Thursday, January 16, 2014

இயேசுவும் தோமாவும் கற்பனை-கதை கொண்டு கோடிகள் சம்பாதிக்கும் போலி முனைவர் மு.தெய்வநாயகம்

தன் மானமுள்ள தமிழனாக இருந்தால் போலி முனைவர் மு.தெய்வநாயகம் மிகத் தெளிவாக 15ஆம் நுற்றாண்டில் கடற்கரையோரமிருந்த கபாலீஸ்வரர் கோயிலைப் பிடுங்கி பொய்யாக தோமா கதையைக் கட்டிவரும் -போலியான மதமான கிறுஸ்துவத்தை நீக்கி மீண்டும் கபாலீஸ்வரர் கோயில் நிர்மாணிக்க -அங்கே ருத்ரம் சமகம் சொல்லவும் -ப்ரதோச வழிபாடும் சிவராத்திரி வழிபாடும் நட்த்த போராட வேண்டும்.
ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்து
கடைசியில்  -"என் தேவனே என் தேவனே- என்னை ஏன் கைவிட்டீர் " என்ற கடைசி மரண ஓலத்துடன் இறந்தார்








நண்பர் வினோத்திற்கும் மற்றவருக்கும் விளக்கம் - சேர்த்தது

சாந்தோம் சர்ச்சின் பணத்தில் "திருவள்ளுவர் கிறிஸ்தவரா" என்னும் நூலை கருணாநிதி அணிந்துரையுடன் அன்பழகன் வெளியிட ஆரம்பித்து, மேலும் பல நூல்கள் புனைந்து, பின் கத்தோலிக  சாந்தோம் சர்ச்சின் 100% பணத்தில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் தொடங்கி அதில் "விவிலியம்-திருக்குறள்- சைவ சித்தாந்தம் என்னும் பி.எச்.டி. முனைவர் பட்டம் வாங்கினார். அதன் வழிகாட்டியான பன்னாட்டு தமிழ் நிறுவனம் பின் அதை ஆய்வுக் கட்டுரை அல்ல எனத் தெளிவு படுத்தியது.

இவரின் உளறல் முனைவர் ஆய்வு மிகுந்த எதிர்ப்பு வர - தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி - அவரை உதவிப் பேராசிரியர் பதவியிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் வெளியேற்றியது.
இதையெல்லம் மறைத்து கிறிஸ்துவ மதமாற்றப் பணியை தமிழ் பெயரில் கேவலமானபடி செய்கிறார். இவருக்கு சீமான் எனும் செபாஸ்டியன் சைமன் ஆதரவு வேறு.
   
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12
பூவினுள் பிறந்தோன்- பிரம்மா
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி
கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்
கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ
    
பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.
சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.
மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.
கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.
எனவே தமிழர் சமயத்தில் கல்வியும் தெய்வப் பணியும் செய்வோர் அந்தணர்.
தில்லை வாழ் தீட்சதர்கள் ஒரு சிறுபான்மைக் குழுவினர் ஆயிரம் ஆண்டுகளாக தில்லையை பராமரித்து வருபவர்கள்.
தவறுகள் திருத்த்ப்பட வேண்டும். தமிழ் வழிபாடு தினமும் தில்லையில் உண்டு.
தமிழரின் தொன் சமயம் தொடர வேண்டும்

TVK appoints IAS Officer for TNPCB Member Secretary

  Tamil Nadu’s appointment of an IAS officer with MBBS background as Member Secretary of the @Tnpcbofficial has sparked questions over com...