Thursday, March 5, 2026

ஈழத் தமிழரின் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய வழிபாட்டு மையம் -

வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்பில் கட்­டுக்­கரைக் குளத்தை அடுத்து நாக­ப­டு­வானில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இன்­னொரு புரா­தன குடி­யி­ருப்பு மையம்  

 

நீண்­ட­கா­ல­மாக தொல்­லியல், வர­லாற்று ஆய்­வா­ளர்­களால் அதிகம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத வன்னிப் பிராந்­தி­யத்­திற்கு தொன்­மை­யான, தொடர்ச்­சி­யான வர­லாறு உண்டு என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதில் அண்­மைக்­கால­மாக மன்னார் மாவட்­டத்தில் கட்­டுக்­கரைக் குளம் என அழைக்­கப்­படும் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொல்­லியல் அகழ்­வாய்­வு­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் பூந­க­ரிப்­ பி­ர­தேச சபையின் நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட முழங்­காவில் குமு­ழ­முனை வட்­டா­ரங்­களை அண்­டிய நாக­ப­டு­வானில் தெரி­ய­வந்த தொல்­லியற் சின்­னங்கள் பற்­றிய செய்­தி­களை அப்­பி­ர­தேச கிராம அலு­வ­லகர்;, சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர், ஊட­க­வி­ய­லாளர் மற்றும் வர­லாற்று ஆர்­வ­லர்கள் எமது தொல்­லியல் இறு­தி­ வ­ருட மாணவன் பானு­சங்­க­ருக்கு தெரி­யப்­படுத்­தினர். அதன் அடிப்­ப­டையில் தொல்­லியல் திணைக்­களப் பிர­திப்­ப­ணிப்­பாளர் மற்றும் பூந­கரிப் பிர­தேச செய­லா­ளரின் அனு­ம­தி­யுடன் தொல்­லி­யல் ­தி­ணைக்­கள பிர­தேச பொறுப்­பாளர் பா. கபிலனின் உத­வி­யுடன் யாழ்ப்­பாணப் பல்­கலைக்­க­ழக தொல்­லியல் பிரிவு ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் இணைந்து கடந்த­ வாரம் அவ்­வி­டத்தை அடை­யாளம் கண்டு அங்கு பரீட்ச்­ச­ார்த்தமான ஆய்வு ஒன்றை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ்­விடம் கட்­டுக்­க­ரைக்­கு­ளத்­திற்கு வட­மேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாக­ப­டு­வானில் கானா மேட்டைக் குளம் என அழைக்­கப்­படும் காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த குளத்தின் அணைக்­கட்­டுக்கு அருகில் அமைந்­துள்­ளது. இவ்­வி­டத்தில் இருந்த பாரிய மர­மொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்­ப­கு­தியில் புதை­யுண்­டி­ருந்த வர­லாற்றுத் தொன்மை மிக்க பல சின்­னங்கள் வெளிக்­கி­ளம்­பி­யி­ருந்­தன. இச்­சின்­னங்­களை அச்­சத்­து­டனும் ஆச்­ச­ரி­ய­மா­கவும் பார்த்த மக்­களில் ஒரு பிரி­வினர் அவற்றின் வர­லாற்றுப் பெறு­ம­தியை உண­ராமல் அச்­சின்­னங்­களில் பல­வற்றை ஆல­யங்­க­ளுக்கும், தமது வீடு­க­ளுக்கும் எடுத்துச்சென்­றுள்­ளனர். எஞ்­சி­யி­ருந்­த­வற்றை அச்சம் கார­ண­மாக மக்கள் சிதை­வ­டையச் செய்து ஒதுக்­குப்­பு­றங்­களில் வீசி­யுள்­ளனர்.

