Wednesday, March 11, 2026

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது திமுக கட்சியின் கொடி கட்டிய காரில்

 மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

மதுராந்தகம்: மது​ராந்​தகம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில், தனிப்​படை போலீ​ஸார் இரு​வரை கைது செய்​தனர். தாம்​பரம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறு​வன், கடந்த 9-ம் தேதி நள்​ளிர​வில் 14, 16 வயதுடைய இரு சிறுமிகளை தனது இருசக்கர வாக​னத்​தில் மது​ராந்​தகம் அருகே உள்ள கீழக்​கண்டை பகு​திக்கு அழைத்து சென்​றுள்​ளார்.

தேவத்​தூர் வழி​யாகச் சென்​ற​போது, மது​போதை​யில் இருந்த மர்ம நபர்​கள் இரு​வர் அவர்​களைத் பின் தொடர்ந்​துள்​ளனர். இதனால், அச்​சமடைந்த சிறு​வன், இருசக்கர வாக​னத்தை வேக​மாக ஓட்​டிய​போது, அத்​தி​வாக்​கம் பகு​தி​யில் வாக​னம் நிலை​தடு​மாறி விபத்​துக்​குள்​ளானது.

இதில், பின்​தொடர்ந்து வந்த நபர்​கள் சிறு​வனை கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். அப்​போது, சிறு​வன் தன்​னுடன் வந்த 14-வயது சிறுமியை விட்டு விட்டு 16 வயது சிறுமியை மட்​டும் வாக​னத்​தில் ஏற்​றிக்​கொண்டு சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதைப் பயன்​படுத்தி மர்ம நபர்​கள் இரு​வர், காயமடைந்த 14 வயது சிறுமியை அத்​தி​வாக்​கம் ஏரிப் பகு​திக்​குச் தூக்​கிச் சென்​று, கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

பின்​னர், அதி​காலை​யில் சிறு​வன் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் சிறுமியை அனு​ம​தித்​த​தாக தெரி​கிறது. சிகிச்சை அளித்த மருத்​து​வரிடம் சிறுமி சம்​பவம் குறித்த விவரங்​களைக் கூறி​யுள்​ளார்.

இதையடுத்​து, மருத்​து​வர்​கள் அளித்த தகவலின் பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுகுறித்​து, பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், மேல்​மரு​வத்​தூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதையடுத்​து, தனிப்​படை அமைத்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுதொடர்​பாக ஆவடி அருகே பதுங்​கி​யிருந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜியை நேற்று கைது செய்​தனர்.

இவர் மீது, கூடு​வாஞ்​சேரி காவல் நிலை​யத்​தில் கொலை முயற்​சி, திருட்​டு, வழிப்​பறி உள்​ளிட்ட 15-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் உள்​ளன. பாலாஜி கடந்த ஜனவரி மாதத்​தில் கூடு​வாஞ்​சேரி மது​பான கடை​யில் மது அருந்த வருபவர்​களிடம், கத்​தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி, 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், இச்​சம்​பவத்​தில் மாரிபுத்​தூர் பகு​தியை சேர்ந்த தாமோதர பெரு​மாள் (25) என்​பவரை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு கோயி​லில் நகை திருட்டு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட தாமோதர பெரு​மாள், செங்கை மாவட்ட சிறை​யில் இருந்​த​போது காக்கா பாலாஜி​யுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இரு​வரும் சிறை​யில் இருந்து வெளி​யில் வந்த பின்​னர், இந்த பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் ஈடு​பட்​டிருப்​ப​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

திமுக ஆட்​சி​யில் பெண்​கள், குழந்​தைகள் வாழத் தகு​தி​யற்ற மாநில​மாக தமிழகம் மாறி​விட்​டது என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்​, பாமக தலை​வர்​ அன்​புமணி கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

உயர் நீதிமன்றம் விசாரிக்க முறையீடு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் நேற்று ஆஜராகி, ‘மதுராந்தகம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து வருவது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரி முறையீடு செய்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, “இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்” என்று அறிவுறுத்தினார்.


Madurantakam Case | கட்சி கொடி கட்டிய காரில் பா*யல் கைதி?

