Saturday, August 26, 2023

விஞ்ஞானி நம்பிநாராயணன் 'தேசத்துரோகி',எனசீரழிக்கப்பட்ட வரலாறு 'ராக்கெட்ரி-நம்பி விளைவு!'திரைப்படம்.

 தேசப்பற்றாளரை, 'தேசத்துரோகி',என பட்டம் சூட்டப்பட்டு அவருடைய வாழ்க்கையை சீரழிக்கப்பட்ட வரலாற்று ஆவணம்தான்,'ராக்கெட்ரி-நம்பி

https://www.facebook.com/groups/897137793992554/?multi_permalinks=1909857709387219&hoisted_section_header_type=recently_seen&__cft__[0]=AZWMokUx8mm4jwNVKYGUGBKD0Ly5ikV_a_8GY4y82LGqAyrJAITM_Lqmi23GZ9x0OmVi61Tp-U3h0kW1Ky7K_PzKWQT56Mo9Du4qug-qVrw9vAilEEEnFWq6XKtJsYk0eKvQ48wcsGX1TZA6xn1weKIe9dgjUwrKdqIOcdgPOPUyhw-D82hLViIiROigZrXcFTw&__tn__=%2CO%2CP-R

விளைவு!'திரைப்படம்.தன்னுடைய முதல் படத்தையே தமிழ்சினிமாவில் முத்திரை பதிக்கும் விதமாக எடுத்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர்-R.மாதவனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்தப் படத்தை எடுக்கும் பொழுதே, அவருக்கு நன்றாகத் தெரியும் படம் வணிகரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று.இருந்தும்,அவர் துணிந்து எடுக்கக் காரணம் சினிமாவின் மீது அவர் வைத்த காதலும், தேசப்பற்றும்,அப்பழுக்கற்ற தலைசிறந்த ஒரு விஞ்ஞானியின் மீது தேசத்துரோகம் பட்டம் சூட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை சாமான்ய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே ஆகும்.

நம்பி நாராயணன் அவர்கள் நாகர்கோவிலில் பிறந்தவர்.படித்தது,மதுரை தியாகராயர் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்பை முடித்தவர்.

இங்கு,படிப்பை முடித்தப் பிறகு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் சீட் கிடைக்க, அங்கு தனது படிப்பை தொடர்ந்தார்.அங்கு சீட்கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இவருடைய தேசப்பற்றுக்கு ஒரே ஒரு சம்பவம் மட்டும் போதுமென நினைக்கிறேன்.படிப்பு முடித்தவுடன், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது.அதே நேரத்தில்,இஸ்ரோவின் அன்றைய இயக்குனரும் இவரின் குருவும் ஆன விக்ரம்சாராபாய் அவர்கள் இஸ்ரோ விண்வெளி மையத்தில் இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அவர் நம்பிநாராயணனிடம்,'உன்னுடைய திறமை நம் நாட்டிற்கு பயன்படவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.ஆனால்,நாசா கொடுக்கும் சம்பளம் எல்லாம் இங்கே கிடைக்காது என்பதும் ஒனக்குத் தெரியும்.முடிவு செய்ய வேண்டியது நீதான்',என்கிறார்.அதேநேரத்தில் நாசாவிலும் இவரை பணியிலிருந்து விடுவிக்க மனமில்லை.ஆனால்,விஞ்ஞானி நம்பி நாராயணன் பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு, தாய்நாட்டிற்காக இஸ்ரோவிற்கு பணியாற்ற வருகிறார். இப்படியாப் பட்டவரைத்தான் தேசத்துரோகி என பட்டம் கொடுத்து ,இவரையும் இவருடைய குடும்பத்தையும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் 50 நாட்கள் வரை சித்ரவதை செய்திருக்கிறது கேரள உளவுத்துறை போலீஸ்.

இவருடைய சிறப்புகளைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ இன்று விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் படைப்பதற்கு தலைசிறந்த விஞ்ஞானியான நம்பிநாராயணனின் உழைப்பும் அடங்கியிருக்கு.

விண்வெளித்துறையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து,விண்வெளித் துறையின் எதிர்காலம் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை நோக்கித்தான் போகும் என்பதை 1970-களில் உணர்ந்து அதற்கான முயற்சிகளில் இறங்கி திரவ எரிபொருள் விண்வெளி என்ஜினைக் கண்டுபிடித்தார் நம்பி நாராயணன்.

இன்றைய ராக்கெட் தொழில் நுட்பத்தில் அதிகமாக பயன்படும் கிரையோஜெனிக் இன்ஜின் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.

