Wednesday, June 17, 2026

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற பாசீச திமுக

தனியார் பள்ளிகளிடமும் பணத்தை உறிஞ்சி எடுத்திருக்கிறார்கள் திமுக ஆட்சியாளர்கள்.


திருட்டு அரசு → பள்ளி நிர்வாகம் → பெற்றோர்.

திருட்டு அரசு பள்ளியிடம் பிடுங்க, பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் பிடுங்குவார்கள்.

நான்கு வயது குழந்தைக்கு சென்னையின் ஒரு தனியார் பள்ளியில் 2,40,000 ரூபாய் கேட்கிறார்கள். கல்வித் தரம் சிறப்புதான் என்றாலும், கொடுக்கும் அந்த பணத்திற்கு தகுந்த value இருக்கிறது என்றாலும், பள்ளிகளிடம் அரசு திருடாமல் இருந்தால் கல்விக் கட்டணம் கொஞ்சமாவது குறையுமே.

Literally திருடர்களை தேர்ந்தெடுத்து திருட அனுமதித்திருக்கிறோம். ஒரு கட்சி செய்யும் ஊழல் நம் ஒவ்வொருவரையும் நேரடியாக பாதிக்கும் என்பதை அறியுங்கள். திமுக என்கிற தீய சக்தி இனி என்றுமே ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுத்திட வேண்டும். 

ED Unearths Massive Evangelical International Debit Card Racket

 

https://www.youtube.com/watch?v=8VtEYAOFvpY

ED Unearths Massive Evangelical International Debit Card Racket: How a US-Based Group Smuggled 1,000 ATM Cards to Fund Subversive Operations in India

In a massive, mega-exclusive investigation, the Enforcement Directorate (ED) has exposed a highly organized financial scam involving a US-based entity and its local operatives. Hiding in plain sight, the network bypassed India’s strict Foreign Contribution Regulation Act (FCRA) and Know Your Customer (KYC) frameworks to channel tens of crores into sensitive regions across the country.

Here is an in-depth breakdown of how the syndicate operated, the amounts involved, and the underlying motives exposed by law enforcement agencies.

The Modus Operandi: Smuggling and Subterfuge

According to the FIR and official investigation details accessed by CNN-News18, a United States-based organization named The Timothy Initiative (TTI) established a well-coordinated criminal conspiracy with its Indian-based handlers.

To deliberately evade detection by banking regulators and law enforcement agencies, the network implemented a multi-layered strategy:

  • ATM Card Smuggling: TTI successfully smuggled over 1,000 foreign debit/ATM cards into India.

  • Faking Identity: To dodge standard banking KYC norms, multiple cards were printed using identical, generic local details. Out of the stash, 23 debit cards were printed under a single Indian name: "Santosh Kumar".

  • Evading RBI Scrutiny: To avoid triggering the Reserve Bank of India’s (RBI) automated alerts for suspicious transactions—which flag heavy financial activity or single large cash withdrawals over ₹50,000—the operatives rotated the 1,000+ cards across various locations. They systematically withdrew small sums over 2 to 3 days using multiple ATMs in different districts before cycling through the rest of the cards.

Massive Financial Funneling

The financial scale of the racket is immense and represents just the immediate timeline under the ED’s microscope:

  • The Recent Blitz: Between November 2025 and April 2026 alone, approximately ₹92.55 crore to ₹95 crore ($9.99 million) was successfully withdrawn using these cards.

  • The Historical Timeline: While the recent block accounts for nearly ₹95 crore, investigators note that these cards have actively been in circulation since 2019. The scale of money funneled into the country before FCRA norms were tightened is expected to be substantially higher.

Who is Behind the Network?

The ED's investigation has shone a direct radar on the key individuals spearheading operations within Bharat. The primary local operatives working in tandem with the US principal entity have been identified as:

  1. Ajay Matai (VGIS)

  2. Jonathan Rajan

The Ultimate Motive: Radicalization and Institutional Cover

Security analysts and investigative files indicate that the cash extracted from these foreign accounts was not casual pocket change, but a dedicated pool used to fund extremist, subversive agendas.

  • Targeting Vulnerable Communities: The funds were allegedly pushed heavily into hardcore Naxal-affected areas. The cash was deployed as financial inducements to entice and lure economically backward individuals, setting the stage for ideological indoctrination and radicalization.

  • The "Divinity" Cover Story: To establish legitimacy and shield themselves from localized police suspicion, the network built an academic front in Bengaluru. They set up institutions offering bogus academic sponsorships, master’s degrees, and doctorates in "Divinity". This religious and educational facade allowed them to operate deeply entrenched networks right under the noses of local authorities.

"Just the Tip of the Iceberg"

Commenting on the breakthrough, former police official Mr. Vikram Singh lauded the ED for mapping out the devious network but warned that this could be a blueprint tested globally by international syndicates. Because international debit cardholders are legally permitted to withdraw local currency anywhere globally, the "conversion mafia" exploited this banking loophole to create a completely parallel, unmonitored monetary channel.

With a web of pending trials and deep digital footprints, the ED is currently expanding its probe to track down every individual local link that facilitated the rotation of these 1,000 cards across Indian states.



ஹரப்பா சரஸ்வதி நாகரீக நடன மங்கைக்கு உடை போட்ட படத்தை நீக்கியது

என்சிஇஆர்ட்டியின் 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் மொகஞ்சதாரோ நாட்டிய பெண்ணுக்கு ஆடை அணிவித்து அவளது அம்மணத்தை மறைத்து விட்டதை கீழே உள்ள இந்து நாளிதழிலின் கருத்து படம் தெரிவிக்கிறது

 

தங்கம் தென்னரசு - திமுக காட்டு ஆட்சி கொள்ளை பின்னர் தவெக என்ன செய்ய முடியும் சவால்

https://pagadhu.blogspot.com/2025/09/ptr.html https://www.youtube.com/watch?v=myOmBYofjKs

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான இரண்டு மணி நேர பிரத்யேக உரையாடலின் சுருக்கம் இங்கே.

தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை கவலைக்குரியது. இதை எப்படி சரிசெய்கிறீர்கள்? மாநில வரிகளில் கடுமையான உயர்வுகளை எதிர்பார்க்கலாமா?

நமது முதன்மை சிக்கல், பொருளாதாரத்தின் (GSDP) சதவீத அளவில் போதுமான வருவாய் கிடைக்காதது. வணிக வரி, சுரங்கம், மதுபானம்/எக்சைஸ் போன்றவற்றிலிருந்து நாம் பெற வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்களை இழக்கிறோம், இது நமது GSDPயின் 2-3% வரை. TASMAC அமைப்பில் கசிவு 50% வரை உள்ளது. வணிக வரியில் 40-50% வரை. ஒவ்வொரு ஆண்டும் சுரங்க அமைச்சகத்தின் கொள்கை அறிக்கையில், டிஎன் மேக்னெசைட், கிரானைட், பாக்சைட், சுண்ணாம்பு மற்றும் கார்னெட் போன்றவற்றால் ஏராளமாக வளம் கொண்ட சில மாநிலங்களில் ஒன்று என்று கூறுகிறது. அது உண்மைதான். ஆனால் அரசு ஆண்டுக்கு சில நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் வருவாய் ஈட்டுவதில்லை.

இவை அனைத்தும் கட்டமைப்பு சிக்கல்கள். நிலைமையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சிலவற்றை ஏற்கனவே அறிவித்துள்ளோம், இன்னும் சில பட்ஜெட்டில் வரும்.

கசிவுகளை எப்படி சரிசெய்வீர்கள்?

எக்சைஸ் வலையைத் தாண்டி மதுபான இயக்கம் மிகப்பெரியது என்று நினைக்கிறோம். 50% வரை உயர்வு. சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பைப் பயன்படுத்தி இதைத் தடுக்க வழி காண வேண்டும். தற்போதைய ஹாலோகிராம் அமைப்பு பயனற்றது. TASMAC கடைகளில் இன்னும் போயிண்ட் ஆஃப் சேல் (PoS) டெர்மினல்கள் இல்லை. அமைப்பை அடிப்படையில் மேம்படுத்த வேண்டும்.

நாங்கள் தொடக்கம் செய்துள்ளோம். நிதித் துறையின் நிர்வாக மாதிரியை மாற்றியுள்ளோம், மாநில செயல்முறைகளை நிர்வகிப்பதை மாற்றியுள்ளோம். பணத்தை ஒதுக்கத் தொடங்கியுள்ளோம். ஆனால் அவை இரவில் மாறாது.


மனநிலை குன்றிய திமுகவினர் (ஒன்றிய என மத்திய அரசை அழைப்பவர்கள்) நிதி பங்கீடு பற்றி மன்மோகன் சிங் ஆட்சியின் நிதி ஆலோசகர் கட்டுரை

மாநிலங்களுக்கு இடையே எப்படி நிதி பங்கிடு - ஜிஎஸ்டி அதிகமாக வருகிறது - நிதிச்செயலர் உதயசந்திரன்.IAS

ஜிஎஸ்டி அதிகமாக வருகிறது  - நிதிச்செயலர்  உதயசந்திரன்.IAS  

மாநிலங்களுக்கு இடையே எப்படி நிதி பங்கிடு செய்யப்படுகிறது என்ற அடிப்படை அறிவே இல்லாமல் பொய்ச்செய்தி பரப்பும் ஆட்களுக்கு பதில் ...





