Monday, January 31, 2022

விசிக திருமாப்படி திருவள்ளுவர் ஒரு இந்து தீவிரவாதி

 விசிக திருமாப்படி திருவள்ளுவர்  ஒரு இந்து தீவிரவாதி பதிவு: மே 19,  2019 04:45 AM சென்னை,  

காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி.

 

           



சனாதன தர்மம் என்றால் என்றைக்கும் உள்ள அறம், வள்ளுவம் கூறுவதும் அதே 


 திருவள்ளுவர் மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பதை எளிமையாக
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.    குறள் 339: நிலையாமை
திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து
இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்    (குறள் 62)
பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு    (குறள் 107)
தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.

ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து    (குறள் 126)
ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி  ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து       (குறள் 398)
ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்     (குறள் 538)
பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அன்று        (குறள் 835)
முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து  முடிக்க வல்லவன்!

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்
மற்றீண்டு வாரா நெறி           (குறள் 356)
கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.

வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்    (குறள் 38)
ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.
                       

 

Sunday, January 30, 2022

மாணவி கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய மதவெறியர் ஆதரவு திராவிடியார்கள்

அரியலூர் மாணவி, 10ம் வகுப்பில் பள்ளி முதல் ராங்க் எடுத்தவரை கிறிஸ்வ கன்னியாஸ்திரி ஆக மறுத்ததால் தன் வேலைகள் மற்றும் கழிப்பறை கழுவல் எனக் கொடுமை செய்தியட மாணவி கிறிஸ்துவ கொடுமை தாங்காமல் தற்கொலை.

லாவண்யா படித்த பள்ளியை நிர்வகிக்கும் நிர்வாக தலைமை Roman Catholic Diocese of Tanjore. இந்த அமைப்பு வருடம் வருடம் தனது தலைமைக்கு தான் சார்ந்த பகுதியில் (தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை) எவ்வளவு பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை அனுப்பி வைக்கிறது. அதன் ஆதாரம் இது.

Saturday, January 29, 2022

ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்துள்ளது = எந்த ஆதாரமும் இன்றி செவிவழித் தகவல் மூலமே வழக்கு -சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டம் ரத்து வி. எம். மன்சூர் கைரி

ஆன்லைன் வகுப்பே இல்லாதபோது தவறு நடக்க வாய்ப்பு இல்லை; பாலியல் புகாருக்கு ஆளான தனியார் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை விடுவிக்க உத்தரவு: குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் ரத்து செய்தது நீதிமன்றம்

News
சென்னை உயர் நீதிமன்றம்
மாணவிகளிடம் பாலியல்ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதற்காகக் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
https://www.hindutamil.in/news/tamilnadu/760644-the-court-also-quashed-the-arrest-under-the-goondas-act.html
https://www.vikatan.com/government-and-politics/judiciary/teacher-rajagobalan-free-from-gundaas-act 
கடந்த ஆண்டு, மே மாதம், சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல்ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் ராஜகோபலன்மீது போக்சோ சட்டப் பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலன்
ஆசிரியர் ராஜகோபாலன்

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்துசெய்து, தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என அவரின் மனைவி சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``2015 -ல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது தனது கணவர்மீது குற்றம் சாட்டியிருப்பதாகவும், 2015-ல் ஆன்லைன் வகுப்பு எதுவும் நடைபெறவில்லை. மேலும், தாமதமாக அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்த ஆதாரமும் இன்றி செவிவழித் தகவல் மூலமே வழக்கு பதியப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அமர்வு, ``ஆன்லைன் வகுப்புகள் இல்லாதபோது நடந்த சம்பவத்துக்காக, ராஜகோபலன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அதற்கு பின்பும் குண்டர் சட்டத்தில் அடைக்கச் சரியான காரணம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம்

திருக்குறள் ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது. தமிழில் உள்ள அறநூல்களுள் தலை சிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பாகுறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். 
திருக்குறள் மிகவும் எளிமையான நடைஇயற்றப்பட்டு 1250 ஆண்டுகள் பின்பும் இன்றைக்கும் படிப்போர் புரிந்து கொள்ளும் எளிமை.  
அதற்கு முந்தைய சங்க இலக்கியம் போல கடுமையான நடைபுரியாத பல சொற்கள் என்று இல்லாமல் குறள் வெண்பாவில் இயற்றப் பட்டது குறள். திருவள்ளுவர்  காலம் தற்போது காலம் 8- 9ம் நுற்றாண்டு என்பதில் நடுநிலையாளர்களுள் ஒரு கருத்து ஒற்றுமை வருகிறது.