விக்ரம் சாராபாய் இறந்த பிறகு,ராக்கெட்டுக்கான கருவி ஒன்றை கண்டு பிடிக்கிறார். அதற்கு,'விகாஸ்',என தனது குருவின் நினைவாக பெயர் வைக்கிறார்.

நம்பி நாராயணனாக மாதவன்!

விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தம் நடிகர் மாதவன்.நம்பிநாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை ,நம் மனதை ஆக்கிரமிக்கும் வகையில் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மாதவன் அவர்கள்.

நம்பிநாராயணன் எழுதிய சுயசரிதை நூல்,'ஓர் மகனூட ப்ரமந பதம்'.அந் நூலை அடிப்படையாக வைத்தே திரைக்கதை அமைத்திருக்கிறார்,மாதவன்.

திரைக்கதை அமைத்தப்பிறகும், அவர் அருகிலேயே இருந்து பல ஆலோசனைகளை எல்லாம் கேட்டு ராக்கெட்டின் தொழில்நுட்பங்களை எல்லாம் துல்லியமாக எழுதிய பிறகே படப்பிடிப்புக்கே சென்றிருக்கிறார்.அதனால்தான்,படத்தின் முதல்பாதியில் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைக்கிறார்கள்.கதை ராக்கெட் சம்மந்தப்பட்டது எனும் பொழுது அதைப்பற்றிய விளக்கமும் தேவைதானே!

காட்சிகளில் எந்த ஜோடனைகளும் இல்லை.அதுவும் உடல்ரீதியாக அவருக்கு கொடுக்கப்பட்ட சித்ரவதைகளைப் பார்க்கும் பொழுது,அவருடைய மன உறுதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

ஒருவேளை,சித்ரவதை தாங்கமாட்டாமல் அவர்கள் கூறும் பழியெல்லாம் ஒத்துக்கொண்டிருந்தால், ஒரு அப்பழுக்கற்ற தேசப்பற்றாளர் நிரந்தரமாகவே தேசத்துரோகி பட்டத்தை சுமந்திருப்பார்.அதை நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் கலங்கி விடுகிறது.

அவர் சித்ரவதை செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக 50 நாட்கள் சிறையில் இருந்த பொழுது,இப்படிக் கூட அவருடைய எண்ண ஓட்டம் ஓடியிருக்கும்,'நான்,நாசா விண்வெளி மையத்திலேயே வேலை செய்திருந்தால் இப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டிருக்காதே',என்று உறுதியாக நினைத்திருப்பார்.அப்படி நினைப்பதுதான் நியாயமானதும் கூட.

இவர்,பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை சொன்னதாக நாளிதழில் வந்ததை படித்து விட்டு, இவரையும் இவருடைய குடும்பாத்தாரையும் ,சொந்தபந்தங்கள் எல்லாம் அவமதிக்கும் நிகழ்வை எல்லாம் காட்சிவழியாக பார்க்கும் பொழுது எப்படித்தான் இவ்வளவு கொடுமைகளை எல்லாம் இந்தக் குடும்பம் தாங்கோச்சோன்னு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

ஒரு காட்சியில் விசாரணை(50நாட்கள்)எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மகன்களும் மகளும் கண்ணீரோடு நிற்க,மாதவன்(நம்பி நாராயணன்),'அம்மா எங்கே',ன்னு கேட்க ,'அம்மா ரொம்பவும் ஒடைஞ்சிட்டாங்கப்பா',ன்னு சொல்லி வெடித்து அழ ஆரம்பிக்க ,படம் பார்க்கும் நாம் என்ன ஏதுன்னு அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்போம்.

மாதவன்(நம்பி நாராயணன்)பதறியபடியே மனைவியின் அறையைத் தேடி ஓடுவார்...அங்கு அவரின் மனைவியின் நிலையைக் கண்டு நம் மனம் அலறித் துடிக்கும்.இக்காட்சியில் சிம்ரன் போன்ற திறமை வாய்ந்த நடிகர்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும்.அதனால்தான்,மாதவன் இக்கதாபாத்திரத்திற்கு சிம்ரனை மிக சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இவரை தேசத்துரோகி என எல்லா ஊடகங்களும் போட்டிப் போட்டு கத்தியது மாதிரி ,உச்சநீதிமன்றம் இவரை நிரபராதி என விடுவித்தபோது, ஏன் பெரிய அளவில் Focus பண்ணவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

எப்பொழுதுமே ஊடகங்கள் எதிர்மறை சம்பவங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ,நேர்மறை சம்பவங்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இவரை நிரபராதி என உச்சநீதிமன்றம் விடுவித்தப் பிறகு ,இந்தச் சிக்கலில் இவரை மாட்டியது யார் ?பின்னணி என்ன?இந்தக்கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது வரையில் விடையே இல்லை.

