி.
வடக்குச் சுற்றுச் சுவர்.
திருவிளக்கெரிய கொடுக்கப்பட்ட கொடைகள் பற்றிய செய்தி.
91,15,10, 54, 6, 34, 42, 46, 44, 48, 51, 53, 80,82, 95, 38, 40,43, 39, 55, 47, 56, 9, 81, 79, 32 - இக்கல்வெட்டுகள், இராஜராஜன், அரசிகள், உயர் அதிகாரிகள் பலரும் பல்வேறு செப்புத்திருமேனிகள் எடுக்கப்பட்ட செய்தியை பதிவு செய்கிறது.
சண்டிகேசுவரர் ஆலயத்திற்கு வைக்கப்பட்ட செப்புக்குடங்கள் பற்றிய செய்தி.
#எண் - 87 , 88, 89
ஆலயத்துப் பிள்ளையாருக்கு கொடை கொடுக்கப்பட்ட செய்தி.
திருச்சுற்றில் உள்ள திசைக்காவலர்களுக்கு இராஜராஜனின் குருவான ஈசான சிவ பண்டிதர் செப்புக்குடங்களை தானமாகக் கொடுத்த செய்தி.
- 24, 25 , 26, 28.
பெரியகோவில் திருவிழாக்கள் பற்றிய செய்தி.
#எண் - 20
சைவாச்சார்யார் சர்வசிவபண்டிதருக்கு நெல் கொடுக்கப்பட்ட செய்தி.
எண் -27
திருவிளக்கு எரிய நிவந்தம்.
எண் - 24
பெருவுடையாருக்கு திருமஞ்சன நீராட்டு நடைபெற்ற செய்தி.
எண் - 8, 9, 10, 13, 54, 15 - 20
தஞ்சைப் பெரியகோவிலில் எழுந்தருள்விக்கப்பெற்ற திருமேனிகளுக்கு வழிபாடு பற்றிய செய்தி.
எண் - 5 , 6
குந்தவை நாச்சியார் எடுப்பிச்ச பொன்மாளிகை துஞ்சின தேவர் திருமேனிக்கு அமுது படையல் நடந்த செய்தி.
=======================
தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டு எதிலும் பார்ப்பனர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்ட செய்தி இல்லை என்பதை புலவர் அறியட்டும்.
===================
அன்புடன்..
மா.மாரிராஜன்.

கர்நாடக பாகல்கோட்டையில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி பேரணியில் மதவெறி முஸ்லிம்கள் கல்வீச்சு -பதற்றம்

  கர்நாடகாவில் சிவாஜி ஜெயந்தி பேரணியில் கல்வீச்சு: பாகல்கோட்டையில் 144 தடை உத்தரவு  21 Feb 2026  பெங்களூரு:  கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில்...