Sunday, March 8, 2026

Pakistan petrol shortage- One dies in buying rush shoot


 

காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய திராவிட முரட்டு பக்தர்

காட்பாடியில் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடியில் கோயில்: கும்பாபிஷேக விழா நடத்திய திராவிட முரட்டு பக்தர்

காட்பாடி: ​முன்​னாள் முதல்​வர் மறைந்த எம்​ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடி​யில் கோயில் கட்​டப்​பட்​டு நேற்று கும்​பாபிஷேக விழா நடை​பெற்​றது.

வேலூர் மாவட்​டம் காட்பாடி அடுத்த கரசமங்​கலத்​தில் மும்மத அடை​யாளங்​களு​டன் முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆருக்கு ரூ.3 கோடி செல​வில் கோயில் கட்​டப்​பட்​டுள்​ளது. 


ராமச்​சந்​திரா அறக்​கட்​டளை​யின் நிர்​வாகி டி.ஆர்​.​முரளி சார்​பில் கட்​டப்​பட்​டுள்ள இக்​கோயி​லின் கோபுரங்​கள் இந்​து, கிறிஸ்​தவம், இஸ்​லாம் ஆகிய மும்​மதங்​களை அடை​யாளப்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், கோயிலுக்​குள் ரூ.17 லட்​சம் மதிப்​பில் ஐம்​பொன்​னாலான எம்​ஜிஆரின் முழு உரு​வச்சிலை​யும் நிறு​வப்​பட்​டுள்​ளது. இந்த கோயில் கும்​பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசை​யாக நடை​பெற்​றது.

இதையொட்​டி, கடந்த இரண்டு நாட்​களாக யாக சாலைகள் அமைத்து விக்​னேஷ்வர பூஜை, வருண பகவான் பூஜை, வாஸ்து சாந்​தி, கணபதி ஹோமம் உள்​ளிட்ட ஹோமங்​கள் நடை​பெற்​றன.

நேற்று அதி​காலை இரண்​டாம் கால பூஜை நடை​பெற்​றது. காலை 9.30 மணி​யள​வில் கோபுரத்​துக்​கும், எம்​ஜிஆர் சிலைக்​கும் புனித நீர் ஊற்​றப்​பட்டு கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. தொடர்ந்​து,

எம்​ஜிஆர் சிலைக்​குச் சிறப்​புப் பூஜைகளும் நடை​பெற்​றன. இதில், சென்னை முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, தொழில​திபர் சேகர் ரெட்​டி, பொது​மக்​கள் மற்​றும் எம்​ஜிஆர் ரசிகர்​கள்​ பலர்​ பங்​கேற்​றனர்​.


 

உள் ஒதுக்கீட்டால் எஸ்சி பட்டியல் ஜாதியினர் பாதிப்பு: கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்

கர்நாடகாவில் உள் ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்கள் பாதிப்பு:  10 இடங்களில் போராட்டம்



பெங்களூரு: பட்​டியலின உள் ஒதுக்​கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்​களின் கல்​வி, வேலை வாய்ப்பு பறிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

கர்​நாடக மாநில அரசு பட்​டியலில் உள்ள 101 சாதி​களை எஸ்​சி-ஏ, எஸ்சி -பி, எஸ்சி - சி ஆகிய 3 பிரிவு​களாக பிரித்​துள்ளது. மொத்​த​முள்ள 17 சதவீத இட ஒதுக்​கீட்​டில் எஸ்சி - ஏ 6 சதவீதம், எஸ்சி - பி 6 சதவீதம், எஸ்சி - சி 5 சதவீதம் உள் இட ஒதுக்​கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 புள்​ளி​களைக் கொண்ட இன சுழற்சி முறை​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதில் எஸ்சி - ஏ பிரி​வினருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் முதல் இடம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், எஸ்சி - பி பிரிவுக்கு 14 இடமும், எஸ்சி - சி பிரிவுக்கு 21 இடமும் வழங்கி அரசு ஆணை பிறப்​பித்​துள்​ளது.

அரசின் இந்த முடி​வால் எஸ்சி பி மற்​றும் எஸ்சி சி பிரி​வில் உள்ள 70-க்​கும் மேற்​பட்ட சாதியினருக்கு கிடைக்க வேண்​டிய கல்​வி, வேலை வாய்ப்பு இடங்​கள் பறி போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எஸ்சி பி பிரி​வில் இடம் பெற்​றுள்ள‌ தமிழ்ப் பேசும் ஆதி திரா​விடர், பறையர், வள்​ளுவர், சாம்​பவர் உள்​ளிட்ட சாதி​யினர் பாதிக்​கப்​படு​வ​தால், அம்​மக்​கள் கோபம் அடைந்​துள்​ளனர்.

