ஹிந்தி எதிர்ப்பிற்கு பின் மறைந்திருக்கும் கருப்பு பொருளாதாரம்?!
பொதுவாக திமுக ஹிந்தியை எதிர்க்கிறார்களே, அது மொழி ஆர்வத்தினால் என்றுதான் பலரும் நினைக்கிறோம். ஆனால் இன்று தமிழகத்தில் மூன்று ஒரு குழந்தைக்கு தமிழ் நாளிதல் படிக்க தெரியவில்லை என்றால், அதன் பின்னால் மறைந்திருப்பது மொழிப்பற்றல்ல பொருளாதாரம் என்ற துட்டு மேட்டர்தான்.
இன்று குழந்தைகளுக்கு எப்பாடு பட்டாவது நல்ல கல்வியை கொடுப்பது பெற்றோரின் கடமை என்றாகிவிட்டது. அரசு பள்ளிகளில் ஒருவர் குழந்தைகளை படிக்க வைத்தால் அவர் குழந்தைகள் மீது அன்பில்லாதவர் என்று சொசைட்டியால் பார்க்கப்படுகிற சூழல். அப்படி இருக்கும்போது KG படிக்கும் குழந்தைக்கு கூட ₹50,000 கட்டணமாக கொடுக்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் 56.9 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியிலும், 28.4 லட்சம் குழந்தைகள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும், 54.7 லட்சம் குழந்தைகள் அரசு பள்ளியிலும் பயில்கிறார்கள். அதாவது 61% தனியார் பள்ளியில் பயில்கிறார்கள், வெறும் 39% மட்டுமே அரசு பள்ளியில் பயில்கிறார்கள்.
அப்படி இருக்கும் அரசு பள்ளிகளில் கூட ஆங்கிலம் அல்லது உருது உற்பட மற்ற மொழிவழியில் போதிக்கும் அரசு பள்ளிகளும் உண்டு.
அதிலும் அரசு பள்ளியில் பெயர் மற்றும் இருக்கும், பள்ளிக்கு வராத மாணவர்கள் 5% இருக்கலாம் என்றால் 34% மணவர்கள்தான் படிக்கிறார்கள். இது அடுத்த ஐந்தாண்டுகளில் 25% க்கு கீழே சென்றுவிடும் என்பது எதிர்பார்ப்பு.
முற்றும் தனியார் மயமாக்கப்பட்ட பள்ளிகளின் ஆண்டு வருமானம் 35 ஆயிரம் கோரி என்பது கணக்கில் வருகிற வருமானம் என்கிறார்கள். ஆனால் யூனிஃபார்ம் முதல், பஸ் கட்டணம், ஷ்பெஷல் கிளாஸ், ஹார்ஸ் ட்ரெய்னிங் வரையிலும், கணக்கில் காட்டாத வருமானத்தை கணக்கிட்டால், அது 65 ஆயிரம் கோடியாக இருக்கும் என்பது கணக்கு.
ஆம் ஒரு குழந்தைக்கு ₹50,000 சராசரியான கட்டணம், பஸ் ஃபீஸ் மட்டும் ₹25,000 என்று அவற்றை கணக்கிட்டால் ஏங்கே போகும் என்று உங்கள் உத்தேச கணக்கில் வருவது என்ன?
அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு 12 ஆண்டுகளில் குறைந்தது 12 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டொன்றுக்கான தனியார் பள்ளிகளின் வருமானம் 1 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும். அந்த கட்டணம் எங்கே போகிறது? அதை நடத்துவது யார்? அரசியல் பின்னணி கொண்டவர்களே!
சரி ஏன் அரசியல்வாதிகள் பெரிய பெரிய பள்ளிகளை கட்டுகிறார்கள்?
கருப்பு பணத்தை வெள்ளையாக்க இது ஒரு மிகச்சிறந்த வழி மட்டுமல்ல, அந்த கருப்பு பணத்தை மீட்கவே முடியாது. ஆம் ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள், அவர் அந்த பள்ளியை அரசாங்கத்தில் திருடிய பணத்தில் கட்டியிருந்தாலும், அந்த பள்ளியை மூடினால் ஆயிரம் குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும்?
அதனால் கல்வித் தந்தைகளாக சமுதாயத்தில் வலம் வரும் அவர் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த பள்ளி லாபம் ஈட்டாவிட்டால் கூட அதன் ரியல் எஸ்டேட் வேல்யூ போதுமானது என்பதால் அதை அவர்கள் குறைந்த லாபத்தில் கல்வியை கொடுக்கலாம். ஆனால் செய்வார்களா?