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப்பா*யல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி காக்கா பாலாஜி, சிவசேனா பிரமுகர் தாமோதர பெருமாள் ஆகியோர் கைது

திமுக கட்சியின் கொடி கட்டிய காரில் பா*யல் கைதி தாமோதர பெருமாள் அழைத்து வரப்பட்டதாக வெடித்த சர்ச்சை; செய்தியாளர்கள் பார்த்தவுடன் காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டதாக தகவல்

மானாமதுரை ஆகாஷ் டெல்சன் காலை உடைத்த போலீஸார்: உயிரிழப்புக்கு முன்பு நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம்

 மானாமதுரை இளைஞரின் காலை உடைத்த போலீஸார்: உயிரிழப்புக்கு முன்பு நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் 


உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்

மதுரை: ​காலில் ஈரசாக்கை போட்டு இரும்​புக் கம்​பி​யால் போலீ​ஸார் அடித்து காலை உடைத்​தனர் என மானாமதுரை இளைஞர், நீதிப​தி​யிடம் அளித்த வாக்​குமூலம் உயர்நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்​புப் பிரிவைச் சேர்க்க நீதிபதி உத்​தர​விட்​டார். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் உயி​ரிழந்​த​தாக கூறப்​படும் ஆகாஷ் டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், இழப்​பீடு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளு​டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கௌரி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசுத் தரப்​பில் கூறும்​போது, நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் போராட்டம் கைவிடப்​பட​வில்லை. இதனால் பொது​மக்கள் 80 கிலோ மீட்​டர் சுற்​றிச் செல்​கின்​றனர்.

மாணவர்​கள் உள்​ளிட்டோர் சிரமத்துக்கு ஆளாகி​யுள்​ளனர். போராட்​டக்​காரர்​களை கலைந்து செல்ல வேண்​டாம் என கிருஷ்ண​சாமி, ஜான்​பாண்​டியன் கட்​சி​யினர் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது என்றனர்.தொடர்ந்து நீதிப​தி, பொது​மக்​களுக்கு சிரமம் ஏற்​படும் வகை​யில் நடந்து கொள்​ளக் கூடாது.

இதை ஏற்க முடி​யாது என்​றார். மனு​தா​ரர் தரப்​பில், நீதித்​துறை நடு​வரின் ரிமாண்ட் அறிக்​கை​யில் ஆகாஷ் அளித்த வாக்​குமூலத்தை தாக்​கல் செய்​தனர். அதில் கூறியிருப்​ப​தாவது: சீருடை​யில் இல்லாத காவலர்​கள் என்​னையும், குணாவை​யும் பிடித்​தனர்.

என் கண்​களைக் கட்டி வேறு இடத்​துக்கு அழைத்​துச்​சென்று எனது காலை கற்​களுக்கு இடையில்வைத்​து, ஈரச்சாக்​கைப் போட்டு கம்​பி​யால் அடித்து உடைத்தனர். பின்​னர் மானா மதுரை மருத்​து​வ​மனைக்கு அழைத்துச் சென்​றனர். பாலத்​திலிருந்து தவறி விழுந்​த​தாகக் கூறு​மாறு காவல்​துறை​யினர் மிரட்​டினர்.

கண்​களைக் கட்​டியதால் யார் அடித்​தது என எனக்​குத் தெரிய​வில்​லை. இவ்வாறு அதில்கூறப்​பட்​டுள்​ளது. இதிலிருந்து போலீ​ஸார் தாக்​கிய​தால்​தான் ஆகாஷ் உயி​ரிழந்​தது உறு​தி​யாகிறது. இருப்​பினும் சரி​யான பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட​வில்லை என மனுதாரர்தரப்பில் கூறப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், ஆகாஷ் நீதித் துறை நடுவரிடம் கூறியது உண்​ையா எனத் தெரியாது. சரி​யான சான்று கிடைத்தவுடன் வழக்​கின் பிரிவு​கள் மாற்​றப்​படும் தேசிய நெடுஞ்​சாலை​யில் நடக்கும் மறியலைக் கைவிட வேண்​டும் எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, ஆகாஷ் இறப்​புக்​கான காரணம் குறித்து கேட்​ட​போது, ரசாயனப் பரிசோதனை முடிவு​கள் வந்த பிறகே இறப்​புக்​கான காரணம் தெரிய​வரும். முடிவு வர 10 நாட்களாகும் என அரசு தரப்​பில் கூறப்பட்​டது.

நீதிப​தி, காவல் மரணங்​கள் இரும்​புக் கரம் கொண்டு தடுக்​கப் பட வேண்​டும். அழுத்தம் கொடுத்​து, அனைத்து கோரிக்கைகளை​யும் நிறைவேற்ற நினைப்பது சரி​யானது அல்ல.

சாலை மறிய​லால் மக்​கள் பாதிக்​கப்​படு​கிறார்​கள் என்​றால் பிரதமர், முதல்​வர் வரு​கை​யின்​போது போக்​கு​வரத்து மாற்​றம் செய்​வது ​போல் ​மக்​களுக்​காகப் போக்​கு​வரத்தை மாற்​றம் செய்​ய​லாமே என நீதிபதி கேட்டார்.

பின்​னர் நீதிபதி கூறும்​போது, உயி​ரிழந்த ஆகாஷ் பட்​டியல் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தற்​கான சான்று சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்ள​தால் வழக்​கில் எஸ்​சி, எஸ்டி பிரிவை​யும் சேர்த்து முதல் தகவல் அறிக்​கை​யில் சிபிசிஐடி போலீ​ஸார் மாற்​றம் செய்ய வேண்டும்.

வழக்​கறிஞர்​கள் சாமிதுரை, மயில்​வாகன ராஜேந்​திரன், ராமலிங்​கம் ஆகியோர் பேச்​சு நடத்தி நெடுஞ்​சாலையில் நடக்​கும் போராட்​டத்​தைக் கைவிடச் செய்ய வேண்டும். மறுத்தால் அவர்​களை அங்கிருந்து அப்​புறப்படுத்த உத்​தர​விட வேண்​டி வரும். விசா​ரணை வியாழக்​கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது என உத்​தர​விட்​டார்.

“இரும்புக் கம்பியால் அடித்து கால் எலும்பை முறித்தனர்” என்று சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் அளித்த வாக்குமூலம், மானாமதுரை நீதிமன்ற ரிமாண்ட் அறிக்கையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயம் என்று சொல்லச் சொல்லி போலீசார் மிரட்டியதாக நீதிபதியிடம் ஆகாஷ் தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த வழக்கில் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கையில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம். அஃப்சல் பாத்திமா மார்ச் 7-ம் தேதி பதிவு செய்த ரிமாண்ட் அறிக்கை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. அதில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷை நேரில் சந்தித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது ஆகாஷின் வலது காலில் தொடை முதல் பாதம் வரை பெரிய அளவில் மாவுக்கட்டு (POP Bandage) போடப்பட்டிருந்ததாகவும், அவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில், 06.03.2026 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் கிளங்காட்டூரில் தனது நண்பர் குணாவுடன் இருந்தபோது சீருடையில் இல்லாத காவல்துறையினர் தன்னை பிடித்து அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.


பின்னர் மாலை நேரத்தில் தனது கண்ணை கட்டி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், தனது காலை இரண்டு கற்களுக்கிடையில் வைத்து, அதன் மேல் ஈரச் சாக்கைப் போட்டு இரும்புக் கம்பியால் பலமாக அடித்ததாகவும், இதனால் தனது வலது கால் எலும்பு முறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்குப் பிறகு தன்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், “பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது” என்று கூற வேண்டும் என மிரட்டியதாகவும், அதனால் அவ்வாறு கூறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தாக்கியவர்கள் யார் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும், அந்த நேரத்தில் தனது கண்கள் கட்டப் பட்டிருந்ததாகவும் ஆகாஷ் தெரிவித்ததாக ரிமாண்ட் அறிக்கையில் பதிவாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொலை

விளாத்திக்குளம் மாணவி கொலை! துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்! 6 தனிப்படை அமைப்பு! 


 By Vishnupriya R Updated: Thursday, March 12, 2026  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மார்ச் 9 இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த அவர், இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை சுப்புராஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. குளத்தூர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்ட பின்னரே புகார் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மார்ச் 10  இரவு காட்டுப் பகுதியில் தேடியபோது, அந்த மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் முகத்தில் சிதைக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த உறவினர்களும் கிராம மக்களும் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், புகார் அளிக்கச் சென்றபோது அலட்சியமாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி மதன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் குற்றவாளிகளை இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என கூறி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தற்போது மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-class-12-student-found-dead-following-alleged-sexual-assault-and-murder-11204723
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொன்ற வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயியின் மகள், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.

வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனராம். 

இதையடுத்து நேற்றைய தினம் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் தேடினர்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து கனிமொழி தனது கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: "விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்" என தெரிவித்துள்ளார். 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட பதிவில், மாணவி காணாமல் போனதும் குடும்பத்தினர் புகார் அளித்தும் குளத்தூர் மற்றும் விளாத்திக்குளம் மகளிர் காவல்துறை அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகார் அளித்தபோதே காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரம் தடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/6-special-teams-formed-to-nab-accused-in-thoothukudi-plus-2-student-murder-case-780611.html
 


நியூஸ்-7 சேனல் செய்யும் வேசித்தனம் அப்பட்டமான ஆதாரம்




 

மதுரை மேலூரில் ஜல்லிக்கட்டில் 2 தமிழர் மரணம்


 

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது திமுக கட்சியின் கொடி கட்டிய காரில்

  மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது https://www.facebook.com/photo/?fbid=1409974871165984&set=a.385...