காட்சிப்படி,மாலத்தீவில் இரண்டு பெண்களை இவர் சந்தித்தாகவும் அவர்கள் மூலமாகவே இவர் ராக்கெட் ரகசியங்களை விற்றதாகவும் சொல்லப்படுகிறது.அப்பெண்கள் இவரை பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார்கள்.பின் ஏன் கேரள உளவுத்துறை போலீஸ் நம்பிநாராயணனை இப்படியொரு கேஸில் மாட்டவைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

இவருக்கு நஷ்டஈடாக வெறும் 50 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டும் ,இவரும் இவர் குடும்பம் அடைந்த மன உளைச்சலை எல்லாம் நேர்செய்து விட முடியுமா?

படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று.விசாரணைக் கைதியாக நம்பி நாராயணன் சிறையில் இருக்கிறார்.இவருடன் பணியாற்றிய, இக்கட்டான சூழ்நிலையால் நம்பிநாராயணனை தன்னுடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும், அவர் மேல் அடங்காத கோபத்தில் இருக்கும் சக விஞ்ஞானி ஒருவர் மாதவனை (நம்பிநாராயணன்) சந்திக்க வருகிறார்.அப்பொழுது அவர் சொல்லும் டயலாக் காட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்."ஒன்னையை இந்தக் கோலத்துல பாக்க எனக்கு சந்தோஷமாத் தான்யா இருக்கு...அதற்காகத்தான் ஒன்னையை பாக்கவும் வந்தேன்...அதே நேரத்துல ஒன் கூட வேலை செஞ்சவங்க யாருமே பாக்க வரலேன்கிறதை நினைச்சும் ஆச்சர்யப் படறேன்....என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில எனக்கு ஒன் மேல கோவம் இருந்தாலும் ஒன்னையை நாட்டைக் காட்டிக் கொடுக்கற தேசத்துரோகியா ஒருக்காலும் என்னால ஏத்துக்கவே முடியாது",ன்னு சொல்வார்.இதற்கான reaction-ஐ அற்புதமா வெளிப்படுத்துவார் நடிகர் மாதவன்.இக்காட்சிக்கான பின்னணிக் காட்சியானது படத்தின் மிக முக்கியமான காட்சியாகும்.நம்பிநாராயணன் அவர்களின் Character-ஐ ஆணித்தரமாக சொல்லும் அழுத்தமான காட்சியும் கூட.

நம்பிநாராயணன் அவர்களின் சக விஞ்ஞானியாக பணியாற்றியவர்களில் அப்துல்கலாமும் ஒருவர் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

நடிகர் மாதவன் நம்பிநாராயணன் கதாபாத்திரத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார். தொப்பை எல்லாம் இயற்கையாகவே வளர்த்திருக்கிறார்.எவ்வித செயற்கையும் கிடையாது.இதற்கான வீடியோவும் தனியா இருக்கு.Old getup-ஐ அப்படியே தன்னுடைய மேக்கப் மூலம் அழகாக கொண்டு வந்திருக்கிறார்.நடிகர் சூர்யா படப்பிடிப்புத்தளத்தில் 'யார் உண்மையான நம்பிநாராயாணன் ',என கண்டுபிடிக்க முடியாமல் சற்று நேரம் திணறியிருக்கிறார்.

விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு கொடுத்த மன உளைச்சலுக்கு ஈடு செய்யும் விதமாக, இந்தப் படத்திற்கு இந்தியா முழுக்கவே வரிவிலக்கு கூட கொடுத்திருக்கலாம்.

இன்றைய மாணவச்செல்வங்கள் எல்லாம் விஞ்ஞானி நம்பிநாராயணனின் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நடிகர் சூர்யா நம்பிநாராயணனை நேர்காணல் எடுப்பதிலிருந்து படம் விரிகிறது.

நேர்காணல் முடியும்பொழுது,சூர்யா Emotional ஆகி நம்பிநாராயணன் காலில் விழுந்து ,'இந்த நாட்டின் சார்பா நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார்',என சொல்லும் பொழுது நம்மாலும் கண்ணீரை அடக்க முடியாது.

அந்தக்காட்சியில் மாதவனை dissolve ஆக்கி நிஜ நம்பி நாராயணனை காண்பித்து காட்சியை அழகுபடுத்தியிருப்பார்கள்.தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிய பிறகு,அவர் கண்ணீர் சிந்தி அழும் காட்சியில் திரையரங்கமே ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கி விடும்.

இசையமைப்பாளர் சாம் C.S.,ஒளிப்பதிவாளர் சிரிஷாராய் -போன்றவர்களின் அர்ப்பணிப்பை காட்சிகளின் வழியே கண்டு அவர்களின் மீது பெருமதிப்பும் கொண்டேன்.

