Monday, February 23, 2026

தமிழர் மரபை அவமதிக்கும் திமுக- மதுரை கோரிப்பாளையம் பகுதி புதிய பாலம் அருகே ஓவியத்தில் கள்ளழகர் இல்லாத ஓவியம்

 மீண்டும் மீண்டும் தனது இந்து விரோத செயலை உறுதிப்படுத்தும்

 “சிங்கார சென்னை 2.0” என்ற அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜாஜி சாலையில் உள்ள 500 மீட்டர் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையின் ஓரங்களில் சோழர் கால ஓவியங்களில் தமிழர் மெய்யியல் சனாதன இந்து அடையாளம் மாற்ற கட்டளை

சோழர் கால ஓவியங்களை அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியாக மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இந்து தெய்வங்களை "சிறப்பம்சமாக" காட்ட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி கலைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளது. நிறுவனத்திடம் புகார் அளித்த சில குழுக்களிடமிருந்து "அழுத்தம்" இருப்பதாக கலைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

The Chennai corporation has asked artists to not “highlight” Hindu deities in an effort to re-create Chola era paintings as a part of beautification work. Artists allege “pressure” from certain groups which had complained to the corporation. As the Chola era paintings we have now are mainly from temples, artists wonder how it can be re-created without “highlighting” Hindu deities.

The Chennai corporation had hired painting artists to draw Chola era paintings on the sidewalls of 500 meter RBI subway on Rajaji Road as part of the beautification program “Singara Chennai 2.0”. It is a pet project of DMK. After 20% of the art has been completed, artists have been called by the corporation officials to ask them to “modify” the paintings so as not to stir up any controversy. Some artists, on the condition of anonymity, told TOI that there was pressure from certain groups which complained to the corporation. 





ஜாதி -ஜீடிநாயுடு பாலம் எனப் பெயர், அரசு வைக்கும். கோவில் திருவிழா ஜாதி அழைப்பிதழில் கூடாது - ஹைகோர்ட்

 ஜீடிநாயுடு பாலம் எனப் பெயர் - திமுக கவுண்டர், கம்மா நாயுடு ஜாதிக் கூட்டம் நடத்தி நிதியும் தருகிறது


எகிப்தின் பெரெனிகே துறைமுகத்தில் கிருஷ்ண பலராமன் சிலை; மத்தியப்பிரதேச டிக்லா குகை( பொமு 250) குகை வரைபடம்

சங்க இலக்கியம் போற்றும் கிருஷ்ண பலராமன் குகை வரைபடம் மத்தியப்பிரதேச டிக்லா குகை( பொமு 250);  எகிப்தின் பெர்னிகே துறைமுக நகரத்தில் சிலைகளாக


