Saturday, September 29, 2012

இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா!

புராணக் கதை நாயகர் ஏசு மரணம் - தூக்கு மரத்தில்(சிலுவை) தொங்கவிடப்பட்டு என்பது 4 சுவிசேஷங்களும், பவுல் கடிதமும் சொல்லும் கதை. இது ரோமன் தண்டனை முறை. இதில் ரோம் ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கு தரப் படும், குற்றவாளிகள் நிர்வாணமாக உயரமாக சாரம் கட்டி அதில் தொஙவிடப்படுவர். கழுத்து எலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழுந்து புரள வேண்டும் இதனால் தான், தூக்குமர தண்டனை தரும் இடம் கபாலஸ்தலம் அல்லது மண்டை ஓடு புரளுமிடம் எனப்படும். மரணம் வர 4- 5 நாள் ஆகும்.நிவாணத்தின் அசிங்கமும், கழுகு பருந்து போன்றவை துன்புமும் என நான்கு நாள் அலறல் கேட்டு- எவரும் ரோமை எதிர்க்க நினைக்கக் கூடாது என்பதே இத்தண்டனை முறை.
    
மாற்கு15:1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்..
37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.



முதன் முதலில் புனையப்பட்ட மாற்கு(70 - 75) சுவியின்படி காலை ஆறு மணிக்கு விசாரணை தொடங்கி 9 மணி வாக்கில் சிலுவையில் அடைக்கப்பட்டார். 3மணிக்கு இறந்தார் எனக் கதை.

ஆனால் நான்காவது சுவி யோவானில்(95- 110) ஏசு சிலுவையில் அடைக்கப்பட்டதே நண்பகல் 12 மணிக்கு தான். அதாவது சிலுவையில் இருந்த நேரம் 3 மணிநேரம் மட்டுமே

யோவான்19:14.14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.15அவர்கள், ' ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்.

முதல் நூற்றாண்டு யூதர் யோசிபஸ் நூலில் அவர் மூன்று நண்பர்கள் தூக்குமரத்தில்டப்பட, 3 நாள் கழித்து ரோம் ஆட்சியிடம் கேட்டு மீட்டுவர, மூவரில் இருவர் மரண காயங்களால் மரணம் அடைய ஒருவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது என்கிறார்.அதாவது 3 நாள் சிலுவையில் தொங்கியபின்னர் மூவரும் உயிரோடு தான் இருந்தனர்.

http://religiousstudies.uncc.edu/people/jtabor/cruc-josephus.html
//Life 76

And when I was sent by Titus Caesar with Cerealins, and a thousand horsemen, to a certain village called Thecoa, in order to know whether it were a place fit for a camp, as I came back, I saw many captives crucified, and remembered three of them as my former acquaintance. I was very sorry at this in my mind, and went with tears in my eyes to Titus, and told him of them; so he immediately commanded them to be taken down, and to have the greatest care taken of them, in order to their recovery; yet two of them died under the physician's hands, while the third recovered.//


இன்றைக்கும் நல்ல வெள்ளி அன்று சிலுவையில் ஏறித் தொங்கி ஈஸ்டர் அன்று கீழே இறன்குவது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கொண்டாட்டமே.
 
http://www.bagnewsnotes.com/2010/04/your-turn-philippine-woman-nailed-to-the-cross/  
நாம் அறிவது- 3 நாள் சிலுவையில் தொங்கினாலும் மரணம் வருவதில்லை என. ஏசு கதையைப் பார்ப்போம்.
http://greenpagan.newsvine.com/_news/2011/04/22/6513755-good-friday-crucifixions-in-the-philippines

இந்த குறைந்த நேரத்தில் 30 வயதான இயேசு மரணம் அடைய வாய்ப்பு இல்லை. இதை மாற்கு சுவிசேஷமே உறுதிப் படுகிறது.

மாற்கு15:42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.44ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ' அவன் இதற்குள் இறந்து விட்டானா? ' என்று கேட்டான்.45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.

இந்த வசனம் ரோமன் கவர்னர் "பிலாத்து வியப்படைந்து" மற்ற சுவிகளிலே இல்லவே இல்லை.
யோவான் சுவியில் ஏசு மரணமடைந்திருக்க முடியாது என்பதை உறுதிப் படுத்திகிறார்.