இதுதான்,இப்படத்திற்கான வெற்றி.தேசிய விருதுகள் பல கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் அதே வேளையில் தேசப்பற்றாளரை தேசத்துரோகி என குத்தப்பட்ட கொடுமையான காலத்தையும் மீண்டும் நினைவு படுத்தவே இப்பதிவு!

சே மணிசேகரன்

Thursday, August 24, 2023

Chandrayaan - 3 Landig in Moon

 






  



 







 

அர்ச்சகர் வழக்கில் -உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி தவறான செய்தி பரப்பி நீதிமன்ற அவமதிப்பு செய்கின்றனர். TNHRCE Department

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி #தவறான_செய்தி பரப்பி #நீதிமன்ற_அவமதிப்பு செய்கின்றனர். TN Hindu Religious & Charitable Endowments Department துறை சார்பாக தமிழக திமுக அரசு அக்கோவிலில் அர்ச்சகர் நியமிக்க மாட்டோம் என்றிட, தமிழ் அர்ச்சகர் வழக்கறிஞர் மற்ற கோவில்களிலும் இதே நிலைமை என்றிட உயர் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முடிக்க வேண்டும் அதுவரை எந்த அர்ச்சகரையும் நியமிக்காது என உறுதி தந்துள்ளனர்.

 



 

ராக்கெட் ஏவுதளம் தமிழகம் வராமல் கெடுத்த அண்ணாதுரை & அமைச்சர் - ஸ்ரீஹரிகோட்டா சென்றது எவ்வாறு?

 ராக்கெட் ஏவுதளம் தமிழகம் வராமல் கெடுத்த அண்ணாதுரை & அமைச்சர் - ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா சென்றது எவ்வாறு? 

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். 

 

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும்.  மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.                                         

இந்திய விண்வெளித்துறையை அழிக்க நடந்த அமெரிக்கச் சதியில் பங்கேற்று, மாலத்தீவைச் சேர்ந்த முன்னாள் பெண் உளவாளிகள் மூலம் இஸ்ரோவின் ஈடு இல்லாத விஞ்ஞானிகள் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வை விவரிப்பதே ‘‘Ready to fire" என்னும் நூல். எழுதியவர் நம்பி நாராயணன் என்னும் ஏவுகணை விஞ்ஞானி; அந்த நூல் கூறும் வரலாறு

அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை உடல்நிலை காரண கூறி விக்ரம் சாராபாயை  சந்திக்க தன்  மூத்த அமைச்சர் மதியழகன் அனுப்பினார். விக்ரம் சாராபாயை சந்தித்து பேச மது அருந்திய தெளிவற்ற நிலையில் இருந்த தி.மு.க அமைச்சரை 'கைத்தாங்கலாக' அழைத்து வருகின்றனர். வந்ததும் மிகவும் தாமதமாக. வந்ததும் வாய்குழறல் மற்றும் ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான எதிர்பார்ப்புகளை(லஞ்சம்) முன்வைக்கிறார் அந்த தி.மு.க அமைச்சர்.




 தலைசிறந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தி.மு.க அமைச்சரின் செயல்பாடுகளை கண்டு வெறுத்துத் திரும்புகிறார். பிறகு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைந்தது 

Thanks - https://valamonline.in/2018/09/blog-post_73.html

Saturday, August 19, 2023

ஸ்டெர்லைட் 1 ஆலை மூடப்பட்டது எப்படி இந்தியாவை தாமிர ஏற்றுமதியாளராக இருந்து இறக்குமதியாளராக மாற்றியது.






 1 ஆலை மூடப்பட்டது எப்படி இந்தியாவை தாமிர ஏற்றுமதியாளராக இருந்து இறக்குமதியாளராக மாற்றியது.
ஸ்டெர்லைட் காப்பரின் தூத்துக்குடி ஆலையானது 2018 ஆம் ஆண்டு மே மாதம் குடிமக்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது. அதன் பின்னர் இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறியுள்ளது.
https://theprint.in/economy/how-shutting-down-of-1-plant-turned-india-from-copper-exporter-to-importer-in-under-2-years/322943/






 

Friday, August 18, 2023

மதநிந்தனை என பாகிஸ்தானில் சர்ச் எரிப்பு. பைபிள் - குர்ஆன் முழுவதுமே மதநிந்தனை யே

https://www.youtube.com/watch?v=ioHhrDwJiVs&pp=ygUVUGFraXN0YW4gY2h1cmNoIGJ1cm50
 

அன்னிய பணத்தில் வாழும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எனும் #வெற்று_போராட்ட_பிழைப்பாளிகள் எனும் #AndolanJeevi