கர்​நாடக அரசின் முடிவை கண்டித்து மைசூரு​வில் பல்​கலைக்கழக பாபா​சாகேப் அம்​பேத்​கர் மாணவ அமைப்​பினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். ஷிமோ​கா​வில் உள்ள ஆதி திரா​விடர் அமைப்​பினர் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இது குறித்து ஆதி​ திரா​விட மகாஜன சபை​யின் மூத்த தலை​வர் கோ.தேசிகன்பிள்ளை கூறுகையில், "தமிழ்​நாட்​டில் அருந்ததியினருக்கு வழங்​கப்​பட்ட முன்​னுரிமை​யுடன் கூடிய 3 சதவீத உள் ஒதுக்​கீட்​டால் அங்​குள்ள பறையர் உள்​ளிட்ட 76 சாதியினர் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தற்​போது கர்​நாடக அரசு முடி​வால் இங்​குள்ள எஸ்​சி- பி பிரி​வில் உள்ள சுமார் 1.5 கோடி​யினருக்கு கல்​வி, வேலை​வாய்ப்​பில் பெரும் பாதகம் ஏற்படும்.

அதி​லும் குறிப்​பாக தமிழ் ஆதி ​தி​ரா​விடர்​கள் கர்​நாடகா முழு​வதும் சுமார் 60 லட்​சம் பேருக்கு உயர் கல்வி நிலை​யங்​களில் கற்கும் உரிமை​யும், ஊக்க தொகை​யும், அரசு வேலை வாய்ப்​பும் கிடைக்​காமல் போகும். கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றத்திலும் இட ஒதுக்​கீட்டு முறைக்கு எதி​ராக வழக்கு தொடரப்பட்​டுள்​ளது. சித்தராமையா தலை​மையி​லான காங்​கிரஸ் அரசு இதனை திரும்ப பெறா​விட்​டால், வரு​கிற தேர்​தலில் கடும் பின் விளைவை சந்​திக்க நேரிடும்​" என்​றார்.

முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் சொந்த மாவட்​ட​மான மைசூருவில் போராட்​டம் நடப்​ப​தால் அவருக்கு நெருக்​கடி ஏற்​பட்​டுள்ளது. எதிர்க்​கட்​சி​யான பாஜகவும், எஸ்சி பி பிரி​வில் உள்ள சாதி அமைப்​பினரும் காங்​கிரஸுக்கு எதி​ராக திரண்​டுள்​ள​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பட்​டியலின உள் ஒதுக்​கீட்​டுக்கு எதி​ராக மைசூரு​வில்​ நேற்​று கண்​டனப்​ பேரணி நடைபெற்​றது.


 

மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பா? - நடந்தது என்ன?

மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பா? - நடந்தது என்ன?

மானாமதுரை: மா​னாமதுரை​யில் 2 தொழிலா​ளர்​களை வெட்​டிய வழக்​கில் கைதாகி, கால் முறி​வுக்​காக மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.

போலீ​ஸார் தாக்​கிய​தில் இறந்​ததாகக் கூறி உறவினர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார். கோழிக்​கடை​யில் வேலை செய்​கிறார். இவரது நண்​பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்​தில் பணிபுரி​கிறார்.



கடந்த 5-ம் தேதி இரவு இரு​வரும் பணி முடிந்து இருசக்கர வாக​னத்​தில் வீட்​டுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றனர். கிருஷ்ண​ராஜபுரம் பகு​தி​யில் சென்​ற​போது, அவர்கள் மீது அதே பகு​தி​யைச் சேர்ந் பொறி​யியல் பட்​ட​தாரி ஆகாஷ்டெல்​சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாக​னம் மோதி​யது.

இதில், இரு தரப்​புக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. தொடர்ந்​து, 4 பேரும் அங்​கிருந்து சென்​று​விட்​டனர். பின்​னர், கிருஷ்ண​ராஜபுரம் மயானம் அருகே ஜெயக்​கு​மார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த ஆகாஷ் டெல்​சன், குணா ஆகியோர் இரு​வரை​யும் வாளால் வெட்​டி​விட்டு தப்​பிய​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்த புகாரின்​பேரில் மானாமதுரை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இந்​நிலை​யில், கடந்த 6-ம் தேதி மேலப்​பசலை​யில் இருந்த ஆகாஷ் டெல்​சன், குணா ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அப்​போது, போலீ​ஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெல்​சன் பாலத்​திலிருந்து தவறி கீழே விழுந்​த​தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. படு​காயமடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்து​வ​மனை​யில் போலீஸார் அனு​ம​தித்​தனர்.