யோவான்19:31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன



யோவான் சுவியில் மூவரில் இருவர் மரணமடையவில்லை, ஏசு மயங்கி இருந்தார் எனலாம். ஆனால் யோவான் சுவி ரோமன் மன்னர் டிராஜன்(97 - 118 ) காலத்தில் தான் புனையப்பட்டது. இது யோவான் சுவியின் நம்பகத்தன்மையில்லை எனத் தெளிவாக்கும். ஆனால் இவரும் இருவர் இறக்கவைல்லை எனலாம். ஏன் இதிலும் உள்ள
//34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன./  -/ இயேசு முழுமையாய் இறக்கவில்லை என்பர் மருத்துவர்கள்.

http://www.alislam.org/tamil/books/pdf/Siluvayil-Maranam.pdf
http://abcnews.go.com/GMA/jesus-christ-died-cross-scholar/story?id=11066130#.UGezr5g3qgQ

Jesus Christ May Not Have Died on Cross

Gunnar Samuelsson, an evangelical preacher and theologian, says he spent three years combing thousands of ancient texts to research his recently completed 400-page doctoral thesis "Crucifixion in Antiquity."


நாம் உறுதியாய் உணருவது - சிலுவையில் 3 அல்லது 6 மணி நேரம் சிலுவையில் ஏசு தொங்கினால் இறக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக உணரலாம்.

Friday, September 28, 2012

சுவிசேஷங்கள் புனையபட்டவைகளே. 1

இயேசு சொன்னாதாக உள்ளவை கூட கதாசிரியர்களே புனைந்தவையே!

  

ஏசு மரணத்திற்குப் பின் பழைய உடலில்  மீண்டும் உயிரோடு எழுந்து வந்தார் எனும் கதையை மாற்கு சுவியின் அத்தியாயம் - 16 சொல்கிறது. மாற்கு 16 என்பது வசனங்கள் 1-20 கொண்டுள்ளது. கிரேக்க மூலப் பிரதிகளின் பழமையானவைகள் 16: 1- 8 வசனத்தோடு முடிகிறது.
 
//மாற்கு16:8 பெண்கள்(மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி) கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்//

 
இறந்த ஏசுவைப் புதைத்த கல்லறையில் -ஞாயிறு நடந்ததாகக் கதையில்
மாற்கு16: 4 ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.6 அவர் அவர்களிடம், ' திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ' உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் 

மாற்கு14: 28ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்.
மத்தேயு28:1 ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
4அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.5அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.7நீங்கள் விரைந்து சென்று, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.


மத்தேயு26: 
31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், ' இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ' ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது.32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்..

லூக்கா24:1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;2 கல்லறை வாயிலிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, ' உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். 

லூக்காவில் தன் மரணம் பற்றி ஏசு சொன்னபோது கலிலேயா போவேன் எனச் சொல்லவே இல்லை.
யோவான்20:1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
தன் மரணம் பற்றி ஏசு சொன்னபோது கலிலேயா போவேன் எனச் சொல்லவே இல்லை.
   
கல்லறைக்கு போன பெண்கள் பெயரில் குழப்பம், எதற்கு குழப்பம். யார் இருந்தது? வாலிபரா- ஒரு தூதர் பூகம்பத்திற்குப் பிறகா, இரண்டு மின்னலுடை வாலிபாரா- யாருமே இல்லையா?

கல்லறை உள்ளே இருந்தவர் கலிலேயா ஏசு போய்விட்டதாகச் சொன்னாரா இல்லையா?

இந்த சுவியில்  கலிலேயா ஏசு போய்விட்டதாக கதை உள்ளதோ அதில் தன் மரணம் பற்றி ஏசு முன்பே சொல்லிய கதையில்  கலிலேயா போவேன் என ஏசுவே சொன்னதையும் பார்க்கிறோம்.

மாற்கில் உயிர்த்த ஏசு காட்சியே இல்லை. மத்தேயுவில் கலிலேயா மலை மீது மட்டும். லூக்காவில் ஜெருசலேமில் மட்டும், யோவானில் பலமுறை ஜெருசலேமில், ஆனால் பின் சீடர் பழைய மீன்பிடித் தொழிலில் கலிலேயா ஆற்றில் மீன் பிட்டிக்கும்போது என ஒரு கதை.


இயேசு சொன்னாதாக உள்ளவை கூட கதாசிரியர்களே புனைந்தவையே....