திருவள்ளுவர் காலம் பற்றிய ஆய்வு முடிவுகள் நடுநிலையாய் செய்த ஜி.யு.போப் 10ம் நூற்றாண்டு என்பதாய், பேரறிஞர் வையாபுரி பிள்ளைஇவர்  வள்ளுவர் காலம் குறித்ததை600 ஒட்டி என்றார்.

திருக்குறளில் உள்ள பல சங்கப்பாடல் தொடர்களை தலைகீழாய் குறளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தியதாய் கூறித் திரிந்த வள்ளுவரால் பாழ்செய்யும் பல்குழு (குறள் 735) எனும் பிரிவினைவாத சக்திகள் அவரை கடுமையாய் விமர்சித்தனர். 

தற்போது பன்னாட்டு பல்கலைக் கழக நெறியில் ஆய்வுகள் திருவள்ளுவர் காலம் பொ.ஆ.800ஐ ஒட்டி என கருத்தொற்றுமை உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக பேராசிரியர்  டேவிட் ஷுல்மன் பாண்டியர் - பல்லவர் காலம் இன்னும் பின் தள்ளும்படி குறிப்பு காட்டி உள்ளார்.

திருவள்ளுவர் காலத்தை மிகவும் பின் தள்ளியோரின் தரவுகள் என்ன? அவை நடுநிலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட நேர்மையான காரணங்கள் என்ன
1.முச்சங்கம் இருந்தது என்ற தொனமக் கதை நம்பிக்கை.
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
53.png 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம்30 
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
2. தொல்கப்பியம் பற்றிய பின்னோக்கிய காலம் குறித்தல் -முச்சங்க கதைகளின் தாக்கம்.
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
இன்றைய நிலையில் தொல்காப்பியர் காலம் பொ.ஆ. 7ம்  நூற்றாண்டு என்பதில் பெரும் கருத்தொற்றுமை உள்ளது
3.வள்ளுவர் சங்க காலப் புலவர் எனும் நம்பிக்கை.

பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுள் உள்ள தொடர், பாட்டு கருத்துக்கள் குறளிலும் உள்ளதைக் கொண்டு - திருக்குறளை முன் தள்ளியனர். இத்தோடு முசங்கக் கதை, கீழுள்ள கதைகள் அவற்றிற்கு உதவின
 திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களில் திருக்குறளின் ஒவ்வொரு பாலின் உள்ளும் உள்ள இயல்களில் எத்தனை அதிகாரங்கள் என்பதை கூறும் வகையில் பல பாடல்கள் உள்ளன.
4.திருவள்ளுவர் பற்றி உள்ள திருவள்ளுவமாலை மற்றும் கபிலர் அகவலில் உள்ள புனைக் கதைகள்
திருக்குறள் எழுதப் பட்ட பின் வரையப்பட்ட முதல் உரை மணக்குடவர் எனும் சமணர் உரை, ஆனல் இவர் உரையில் உள்ள இயல்களினும் உள்ள அதிகார அமைப்பினோடு திருவள்ளுவமாலை பாடல்கள் பொருந்த வில்லை, ஆனால் 13ம் நூற்றாண்டின் பரிமேலழகர் பிரித்துள்ளதோடு பொருந்துகிறது. எனவே நிச்சயமாய் இவை அவற்றிற்கு பிற்பட்டவை
வள்ளுவர் பற்றிய கதைகளில் பல கிறிஸ்துவப் பாதிரிகள் திணித்தவை எனப் பல ஆய்வுகள் கூறுவதையும் அறிஞர் காட்டி உள்ளனர். 
5. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தெளிவாய் திருக்குறளை குறிப்பிடுவதால் 
சிலப்பதிகாரக் கதையின் சேரன், செங்குட்டுவன் போன்ற அரசர்கள் சங்க காலத்தவர், அதாவது பொ.மு.300 - பொ.ஆ.300 இடையிலானவர், ஆனால் சங்கப் பாடல்கள் பொ.ஆ.6ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வரையப்பட்டவை. சிலப்பதிகாரமோ கதை மாந்தர்களை சங்க காலத்தினராகக் காட்டினும் அதில் உள்ள செய்திகள், நகர வாழ்வு இவை பிற்காலத்தது, அறிஞர்படி 9ம் அல்லது 12ம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர், தொல்லியலும் கண்ணகி கோவிலின் தொன்மை 9ம் நூற்றாண்டு பின் என்பதால் தெளிவாய் சிலப்பதிகாரம் 9ம் நூற்றாண்டு  இறுதிக்கு முன் வாராது.
 திருவள்ளுவர் காலம் பன்னாட்டு பல்கலைக் கழக முறை ஆய்வுகள் 8ம் நூற்றாண்டு எனக் குறிக்க காரணம் பெருமளவில் மொழியும் திருக்குறள் நடையும் தான்.
 திருக்குறளின் மொழி நடை
சங்க இலக்கியத்தின் பாடல்கள் பெரும்பாலும் இன்றைக்கு புரியா மொழி நடை, ஆசிர்யப்பாவில் அமைந்தது.