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்­வ­கை­யான தொல்­லியற் சின்­னங்கள் அவ்­விடத்தில் பரந்த அளவில் மண்­ணினுள் புதை­யுண்­டி­ருப்­பதை உண­ர­மு­டிந்­தது. அவற்றை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்­யப்­பட்ட ஒரு இடத்தில் 4 × 3 மீற்றர் நீள, அக­லத்தில் மாதி­ரிக்­குழி அமைத்து அகழ்வு செய்தோம். இந்த அகழ்வின் போது அடை­யாளம் காணப்­பட்ட மூன்று கலா­சார மண் அடுக்­கு­களில் பல்­வேறு கால­கட்­டத்தைச் சேர்ந்த மட்­பாண்­டங்­களைக் கண்­டு­பி­டிக்க முடிந்­தது. அவை வடிவ அமைப்­பிலும், தொழில் நுட்­பத்­தி­ற­னிலும் கட்­டுக்­கரைக் குளப்­பி­ர­தேச அகழ்­வாய்வில் கிடைத்த மட்­பாண்­டங்­களைப் பெரு­ம­ளவு ஒத்­த­தாக உள்­ளன. மூன்­றா­வது கலா­சார மண் அடுக்கில் ஒரு சில மட்­பாண்­டங்­க­ளுடன் பெரு­ம­ளவு சுடுமண் உரு­வங்­களும், கழி­வி­ரும்­பு­களும் (Iron Slakes) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­க­லாச்­சார மண்­ப­டையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சுடுமண் உரு­வங்­களும், மட்­பாண்­டங்­களும் இங்கு வாழ்ந்த பண்­டைய கால மக்­களின் சமய நம்­பிக்­கை­களைப் பிரதி­ப­லிப்­ப­தாக உள்­ளன. அச்­சு­டுமண் உரு­வங்­களில் பீடத்தின் மேல் அமர்ந்­தி­ருக்கும் இரு தெய்­வங்­களின் சிலைகள் சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. இத்­தெய்வச் சிலை­களை ஊர்­வ­ல­மாகத் தூக்கிச்செல்லும் வகையில் அதன் சது­ர­மான பீடத்தின் நான்கு பக்­கங்­க­ளிலும் முக்­கோண வடி­வி­ல­மைந்த சது­ர­மான துவா­ரங்கள் காணப்­படுகின்­றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலை­களின் இரு கால்­களும் காற்­ச­லங்­கை­க­ளுடன் தொங்­க­வி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றன. சிலையின் வலது கரம் பிற்­கால தெய்வச்சிலை­களில் இருப்­பது போன்ற அப­யகரமா­கவும், இடது கரம் வர­தகரதமா­கவும் தோற்­ற­ம­ளிக்­கின்­றன. அவற்றின் வலது கரத்தின் உள்­ளங்­கையில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்­காலச் சிலைகள், செப்புத் திரு­மே­னி­களின் கலை­வ­டி­வங்­களை நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இருப்­பினும் இச்­சி­லை­களின் தலைப்­பாகங்கள் பெரு­ம­ள­வுக்கு சிதை­வ­டைந்த நிலை­யி­லேயே காணப்­பட்­டன. அவற்­றி­டையே கிடைத்த நட்­சத்­தி­ர­ வ­டி­வி­லான தோட­ணிந்த காதுகள், தாடைப்­ப­கு­திகள் பண்­டைய கால மக்­களின் கலை­ம­ர­பையும், உயர்ந்த தொழில் நுட்பத் திற­னையும் புலப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இச்­சிற்­பங்­க­ளுடன் சேர்ந்­த­தாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்­துள்­ளன. அக்­கை­களில் சில­வற்றின் உள்­ளங்­கை­களில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலை­க­ளாக இவை இருந்­தி­ருக்­கலாம் என எண்ணத் தோன்­று­கி­றது.