Wednesday, September 26, 2012

சுவிசேஷங்கள் எழுதியது யார்

பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. 

"The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus."
 Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.
  

http://arulvakku.com

மாற்கு - எழுதியவர்

மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு, மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வழிபட்டு வந்தனர் (திப 12:12) . மாற்கு 14:51, 52 - இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.

சூழல்
நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகக் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுக்கள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது.

மாற்கு - எழுதியவர்

இந்நூலிலும் ஆசிரியர் தன் பெயரை நேரடியாக குறிப்பிடாவிடினும், இந்நூலை எழுதியவர் யோவான் மாற்கு என்பதில் எப்பொழுதும் சந்தேகம் எழுந்ததில்லை. இதற்காண சான்றுகளை நோக்கும்பொழுது முதலாம் இரண்டாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்களும;(Church Fathers) போதகர்களுமான பேப்பையஸ் (Papias) >  ஜஸ்டின் (Justin the Martyr) > இரேனியஸ் (Irenaeus) ஆகியோர் இதற்கு சான்று பகிர்கின்றனர்.

     இவர் பேதுரு மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு (1 பேதுரு 5:13) பேதுருவோடு அதிகமாக இணைந்து ஊழியம் செய்தார். புதிய ஏற்பாட்டில் இவரைப்பற்றி எட்டு இட்களில் வாசிக்கின்றோம். பவுலின் முதலாவது மிஷினரி பயணத்தின்போது யோவான் மாற்கு அவரோடு இணைந்து புறப்பட்டார். இவர் பர்னபாவின் உறவினர் (கொலோசெயர் 4:10).

எப்பொழுது எங்கிருந்து எழுதப்பட்டது?

     எழுதப்பட்ட காலத்தை  நோக்கும்போது கி.பி.40 முதல் 70க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனினும் நற்செய்தி நூல்களில் இந்நூல் முதலாவதாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உண்மை எல்லா வேத ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பவுல், பேதுரு அகியோரது சிறையிருப்பின் காலத்தில் (கி.பி.64-67) மாற்கு அவர்களோடு அங்கு தங்கியிருந்ததை நாம் வாசிக்கின்றோம், (1 பேதுரு 5:13, கொலோ 4:10). இக்காலத்தில் மாற்கு இந்நூலை எழுதியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேற்கூறிய காலத்தில் மாற்கு தங்கியிருப்பாரானால் அவர் ரோமாபுரியிலிருந்து எழுதியிருக்க வேண்டும். 

     இந்நற்செய்திநூல் புறஜாதியருக்கு குறிப்பாக ரோமாரியிலுள்ள மக்களுக்காக எழுதப்பட்டது. இதன் காரணமாக பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசனங்கள் வெகு சில மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அரமைக் மொழி வார்த்தைகளுக்கும் (5:14) யூத கலாச்சாரங்களுக்கும் (7:3,11) விளக்கம் தரப்பட்டுள்ளன. ரோமர்களை உற்சாகப்படுத்தும் செயல்களான பிசாசு, நோய், மரணம் போன்றவற்றின் மீது இயேசுவின் வல்லமையை எடுத்துக்கூறுகிறார். எனினும் இரண்டு முக்கிய நோக்கங்கள் என்னவெனில் ரோம திருச்சபையை பாடுகள் மத்தியிலும் விசுவாசத்தில் வளரவும், நற்செய்திபணி செய்யவும் எழுதப்பட்டது.
 மத்தேயு
ஆசிரியர்
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.
சூழல்
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம். 
 மத்தேயு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார் என்பதை இப்புத்தக்தில் நேரடியாக காண முடியாவிடினும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்கள் குறிப்பாக பேப்பயஸ்  (கி.பி. 100), வரலாற்று ஆசிரியர் எசுப்பியஸ்  ஆகியோரது வரலாற்று குறிப்புப்படியும் சபை பாரம்பரியப் படியும் ( மத்தேயு இந்நூலை எழுதினார் என்று தெளிவாக எடுத்துக்கூற முடியும். இந்நூலை கிரேக்க பதத்தில் மத்தேயுவின் கூற்று அல்லது வாக்குமூலம் என மொழி பெயர்க்கலாம். இவர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராவார். மத்தேயு என்பதற்கு ~ஆண்டவரின் அன்பளிப்பு என்று பொருள். இவர் வரி வசூலிப்பவராக இருந்து இயேசுவை பின்பற்றியவர் (மத்தேயு 9: 9-13). மாற்கு, லூக்கா இருவரும் இவரை லேவி என்று அழைக்கின்றனர்.
  
