Wednesday, September 2, 2026

“தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து குறைந்தது ஆகஸ்ட் மைனஸ் 1%

 “தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் குறைந்தது அரசுக்கு ஓர் எச்சரிக்கை” - டி.ஆர்.பி.ராஜா

சென்னை: “தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழக அரசு விரைவில் தள்ளப்படலாம்.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% (மைனஸ் 1) சரிவு. ஆனால் இதே காலகட்டத்தில், இந்தியா +9%, கர்நாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரப் பிரதேசம் +19%, மகாராஷ்டிரா +8%, தமிழகம் மட்டும் -1%.

சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும். ஏனென்றால், தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால், அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு. ‘ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்துக்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது’ என்று சிலர் சொல்லலாம்.

உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழகம் மட்டும் மைனஸ் 1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை. இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?

அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்.

இந்த -1% ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழகம் தாங்க முடியாது. இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோயில் செயல்பாடுகளில் அரசியல் செய்வது வருந்தத்தக்கது: உயர் நீதிமன்றம்

கோயில் செயல்பாடுகளில் அரசியல் செய்வது வருந்தத்தக்கது: உயர் நீதிமன்றம்

அறங்காவலர்கள் பெயர்களை செயல் அலுவலர் நீக்கியதாக அறநிலையத் துறை தகவல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு அழைப்​பிதழில் அறங்​காவலர்​களின் பெயர்​களை நீக்​கியது கோயி​லின் செயல் அலு​வலர்​தான். அவர் சுய​மாக முடி​வெடுத்து அறங்​காவலர்​களின் பெயர்​களை நீக்​கி​யுள்​ளார் என உயர் நீதி​மன்​றத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் நீதிமன்றத்தில் தெரிவிக்​கப்​பட்​டது.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் அறங்​காவலர் குழு உறுப்​பினர் சுப்​புலெட்​சுமி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் செப். 17-ல் குட​முழுக்கு நடை​பெறுகிறது. இதற்​கான அழைப்​பிதழ்​கள் விநி​யோகம் நடை​பெற்று வரு​கிறது. குட​முழுக்கு விழா அழைப்​பிதழில் கோயில் அறங்​காவலர்​கள் குழு தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​கள் பெயர்​கள் இடம்​பெற​வில்​லை. இதற்கு முன்பு நடை​பெற்ற குட​முழுக்கு மற்​றும் கோயில் விழாக்​களின் அழைப்​பிதழ்​களில் அறங்​காவலர்​களின் பெயர்​கள் அச்​சிடப்​பட்​டுள்​ளன. இந்த அழைப்​பிதழில் அரசி​யல் காரணங்​களுக்​காக அறங்​காவலர்​களின் பெயர்​கள் அச்​சி​டா​மல் விடப்​பட்​டுள்​ளது.

எனவே, மீனாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு விழா​வில் அறங்​காவலர்​கள் குழு உறுப்​பினர்​கள் அதி​கார​வரம்​புக்கு உட்​பட்ட செயல்​பாடு​களை மேற்​கொள்ள அனு​ம​திக்​க​வும், அறங்​காவலர்​களின் சட்​டப்​பூர்வ கடமை​கள், பணி​களில் கோயில் அதி​காரி​கள் தலை​யிட​வோ, இடையூறு செய்​ய​வோ, தடுக்​கவோ, கட்​டுப்​பாடு​கள் விதிக்​கவோ கூடாது என்​றும் அறங்​காவலர்​களின் செயல்​பாட்​டுக்கு அனைத்து ஒத்​துழைப்பு வழங்​க​வும் இந்து சமய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அறங்காவலர் குழு தரப்பில் அரசியல் காணங்களுக்காக பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அறநிலை​யத் துறை செயலர் ஆணை​யர் தரப்​பில், அழைப்​பிதழ் அச்​சிடப்​பட்​ட​தில் இந்து சமய அறநிலை​யத்துறைக்கு பங்கு இல்​லை. கோயில் இணை ஆணை​யர்- செயல் அலு​வலர்​தான் அறங்​காவலர்​களின் பெயர்​களை அழைப்​பிதழில் இருந்து நீக்​கி​யுள்​ளார். அவர் சுய​மாக முடி​வெடுத்​துள்​ளார் எனத் தெரிவிக்​கப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, குட​முழுக்கு விழா அழைப்​பிதழில் அறங்​காவலர் குழு​வின் பெயர் விடு​பட்​டது தவறு என்​றார்.