இச்­சி­லை­க­ளுடன் இவ்­வ­கழ்­வாய்வில் கிடைத்த பிற தொல்­லியற் சின்­னங்கள் இவ்­விடம் பண்­டை­ய­கால மக்­களின் வழி­பாட்­டுக்கு­ரிய மைய­மாக இருந்­தி­ருக்­கலாம் எனக் கருத இட­ம­ளிக்­கி­றது. இதற்கு அகழ்­வாய்வின் போது கிடைத்த பல அள­வு­களிள் வடி­வங்­களில் அமைந்த நாக உரு­வங்கள், ஆமையின் வடிவம், அகல் விளக்­குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்­ப­வற்றின் உடற்­பா­கங்கள், இலிங்க வடி­வங்கள், பல அள­வு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட சட்­டிகள், தட்­டுகள், அவற்றின் விளிம்­பு­களில் படுத்­து­றங்கும் நாகபாம்பின் உருவம் என்­ப­வற்றை உதா­ர­ணங்­க­ளாகக் குறிப்­பி­டலாம். இச்­சான்­றா­தா­ரங்­க­ளுடன் இங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இரு சுடுமண் அச்­சுக்கள் இங்கு சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. அவற்றின் ஒரு­பக்­கத்தில் புள்­ளி­க­ளான இலச்சினை அல்­லது பண்­டைய கால எழுத்துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இது அறி­ஞர்­களின் முறை­யான பொருள் விளக்க்­கத்தைப் பெறும்­பட்­சத்தில் இங்­கி­ருந்த குடி­யி­ருப்­புக்கள் மற்றும் சமயச் சின்­னங்­களின் காலத்தை நிச்­ச­யப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும் என நம்­பலாம்.

தமி­ழ­கத்தில் சுடு­மண்­ணா­லான தெய்வ உரு­வங்கள், அர­சனின் சிலைகள், சமயச் சின்­னங்கள் என்­பன நீர்­நி­லை­களை மையப்­ப­டுத்தி இற்­றைக்கு 2500 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றிய குடி­யி­ருப்புப் பகு­தி­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் தெய்வ உரு­வங்கள் கிராமி தெய்­வங்கள் அல்­லது நாட்­டுப்­புற த்தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்­ம­ரபு பிற்­கா­லத்­திலும் தொடர்ந்­த­தற்கு சங்க இலக்­கி­யத்­திலும், பழந் தமிழ் இலக்­கி­யங்­க­ளிலும் பல ஆதா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. நாக­ப­டு­வானில் இவ்­வகைச் சிலைகள், சிற்­பங்கள் சின்­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இடத்­திற்கு மிக அருகே தெற்­கிலும், மேற்­கிலும் உள்ள காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த இரு குளங்­களின் அணைக்­கட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் இங்கு கிடைத்த சம­யச்­சின்­னங்கள் கட்­டுக்­கரைக் குளத்தைப் போல் பண்­டைய காலத்தில் குளத்தை மையப்­படுத்தி தோன்­றிய குடி­யி­ருப்­புக்­க­ளுக்­கு­ரிய பெறு­ம­தி­மிக்க சான்­று­க­ளாகக் கொள்­ளத்­தக்­கன. இவை ஈழத்­த­மி­ழரின் பூர்­வீக வர­லாறு, பண்­பாடு பற்­றிய ஆய்­வு­க­ளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை எனலாம்.

பேரா­சி­ரியர் ப.புஷ்பரட்ணம்
(தொல்­லியல் இணைப்­பாளர் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-17#page-4

மன்னார் மாவட்டம், கட்டுக்கரைக் குளத்திற்கு வடமேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள பூநகரி பிரிவுக்குட்பட்ட கானா மேட்டைக் குளம் என்ற காட்டுப்பகுதியில் - ஒரு பழமையான மரம் வேருடன் விழுந்தது தான் இந்த அரிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.
🏛️ என்னென்ன கிடைத்தன?
✅ பீடத்தில் அமர்ந்த தெய்வச் சிலைகள் (அபயஹஸ்தம், வரதஹஸ்தம் நிலையில்)
✅ நாக உருவங்கள், ஆமை வடிவங்கள்
✅ ஆலய மணிகள், அகல் விளக்குகள்
✅ எருது, யானை, குதிரை உருவங்கள்
✅ இலிங்க வடிவங்கள்
✅ பண்டைய கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுடுமண் அச்சுக்கள்

ஈரானிய கடற்படை கப்பல் #IRISDena இலங்கைக் கரையில் மூழ்கடிக்கப்பட்டது

 #IRISDena - சர்வதேச கடற்பரப்பிலா மூழ்கடிக்கப்பட்டது?

பெப்ரவரி 2026 இல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வுக்கு வந்த ஐந்தே வயதான 100 மிட்டர் நீளமான ஈரானிய கடற்படைக்கப்பலான #IRISDena அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மார்க் 48 டோப்பிடோ (Mark 48 torpedo) என்னும் நீரடி ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு காலி கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்கள் தூரத்தில் மார்ச் மாதம் 4ம் திகதி அதிகாலை மூழ்கடிக்கப்பட்டது. இதில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும், 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை வந்த செய்திகளில் கூறப்படுகின்றது.
-Kumar Ganesh
கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிரதேசம் சர்வதேச கடல் எல்லை என்று பலராலும் கூறப்படுவது உண்மையா?
இணைக்கப்பட்டுள்ள படத்தில் ஈரானிய கப்பலானது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு செல்லும் கடல் வழி காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி இலங்கைக் கரையில் இருந்து 12 கடல் மைகள் தூரம் வரை இலங்கைக்கான பிராந்திய கடல் வலையமாகும் (Territorial sea) . இது இலங்கைக்கான நிலம் போன்ற அதிகாரங்கள் உள்ள பிரதேசமாகும்.

அதன் தொடர்ச்சியாக 12-24 கடல் மைல் பிரதேசம் Contiguous zone என்னும் தொடர்வலய பிரதேசமாகும். இதுவும் இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட சுங்கம், குடியேற்றம், சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் கொண்ட பகுதியாகும்.
இலங்கை கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்கள் பிரதேசம் பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive Economic Zone (EEZ) என்றழைக்கப்படும். இவ்வலயத்தில் மீன்பிடி, கனியவளம், காற்று சக்தி போன்றவை இலங்கைக்கு சொந்தமாகும். (இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல் சிறிதாகையால் அதன் நடுப்புள்ளி எடுக்கப்படும்.)
இதற்கு அப்பால் உள்ள பிரதேசமே உன்மையில் சர்வதேச கடல் பிரதேசமாகும்.
இப்பொழுது சொல்லுங்கள், காலியில் இருந்து 40 கடல் மைல்கள் தூரம் சர்வதேச கடலா?

Wednesday, March 4, 2026

ஈவெரா வழி திராவிடம் -மீண்டும் சிவகங்கையில் பட்டியலின கிராமத்தில் புகுந்த 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்

ஈவெரா வழி திராவிடம் -மீண்டும்  சிவகங்கையில் பட்டியலின கிராமத்தில் புகுந்த 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்

 சிவகங்கை: இடைக்காட்டூரில் அரிவாள் வெறி! பட்டியலின கிராமத்தில் புகுந்த கும்பல் நடத்திய கொடூர தாக்குதல்! அதிர்ச்சி!

https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-district-manamadurai-idaikkattur-village-caste-attack-9-people-injured-252196

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டியலின கிராமத்துக்குள் புகுந்த 9 பேர் அடங்கிய கும்பல், பலரையும் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பைக்குகளில் வந்த கும்பல், புகார் அளித்த நபரைக் கொல்லும் நோக்கில் தாக்குதல் நடத்தியது.  

நாங்குநேரியில் கஞ்சா போதையால் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூடு தணியும் முன்னரே, சிவகங்கை மாவட்டத்தில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.

வெளியான சிசிடிவி காட்சிகள்

இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ராஜூ என்பவர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு நபருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் ராஜூ மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு சென்ற ராஜுவை தொடர்ந்து சிலர் இருசக்கர வாகனங்களில் அந்த தெருவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு இருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பதிவானதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை

இது குறித்து மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா கூறும்போது, ’’மது போதையில் இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு பின்னர் தாக்குதலாக மாறியதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.!

தமிழக கோயில் நிர்வாகத்தில் அரசியல் ஆக்கிரமிப்புகளும்

 ஆன்மீகச் சொத்துக்களும் அரசியல் ஆக்கிரமிப்புகளும்:

தமிழகக் கோயில் நிர்வாகத்தில் ஒரு கறுப்புப் பக்கம்
தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களாகவும், ஆன்மீகக் கருவூலங்களாகவும் விளங்கும் திருக்கோயில்கள், இன்று அரசியல் லாபங்களுக்காகவும், நிதி முறைகேடுகளுக்காகவும் பயன்படுத்தப்படுவது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆட்சிக் காலங்களாகத் தொடரும் இந்த அவலநிலை, 2021-ல் பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
'முரசொலி' விளம்பரமும், நிதி மடைமாற்றமும்
சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'-யில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டிருந்தார். அரசுத் துறையின் அறிவிப்பு, ஒரு அரசியல் கட்சியின் நாளிதழில் மக்கள் வரிப்பணத்தில் (அல்லது கோயில் பணத்தில்) வெளியாவது என்பதே முதல் முரண்பாடு.
அதில், 500 அரிய பக்தி நூல்கள் வெளியிடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. "அறநிலையத்துறை சார்பில்" வெளியிடப்படுவதாகக் கூறப்படும் இந்த நூல்களுக்குப் பின்னால் உள்ள நிதி ஆதாரம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பொதுநல நிதி (Common Good Fund) முறைகேடு
சட்டப்படி, அறநிலையத்துறையின் கீழ் உள்ள பொதுநல நிதி (Common Good Fund) என்பது, வருமானம் இல்லாத, சிதிலமடைந்த மற்றும் கிராமப்புறக் கோயில்களைப் புனரமைக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால்:
கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி, ஐஏஎஸ் அதிகாரியான ஆணையர் மூலம் சட்டவிரோதமாகப் புத்தகப் பதிப்பிற்கு மடைமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தூர்ந்து போன கோயில்களைச் சீரமைக்க வேண்டிய நிதி, 'அரசு ஆர்ட்ஸ்' (Arasu Arts) போன்ற ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு அச்சு ஒப்பந்தங்களாக வழங்கப்படுகிறது.
இலவசக் கல்வியும், கட்டாய விற்பனையும்
தற்போது அச்சிடப்படும் பெரும்பாலான நூல்கள் ஏற்கனவே பல்வேறு ஆன்மீக இணையதளங்களில் மின்-பதிப்புகளாக (E-copies) இலவசமாகக் கிடைக்கின்றன.
அரசு உண்மையிலேயே பக்தி இலக்கியங்களைப் பரப்ப விரும்பினால், அவற்றை நவீன முறையில் தட்டச்சு செய்து தனது இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய வைத்திருக்கலாம்.
மாறாக, அதிக விலைக்கு அச்சிடப்படும் இந்த நூல்களை, பக்தர்கள் அதிகம் வரும் பெரிய கோயில்கள் கட்டாயமாக வாங்கித் தங்கள் கடைகளில் விற்க வேண்டும் என்று நிர்வாகம் வற்புறுத்துகிறது. இது கோயில்களின் வருமானத்தை உறிஞ்சும் ஒரு மறைமுகத் திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
சித்தாந்த முரண்பாடுகளும், பக்தர்களின் வேதனையும்
ஆன்மீக நூல்கள் வெளியிடும் விளம்பரத்தில், இந்து மதத்தையும், அதன் புராணங்களையும் வாழ்நாள் முழுவதும் விமர்சித்த தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துவது முரண்பாட்டின் உச்சம்:
ஈ.வெ.ராமசாமி:
இந்து புராணங்களைப் பகடி செய்தவர்.
சி.என்.அண்ணாதுரை:
சைவ, வைணவ இலக்கியங்களை எரிக்கச் சொன்னவர்.
மு.கருணாநிதி:
இந்து மதச் சடங்குகளை எள்ளி நகையாடியவர்.
இவர்களின் படங்களைப் போட்டுப் பக்தி நூல்களை வெளியிடுவது, பக்தர்களின் உணர்வுகளைக் கேலி செய்யும் செயலாகவே கருதப்படுகிறது.
"காலம் மாறும்"
கோயில் என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வரும் காணிக்கைப் பணம், அரசியல்வாதிகளின் விளம்பரத்திற்கோ அல்லது வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கவோ பயன்படுத்தப்படுவது பெரும் அறப்பாவமாகும்.
"கமிஷன் - கரப்ஷன் - கலெக்ஷன்" என்ற பாணியில் கோயில் நிதியைச் சுரண்டுவது நிறுத்தப்பட வேண்டும்.