வெள்ளை அறிக்கையும்... முத்தையா செட்டியாரின் கேள்வியும்?
காரைக்குடி அருகே ஒரு பெரிய நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு இருந்ததுங்க. அந்த வீட்டின் தலைவர் பேரு முத்தையா செட்டியார்.
வயது எண்பதைக் கடந்துவிட்டது. வீட்டு நிர்வாகத்தை மகன் சிதம்பரம் செட்டியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
பொறுப்பேற்கும் முன் சிதம்பரம் செட்டியார் குடும்பத்தினரிடம் பெரிய பெரிய வாக்குறுதிகளை வழங்கினார்.
"பழைய வீட்டை புதுப்பிப்பேன்."
"புதிய வியாபாரங்களை தொடங்குவேன்."
"குடும்ப வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்."
"எல்லோருக்கும் நல்ல காலம் வரும்."
என்றெல்லாம் பேசினார்.குடும்பமும் நம்பியது.
பொறுப்பும் கொடுத்தது.
ஒரு மாதம் கழித்து குடும்பக் கூட்டம் நடந்தது.
கையில் லெட்ஜர்...
முகத்தில் கவலை.
சிதம்பரம் செட்டியார் எழுந்து பேச ஆரம்பித்தார்.
"அப்பச்சி... நம்ம வீட்டுக் கணக்கு ரெம்ப மோசமாக இருக்கு."
"மொத்த கடன் ₹13.18 கோடி."
"ஒவ்வொருத்தர் தலையிலும் ₹13.18 லட்சம் கடன்."
"வருமானத்தை விட செலவு அதிகம்."
"வட்டி சுமை அதிகம்."
முற்றத்தில் அமைதி.
சிறிது நேரம் யோசித்த முத்தையா செட்டியார் ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.
"தம்பி..."
"இந்த லெட்ஜர் உனக்கு இன்று தான் கிடைத்ததா?"
சிதம்பரம் செட்டியார் அமைதியாக இருந்தார்.
முத்தையா செட்டியார் தொடர்ந்தார்.
"நீ சொல்வது தவறு இல்லை."
"கடன் இருக்கிறது."
"செலவு அதிகம்."
"வட்டி சுமை கூடிவிட்டது."
"ஆனா..."
"இந்தக் கணக்கு உனக்கு பொறுப்பேற்பதுக்கு முன்னாடி தெரியாதா?"
அங்கே இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஏனெனில் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவது எளிதல்ல.
இன்று தமிழ்நாட்டிலும் அதே கேள்விதான் எழுகிறது.
வெள்ளை அறிக்கை சொல்கிறது:
தமிழகத்தின் மொத்த நிதிப் பொறுப்பு ₹13.18 லட்சம் கோடி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ₹5 லட்சம் கோடி புதிய கடன்.
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ₹1.29 லட்சம் கடன்.
வருவாய் பற்றாக்குறை ₹78,324 கோடி.
வட்டி மட்டும் ஆண்டுக்கு ₹67,000 கோடி.
இவை எல்லாம் கவலைப்பட வேண்டிய எண்கள்தான்.
யாரும் மறுக்க முடியாது.
ஆனால் சாதாரண மக்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
"இந்த எண்கள் தேர்தலுக்கு முன்னாடி தெரியாதா?"
தெரியாமல் இருந்தால் அது அரசியல் அறியாமை பற்றிய கேள்வி.
தெரிந்திருந்தும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தால் அது அரசியல் நேர்மை பற்றிய கேள்வி. வெள்ளை அறிக்கையின் மிகப்பெரிய பலவீனம் என்ன தெரியுமா? அது பிரச்சனையை விளக்குகிறது.
ஆனால் தீர்வை விளக்கவில்லை. ஒரு விவசாயி தன் வயலில் நின்று: "தண்ணீர் இல்லை."
"உரம் இல்லை." "செலவு அதிகம்." என்று சொல்வது சரி.
ஆனால் அடுத்த கேள்வி: "சரி... இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்பதுதான். தமிழக மக்களும் அதைத்தான் கேட்கிறார்கள்.
மின்வாரியத்தின் கடனை எப்படி குறைக்கப் போகிறீர்கள்? போக்குவரத்து கழகங்களை எப்படி மீட்கப் போகிறீர்கள்? வருவாயை எப்படி உயர்த்தப் போகிறீர்கள்?
புதிய தொழில்களை எப்படி கொண்டு வரப் போகிறீர்கள்? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?
வெள்ளை அறிக்கை ஒரு கண்ணாடி. அது முகத்தை காட்டும். ஆனால் முகத்தை அழகாக்காது. அதற்கு செயல் வேண்டும். திட்டம் வேண்டும். நிர்வாகம் வேண்டும்.
முத்தையா செட்டியார் அந்தக் கூட்டத்தின் முடிவில் சொன்ன ஒரு வார்த்தைதான் இன்று தமிழ்நாட்டுக்கும் பொருந்துகிறது.
கடன் இருப்பதைச் சொல்வது கணக்கு. கடனை குறைக்கும் வழியைச் சொல்வதுதான் நிர்வாகம்.
தமிழக மக்கள் இப்போது கணக்கைப் பார்த்துவிட்டார்கள். இனி அவர்கள் காத்திருப்பது... காரணங்களை அல்ல. நிர்வாகத்திறனை...தீர்வுக்கான வழியை...