திருக்குறளோ வெண்பா, அதிலும் குறள் வேண்பா, சொற்கள் வளர்ச்சியுற்று எளிதில் புரியும் நடை.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஈ.சுந்தரமூர்தி அவர்களின்  குறளின் நடையியல் மற்றும், முனைவர் மோகனராசுவின்  -"திருவள்ளுவர் நடைநலைம்". இரணடுமே திருக்குறள் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் நூலும் உண்டு.


இவை நமக்கு தெளிவாய் காட்டுவது, திருக்குறள் பாட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகான தொல்காஅபியத்திலிருந்து பிற்காலத்தது.

திருவள்ளுவர் காலம் என்ற பெயரிலேயே ஒரு கட்டுரை பேராசிரியர்.கஸ்தூரி ராஜா அவர்கள்   நூலில் ஒரு கட்டுரையும், முனைவர் மோகனராசுவின் வளர்ச்சி வரலாறு - பகுதி௨ நூலின் பெரும் பகுதியும் 
தொல்காப்பியர் சொல்லதிகாரம் நூற்பா இரண்டில், சார்பு எழுத்துக்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"அவைதாம்
குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்
ஆய்தம் என்ற‌ #முப்பால் #புள்ளியும் எழுத்து ஓர் அன்ன".


இதன் பொருள்:
சார்பு எழுத்துக்கள் என்பன குறுகிய ஓசையை உடைய இகரம், குறுகிய ஓசையை உடைய உகரம் மற்றும் மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து என்பன. இவை எழுத்துக்களை ஒத்து அமைவன.
ஆக, தொல்காப்பியர் காலத்தில் 'ஆய்த எழுத்து' இன்று போல மூன்று புள்ளிகளை உடையதாக இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.
நான் தமிழ் பிராமி, வட்டெழுத்துக்களை ஆராய்ந்த போது, தமிழ் பிராமி எழுத்தில் ஃ என்ற எழுத்து கிடைக்கோடிட்டு, அதன் மேலும் கீழும் புள்ளிகள் இட்டு, இன்றைய 'வகுத்தல் குறியீடு' போல உள்ளது. வட்டெழுத்துக் காலத்திலும் அந்த கிடைக்கோடு சற்று நீளம் குறைந்து அதே வகுத்தல் குறி வடிவில்தான் உள்ளது.
தொல்காப்பியம் குறிப்பிடும் 'மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து' இரு எழுத்து வடிவங்களிலும் காணவில்லை.
கீழே காணும் படங்களில் இன்றைய ஃ எழுத்தாக காணப்படும் இடத்தில்தான் 'மூன்று புள்ளிகள் உள்ள அஃகன்னா' எழுத்து காணப்படுகிறது.
ஏன் தொல்காப்பியம் தமிழ் பிராமி எழுத்து ஃ எழுத்துக்காக காட்டும் வகுத்தல் குறி எழுத்து வடிவத்தைக் குறிப்பிடவில்லை?
அப்படியானால், தொல்காப்பியம் தமிழ்பிராமி வழக்கில் இருந்த #சங்க #காலமான கி.பி.5- ம் நூற்றாண்டுவரை எழுதப்படவில்லையோ; பிற்காலத்ததோ? என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
இதை தெளிவுபடுத்திக்கொள்ள, சங்க இலக்கியங்கள் எதிலாவது தொல்காப்பியம் குறிப்பிடப்படுகிறதா?
முதன்முதலில் எந்த தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியம் பற்றிய செய்தி கிடைக்கிறது? என்பது பற்றிய விபரங்களை, தமிழ்ப் பற்று கொண்ட நண்பர்கள் இங்கே தெரிவியுங்களேன்!