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையில் முதல் 5 ஆண்டுகள் தாய்மொழியில் மட்டுமே படிக்க வேண்டும், அதுவும் எல்லா பள்ளிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே சமமான கல்வி என்றால், தனியார் பள்ளிகளில் யார் சேர்வார்கள்?
அதாவது குறைந்த பட்சம் மூன்றில் ஒரு குழந்தை அரசு பள்ளிக்கு செல்கும் வாய்ப்புண்டு என்றால் வருமான இழப்பு 30%. அதாவது குறைந்தது 15 ஆயிரம் கோடிகள் இழப்பு! மேலும் அவர்களுக்கு அரசு பள்ளி என்பது அசிங்கமல்ல என்ற நிலை ஏற்பட்டபின அதில் பாதிபேர் கூட தனியார் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்.
அதனால் தனியார் பள்ளியின் தரத்தை ஹிந்தி, ஆங்கிலக்கல்வி, என்று உயர்த்துவது ஒரு பக்கம், மறுபக்கம் அரசு பள்ளியை வீழ்த்துவது மறுபக்கம் என்ற இரண்டு பக்கமும் அதை செய்வார்கள். ஆம் இரண்டு திராவிட கட்சிகளுமே அதில் கட்சி பேதமின்றி அதை சிறப்பாக செய்தார்கள்.
இரண்டாவதாக, ஒரு நடுத்தர குடும்பம் தனது இரண்டு குழந்தைகளை படிக்கவைக்க, சராசரியால ஒரு லட்சம் செலவு செய்கிறது என்றால், அவர்களின் சேமிப்பை தடுத்து கடனில் வீழ்த்துகிறார்கள். அப்போது பள்ளி படிப்பு முடிந்து, கல்லுரி என்று முடிக்கும்போது எப்பாடு பட்டாவது வேலை வாங்க வேண்டும் என்றதொரு கட்டாயம்.
அப்போது அவர்களுக்கு தேவையான கொத்தடிமைகள் கிடைத்துவிடுவார்கள். ஆனால் அவர்களின் தரம் என்பது கோட் சூட் போட்ட கொத்தடிமை முதல் கோவணம் கட்டிய கொத்தடிமை வரை வேறுபடும், ஆனால் மொத்தத்தில் அவர்கள் கொத்தடிமைகளே!
இங்கே அவர்கள் ஆங்கில வழி போதனையில் முடிக்கும்போது, அவர்களுக்கு இந்தி தெரியாது. அப்போது அவர்களின் தமிழ் வழி டிவி சேனல்கள் முதல் பேப்பர் வரை இந்த கோல்மால்புர கோமான்களுக்கு போட்டியில்லாத வருமானம்.
அவன் ஹிந்தி படம் பார்க்கமாட்டான், எனவே கருப்பு பணத்தை மாற்றவும், கலாசாரத்தை சீரழிக்கவும், மக்களை ரசிகர்கள் என்று முட்டாள்களாக்கி கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்று அவன் உருப்படமாட்டான் என்றால் அவர்களுக்கான கொத்தடிமையாவது என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்!
அதுமட்டுமில்லாமல் அவர்களின் நோக்கம் இந்த கலாச்சாரத்தை வேறருக்க, மணி, மது, மாது என்று அவர்களை குறுகிய வட்டத்துக்குள வைத்திருக்க முடியும்.
அப்படி அவன் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் வைத்திருக்க முடிவதால் திராவிடம் என்று தனியாவர்த்தனம் செய்ய முடிகிறது.
எனவே அது ஹிந்தி ஒழிப்பல்ல, ஏழைகளை அழிப்பதே அதன் நோக்கம்.
https://www.facebook.com/muru.theivasegamani/posts/pfbid0rRdDCLDx2aSr7SzYabNBSMVTeS45QBeo4EtkLUouxFYR3WBLo3rFfRSTLRqicSPrl?__cft__[0]=AZaTRSV-MdHXk9cmb0qzMz6PMK0CFk21pzmk3RnssphLaySRg26VvRHJ6LCuN4peoMjDRbgtM7WsyAGd5MGX3yOrUMicMaLdjb1mLWGgCObsQ5yyTngNXNRH_9s0wxuLrbCzX5GoU7Rnz8IXKWlvyhl2-ZcoGHcSN-WQ0Rcz8GzcJxZvrSDV5b6khVhWWupSZdPAZamf9QzP7k3xsXmskYcP&__tn__=%2CO%2CP-y-R