Whats new in the White Paper released by the TN Finance Minister yesterday?
இதுவரை தெரியாத விஷயங்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை. எல்லாம் முந்தைய பட்ஜெட்டிலேயே இருந்தவைதான் . அந்த பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் 10 லட்சம் சொச்சம் கோடி என்று சொல்லப்பட்டதை, போக்குவரத்துத்துறை,மற்றும் மின்துறை ஆகியவற்றின் கடன்களுடன் சேர்த்து இவர்கள் 13.18லட்சம் கோடி என்று சொல்கிறார்கள் அவ்வளவே.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை The people are relatively well off, but the govt is Poor என்றுதான் சொல்லவேண்டும்.80களில் இருந்த மூச்சை திணறவைக்கும் வறுமை இன்றில்லை.அதற்கு காரணங்களை அடுக்கினால் பல நூறு பக்கங்கள் போகும்.
சுருக்கமாக இப்படிச் சொல்வோம்,மக்கள் நலத்திட்டங்கள் எனப்படும் பெரும்பாலும் இலவசத் திட்டங்களுக்கு அந்த வறுமையைக் குறைத்ததில் நிச்சயம் பங்குண்டு. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக,தேவையேயில்லாத, யாரும் கேட்காத பல அப்பட்டமான வாக்கு வாங்கி அரசியல் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலவசத்திட்டங்கள் அரசின் நிதி நிலையை சீரழித்துவிட்டன.. 2006ல் மு,.க அரசு துவங்கிய இலவச கலர் டிவி யிலிருந்து,ஜெயா அரசின், மிக்சி க்ரைண்டர் மின்விசிறி என்று நிறைய சொல்லலாம்.
அப்புறம் விவசாயிகள் அனைவர்க்கும் இலவச மின்சாரம்,சென்ற ஆட்சியில் அறிமுகமான,அனைத்துப் பெண்களுக்குமான இலவச பஸ் பயணம்,இவையிரண்டும்தான் மின்துறை, போக்குவரத்துத் துறை இரண்டின் முதுகெலும்பையும் முறித்துப்போட்டிருக்கின்றான்.பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்துக்கு முன்பே போக்குவரத்துத் துறை தள்ளாடிக் கொண்டுதான் இருந்தது. இது ஒரு கூடுதல் சுமை.
அப்புறமிந்த 1.31 கோடி மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை (அதற்கு உரிமைத்தொகை என்ற பெயர் வேறு,உரிமை என்றால் எல்லோருக்கும் தானே தரவேண்டும்.இது அப்படியில்லையே)அவ்வப்போது செய்யப்டும் கடன் தள்ளுபடிகள் ,இதெல்லம்சேர்த்துதான் இந்த நிலைக்கு காரணம்.
இதையெல்லாம் அறிந்திருந்துமே சென்ற தேர்தலின் போது தமது தேர்தல் அறிக்கைகளில் திமுக அதிமுக த வெ க ஆகிய 3 கட்சிகளுமே இன்னும் அதிக இலவசங்களை அறிவித்தன.இப்போது எதிர்பாராத விதமாக த வெ க ஆட்சியில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது.
இருக்கும் நிலையை சமாளிக்க வேண்டும். மேலும் இவர்கள் அறிவித்திருக்கும் இலவசத் திட்டங்களையும் ஓரளவுக்காவது அமல் படுத்த வேண்டும்..என்ன செய்யலாம்? வேறு வழியேயில்லை..புதிதாக மேலும் கடன் வாங்கத்தான் வேண்டும்..அதைத்தான் அவர்களும்செய்வார்கள்.
அரசின் வருவாயை பெருக்குவோம், நிதி நிர்வாகத்தை சரி செய்து செலவினங்களை குறைப்போம் என்பதெல்லாம் சொல்வதற்கு எளிதானது.செய்துபார்க்கும்போது தான் அதன் சிரமங்கள் தெரியும் பார்போம் இவர்களின். முதல் பட்ஜெட் எப்படி இருக்கிறதென்று..
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. மக்கள் relatively well off என்றேன் இல்லையா? அதில் கறுப்புப் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அரசுத் திட்டங்களின் செலவுகளில் செய்யப்படும் ஊழல், பலவேறு இயற்கை வளங்களின் விற்பனை வழியாக அரசின் கஜானாவுக்கு செல்ல வேண்டிய பணத்தை தனியார் கொள்ளையடிப்பது போன்றவைகளினால் உருவாகும் லஞ்ச ஊழல் பணமும் கணிசமான கட்சிக்காரர்களிடம் சென்று சேர்ந்து, சமூகததில் புழங்கிக் கொண்டுதான் இருக்கிறது (அவர்களும் மக்களில் ஒரு பகுதி தானே..வெளிப்படையாக இன்ன தொழில் செய்து சம்பாதிக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கும் பெரும்பணக்காரர்களும் நிறையவே இருக்கிறார்கள்.)அது முக்கியமாக ரியல் எஸ்டேட்,சினிமாத் துறை,தனியார் போக்குவரத்துப்போன்ற துறைகளில் பாய்ந்து கொண்டிருந்தது.
இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதில் இந்த அரசு உண்மையாகவே முனைப்பு காட்டுகிறது இந்த அரசு நிறுத்தினால் அந்தப் பணப்புழக்கமும் பெருமளவு குறையும்.அதுவும் கூட வேலை வாய்ப்புகளை எல்லாம் குறைக்கும். இது ஒரு Catch 22 Situation..இதைத்தவிர்க்க என்ன செய்வது என்றும் யோசிக்க வேண்டும்.இவற்றைத் தடுக்கையில் அரசின் நிதி வருவாய் கூடும்.செலவினங்கள் குறையும்.அரசின் கையில் கூடுதல் நிதி சேரும்.ஆனால் அது நியாயமான வழிகளில் தேவைப்படும் மக்களுக்கு சென்று சேர நல்ல திட்டங்கள் வேண்டும்.அதற்கு அதிக காலமும் பிடிக்கும்.அது வரை மக்களும் எதிர்க்கட்சிகளும் பொறுமை காப்பார்களா?
நான் முன்பே சொன்னது போல விஜய்க்கு இது நிச்சயம் மலர்ப் படுக்கை அல்ல. முள் படுக்கை தான்.இதிலிருந்து மீள வேண்டும் என்றால்,அவர் தைரியமாக பல இலவசங்களை பற்றி Rethink செய்தே ஆக வேண்டும். பாத்திரமறிந்தே பிச்சை இட வேண்டும்.
He should be ready to bite the bullet..Will he?

யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம்-:பேச்சு- கருத்து சுதந்திரம் எதிரான நடவடிக்கை

 பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா புகாரில் யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; ‘இனி யாரும் அவதூறு பேச துணிய மாட்டார்கள்’ – வரவேற்பு?

https://www.facebook.com/photo/?fbid=1475609441277835&set=a.563073912531397

‘முக்தார் கர்நாடகாவில் கைது; சென்னை அழைத்து வரப்பட்டார்; குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை’ – சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தியதற்கு எதிரான கடும் நடவடிக்கை; ‘இது ஒரு முன்னுதாரணம்’ – அலிசா அப்துல்லா நெகிழ்ச்சி!
பெண்களை சமூக ஊடகங்களில் இழிவாகவும், அவதூறாகவும் பேசும் போக்கிற்கு எதிராக, பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரின் பேரில், யூடியூபர் முக்தார் அகமது மற்றும் திருச்சி சூர்யா (சூரிய சிவா) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் (Goondas Act) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பெண்களை இழிவாகவும், அவதூறாகவும் பேசியது தொடர்பான வழக்கில் இவர்களது மீது இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலிசா அப்துல்லாவின் புதிதாகப் பிறந்த குழந்தைகளை இழிவுபடுத்தி, யூடியூப் வாயிலாக ஆபாசமாகப் பேசியதே இந்த வழக்கிற்கு முக்கிய காரணமாகும். அலிசா அப்துல்லா, தனது இரட்டைக் குழந்தைகள் குறித்து இழிவான கருத்துகளைப் பதிவு செய்த முக்தார் மற்றும் சூர்யா மீது புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில், சென்னை மாநகர CCB சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருச்சி சூர்யாவை ஏற்கனவே கைது செய்திருந்தனர். தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது, கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் பரிந்துரையின்படி, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘இது ஒரு முன்னுதாரணம்’ – அலிசா அப்துல்லா நெகிழ்ச்சி!
இந்த நடவடிக்கையை வரவேற்ற அலிசா அப்துல்லா, “என் குழந்தைகளை இழிவாகப் பேசியதற்கு எதிராக நீதி கிடைத்துள்ளது. இனி யாரும் எந்தப் பெண்ணையும், குறிப்பாக ஒரு தாயையும், அவரது குழந்தைகளையும் இப்படி இழிவாகப் பேசத் துணிய மாட்டார்கள். இது ஒரு முன்னுதாரணமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
கருப்பு எழுத்துக் கழகம் (Black Letter Institute) பகுப்பாய்வு

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற பாசீச திமுக

தனியார் பள்ளிகளிடமும் பணத்தை உறிஞ்சி எடுத்திருக்கிறார்கள் திமுக ஆட்சியாளர்கள். திருட்டு அரசு → பள்ளி நிர்வாகம் → பெற்றோர். திருட்டு அரசு பள்...