கைதான இரு​வரை​யும் மார்ச் 18-ம் தேதி வரை நீதி​மன்ற காவலில் வைக்க மானாமதுரை குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, ஆகாஷ் டெல்​சன் மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் உள்ள சிறை​வாசிகளுக்​கான வார்​டுக்கு மாற்​றப்​பட்​டார்.

அங்கு அவருக்கு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்பட்​டது. இதில், சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இதுகுறித்து மதுரை போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். இதனிடையே, போலீ​ஸார் தாக்​கிய​தால்​தான் ஆகாஷ் டெல்​சன் உயி​ரிழந்​ததாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை- ராமேசுவரம் சாலை​யில் நேற்று காலை மறியலில் ஈடு​பட்​டனர்.

சம்​பவத்​துக்கு காரண​மான போலீ​ஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும், நிவாரணம் வழங்​கு​வதோடு, குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும்என வலி​யுறுத்​தினர். அவர்​களிடம் நகாட்​சித் தலை​வர் மாரியப்​பன் கென்​னடி உள்​ளிட்ட திமுக பிர​முகர்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனால், அதை ஏற்க மறுத்து முழக்​கமிட்​டனர்.

தொடர்ந்து கோட்​டாட்​சி​யர் ஜெபிகிரேசி​யா, கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் பிரான்​சிஸ் உள்​ளிட்​டோர் அவர்களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனாலும் மறியல் தொடர்ந்தது. இதனால் போக்​கு​வரத்து முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டது. நீண்ட வரிசை​யில் வாக​னங்​கள் நின்​றன.

இதையடுத்​து, மதுரை, ராமேசுவரம் வழித்​தடத்​தில் சென்ற வாக​னங்​கள் அனைத்​தை​யும் போலீ​ஸார் சிவகங்​கை, கமுதி உள்​ளிட்ட வேறு வழித்​தடங்​களில் மாற்​றி​விட்​டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆகாஷ்டெல்​சனின் தந்தை ராஜேஷ்கண்​ணன், தாயார் ஆனந்தி ஆகியோர் கூறிய​தாவது: எங்​களது மகனை ஒரு வழக்​கில் தேடு​வ​தாகக் கூறி போலீ​ஸார் எங்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போதே உங்​களது மகன் கையில் கிடைத்​தால் கொன்​று​விடு​வோம் என்​றனர்.

சிறிது நேரத்​தில் எங்​களது மகனை கைது செய்​து​விட்​ட​தாகக் கூறி, எங்​களை விடு​வித்​தனர். தொடர்ந்து எங்​கள் மகனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்​பட்​ட​தாகக் கூறினர். அவனை சென்று பார்த்​த​போது போலீ​ஸார் தன்னை அடித்​த​தாகக் கூறி​னான்.

இந்​நிலை​யில் திடீரென எங்​களது மகன் இறந்​து​விட்​ட​தாக கூறுகின்​றனர். இதில் எங்​களுக்கு சந்​தேகம் உள்​ளது. காவல்​துறை​யினர் விசா​ரணை என்ற பெயரில் காட்​டுப்​பகு​திக்​குள் அழைத்​துச் சென்​று, எங்​களது மகனின் காலை உடைத்​து​விட்​டனர். அதனால் தான் உயி​ரிழந்​து​விட்​டான்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

இதனிடையே இந்த மறியல் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவமனையிலும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.


 

ராமநாதபுரத்தில் ரூ.30 கோடி போதைப் பொருள் இலங்கைக்கு கடத்த முயன்ற இப்ராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) கைது

ராமநாதபுரத்தில் ரூ.30 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 இளைஞர்களை கைது செய்தனர்.

இலங்கைக்கு கடத்துவதற் காக ராமநாதபுரம் வழியாக மண்டபம் நோக்கி போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கியூ பிரிவு போலீஸாரும், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் இணைந்து நேற்று அதிகாலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் காரிக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து மண்டபம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், வாகனத்தின் இருக்கைகளைத் தூக்கி சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து போதைப் பொருட்களை சென்னை வழியாக காரில் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்து, அங்கிருந்து மண்டபம் தெற்கு கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தில் இருந்த போதைப் பொருட்களை எடையிட்டு பார்த்தபோது, அதில் 18 கிலோ மெத்தம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின், 218 கிலோ கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.

போதைப் பொருட்களை காரில் கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த இப்ராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் கியூ பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மண்டபத்தைச் சேர்ந்த ஷேக் ரஹ்மான் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.