நீதிபதி ஒரு 'சங்கி' என விமர்சித்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஏ.ஜி மறுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன், தற்போதைய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளுக்காக அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் -பி.எஸ்.ராமன் அனுமதி மறுத்துள்ளார். 2025 டிசம்பரில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் நேர்காணல் அளித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், "நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பது எப்படி அனைவருக்கும் தெரியுமோ, அதேபோல நீதிபதி சுவாமிநாதன் ஒரு 'சங்கி' என்பது அனைவருக்கும் தெரியும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோயில் ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன், ஹரிபரந்தாமன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தலைமை வழக்கறிஞரின் அனுமதியைக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தனது உத்தரவில், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கூறிய கருத்துகளுடன் நான் தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை; அதனை நான் அங்கீகரிக்கவும் இல்லை. இருப்பினும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் விமர்சனம் செய்யும் உரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 1971-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி வழங்க தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் இருந்தவர்கள் நீதித்துறை அல்லது நீதிபதிகள் குறித்து கருத்துச் சொல்லும்போது மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம், அவர் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி என்பதால் தனது பொறுப்பை உணர்ந்தே பேசியிருப்பார். எனவே, எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விவகாரத்தைக் கைவிடுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். தலைமை வழக்கறிஞர் அனுமதி மறுத்தாலும், இந்த விவகாரத்தை விட விரும்பாத விண்ணப்பதாரர் ரங்கராஜன் நரசிம்மன், நேரடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு மீதான வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஒதுங்கிக்கொண்ட உதாரணத்தைக் குறிப்பிட்ட பி.எஸ். ராமன், "எனக்கு ஹரிபரந்தாமனுடன் அத்தகைய நெருக்கமான நட்பு இல்லை; அவரை ஒரு நீதிபதியாகவும் சக வழக்கறிஞராகவும் மட்டுமே தெரியும் என்பதால், இந்த முடிவை எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

விமான பணிப்பண்ணை திராவிட மாடல் திமுக கவுன்சிலர் காம சீண்டல்


 "ப்ளீஸ்..! அந்த இடத்துல கை வைக்காதீங்க"- கெஞ்சிய விமான பணிப்பெண்; இரக்கம் இல்லாமல் பா*லியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர்..!

நடுவானில் விமானப் பணிப் பெண்ணுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் உள்பட இருவரை மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 25ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும், வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணித்துள்ளனர்.

பயணத்தின் போது இருவரும் திராவிட பான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், விமான இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கொண்டு விமானப் பணிப்பெண் ஒருவரிடம் உனது சொந்த ஊர் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு, விமான பணிப் பெண் மதுரை என்று கூறியதும் ஆண்டிபட்டியா? கல்லுப்பட்டியா? என்று கேட்டு கிண்டல் செய்து சிரித்துள்ளனர்.

அதன் பின்னர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பணியின் நிமித்தம் அந்த இரண்டு பேர் இருந்த பகுதிக்கு விமான பணிப்பெண் சென்ற போது, பணிப்பெண்ணின் பின்பக்க இடது தோள்பட்டையில் கைகளை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண், விமானம் டெல்லியை சென்றடைந்ததும் இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து அன்றைய தினமே, சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சம்பவத்தன்று பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, பிப்ரவரி 26ம் தேதி மீண்டும் முறையான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

போலீசார் சம்மன் அனுப்பியும், இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர், அவர்கள் இருவர் மீதும் பா*லியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வ*ன்கொ*டுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இதற்கிடையே, நேற்று மாலை பிரபாகரனும் தியாகுவும் டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த போலீசார், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருவரும் விமானத்திலிருந்து இறங்கியதும், அங்கேயே வைத்து அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன், 2 வயது பெண் குழந்தையை பா*லியல் வ*ன்கொ*டுமை செய்து கொ*லை செய்த வழக்கில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விமான பணிப்பெண்ணுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈழத் தமிழரின் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய வழிபாட்டு மையம் -

வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்பில் கட்­டுக்­கரைக் குளத்தை அடுத்து நாக­ப­டு­வானில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இன்­னொரு புரா­தன குடி­யி­ருப்பு மையம்  ...