https://travelosthan.com/tikla/
https://www.smithsonianmag.com/history/hidden-ancient-egyptian-port-reveals-180984485/
 பலராமனைப் புலவர்கள் பலர் "பால்நிற வண்ணன்' என்றும் அழைத்துள்ளனர்.
 ""வானுற வோங்கிய வயங்கொளிர்
 பனைக்கொடி பால்நிற வண்ணன்''
 என்று முல்லைக்கலி 4-ஆவது பாடலும்,
 ""பால் நிறவண்ணன் பலராமன்'' என்று சீவக சிந்தாமணியும் (நாமகள் இலம்பகம், 209),
 ""பால் அன்ன மேனியான்'' என்று நெய்தற்கலியில் உள்ள 7-ஆவது பாடலும் எடுத்துரைக்கின்றன.
 "வெள்ளை' என்ற பெயராலும் நம் முன்னோர் பலராமனை அழைத்துள்ளனர்.
 ""பொற்பனை வெள்ளையை உன்னாது ஒழுகின் இன்னா'' என்பது இன்னா நாற்பது நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதையெல்லாம் பார்க்கும்போது கண்ணனின் அண்ணனாகிய பலராமனை பால்வண்ணன், வெள்ளையன் என்றெல்லாம் அக்கால மக்கள் அழைத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இன்றும் தமிழ் மக்கள் பலராமன், பலதேவன், வெள்ளை, வெள்ளையன், வெள்ளைச்சாமி என்று தம் மக்களுக்குப் பெயரிட்டு அழைப்பதிலிருந்து இக்கருத்து உண்மை என்பதை உணரலாம்.
 ஆதியில் பலராமனை கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. இதை ஆண்டாள் நாச்சியார், "செம்பொன் கழலடிச் செல்வன் பலதேவனை நந்தகோபன் அரண்மனையில் சென்று எழுப்பும் பாடல்' திருப்பாவையில் இடம்பெற்றுள்ளது.
 புறநானூற்றிலோ 56-ஆவது பாடலில், மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் கடவுள்களை வரிசைப்படுத்திக் கூறும்போது, முதலில் சிவனையும், அடுத்து பலதேவனையும், அதற்கடுத்து கண்ணனையும் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறே பலராமனையும் கண்ணனையும் முன்பின்னாக வைத்து மாற்றி வரிசைப்படுத்தும் வழக்கு முல்லைக்கலியில் (4, 5-ஆவது பாடல்கள்) உள்ளன.
 இளங்கோவடிகளும் பூம்புகாரில் உள்ள கோயில்களைப் பற்றிக் கூறும்போது, சிவன் கோயிலை முதலாவதாகவும், முருகன் கோயிலை இரண்டாவதாகவும், பலராமன் கோயிலை மூன்றாவதாகவும் எடுத்துக் கூறுகிறார். மேலும், மதுரை மாநகரில் பலராமனுக்குக் கோயில் இருந்ததை, ""மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்'' என்னும் வரியின் மூலமும் எடுத்துரைக்கிறார்.
 பரிபாடலில் உள்ள 15-ஆவது பாடலைப் பாடியவர் இளம் பெருவழுதியார் என்னும் புலவர். இவர் திருமாலிருஞ் சோலையில் கண்ணன், பலராமன் ஆகிய இருவருக்கும் கோயில்கள் இருந்தன என்பதை எடுத்துரைக்கிறார்.
 திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் மாயவனாகிய கண்ணனை மட்டும் கூறி, பலதேவனான கண்ணனை "முன்னோன்' என்ற சொல்லால் சுட்டுகின்றது. ""மாயவனும் தம்முனும்போல'' என்பது அவ்வரி. இதே வழக்கு, "மாயவன்தம் முன்னினொடும்'' (சிலம்.17) என்று சிலப்பதிகாரத்திலும், ""நெடியோன் முன்னொடு நின்றன'' (மணி.19) என்று மணிமேகலையிலும் கையாளப்பட்டுள்ளன.
 முதலில் இருவர்களாகத் தனித்தனியே எடுத்துக் காட்டிய வழக்குப் போய் மாயவனான கண்ணனை மட்டும் சிறப்பித்து "முன்னவன்' என்ற சொல்லால் பலராமனைச் சொல்கிறார்கள். பின்னர் பலராமனும் கண்ணனும் ஒருவரே என்று கருதவும் தொடங்கிவிட்டனர். பரிபாடலில் இவ்வழக்கு பெரும்பாலும் காணப்படுகிறது. இதில் திருமாலுக்குரியவாக ஏழு பாடல்கள் உள்ளன. இவை திருமாலை முன்னிலைப்படுத்தி, கண்ணனையும், பலராமனையும் ஏழு அவதாரங்களில் (பாடல் -1, 2) ஒன்றாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
 மேலும், பலதேவனின் ஆடை, அணிகலன்கள், கொடி, படை, ஆயுதம் முதலியவற்றைப் பற்றியும் இலக்கியங்களில் (பனைக் கொடி உடையவன் - புறநா.56; முல்லைக்கலி- பா.4; நாஞ்சில் எனும் ஆயுதம் கலப்பையாகும் - பாலைக்கலி (36); கார்நாற்பது (19) காணமுடிகிறது.
 திருமால் எடுத்த அவதாரங்களுள் எட்டாவது அவதாரமான பலராமர் அவதாரத்திற்கென்று தனி வரலாறு ஏதுமில்லை. கண்ணனின் தமையராக இருந்த அவர், கண்ணன் வரலாற்றோடேயே முழுக்க முழுக்க இணைந்திருந்ததால், கண்ணன் வரலாறே பலராமன் வரலாராயிற்று. ஒரிஸாவில் "கேன்டாபாரா' என்னுமிடத்தில் பலராமனுக்குக் கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
 ஆதிகாலத்தில் தமிழ் நாடெங்கும் பலராமன் வழிபாடு இருந்ததை சங்க நூல்கள் மட்டும் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன.



கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளை அனுமதிக்க ஹைகோர்ட் உத்தரவு

கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளை அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார் Updated on: 23 Feb 2026 

  
சென்னை:
 கோயில்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளையும், உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், தற்காலிக கடைகளை முறைப்படுத்த கோரியும் சேலத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என விளக்கமளிக்கப்பட்டது

மேலும், ‘ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பாதுகாப்புக்காக போதுமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். கோயில் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்ட நிலையில், அதில் ஒருவர் மட்டும் டெண்டர் கேட்டதால் மீண்டும் புதிதாக டெண்டர் விட இருக்கிறது’ என அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ‘கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் குடிநீர் மற்றும் போதுமான கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

‘கோயில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல. அது ஒரு கலாச்சார நிகழ்வு’ என கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இந்த மாதிரியான திருவிழாக்களின்போது சிறிய வியாபாரிகள் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அது விடுத்து வெளிப்படை தன்மை என்ற பெயரில் அதிக விலைக்கு டெண்டர் கேட்டால் அது சாதாரண சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால், அதிக விலைக்கு டெண்டர் குறிப்படாமல் சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கோர வேண்டும். இல்லாவிட்டால் கோயில் தனது கலாச்சார மதிப்பை இழந்து விடும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், ‘கோயில் திருவிழாக்கள் வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோயில் திருவிழாக்களில் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகள், பெண்கள், பழங்குடியினர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், கோட்டை மாரியம்மன் கோயில் சொத்துகள் அக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா என கண்டறிந்து, ஆக்கிரமிப்பில் இருந்தால் அந்நிலங்களை மீட்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தமிழ்நாடு மின்சார கட்டணம் MSME தொழிற்சாலை மிக அதிகம்

தொழிற்சாலையில் 100kv க்கு மாத மாதம் மினிமம் ரூ3900 இருந்ததை ரூ19700 ஆக ஏற்றி உள்ளார்கள்
100கிலோவாட் மின் இணைப்புக்கு மாதாமாதம் ரீடிங் முறை
ஒரேயொரு யூனிட் மின்சாரம் பயன்படுத்த வில்லை என்றாலும் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும்
அப்போது தமிழ் நாடு முழுவதும் நினைத்து பாருங்கள் அப்புறம் தொழில் எப்படி நடக்கும்

உதய் மின் திட்டத்தில் சேர்ந்த மற்ற மாநில மின் கட்டணம் உயரவில்லையே என கேட்டால், கடனை தமிழக அரசே ஏற்று கொண்டது அதனால் கட்டணம் உயர்ந்தது என பதில். உண்மையில் மின்சார வாரியத்தின் கடனை மாநில அரசே எற்று கொண்டு வாரியத்தின் கடனை குறைத்தால் மின் கட்டணம் குறையும் என்றுதான் உதய் திட்டம் சொல்கிறது.
 

தமிழர் மரபை அவமதிக்கும் திமுக- மதுரை கோரிப்பாளையம் பகுதி புதிய பாலம் அருகே ஓவியத்தில் கள்ளழகர் இல்லாத ஓவியம்

  மீண்டும் மீண்டும் தனது இந்து விரோத செயலை உறுதிப்படுத்தும்  “சிங்கார சென்னை 2.0” என்ற அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக,  ராஜாஜி சாலைய...