அரசின் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் வாதிடு​கை​யில், 3,000 அழைப்​பிதழ்​கள் அச்​சிடப்​பட்டு விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன. அறங்​காவலர்​களின் பெயர்​களை அழைப்​பிதழில் சேர்க்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டாலும் அதை செயல்​படுத்தி மீண்​டும் அழைப்​பிதழ் விநி​யோகம் செய்ய முடி​யாத சூழல் உள்​ளது எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, குட​முழுக்கு அழைப்​பிதழில் கோயில் அறங்​காவலர் குழு​வினரின் பெயர்​களை அச்​சி​டா​மல் விட்​டது தவறு. குட​முழுக்கு முடிந்த பிறகு கோயி​லில் வைக்​கப்​படும் கல்​வெட்​டில் அறங்​காவலர்​கள் குழு உறுப்​பினர்​களின் பெயர்​கள் கண்​டிப்​பாக இடம்​பெற வேண்​டும். கோயில் என்​பது மக்​கள் அமை​தியை தேடி வரக்​கூடிய இடம்.

இந்த இடத்​தில் அரசி​யல் செய்​வது மிக​வும் வருந்​தத்​தக்க செயல். கோயி​லில் அரசி​யல் செய்​வது ஏற்​கத்​தக்க செயலும் அல்ல. வருங்​காலங்​களில் மதவழி​பாட்டு தலங்​களில் எவ்​வித​மான அரசி​யல் தலை​யீடும் இல்​லாமல் விதிப்​படி நடை​பெறு​வதை அரசு உறு​தி​செய்ய வேண்​டும். மனு முடிக்​கப்​படு​கிறது என உத்​தரவிட்​டார்.

மரகத முருகன் சிலை (அச்​சிறுப்​பாக்​கம் கனக மலை ‘நடு​பழநி’ ) - பல கோடி மதிப்பு TN HRCE துறை கோவிலிலில் இருந்து திருட்டு.

பெருக்கரணை நடுபழநி கோயிலில் மரகத சிலை மாயம்

மதுராந்தகம்: செங்​கல்​பட்டு மாவட்​டம், அச்​சிறுப்​பாக்​கம் அடுத்த பெருக்​கரணை கிராமத்​தில் கனக மலை என்ற சிறிய மலை​யில் கோயில் அமைந்​துள்​ளது.

சென்​னை​யில் உள்ள வடபழனி முரு​கன் கோயில் மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி முரு​கன் கோயில் ஆகிய​வற்​றுக்கு நடு​வில் இருப்​ப​தால், இக்​கோ​யிலை பக்​தர்​கள் ‘நடு​பழநி’ என அழைக்​கின்​றனர். இக்​கோ​யிலுக்கு நாள்​தோறும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் வந்து செல்​கின்​றனர். விசேஷ நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு வழக்​கம்​போல் கோயில் பூசா​ரி​கள் கோயி​லின் நடையை சாத்​தி​விட்​டுச் சென்​றனர். நேற்று காலை பூஜைக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்​ட​போது கோயி​லின் கரு​வறை​யில் இருந்த விலைம​திக்க முடி​யாத மரகதக் கல்​லால் ஆன தண்​ட​பாணி சிலையை காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் பூசாரி நிர்​வாகத்​துக்கு தகவல் தெரி​வித்​தார். அதன் பின்​னர் கோயில் நிர்​வாகத்​தினர் சித்​தாமூர் காவல்போலீஸில் புகார் அளித்​தனர்.

இதன்பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். மேலும் மாவட்ட எஸ்பி அய்​மன் ஜமால் தலை​மையி​லான போலீ​ஸார் தனிப்​படை அமைத்து மரகத சிலையை திருடிச் சென்​றவர்​களை தேடி வரு​கின்​றனர்.


 

ஓய்​வூ​தி​ய​ர்​ அகவிலைப்​படி பழைய பாக்கியை 49 மாதங்​களில் விஜய் அரசு தரும்

போக்குவரத்து ஓய்வூதியர் டிஏ ரூ.3,637 கோடியை 49 மாதங்களில் வழங்க அரசாணை வெளியீடு

சென்னை: பணி​யில் இருக்​கும் ஊழியர்​களுக்கு இணை​யான அகவிலைப்​படியை (டிஏ) பெறப் போக்​கு​வரத்​துக் கழக ஓய்​வூ​தி​ய​ர்​களுக்​கும் முழு உரிமை உண்​டு என கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தீர்ப்பு அளித்தது.

இதையடுத்​து, நிலு​வை​யில் இருந்த ரூ.3,637 கோடியை 60 மாத தவணை​களில் வழங்க அரசு திட்​ட​மிட்​டது. இத்​தொகையை மாதம் ரூ.75 கோடி​யாக உயர்த்தி வழங்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதால், 48 மாதங்​களுக்கு தலா ரூ.75 கோடி​யும், 49-வது மாதத்​தில் மீத​முள்ள ரூ.37 கோடி​யும் வழங்​கு​வ​தாக அரசு உறு​தி​யளித்​தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.                                           

கேரளா - அரேபிய முஸ்லிம் மதவெறி பெண் அடிமை எதிர்த்த Big TV கட்டாய மன்னிப்பு

“தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து குறைந்தது ஆகஸ்ட் மைனஸ் 1%

  “தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் குறைந்தது அரசுக்கு ஓர் எச்சரிக்கை” - டி.ஆர்.பி.ராஜா சென்னை: “தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குற...