Monday, June 15, 2026

முதல்வர் ஜோசப் விஜய் மூகாம்பிகை கோவில் போது சீட் பெல்ட் போடாமல் கார் ஓட்டினாராம்




 

அறநிலையத்துறை அறங்காவலருக்கான விண்ணப்ப படிவம் - பல சான்றிதழ்கள் கேட்கிறார்கள்

 இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் அறங்காவலருக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அறங்காவலருக்கு விண்ணப்பித்து பார்ப்போமே என்று அந்த விண்ணப்பத்தை பார்த்தால், பல சான்றிதழ்கள் கேட்கிறார்கள். எனக்கு தலை சுற்றுகிறது. எங்கே போய் இத்தனை சான்றிதழ்களை பெறுவது?

https://x.com/Rama_Krishnan/status/2066397698589389203/photo/1
எடுத்துக்காட்டுக்கு, இந்து சமயத்தை சார்ந்தவனாக இருக்கின்ற பட்சத்தில் அதற்கு ஒரு சான்றிதழ் வேண்டும். அந்த மாதிரியான சான்றிதழ் யார் கொடுப்பார்கள் என்றே தெரியவில்லை. தாசில்தார் இதைப்போன்ற சான்றிதழை கொடுப்பார் என்பது நான் கேள்விப்படாத ஒன்று. வசிப்பிடச் சான்றிதழும் கேட்கிறார்கள். ஆதாரில் எனது முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், வசிப்பிட சான்றிதழ் ஏன்? இவ்வளவுகூட விண்ணப்பவரின் மீது நம்பிக்கை இல்லையெனில், எதற்காக இந்த விண்ணப்பம்? சொத்து மதிப்பிற்கான சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறவேண்டும். நான் வசிக்கின்ற வேளச்சேரியில் கிராம நிர்வாக அலுவர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது! நானும் கடந்த 25 வருடங்களாக உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இதுவரை கிராம நிர்வாக அலுவலரைப்பற்றி கேள்விபட்டதோ பார்த்ததோ இல்லை. எனக்கு தெரிந்து "ரெவன்யூ இன்ஸ்பெக்டர்" -என்பவர் இருக்கிறார். இவரால் நான் வேளச்சேரியில் சொத்து வைத்திருந்தால் தெரிய் முடியும். ஆனால், வெளியூரிலோ சென்னையின் மற்ற இடங்களில் சொத்து வைத்திருந்தால், நான் அதை அவருக்கு தெரியப்படுத்தினாலே ஒழிய அவருக்கு தெரியப் போவதில்லை. வருமான சான்றிதழையும் கிராம நிர்வாக அலுவலர் (அ) தாசில்தாரிடம் பெறவேண்டும். வருமான வரித்துறைக்கு வருடாவருடம் நான் அளிக்கின்ற ஆவணங்களில் கடந்த மூன்று வருடங்களுக்கான ஆவணங்களை நான் சமர்பித்தால் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? சுய அறிவிப்பு அறிக்கையோ(ரூ 100 முத்திரைத்தாளில்) அல்லது ஒரு நோட்டரி பப்ளிக்-கின் மூலம் உறுதிமொழிப் பத்திரத்தையோ பெற்று விண்ணப்பவரின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி அதை சமர்ப்பிக்க அனுமதிக்கலாம். அதைத்தவிர, வருமான வரித்துறைக்கு வருடாவருடம் நான் அளிக்கின்ற ஆவணங்களில் கடந்த மூன்று வருடங்களுக்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க அனுமதிக்கலாம். விண்ணப்பிப்பதையே பெரும் சவாலாக மாற்றிவிட்டால், ஆத்மார்த்தமாக திருக்கோயில் பணியில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பவர்க்ள் எத்தனைப்பேர் விண்ணப்பிக்க போகிறார்கள் என்பதை அரசு சிந்திக்கவேண்டும்!

ஸ்ரீபெரும்பூதூரில் இருளர் பழங்குடியினர் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,389 நாட்கள் கடந்துவிட்டன. எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?

 வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,389 நாட்கள் கடந்துவிட்டன.

https://x.com/SreeSuryamohan/status/2066353539081982131/photo/1
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி‌. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்? சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் HRCE நிர்வாகி சேதுப்பிரியா முட்டை கலந்த கேக் வெட்டி சிக்கன் சுக்கா உணவு

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் அறநிலையத்துறை நிர்வாகி சேதுப்பிரியாவுக்கு கோயில் இணை ஆணையர் முன்னிலையில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டப்பட்ட விவகாரம்

https://x.com/NewsTamilTV24x7/status/2066367615514349695?s=20
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் சர்ச்சை பிறந்தநாள் ட்ரீட்டுக்காக கோயில் பெயரில் சிக்கன் சுக்கா உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை சேதுப்பிரியா ஆர்டர் செய்ததாகவும் குற்றச்சாட்டு அசைவ உணவை ஆர்டர் செய்திருந்தால் கோவிலுக்குள்தான் சாப்பிட்டிருக்கக் கூடும் என எழும் சந்தேகத்தால் பக்தர்கள் அதிர்ச்சி

புரசைவாக்கம் PSS நிதி லிமிடெட் Rs.100 கோடி சுருட்டிய கும்பல், 4 வருடமாய் திமுக போலீஸ் நடவடிக்கை இல்லை

 புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட் மோசடியில், பல பத்தாண்டுகள் பழமையான சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று, நிலையான வைப்புத்தொகை மற்றும் வட்டி செலுத்துதல்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் மூலம் 700-க்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து ₹53 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. [1, 2, 3, 4]

பின்னணி மற்றும் மோசடி
  • புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட் (புரசைவாக்கம், வெள்ளாளர் வீதியில் இருந்து இயங்கி வருகிறது) ஒரு நீண்டகால நிதி நிறுவனமாக இருந்துவந்தது, அதன் சில வாடிக்கையாளர்கள் மூன்றாம் தலைமுறை முதலீட்டாளர்களாக இருந்தனர். [1, 2]
  • திட்டம்: இந்நிறுவனம், பாரம்பரிய வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை (சுமார் 10%) வழங்கி, பொது முதலீடுகளையும் நிலையான வைப்புத்தொகைகளையும் திரட்டியது. இது, தங்களது ஓய்வூதியத்தைப் பயன்படுத்தும் பல ஓய்வுபெற்றவர்களையும் மூத்த குடிமக்களையும் ஈர்த்தது. [1]
  • தவறு: அந்த நிறுவனம் தனது வாக்குறுதிகளை மீறத் தொடங்கியது. வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பின்தேதியிட்ட காசோலைகள் பணமில்லாமல் திரும்பின, மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் விசாரணைகளுக்குப் பதிலளிக்காமல் போனதால், முதலீட்டாளர்கள் தவிக்க விடப்பட்டனர். [1, 2, 3]
சட்ட நடவடிக்கை மற்றும் கைதுகள்
  • காவல்துறை விசாரணை: தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW), வழக்கு எண் 13/2024-ஐப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது . [1]
  • கைதுகள்: நூற்றுக்கணக்கான நபர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் பல இயக்குனர்களைக் கைது செய்து, அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்தனர். [1, 2]
  • மனுத் தாக்கல் கூட்டங்கள்: பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைச் சேகரித்து, வழக்கை வலுப்படுத்துவதற்காக, பொருளாதாரக் குற்றப் பிரிவு (EOW) சிறப்பு "மனுத் தாக்கல்" நிகழ்வுகளை நடத்தியது. [1]