 ஒரு 'அன்டோலன்ஜீவி' மற்றும் 'சோதனை பொருளாதாரம்' வெளிப்படுத்துபவர்கள் என்பதை நாம் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்

எழுதியவர்: அபிஷேக் பனர்ஜீ   பிப்ரவரி 15, 2021, 

தற்போதைய விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் அரசின் உறுதியான அரசியல் இயக்கவியலை அசைத்துள்ளன. ( PTI )தற்போதைய விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் அரசின் உறுதியான அரசியல் இயக்கவியலை அசைத்துள்ளன. ( PTI )

மற்ற ஒவ்வொரு துறையிலும், அமெச்சூர் மற்றும் தொழில்முறை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு தெளிவானது மற்றும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதை எதிர்ப்பதற்கு விரிவாக்குவதில் எங்களுக்கு ஏன் சிரமம் இருக்கும்?

விவசாயிகள் நிலத்தை வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் அல்லது கட்டுமான தளங்களில் வேலை செய்கிறார்கள். தலைமை நிர்வாக அதிகாரிகள் வணிகங்களை நடத்துகிறார்கள். மக்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் எதையாவது முதலீடு செய்யும் போது, அவர்களுக்கு வழக்கமாக வருமானம் தேவை. அனைவருக்கும் ஒரு தொழில் இருக்கிறது, ஏனென்றால் எல்லோரும் சாப்பிட வேண்டும். நீங்கள் எந்தவொரு வேலையும் செய்யும்போது, அன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளால் உங்கள் நலன்கள் அச்சுறுத்தப்படுவதை அவ்வப்போது நீங்கள் உணரலாம். பின்னர், நீங்கள் ஒரு சுதந்திர நாட்டில் வசிக்கிறீர்கள் என்று கருதி, ஆர்ப்பாட்டங்கள் இருக்கப் போகின்றன.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பாளரின் தொழில்முறை உந்துதலை தீர்மானிக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்பது எப்போதாவது நடந்திருக்கிறதா? இந்த குறிப்பிட்ட நபரை தடுப்புகள், எதிர்ப்பு பேரணிகள், முழக்கங்களை வளர்ப்பது மற்றும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான ஊடக தோற்றங்களை நீங்கள் காண்கிறீர்கள் என்று சொல்லலாம். அவை அனிமேஷன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அவர்களின் சொல்லாட்சி சமரசம் செய்யவில்லை. ஆனால் அவர்களின் உந்துதலை ஒருபுறம் இருக்க, அவர்களின் தொழில் உண்மையில் என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.

சரி, நீங்கள் ஒரு “ அன்டோலஞ்சீவி உடன் கையாளலாம்".

பிரதமர் அதை இந்தியாவின் அரசியல் அகராதியில் செருகியதிலிருந்து, இந்த வார்த்தையைச் சுற்றி நிறைய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. விமர்சகர்கள் லேபிளைக் கண்டிக்க விரைந்துள்ளனர் மற்றும் / அல்லது அந்த வகையான எதுவும் இருக்கக்கூடும் என்பதை மறுக்கின்றனர். மற்றவர்களை விட இன்னும் சத்தமாக, இது சந்தேகத்தை எழுப்புகிறது ( மற்றும் கேளிக்கை ). ஆனால் நீங்கள் பிரதமரின் உரையை கவனமாகக் கேட்டால், அவர் தன்னை மிகவும் தெளிவுபடுத்தினார் என்று நான் நம்புகிறேன். சிலர் தொழிலாளர்கள் ( அல்லது shramjeevis ), சிலர் புத்திஜீவிகள் ( அல்லது budhijeevis ). அப்படியே, தொழில்முறை கிளர்ச்சியாளர்கள் ( அல்லது ஓண்டோலன்ஜீவிஸ் ) உள்ளவர்கள் உள்ளனர். இது மற்றொரு வேலை வரி. ஏன் ஆச்சரியம்?