     இந்நூலில் யூத சமய கருத்துக்கள், எபிரேய பெயர்கள், அதிகமாக காணப்படுவதால். இது பாலஸ்தீனா தேசத்திலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். எனினும் சிரியா அந்தியோகியாவிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது.

     எழுதப்பட்ட காலத்தைக் குறித்து அதிக கருந்து வேறுபாடுகள் இருப்பினும், இரண்டு கருத்துக்களே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. முதல் கருத்து கி.பி.50 இரண்டாம் கருத்து கி.பி.70.

லூக்கா 
மூன்றாம் நற்செய்தி நூலின் ஆசிரியர் சிரியநாட்டு அந்தியோக்கியாவைக் சேர்ந்த லூக்கா என்பது திருச்சபை மரபு. இவர் மருத்துவம் தெரிந்தவர். திருத்தூதர் பவுலோடு சேர்ந்து நறசெய்திப் பணி ஆற்றியவர். பிற இனக் கிறிஸ்தவர்சபைகளோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவரும் பிற இனக் கிறிஸ்தவர்தான் என்பது பெரும்பாலோர் கருத்து (பில 24:2 திமொ 4:11: கொலோ 4:11- 14).
சூழல்
'மாண்புமிகு' தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாறறுப் பின்ணணியோடும் யாவற்றையும் உறுதிபடுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக்1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயர் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.
எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்டபோது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில்பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப்பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி 70-க்கு பின்தான் எழுதப்படிருக்கவேண்டும் அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.
 அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தையும் லூக்கா நற்செய்தி நூலையும் எழுதியவர் மருத்துவராயிருந்த லூக்கா என்பது தெளிவாக புரிகிறது. இரண்டாம் நூற்றாண்டு திருச்சபைப் போதகர்கள் எழுதிவைத்துச்சென்றுள்ள குறிப்புகள் இதை வழிமொழிகின்றன. குறிப்பாக இரேனேயுஸ் (ஐசநயெநரள) மற்றும் முரட்டோரியன் (ஆரசயவழசயைn) ஆகியோரது குறிப்பும் இக்கருத்தை தெளிவுபடுத்துகின்றன.

லூக்கா 1:1ன் படியும் அப்போ 1:1ன் படியும் மகா கனம்பொருந்திய தெயோப்பிலியு எனப்பட்ட தனிநபருக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். தெயோப்பிலியு ரோம அதிகாரியாகவோ அல்லது ரோம அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம்.

     தெயோப்பிலியு - தமிழ் மொழிபெயர்ப்பின்படி ~தேவனுடைய நண்பர்கள்| அல்லது ~தேவனை நேசிப்பவர்கள்| என்பது பொருள். ஏனவே இப்புத்தகம் தேவனை நேசிப்பவர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம்.

காலம்
      லூக்கா நற்செய்திநூல், மாற்கு நற்செய்திநூலுக்கும் அப்போஸ்தலரின் நடபடிகளின் புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். எனினும் கி.பி. 59-63ல் எழுதப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எழுதப்பட்ட இடம்
      அகாயா, செசரியா, எபேசு ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும் ரோமாபுரியிலிருந்து எழுதினார் என்னும் கருத்து சற்று மேலோங்கியுள்ளது. இருப்பினும் தேயோப்பிலு என்னும் ரோம அதிகாரி வாழ்ந்த இடமே இப்புத்தகம் எழுதப்பட்ட இடமாக இருக்கக்கூடும்.
 யோவான்
நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச் சீடர் (21:24) இவராகத்தான இருக்க வேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப்பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனி வடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறிஸ்தவச் சமூகத்தின் தேவைகளுக் ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்கவேண்டும்."இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெறறுள்ளன" (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறிஸ்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது. மேலும் கிறிஸ்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரணடாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாணடின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இந்நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு.
 இந்நுலை எழுதியவர் தன்னை 'இயேசுவிற்கு அன்பாய் இருந்தவர்" (யோவான் 21:20,24) என்று அறிமுகம் செய்கின்றார். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் 3 பேர் அவருடன் அதிக நெருக்கமாக இருந்தனர். அவர்கள் யோவான், யாக்கோபு, மற்றும் பேதுரு ஆவார்கள். 13:23,24ல் பேதுரு இந்நூலை எழுதியவர் இல்லை என்பது உறுதியாகிறது. யாக்கோபு கி.பி.44ல் (அப்போஸ்தலர் 12:2) ஏரோது மன்னரால் கொலை செய்யப்பட்டு விட்டார் எனவே யோவான் மட்டுமே இந்நூலை எழுதியிருக்க முடியும் மேலும் இந்நூல் முதலாம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அக்காலம் வரை உயிரோடிருந்த சீடர் யோவான் மட்டுமே. அது மட்டுமல்லாமல் இரேனியஸ் என்னும் திருச்சபை போதகர் செபதேயுவின் குமாரானாகிய யோவான், நற்செய்தி நூல்களை எழுதினார் என்று தம் குறிப்பில் கூறியுள்ளார்.

