Saturday, May 16, 2026

குற்றாலம் சீரமைப்பு - தொன்மையான சிவலிங்கங்கள் பாதுகாப்பு அவசியம்

 குற்றாலம் சீரமைப்பு - தொன்மையான சிவலிங்கங்கள் பாதுகாப்பு அவசியம்


ஆந்திரா மாநில அரசு - 4வது குழந்தை பெற்றால் ரூ.40000 தரும் - சந்திரபாபு நாயுடு




 

TVK Joseph Vijay Ministry Portfolios given


 

Leiden Copper plates


 

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் போராட்டம்- திமுக பின்னணியில்?

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் போராட்டம்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் கடைகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கக் கோரி கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திடீரென டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், கடைகளில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் மூடப்பட்டு, பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் சென்னை உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்
  • மாற்றுப்பணி: மூடப்பட்ட 717 கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நிரந்தரமான மாற்றுப்பணி வழங்கப்பட வேண்டும்.
  • பணி நிரந்தரம்: நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • சலுகைகள்: காலமுறை ஊதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

குற்றாலம் சீரமைப்பு - தொன்மையான சிவலிங்கங்கள் பாதுகாப்பு அவசியம்

 குற்றாலம் சீரமைப்பு - தொன்மையான சிவலிங்கங்கள் பாதுகாப்பு அவசியம்