அனைவருக்கும் ஒரு தொழில் இருப்பதை நினைவில் கொள்க. எனவே ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பாளரின் தொழிலை நீங்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்கள் ஏன் மிகவும் அனிமேஷன் செய்யப்பட்டவர்கள், அவர்கள் எதிர்ப்பிலிருந்து விலகி வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு ஓடோலன்ஜீவி என்று பொருள். இப்போது கேள்வி ஆகிறது: யாராவது ஏன் தங்கள் தொழிலை மறைப்பார்கள்? எதிர்ப்பாளர்களை மனசாட்சியிலிருந்து செயல்படுவதாக நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால். எதிர்ப்பு என்பது ஒரு வேலையாக இருக்கக்கூடும் என்பதை நாம் உணர்ந்தால், அது அவர்களின் போராட்டங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

எனவே ஒரு ஓடோலன்ஜீவியை எவ்வாறு கண்டுபிடிப்பது? குறைந்தது இரண்டு அறிகுறிகள் உள்ளன. முதலில், நான் முன்பு கூறியது போல், அவர்களின் தொழில் சரியாக என்ன என்பதை நீங்கள் சொல்ல முடியாது. இரண்டாவது முதலில் இயற்கையாகவே பின்தொடர்கிறது. அவர்கள் மிகவும் பொதுவானவர்கள், எல்லா இடங்களிலும் காணப்படுகிறார்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் மற்றும் அவ்வப்போது வேறு யாருடனும் அணிவகுத்துச் செல்கிறார்கள். ஏனென்றால் எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் என்ன காரணம் என்பதை அவர்கள் அதிகம் பொருட்படுத்தவில்லை. எதிர்ப்பு என்பது தனக்கு காரணம்.

https://www.news18.com/news/opinion/how-to-spot-an-andolanjeevi-and-why-we-need-to-acknowledge-that-the-protest-economy-exists-3436502.html

How to Spot an 'Andolanjeevi' and Why We Need to Acknowledge that the 'Protest Economy' Exists

By: Abhishek Banerjee

Last Updated: FEBRUARY 15, 2021, 15:26 IST

The ongoing farmers' protests have shaken the enitre political dynamics of the state. (PTI)

The ongoing farmers' protests have shaken the enitre political dynamics of the state. (PTI)

In every other field, the distinction between amateur and professional is both clear and universally accepted. Why would we have difficulty extending this to protesting?

Farmers work the land. Labourers work in factories or on construction sites. CEOs run businesses. When people invest their entire lives into something, they usually need a return. Everyone has a profession, because everyone has to eat. And when you are in any line of work, you might perceive from time to time that your interests are being threatened by policies of the government of the day. And then, assuming that you live in a free country, there are going to be protests.

But has it ever happened that you are struggling to determine the professional motivation of a particular protester? Let’s say you see this particular person at barricades, protest rallies, raising slogans and making dozens of media appearances a day. They seem animated. Their rhetoric is uncompromising. But let alone their motivation, you just can’t seem to figure out what their profession really is.

Well, you might be dealing with an “andolanjeevi".

There has been a lot of excitement around this word, ever since the Prime Minister inserted it into India’s political lexicon. Critics have rushed to denounce the label and/or deny that anything of that sort could exist. Some more loudly than others, which raises suspicion (and amusement). But if you listen to the Prime Minister’s speech carefully, I believe he made himself quite clear. Some people are labourers (or shramjeevis), some are intellectuals (or buddhijeevis). Just like that, there are people who are professional agitators (or andolanjeevis). It’s another line of work. Why the surprise?

Remember that everyone has a profession. So if you cannot figure out the profession of a particular protester and why they are so animated, chances are that they are living off the protest itself. That is what it means to be an andolanjeevi. The question now becomes: why would anybody hide their profession? Perhaps because we are conditioned to think of protesters as acting out of conscience. If we realise that protesting can be a job in itself, it undermines their protests.

So how do you spot an andolanjeevi? There are at least two symptoms. First, as I said before, you can’t tell what their profession exactly is. The second follows naturally from the first. They are very general, seen everywhere, marching with students, lawyers, farmers and anyone else from time to time. Because they don’t care very much what is the cause of any particular group. The protest is the cause in itself.The professional protesters, and they know who they are, have tried to wiggle out of this label by saying it stigmatises all dissent. But it does not. Should we label any opposition politician as an andolanjeevi? No, of course not. Because the motivations of an opposition politician are clear. They are trying to win the next election. Should any socially or politically conscious person be labeled as andolanjeevi? Again, no, because people take time out of their lives every day to pursue hobbies, passions and anything else they feel strongly about.

In every other field, the distinction between amateur and professional is both clear and universally accepted. Why would we have difficulty extending this to protesting? If someone works full-time at protesting for a number of unrelated causes, it means they are professionals who are providing a service. Why can’t we identify them as such?

And again, there is no stigma. Peaceful protest is legal. And presumably, so is making a living off the protest economy. Unless someone chooses to hide their profession, in which case there is bound to be suspicion. Think of a truck driver who transports goods around the country, making an honest living. Who could point a finger at them? But then, what if someone were driving around a truck, loaded with different goods every day, but apparently never going anywhere and denying that they are even truck drivers? That’s when you would begin to worry.

Some say that it is outrageous to suggest that andolanjeevis could walk among us. The opposite is true. In fact, it would be naive to say that there is no protest economy. There are all sorts of interest groups, even foreign and diplomatic interests that need to influence public policy. There is a market need for organisers, influencers and campaigners who can focus public attention on something or the other. How could we pretend that there is nobody out there, fulfilling an obvious demand in the market?

We have to reach two important realisations here. First, we have to acknowledge that andolanjeevis exist. Much of what we see is professional, coordinated outrage that somebody is likely getting paid to carry out. As with the now-infamous ‘toolkit,’ we know there are hundreds, even thousands of people coordinating with each other to generate attention. Attention is currency. And if all these people are putting their lives into this, someone probably needs to get paid.

It doesn’t mean all protests are ‘bad’ or ‘immoral’ in some way. All products have ad campaigns. Sometimes, it can be hard to tell an advertisement from a sincere recommendation. That doesn’t mean we demonise all commercial products. It also does not mean that we deny the existence of advertisements.

The second point is that we need to ask ourselves whether the andolanjeevis right now are doing more harm than good. Take the case of the so-called farmer protests. Could status quo really bring Indian agriculture out of a rut? As population grows, the size of each individual farm becomes smaller and smaller. To boost the income of farmers, do we not need private sector investment? By leaving things as they are and letting the problem fester, are we moving the nation backward or forward?

That leaves us with just one question to deal with. And a lot of critics have tried to use it as the ultimate counter argument.

What about the Mahatma? Would you call him andolanjeevi?

No, because the Mahatma is above the vast majority of humanity. A person like that comes along only once in a hundred years or more. Exceptions cannot prove the rule. Just as Bill Gates or Mark Zuckerberg may have dropped out of college, but don’t presume that the average college dropout will have the same career progression. They were the outliers.

Simply put, there can’t be this many Mahatmas. Just as there cannot be lakhs of Einsteins or Tagores. They were called exceptional for a reason. If you believe that India has suddenly begun mass producing Mahatmas at every barricade and protest rally, the joke is on you!

(DIsclaimer: The author is a mathematician, columnist and author. Views expressed are personal.)

Wednesday, August 16, 2023

இந்தியாவில் தினமும் 35 மாணவர்கள் கல்விச் சுமையினால் தற்கொலை- தமிழகத்தில் தினமும் 4 மாணவர் தற்கொலை

இந்தியாவின் அதிர்ச்சியூட்டும் தற்கொலை விகிதம்: ஒவ்வொரு நாளும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாழ்க்கையை முடிக்கின்றனர்

https://www.wionews.com/india-news/indias-shocking-suicide-rates-more-than-35-die-students-every-day-591830

புது தில்லி, இந்தியா எழுதியவர்: அபூர்வா அதிகாரி புதுப்பிக்கப்பட்டது: மே 13, 2023, 04:41 PM IST

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் (ADSI) அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 13,000 மாணவர்கள் ஒவ்வொரு நாளும் 35க்கும் மேற்பட்டோர் என்ற விகிதத்தில் இறந்துள்ளனர்.


ஆந்திரப் பிரதேச இடைநிலைத் தேர்வு வாரியத்தால் புதன்கிழமை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆந்திராவில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவின் முதன்மையான கல்லூரிகளில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பல்வேறு வளாகங்களில் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் (ADSI) அறிக்கையின்படி, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் 35 க்கும் அதிகமானோர் என்ற விகிதத்தில் இறந்துள்ளனர், இது 2020 இல் 12,526 இறப்புகளில் இருந்து 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 10,732 தற்கொலைகளில் 864 பேர்தேர்வில் தோல்விகாரணமாக நடந்துள்ளனர்.
2021
ஆம் ஆண்டில் மாணவர்களிடையே தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது, என்சிஆர்பியின் சமீபத்திய தரவு காட்டுகிறது. மகாராஷ்டிராவில் 2021 ஆம் ஆண்டில் 1,834 பேர் தற்கொலை செய்துகொண்டு, மத்தியப் பிரதேசத்தில் 1,308 பேர், மற்றும் தமிழ்நாட்டில் 1,246 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
RCI
பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் உளவியலாளர் டாக்டர் அஷிமா ஸ்ரீவஸ்தவா, WION இடம் இது குறித்துப் பேசுகையில், “மனநலப் பிரச்சினைகள் தொடர்பான களங்கம் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பல நேரங்களில் மக்கள் தொழில்முறை உதவியை அணுக முடியாது. எனவே, அத்தகைய சூழ்நிலையில் அரசாங்க உதவி மையங்கள் மற்றும் அரசு சாரா உதவி மையங்கள் மிகவும் உதவியாக உள்ளன. முதலாவதாக, அவை இலவசம் மற்றும் எளிதில் அணுகக்கூடியவை, மேலும் குழந்தைகள் இந்த அவசர எண்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஹெல்ப்லைன்கள், ஒரு நபர் அதிக அளவில் துயரத்தில் இருக்கும்போது, குழந்தைகளுக்கு மிகவும் ரகசியமான மற்றும் நியாயமற்ற ஆதரவை வழங்குகின்றன. இந்தியாவில் சிலவற்றைக் குறிப்பிடுவதற்கு, NGOக்களால் நடத்தப்படும் சஞ்சீவனி மற்றும் ஸ்னே, அவர்களின் இணையதளத்தில் சரியான நேரங்களும் மொழிகளும் உள்ளன.
"
ஒருவர் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தக் கூடிய பல உத்திகள் உள்ளன. முதலாவதாக, இது அவர்களின் எண்ணங்களை ஒரு தாளில் பதிவுசெய்து, அவர்களுக்கு ஒரு வெளியீட்டைக் கொடுக்கிறது, பின்னர் அவற்றை சிறந்த முறையில் செயல்படுத்தலாம், மற்றவை உங்கள் தூண்டுதல்களை அடையாளம் கண்டு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, சரியான வழிகளைக் கண்டறியலாம். சரியான சமாளிக்கும் வழிமுறைகளை கண்டறிதல். ஆரோக்கியமான தூக்க சுழற்சி மிக முக்கியமான விஷயம். அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை கையாள்வதில் உதவியாக இருக்கும் பல அடிப்படை பயிற்சிகள் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
65
சதவீத மக்கள் 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில், இளைஞர்களிடையே இறப்புக்கான நான்காவது முக்கிய காரணமான தற்கொலை என்பது நாட்டில் ஒரு ஆபத்தான பிரச்சினையாகும். இது உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தற்கொலைத் தடுப்புக்கான தேசியக் கொள்கையானது, பொதுவாக உடல்நலம் மற்றும் குறிப்பாக மனநலம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு கட்டாய நடவடிக்கையாகும்.

India’s shocking suicide rate: More than 35 students end life every day

New Delhi, IndiaWritten By: Apurva AdhikariUpdated: May 13, 2023,

STORY HIGHLIGHTS

As per National Crime Records Bureau’s (NCRB) Accidental Deaths & Suicides in India (ADSI) report over 13,000 students died in 2021 in India at the rate of more than 35 every day. 

Nine students have died by suicide in Andhra Pradesh after results of class 11 and 12 exams were declared on Wednesday by the Andhra Pradesh Board of Intermediate Examination. The shocking news comes amidst a spate of suicides in India's premier colleges. Four students have died in suspected suicides this year at various campuses of the Indian Institute of Technology (IIT).

As per National Crime Records Bureau’s (NCRB) Accidental Deaths & Suicides in India (ADSI) report, over 13,000 students died in 2021 in India at the rate of more than 35 every day, a rise of 4.5 per cent from the 12,526 deaths in 2020 with 864 out of 10,732 suicides being due to “failure in examination.” 

The number of deaths by suicide among students saw an increase of 4.5 per cent in 2021, shows the latest data from the NCRB. Maharashtra had the highest number of student deaths by suicide in 2021 with 1,834 deaths, followed by Madhya Pradesh with 1,308, and Tamil Nadu with 1,246 deaths.

Speaking on this issue, Dr Ashima Shrivastava, RCI Registered Child and Adult Psychologist told WION, “As we all know that there is a stigma related to mental health issues. Many times people are not able to approach professional help. So, in such a scenario there are Govt helplines and NGO helplines which are very helpful. First of all, they are free of cost and easily accessible and children could keep a note of these emergency numbers. These helplines provide a very confidential and non-judgemental support to the children when a person is in a high level of distress. To name a few in India, there is Sanjeevani and Sneh, run by NGOs, there are proper timings and languages present on their website.”

“There are a lot of strategies which one can use to keep a check on their emotions. Like firstly, it could be journaling their thoughts on a paper which gives them an outlet and then process them in a better manner and other could be recognising your triggers and be mindful of the things that are stressful and find the right ways to be with, identifying right coping mechanisms. A healthy sleep cycle is the most important thing. There are many grounding exercises that can be helpful in dealing with overwhelming stress and anxiety,” she added.

Suicide which accounts for the fourth leading cause of death amongst the youth is an alarming issue in the country, for a population where 65 per cent of people are under 35 years of age. It is one of the leading causes of fatalities. A national policy on suicide prevention is an imperative step towards fulfilling India’s commitment to health in general and mental health in particular as well as towards achieving the World Health Organization’s Sustainable Development Goals.