Friday, January 28, 2022

மணிமேகலை எழுதப்பட்ட காலம் - Tamil wiki

 மணிமேகலை (காப்பியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

மணிமேகலை எழுதப்பட்ட காலம்[தொகு]

மணிமேகலை எழுதப்பட்ட காலம் குறித்து இக்கட்டுரையில் தரப்படுகின்ற விளக்கத்துக்கு என்ன ஆதாரம் உண்டு என்பதைப் பயனர் சுட்டிக்காட்டவில்லை. ஆதாரம் தெரிந்தவர்கள் அதை இணைத்தால் நல்லது.--பவுல்-Paul (பேச்சு) 01:04, 10 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

இக்கட்டுரையின்படி புகார் நகரம், மணிபல்லவத் தீவு முதலாவை கி.பி. 15ஆம் நூற்றாண்டில் இருந்தன. இடைக்காலச் சோழர், சாளுக்கியச் சோழர் ஆட்சிக்குப் பின்னர் மணிமேகலையும் அவளுக்கு அறிவுரை கூறிய அறவண அடிகளும் வாழ்ந்தார். என்ன விந்தை! இதுதான விக்கிப்பீடியா. கேட்க யாருமே இல்லை எனின் எனக்குமட்டும் என்ன? --Sengai Podhuvan (பேச்சு) 22:10, 19 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

கட்டுரையில் இருந்து நகர்த்தப்பட்டது[தொகு]

அது இயற்றப்பட்ட காலமாக ஆய்வாளர்கள் 3ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுவரை கூறிவருகின்றனர். மணிமேகலை காப்பியத்தினை அண்மையில் ஆராய்ந்திருந்த செங்கைப் பொதுவன் அதன் காலத்தினை பின்வருமாறு ஆராய்ந்துள்ளார்:

  • மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. [1] மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
  • சைவ, வைணவ இலக்கியங்களில் காலத்தால் முந்தியவை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியவை. இவற்றில் காலத்தால் முந்திய இலக்கியங்களைப் பாடிய அப்பரோ, முதலாழ்வார்களோ புகார் நகரம் பற்றிக் குறிப்பிடவில்லை. இரட்டைக் காப்பியங்கள் புகார் நகர நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. எனவே இவை ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தியவை.
  • கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.[2] இந்தக் கயவாகு காலம் கி.பி. 171-193 [3]
  • தேவாரம்திவ்வியப் பிரபந்தம்கம்பராமாயணம்சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா [4] நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை. [5]
  • எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
  • மணிமேகலை காப்பியத்தில் வரும் அறவண அடிகள் என்னும் புத்த துறவி புத்தர் மீண்டும் கி.பி. 1073-ல் பிறப்பார் என முன்கூட்டியே கணிக்கிறார். இது நிகழ்ந்ததா என்பது ஒருபுறம் இருக்க இதனைக் காப்பியத்தின் காலம் எனல் பொருந்தாது.

ஆனால், அதன் காதை - 12, வரி- 72 முதல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

‘சக்கரவாளத்துத் தேவரெல்லாம்
தொக்கொருங்கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் வீழ்ந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து
விரிகதிர்ச் செல்வன் தோன்றினனென்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேரறிவாளன் தேன்றும் அதற்பிற்பாடு
பெரும் குளமருங்கிற் சுருங்கைச் சிறுவழி
இரும் பெரும் நீத்தம் புகுவதுபோல
அளவாச் சிறு செவி அளப்பரும் நல்லறம்
உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்

இதில், இறந்து, துடித லோகத்திற்குச் சென்றிருந்த புத்தபெருமான் ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆண்டில் மீண்டும் பூமியில் அவதரித்து, நல்லறம் மீண்டும் நிலைநாட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மணிமேகலை காப்பியமானது பௌத்த காப்பியமாகையாலும், அதன் ஆசிரியனுக்கு வான சாஸ்த்திரம் நன்கு தெரிந்த நிலையிலும், ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆண்டானது, பௌத்த ஆண்டாகவே இருக்கமுடியும்.

பௌத்த ஆண்டு ‘ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு‘ ஆனது, பொது சகாப்தம் (1616 - 543) 1073 ஆகும். புத்தபெருமான் பொது சகாப்தத்திற்கு 543ஆண்டுகள் முன்னர் இறந்ததென்பதே, தமிழ், இலங்கை மரபு.

ஆகவே பொது சகாப்தம் 1073ஆம் ஆண்டில், பௌத்தம் எங்கு நிலைகுலைந்திருந்து மீண்டும் உயிர் பெற்றிருந்தது என்பது முக்கிய கேள்வியாகிறது.

இங்குதான் இலங்கையின் பௌத்த வரலாறு முக்கியமாகிறது. இலங்கையில், 70 வருடங்கள் வரையான சோழ மேலாதிக்கத்தின்கீழ் பௌத்த சங்கமும், பௌத்தமும் நிலைகுலைந்து இருந்தன என்றும், தொடர்ச்சியான போரினைத் தொடர்ந்து, பொது சகாப்தம் 1070ஆம் ஆண்டில்தான் முதலாவது விஜபாகுவின் தலைமையின்கீழ் சோழர் மேலாதிக்கம் முழுமையாக முறியடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதன் பின்னர் முதலாவது விஜயபாகு புத்தபெருமானின் தந்ததாது வைக்கப் பொலநறுவவில் கோயிலையும் கட்டி, பௌத்த சங்கத்தையும் புனரமைத்து, தன்னை 1073ஆம் ஆண்டில்தான் இலங்கையின் பௌத்த அரசானாக முடிசூடிக்கொண்டான் என்பதைப் பொலனறுவ தமிச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.

இந்தநிலையில், மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1073 இற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்கமுடியாது.

அது குறிப்பாக எந்த ஆண்டில் இயற்றப்பட்டிருக்க முடியும் என்பதை அறிய, புத்தபெருமான் பொது சகாப்தம் 543ஆம் ஆண்டில்தான் இறந்தார் என்பது என்ன அடிப்படையில் வரப்பட்டது என்பதை ஆராயந்தறியவேண்டும்.

இந்த ஆண்டானது இலங்கையின் மிக முக்கிய வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில்தான் வரப்பட்டிருக்கமுடியும். இந்தநிலையில், புத்த பெருமான் இறந்ததின் பின்னரான 1000, 2000 ஆண்டுகளில் இலங்கையில் மிக முக்கிய வரலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்தால், புத்தபெருமான் இறந்து 2000ஆண்டுகளின் பின்னர், அதாவது பொது சகாப்பதம் 1457ஆம் ஆண்டில்தான், யாழ்ப்பாண இராச்சியம் சப்புமல் குமாரயவினால் கைப்பற்றப்பட்டு, இலங்கை முழுவதும் ஆறாவது பராக்ரமபாகுவினால் ஒரு குடைக்கீழ் கொண்டுவரப்பட்டது என வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், புத்தபெருமான் இறந்த ஆண்டானது யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்னராக வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1457ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க முடியாது.

  1.  மலையாள மொழி
  2. அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
    பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
    குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
    கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
    ‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
    நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
    வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட (சிலப்பதிகாரம், வரந்தரு காதை 157-163)

  3.  கயவாகு
  4.  'ஏ' என்னும் அசை கொண்டு முடியாமல் 'என்' என்னும் அசை கொண்டு முடியும் ஆசிரியப்பா
  5.  கி.பி. 6 ஆம் நூற்றாண்டினதாகக் கணிக்கப்படும் பெருங்கதை என்னும் நூலைத் தவிர வேறு எந்தக் காப்பியமும் ஆசிரியப்பாவால் அமையவில்லை.

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி