Tuesday, May 19, 2026

டிவி விவாதத்தில் ஜனாதிபதியையும் - இந்திய நாகரீகத்தையும் இழிவு செய்த பாசீச திமுக ஹரீஷ் முஹம்மது கூச்சல் & ஓட்டம்

 டிவி விவாதத்தில் ஜனாதிபதியையும் - இந்திய நாகரீகத்தையும் இழிவு செய்த பாசீச திமுக ஹரீஷ் முஹம்மது கூச்சல் & ஓட்டம்

https://x.com/skamaraj32/status/2055691624030872057





ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் (2019–2024) அரங்கேறிய மதமாற்ற அரசியல்

 ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் (2019–2024) அரங்கேறிய மதமாற்ற அரசியல் மற்றும் அதன் ஆழமான வலைப்பின்னல் குறித்த ஒரு விரிவான அலசல் இதோ...


ஜோதிஜி திருப்பூர்

ஆந்திரா: மதமாற்ற வலைப்பின்னலும், அதிகார அரசியலும் – இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணி!

Jothi G

இந்தியாவின் ஆன்மீக பூமிகளில் ஒன்றான ஆந்திரப் பிரதேசம், கடந்த சில ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இது ஒரு தார்மீக மத மாற்றம் என்பதைத் தாண்டி, ஒரு திட்டமிடப்பட்ட 'அரசியல் மற்றும் நிதி சார்ந்த வலைப்பின்னலாக' உருவெடுத்தது.

சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் மதம் மாறியதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியம்.

திட்டமிடப்பட்ட வலைப்பின்னல் (The Strategic Network)

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) ஆட்சிக்காலத்தில், மதமாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இல்லாமல், ஒரு 'சிஸ்டம்' போலச் செயல்பட்டது.

பெரிய நகரங்களை விட, Tier-2 மற்றும் Tier-3 நகரங்களிலும், பின்தங்கிய கிராமங்களிலும் இந்தத் தாக்கம் அதிகம் இருந்தது. ஏழ்மையையும், அறியாமையையும் சாதகமாகப் பயன்படுத்தி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் என்ற போர்வையில் இந்த வலைப்பின்னல் விரிவடைந்தது.

முறையான அனுமதி இன்றி, ஆயிரக்கணக்கான சிறிய ஜெபக்கூடங்கள் தெருவுக்குத் தெரு உருவாக்கப்பட்டன. இவை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், அந்தந்தப் பகுதியின் 'வாக்கு வங்கி' மையங்களாகச் செயல்பட்டன.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வலைப்பின்னல் எப்படி வலுப்படுத்தப்பட்டது என்பதுதான் இதில் உள்ள அதிர்ச்சியான விஷயம்.

சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பாஸ்டர்களுக்கு மாதம் ரூ. 5,000 கௌரவ ஊதியம் வழங்கப்பட்டது. இது அந்த மத அமைப்புகளைச் சட்டப்பூர்வமாக அரசுடன் இணைக்கும் ஒரு பாலமாக மாறியது.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் நிதி (FCRA) மற்றும் செல்வாக்கு மிக்கப் பெரிய மனிதர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் இந்த இயக்கத்திற்குத் தடையற்ற எரிபொருளாக அமைந்தன.

இந்த மதம் மாற்றத்தில் உள்ள மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், மதம் மாறிய பல ஏழை மக்கள் (குறிப்பாக SC/ST சமூகத்தினர்), ஆவணங்களில் தங்களை இப்போதும் இந்துக்களாகவே காட்டிக் கொள்கின்றனர்.

இந்து மதத்திற்கான இடஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்துக்கொண்டே, மற்றொரு மதத்தைப் பின்பற்றுவது. இது நீண்ட கால அடிப்படையில் உண்மையான தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய மதமாற்ற ஆபத்துகளைச் சுட்டிக்காட்டித்தான் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்:

அரசியல் சாசனம் வழங்கும் 'வழிபாட்டு சுதந்திரம்' என்பதை ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்த மதமாற்றக் கும்பல்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அமைப்புகள் அடிமட்டம் வரை வேர்விட்டுவிட்டன. ஒரு அரசாங்க உத்தரவின் மூலம் மட்டுமே இதனை உடனடியாகத் துடைத்தெறிய முடியவில்லை.

சட்டவிரோத தேவாலயங்களைக் கண்காணிக்க அரசு உத்தரவிட்டாலும், சிறுபான்மையினர் என்ற பெயரில் எழும் எதிர்ப்புகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களால் அரசு சில நேரங்களில் நிதானமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

25 வயது இளைஞர்களே, மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பரப்ப அரசின் கருவிகளையும், ஏழ்மையையும் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

ஆந்திராவின் தொன்மையான கோயில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் இந்தத் திட்டமிடப்பட்ட மதமாற்றத்தால் சிதைக்கப்படுகின்றன.

இது ஜாதிகளுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைத்து, சமூகத்தில் ஒரு நிரந்தரப் பிளவை ஏற்படுத்துகிறது.

Jothi G

ஆந்திராவின் இந்த ஐந்தாண்டு கால மதமாற்ற வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் ஒன்றுதான்:

விழிப்புணர்வு இல்லாத இடத்தில் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படும்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் சட்டங்களை உருவாக்க முயன்றாலும், மக்களாகிய நாம் இந்த வலைப்பின்னல்களைப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நமது கலாச்சாரத்தையும், உரிமைகளையும் காப்பாற்ற முடியும்.

சந்திரபாபு நாயுடு அவர்கள் உருவாக்கிய ஓரளவுக்கு இறுக்கமான நிர்வாகத்தின் காரணமாக அந்த மதமாற்ற கும்பல் தமிழகத்தை நோக்கி தங்கள் பார்வையை இந்த சமயத்தில் செலுத்திக் கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

#மதமாற்றம் #தேசியஅபாயம்
https://www.facebook.com/jothi.ganesan/photos/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20192024-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/27391876963729314/?_rdr

ரூ.300 கோடி மக்கள் பணத்தைச் சுருட்டிய மோசடிப் பேர்வழிக்கு தவெக-வில் ரத்தினக் கம்பள வரவேற்பு..?

ரூ.300 கோடி மக்கள் பணத்தைச் சுருட்டிய மெகா மோசடிப் பேர்வழிக்கு தவெக-வில் ரத்தினக் கம்பள வரவேற்பு..? நிதியமைச்சருடன் வலம் வரும் தலைமறைவுக் குற்றவாளி. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!!

சேலம் - வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் முதலீடுகளுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்த வழக்கில் சிவக்குமார் என்பவர் உட்பட 30 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சிவக்குமார், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீனை ரத்து செய்தது. சிவக்குமாரின் நிலங்களை ஏலம் விட்டு பணத்தை மீட்கும் முயற்சிகளுக்கும் அவர் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான வின் ஸ்டார் சிவக்குமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவைச் சேர்ந்த நிதியமைச்சர் செங்கோட்டையனை சிவக்குமார் நேரில் சந்தித்து, இருவரும் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கழுத்தில் மாட்டியபடி வந்து நூதன முறையில் மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த சந்திப்பின் போது காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்ததாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களை ஒரு “தூய சக்தி” என்று பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்ளும் தவெகவினர், ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் பணத்தைச் சுருட்டிவிட்டு பல ஆண்டுகளாகப் போலீசாருக்குப் பயந்து தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளிக்குக் கட்சியில் உயரிய மரியாதை அளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்களை ஏமாற்றிய நபருடன் நிதியமைச்சர் நெருக்கமாக இருப்பது தங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

சோசப் விசய் தேர்தல் வெற்றி - இலங்கை ஜெயராஜ் கருத்து

கேள்வி :  விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: வாழ்த்துரைப்பதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்? ஆனால் அதைச் சொன்னபிறகு மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றிகள், தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டுமானால், அதற்காக நிறையப் பாடுபடவேண்டியிருக்கும். விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியையும் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டியிருக்கிறது.
மக்;கள்தொண்டு, சிறந்தஇலட்சியம், கொள்கைப்பிடிப்பு, கொடைத்தன்மை, தனிவாழ்வுத்தூய்மை போன்ற எதுவும் இல்லாமல் கிடைத்திருக்கும் வெற்றியை, அதிர்ஷ்டத்தால் அமைந்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமில்லை, மக்கள் விஜய்க்கு அளித்திருக்கும் இந்த வெற்றியை, அவர்மீதான பற்றுதலால் மட்டும் விளைந்தது என்று சொல்ல முடியாது. அது பழைய ஆட்சியாளர்களின் மீதான பகையாலும் விளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
விஜய் இதுவரை தனது தலைமைப்பண்பை, சினிமாவில் மட்டுந்தான் காட்டியிருக்கிறார். நிஜத்தில் அதனை இதுவரை அவர் காட்டியதாய்த் தெரியவில்லை. பதவியேற்றதன் பின்னான இந்த சில நாட்களிலும் அவரது அப்பண்பு முழுமையாய் வெளிப்படவில்லை.
பதவி ஏற்பின்போது அவர் பேசியவிதத்திலும், ஊழியர்களோடு சேர்ந்து மேசை தூக்கிய விதத்திலும், நாடகத்தன்மை தான் மேலிட்டுத் தோன்றியது. அன்று கம்பீரமாய் அவர் பேசிய பேச்சில், இயற்கையைவிட செயற்கையே அதிகரித்திருந்தது. அவர் பதவிப்பிரமாணம் செய்தபோது, “பாகுபலியை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தமிழினத் தலைவராய் சட்டசபைக்குள், “கோர்ட்டும் சூட்டுமாய்” அவர் நுழைந்த விதம் ரசிக்கும்படியாய் இல்லை. அத்தனை பேரும் தமிழர் கலாசார உடையில் இருக்க, முதல்வர் மட்டும் மேற்கத்தைய உடையில் வந்ததன் காரணம் புரியவில்லை. இவ் உடை, ஒருவேளை இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது அவரை, ஒரு தமிழ்த் தலைவராய்ப் பாமரமக்களின் நெஞ்சில் பதிய விடாதென்றே தோன்றுகிறது.
அடுத்து, விமர்சனத்துக்குரிய அவரது தோழிக்கு பதவியேற்பு வைபவத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெருமைக்குரிய ஒன்றாய்த் தோன்றவில்லை. இன்னொரு ஜெயலலிதா உருவாக்கப்படுகிறாரோ? என்று எண்ணத் தோன்றியது. அரசியலில் புதியபாதை அமைக்க நினைக்கும் விஜய், தன் தனிவாழ்வில் பழைய தலைவர்களின் பாதையிலேயே நடக்க நினைப்பது துரதிஷ்டமே!
பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் ஆசிபெற்ற செயலில் அரசியற்பண்பாடு இருந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது உண்மையெனின், அவர் எடப்பாடிபழனிச்சாமி அவர்களையும் சந்தித்திருக்கவேண்டும். அங்ஙனம் சந்திக்காததால், அவரது மற்றைய சந்திப்புக்களெல்லாம் தனது பதவி நிலைப்புக்காகச் செய்யப்பட்டவை என்றே கருத வேண்டியிருக்கிறது.
தனது ஆஸ்தான சோதிடரை உதவியாளராய் நியமித்து, பின் மற்றவர்களின் எதிர்ப்பால், அவருக்குக் கொடுத்த பதவியை இரத்துச் செய்தவிதம், அவரது எண்ணித் துணியாத இயல்பை வெளிப்படுத்தியது.
சட்டசபையில் விஜய்யை வைத்துக்கொண்டே, அவரையும் அவரது கட்சியின் செயற்பாட்டையும் உதயநிதி வெகு சாவகாசமாக இழித்துரைத்தபோது, அதனை உடன் எதிர்கொள்ளாமல், விஜய் தலைகவிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தவிதம் எரிச்சலூட்டியது.
அந்த இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை. “பூனை மெலிந்தால் எலியும் எட்டி உதைக்குமாம்” என்ற கதைதான். சபையில் பதிலுரைக்காமல், பின்னர் உதயநிதியின் தூற்றுதலுக்கான எதிர்வினையை அவர் ஆற்றியிருக்கும் விதம் மதிப்புக்குரியதாய் இல்லை.
மேலதிக வாக்குகளுக்காக, பழைய பகைவர்களிடம் கையேந்தினால், இப்படித்தான் இருக்க வேண்டிவரும். “நக்கினார் நாவிழந்தார்” என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?
சிங்கம், முயல், புலி, மான், பாம்பு, கீரி, நாய், பூனை என ஒன்றுக்கொன்று பகையான அனைத்தையும் ஒரு கூட்டிற்குள் அடைத்து, அக்கூட்டின் மேல் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் விஜய். அதனால் தினம்தினம் அவரது சிம்மாசனம் ஆடிக் கொண்டுதான் இருக்கப்போகிறது.
நிர்வாகம் என்பது இலேசான வேலையில்லை. இலட்சியங்களைச் சுலபமாக வாயால் பேசிவிடலாம். அவற்றை நிறைவேற்றுவதில்த்தான் ஆளுமை தங்கியிருக்கிறது. ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் அவர் இட்டிருக்கும் சில கட்டளைகள் மகிழ்வு தருவதென்னவோ உண்மைதான். ஆனால், அவற்றை அவரால் தொடர்ந்து உறுதியாய்க் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.
விஜய்க்கு இனி சம்பாதிக்க வேண்டிய தேவையேதுமில்லை என்பது நிஜமே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களை வைத்துக்கொண்டு, இவரால் தூய அரசியல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமே! மிளகாய்ப் பொடியை போட்டு, பாயாசத்தை இனிக்க வைப்பேன் என்பதுபோல்த்தான் இதுவும் இருக்கிறது. “மந்திரத்தால் மாங்காய் விழுத்தத்” தெரிந்தால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.
சினிமாக் கதாநாயகனான விஜய்யை, உண்மைக் கதாநாயகனாய் நினைத்துக் கொண்டுதான், இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டிருக்கிறது. மாற்றம் வேண்டியே தமிழ்நாட்டுமக்கள் விஜய்யை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
அவர்களைத் திருப்திசெய்ய, விஜய் நிறையப்போராட வேண்டியிருக்கப்போகிறது. மேற்சொன்னவற்றை நிதர்சனம் உணர்ந்தே கூறியிருக்கிறேன். இத்தகைய எதிர்ப்புக் கடல்களை விஜய் நீந்திக் கடப்பாரானால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

கேள்வி :
கூட்டமைப்பிலிருந்து பிரிந்துபோன மற்றைய கட்சிகளைத் தமிழரசுக்கட்சி மீண்டும் ஒன்றிணைக்க முயல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
நல்ல விடயம் தான். இப்போதாவது ஒற்றுமையின் தேவையை அவர்கள் உணர்ந்தது மகிழ்ச்சி தருகிறது. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று நம் பெரியவர்கள் சும்மாவொன்றும் சொல்லவில்லை.
ஒற்றுமை முயற்சிகளைச் சிலர் எதிர்க்கத் தலைப்படுகிறார்கள். “தூய்மைவாதம்” பேசும் அவர்களின் நெஞ்சில் உண்மை இருப்பதாய்த் தோன்றவில்லை. தமது சுயநலம் நோக்கிய அவர்களது செயற்பாடு, நம் இனத்தை மேலும் கீழிறக்கப்போகிறது. இத்தகையோரை இனங்கண்டு ஒதுக்கவேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும்.
ஒரு பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் அனைவரும் ஒன்றுபடாமல் ஆளுக்காள் முரண்பட்டு நிற்பதைப்போல ஒரு மூடத்தனம் இருக்க முடியுமா? சாத்வீகமும் தோற்று, வன்முறையும் தோற்றுப்போய் நிற்கின்ற இந்த இக்கட்டான நேரத்தில், தம் சுயநலத்திற்காகப் பகை விளைவித்துக் கொண்டிருக்கிற அனைவரையும் நான் இனத் துரோகிகள் என்றுதான் சொல்வேன்.
கேள்வி : விருது பெற்ற ஜனாதிபதி உங்களைக் கவர்ந்தாரா?
பதில்: கவர்ந்ததால்த்தானே விருது பெற்றார்.

கேள்வி : முன்பு ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களை, தமிழரசுக்கட்சியில் இணைத்தால், அவரோடு தன்னால் இணைந்து பயணிக்கமுடியாது என்று, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போர்க்கொடி தூக்கியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இப்போது மட்டும் அவர் தமிழரசுச்கட்சியோடு இணைந்து பயணிக்கிறாரா என்ன? ஸ்ரீதரன் அனைவரோடும் பகை வளர்க்கும் தன்மையை குறைத்துக் கொள்வது நல்லது. அவர் தனக்குத்தானே “புலிமுத்திரை” குத்திக்கொண்டு, புலிகளின் பிரதிநிதியாய் தன்னைப் பிரகடனப்படுத்திச் செயற்படப் பார்க்கிறார்.
அதுகூடப் பரவாயில்லை. ஆனால் அந்த “லைசென்சைக்” காட்டி மற்றவர்களையெல்லாம் இனத்துரோகியாய் அடையாளப்படுத்த அவர் நினைப்பது பெரும் தவறு.
“குற்றம்” என்று பார்த்தால் போராளிக் குழுக்களைச் சார்ந்த எவரும் அப்பழியிலிருந்து முழுமையாகத் தப்பமுடியாது என்பது நிச்சயம். தவறுகளையெல்லாம் மறந்துதான், புலிகளே மாற்று இயக்கத்தலைவர்களை கூட்டமைப்புக்குள் உள் வாங்கினார்கள்.
அப்படியிருக்க பழையவற்றைச் சொல்லி, மக்களின் ஆதரவு பெற்ற ஒருவரை புறந்தள்ள நினைப்பது, புத்திசாலித்தனமான செயலல்ல. சந்திரகுமாரை தமிழரசுக்கட்சியுடன் இணைத்தால் அவரின் ஆதரவாளர்களால் தமிழரசுக்கட்சியின் பலம் அதிகரிக்கும் என்பது உண்மை. அவரது மக்கள்பலம், ஸ்ரீதரனின் மக்கள் பலத்தை நிச்சயம் பாதிக்கதென்றே நான் நினைக்கிறேன்

அண்ணா பல்கலைக்கழக தனியார் பொறியியல் கல்லூரி போலி பேராசிரியர்கள் -வீடியோ ரெக்கார்டிங் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.

 அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு போலியாக பேராசிரியர்களை கணக்கு காட்டி அரசையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வந்தது என்று அறப்போர் இயக்கம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்து மேலும் விவரங்களுக்கு இந்த https://youtu.be/bYJvDmdzYUw?si=4HR2DcF6hk3x42nP காணொளியை பாருங்கள்.

                                           
இது குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்ததை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலி பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு ஒரு FIR போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. போலி பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடியாக அங்கீகாரம் வாங்கிய எந்த தனியார் பொறியியல் கல்லூரிகளும் தண்டிக்கப்படவில்லை. கடந்த வருடம் நடந்த ஆய்வின் போது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆய்வுகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறப்போர் கேட்டிருந்தது. ஆனால் இன்று வரை அந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை.

இந்த முறை தற்பொழுது ஆய்வு துவங்கி இருக்கிறது. கடந்த முறை உத்தரவில் இருந்த வீடியோ ரெக்கார்டிங் தற்பொழுது உத்தரவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதால் இந்த கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்பொழுது மீண்டும் அவர்கள் மோசடி செய்யும் விதமாக ஆய்வு குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வுகள் நடக்குமா என்று தற்பொழுது சந்தேகம் எழுகிறது.

புதிதாக பதவி ஏற்ற TVK அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என்று உறுதி அளித்துள்ளதால், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் ஆய்வுகளில் அவர்களது வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறோம். ஆய்வுகளை வீடியோ ரெக்கார்டிங் செய்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடுவீர்களா முதலமைச்சர் விஜய் அவர்களே!
Chief Minister of Tamil Nadu TVK Vijay
இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள TVK அரசு அவர்களின் கல்வித்தரத்தை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான இந்த வேலையை எந்த அரசியல் பாகுபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

டிவி விவாதத்தில் ஜனாதிபதியையும் - இந்திய நாகரீகத்தையும் இழிவு செய்த பாசீச திமுக ஹரீஷ் முஹம்மது கூச்சல் & ஓட்டம்

 டிவி விவாதத்தில் ஜனாதிபதியையும் - இந்திய நாகரீகத்தையும் இழிவு செய்த பாசீச திமுக ஹரீஷ் முஹம்மது கூச்சல் & ஓட்டம் https://x.com/skamaraj3...