காலம்-     எழுதப்பட்ட காலத்தைப் பொருத்தவரை இரண்டு கருத்துக்கள் நிலவுகிறது.  

1. கி.பி.85ல் எழுதப்பட்டது. மற்ற மூன்று நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட பின்பு யோவான் இந்நூலை எழுதினார். எனவேதான் முதல் மூன்று நூல்களில் கூறப்பட்டிராத காரியங்களை தன்னுடைய நூலில் கூறியுள்ளார். மேலும் இவரது இறையியல் (வுhநழடழபல) சற்று வளர்ச்சியடைந்தது

     2. கி.பி.50க்குப்பின் 70க்கு முன் எழுதப்பட்டிருக்கவேண்டும் ஏனெனில் கி.பி.70ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது. ஆனால் யோவான் 5:2ல் எருசலேம் தேவாலயம் நிகழ்கால வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் இக்கருத்துக்கு வழி மொழிகின்றன.

jesusspectrum.jpg
விக்கி பீடியா  
மாற்கு சுவிஷேம்:
பைபிள் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களில் மத்தேயு சுவிஷேசம் முதலாவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் எழுதப்பட்ட வரிசைப்படி பார்த்தால் மாற்கு தான் முதலில் எழுதப்பட்டதாகும். இது குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
மாற்கு நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இயேசுவின் திருமுழுக்கிலிருந்து (ஞானஸ்நானம்) நூல் ஆரம்பிக்கிறது. இயேசுவின் வாழ்வின் கடைசி வாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. கி.பி.60-80 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. நான்கு நற்செய்தி நூல்களில் முதலவதாக எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. மொத்தம் 16 அதிகாரங்களில் 678 வசனங்களைக் கொண்டுள்ளது
மாற்கு புனித இராயப்பரின் (பேதுரு எனும் பீட்டரின்) சீடராவார். இராயப்பர் இயேசு பற்றிக் கூறியவற்றையும் வேறு மூலங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களையும் தொகுத்து, மாற்கு நற்செய்தி எழுதினாரென்று கருதப்படுகிறது. மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. மாற்கு இந்நூலை எழுதும் போது உரோமயில் இருந்ததாக முன்னர் கருதப்பட்டாலும் அவர் சிரியாவில் இருந்தே இந்நூலை எழுதினார் என்ற கருத்து இப்போது மேலோங்கியுள்ளது.
முதன் முதலில் சுவிஷேசம் எழுதிய மாற்கு மேற்கண்ட பன்னிரண்டு சீடர்களில் இடம் பெறவில்லை. மாறாக இயேசுவின் சீடராகிய பேதுரு எனும் பீட்டருக்கு இவர் சீடராக இருந்தார். இவர் எழுதிய அனைத்தும் இவர் கண்ணால் பார்த்து எழுதியதல்ல. பீட்டரிடம் கேட்டவைகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிடவில்லை. இயேசுவைப் பார்த்திராத இவர், செவி வழியாகப் பேசிக் கொள்ளப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே தனது சுவிஷேசத்தை எழுதியுள்ளார் என்பது உறுதியாகிறது.
மத்தேயு சுவிஷேம்:
மத்தேயு என்ற பெயர் சீடர்களின் பட்டியலில் இருந்தாலும் சுவிசேஷம் எழுதியது அந்த மத்தேயு அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் சீடராகிய மத்தேயுவாக இருந்தால் மாற்குவை முந்திக் கொண்டு இவர் சுவிசேஷம் எழுதி இருப்பார். இயேசுவின் சீடருக்குச் சீடரான மாற்குவிற்குப் பிறகு தான் மத்தேயு எழுதப்பட்டது என்பதால் இது இயேசுவின் சீடராகிய மத்தேயு எழுதியது அல்ல. இவர் வேறொரு மத்தேயுவாக இருக்கலாம்; அல்லது வேறு யாரோ எழுதி மத்தேயு பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது தான் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இது குறித்து விக்கி பீடியா இவ்வாறு கூறுகிறது.
மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.
லூக்கா சுவிசேஷம்:
மூன்றாவது சுவிஷேசக்காரராகிய லூக்கா என்பவரும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அல்ல. மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதியதாக இவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால் ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)
மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதுவதாக எடுத்த எடுப்பிலேயே லூக்கா ஒப்புக் கொள்கிறார்.
இவர் மிகவும் பிந்தியவராவார். கிறித்தவத்தின் சிலுவைக் கோட்பாட்டை உருவாக்கிய பவுலின் சீடர்களில் லூக்காவும் ஒருவர்
யோவான் சுவிஷேம்:
இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இயெசுவின் நேரடிச் சீடரான யோவான் இதை எழுதி இருந்தால் இது தான் முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது எழுதப்பட்ட காலம் கிபி 90 முதல் 120 க்குள் இருக்க வேண்டும் என்பது முன்னோடி ஆய்வாளரின் கருத்தாகும்.
இயேசுவின் சீடராக இருந்த யோவானுக்கு இயேசு சிலுவையில் அறையப்படும் போது சுமார் 25 வயது என்று வைத்துக் கொண்டால் கூட கிபி 90ல் 115 வயது ஆகி இருக்கும். 115 வயது வரை மனிதனின் சராசரி வயது இல்லை. வேறு சிலர் கூறுவது போல் கிபி 65 முதல் 85 க்குள் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் அப்போதும் யோவான் தொண்ணூறு வயது முதல் 119 வயதில் இதை எழுதியதாக ஆகும். இதுவும் மனிதர்களின் சராசரி வயதுக்கு அதிகமாகும். எனவே இதை யோவான் என்ற சீடர் எழுதி இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இதை யோவான் என்ற பெயர் கொண்ட வேரொருவர் தான் எழுதி இருக்கிறார்.
விக்கி பீடியா இது பற்றி பின்வருமாறு கூறுகிறது.
இந்நற்செய்தியில் இயேசுவின் பிரியமான சீடரால் எழுதப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் பிரியமான சீடர் என அழைக்கப்பட்டவர் அப்போஸ்தலரான யோவான் என்பது சம்பிரதாயமான வழக்கமாகும். யோவான் நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்திலுள்ள நான்கு நற்செய்திகளில் கடைசியாக எழுதப்பட்டதாகும்.
யோவான் நற்செய்தியானது வேறு நபர்களால் எழுதப்பட்டதென பல ஆய்வாளர் கூறியிருக்கின்றனர். எனினும் றேமன் கே. ஜுசினோ (தஹம்ர்ய் ஃ. ஓன்ள்ண்ய்ர்) என்பவரால் 1998 இல் மொழியப்பட்ட தத்துவம் மிகவும் மிகப் பிரசித்தமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். இவர் யோவான் நற்செய்தி மர்தலேன் மரியாளால் எழுதப்பட்டது என்ற வாதத்தை முன் வைத்தார். இயேசுவால் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரஸ் இந்நூலை எழுதினார் என்பதுவும் இன்னுமொரு வாதமாகும்.
இது கி.பி. 65-85 இடையான காலப் பகுதியில் எழுதப்பட்டதாக மிதவாத ஆய்வாளரின் கருத்தாகும். எனினும் இது கி.பி. 90-120 இடயிலேயே எழுதப்பட்டது என்பதே முன்னோடி ஆய்வளரின் கருத்தாகும்.


பைபிளியல் அறிஞர்கள் ஆய்வு உண்மைகள்
I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar
Professor John Hick, sums up the current position of Theological research as follows:
Quote:
“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “
“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி