Sunday, August 9, 2026

'மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் முறைகேடு' - ரூ.60 கோடி சொத்து மோசடி பட்டா தந்த அதிகாரி ராமநாதபுரம் உதவி கலெக்டர் கைது


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்லத்துரை அளித்துள்ள புகாரின்படி, 1930-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 'புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி அறக்கட்டளை' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தின்படி இந்தச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டன.

மதுரையில் உள்ள அழகர்கோவில் சாலை மற்றும் 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் அமைந்துள்ள 'அசோகா விலாஸ்' பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் ஆகிய 1.79 ஏக்கர் சொத்துக்கள் இதில் அடங்கும்.

"சொத்துக்களின் அரசு வழிகாட்டி மதிப்பு 20 கோடி முதல் 30 ரூபாய் கோடி வரையிலும், தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 60 கோடியாகவும் உள்ளது. சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட இந்தச் சொத்துக்கள் சட்ட வழிகளின் மூலம் மீட்கப்படும்" என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தச் சொத்தையும் தோட்டத்தையும் வாடகைக்கு விட மட்டுமே அனுமதி உண்டு. எக்காரணம் கொண்டும் அவற்றை விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ அனுமதி இல்லை.

'கடந்த 24.06.2016 அன்று மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கோவில் பெயரில் இருந்த சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் பட்டா மாற்றம் செய்துள்ளார்' என செல்லத்துரை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து தெரியவந்ததையடுத்து, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டதுடன், இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர், மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ) செய்யப்பட்ட மேல்முறையீட்டின் அடிப்படையில், வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கோவில் பெயரிலேயே பட்டா மாற்ற உத்தரவிடப்பட்டது. மேலும், 2021 மார்ச் 22 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இதற்கு இடைக்காலத் தடையாணையும் பிறப்பிக்கப்பட்டது என புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.



 

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் வாடகை வசூலில் தொகையில் முறைகேடு

https://www.instagram.com/reel/DbVfjoWgfsJ/

 கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் பல லட்சம் ரூபாய் நன்கொடை மற்றும் நில வாடகை வசூல் தொகையில் முறைகேடு நடந்ததாக ஜூலை 2026-ல் புகார் எழுந்தது. போத்தீஸ் நில வாடகை, போலி ரசீதுகள் மற்றும் காணிக்கை வசூல் கணக்குகளில் முறைகேடுகள் நடந்ததாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். [1, 2, 3, 4]

முறைகேடு புகாரின் முக்கிய விவரங்கள்
  • புகார் அளிக்கப்பட்ட இடம்: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், கோவை.
  • பிரச்சனைக்குரிய பகுதிகள்: நன்கொடை வசூல், நில வாடகை மற்றும் ரசீது கணக்குகள்.
  • தற்போதைய நிலை: முறைகேடு புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்த துறை சார்பில் அதிகாரப்பூர்வ அதிகாரிகள்   
  • கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் நிதி முறைகேடு : போத்தீஸ் நில வாடகை, போலி வங்கி கணக்கு மூலம் பல லட்சம் கையாடல் - HR & CE இணை ஆணையரிடம் புகார்.

    தற்காலிக ஊழியர் பெயரில் கரண்ட் அக்கவுண்ட்; மாற்று மதத்தினர் கடைகளில் லட்சக்கணக்கில் லஞ்சம்; செயல் அலுவலர் மற்றும் பணியாளர் மீது குற்றச்சாட்டு.கோவை பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுர திருப்பணி நன்கொடை, திருவிழா நிதிகள் மற்றும் போத்தீஸ் நிறுவன நில வாடகை விவகாரங்களில் பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்து உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இணை ஆணையரிடம் ஆதாரங்களுடன் புகார் தனியார் நபர் பெயரில் போலி கரண்ட் அக்கவுண்ட் தொடங்கி பணத்தைச் சுருட்டியது ஆதாரங்களுடன் அம்பலமாகி உள்ளது.கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பக்தர்கள் சார்பில் அளிக்கப்பட்டு உள்ள அந்த புகார் மனுவில்,கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் (EO) மற்றும் கோவில் பணியாளர் சுந்தரம் ஆகிய இருவர் மீதும் கையாடல் புகார்கள் சுமத்தப்பட்டு உள்ளன.திருக்கோவிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிக்காகப் பக்தர்கள் லட்சக்கணக்கில் வழங்கி வரும் நன்கொடைப் பணத்தை முறையாகக் கோவில் கணக்கில் சேர்க்காமல், 'பரத்' என்ற தற்காலிகப் பணியாளரின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) சட்டவிரோதமாகக் ‘கரண்ட் அக்கவுண்ட்’ (Current Account) ஒன்று திறந்து, அதில் பணத்தைச் செலுத்தித் தங்களது சொந்த பயன்பாட்டிற்குச் சுருட்டி வருவது அம்பலமாகி உள்ளது.மேலும், கோவில் திருவிழாக்களுக்காகப் பக்தர்களிடம் பெறப்படும் நன்கொடைகளைக் கணக்கில் காட்டாமல், கோவில் நிதியில் இருந்தே செலவு செய்ததாகப் போலி பில்களை உருவாக்கி நிதி முறைகேடு செய்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.போத்தீஸ் நில வாடகை கையாடல் - மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் லஞ்சம்?:
    அதுமட்டுமன்றி, ராணேஜி ராவ் அறக்கட்டளைக்குச் சொந்தமான கோவில் நிலத்தில் இயங்கி வரும் போத்தீஸ் (Pothys) நிறுவனத்திடம் இருந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத் துறை நிர்ணயித்த நியாயமான வாடகையை வசூலிக்காமல் பழைய வாடகையையே பெற்றுக் கொண்டு முறைகேடு செய்து உள்ளனர்.



ஸ்ரீமுஷ்ணம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த விஷ்ணு என்ற மாணவர், பள்ளியின் பின்புறம் உள்ள மதிற்சுவரை ஏறி குதித்தபோது காயமடைந்து உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் திருப்பாணாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் மகன் விஷ்ணு (14). இவர் அங்குள்ள த.வீ.செ.அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கபடி வீரரான இவர் கடந்த 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பை புறக்கணித்து விட்டு பள்ளியின் பின்புறம் உள்ள மதிற்சுவரை ஏறி குதித்தபோது காயமடைந்தார். 

உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மாணவர் விஷ்ணு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இரவு விஷ்ணுவின் உடல் ஸ்ரீமுஷ்ணத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது விஷ்ணுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது உறவினர்கள் சிதம்பரம் சாலையில் மறியல் செய்ய திரண்டனர்.

சேத்தியாதோப்பு டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து இன்று மாலை மாணவனின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதால் அப்பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

விஷ்ணுவின் தந்தை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் கவிதா கூலித்தொழிலாளி. விஷ்ணுவோடு மற்றொரு மாணவரும் பள்ளி சுவர் ஏறிக்குதித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


 

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் மசூதி வாசலில் லஸ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்


 

பழனி HRCE துறை கீழான கோவில் நிலம் மீண்டும் மோசடியாக தனியாருக்கு மாற்றம் SRO கைது


 

'மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் முறைகேடு' - ரூ.60 கோடி சொத்து மோசடி பட்டா தந்த அதிகாரி ராமநாதபுரம் உதவி கலெக்டர் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை...