ஓடும் ரெயிலில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: மத போதகர் கைது
பதிவு: ஜூலை 03, 2016 16:33
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் வடக்கேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறையையொட்டி மும்பை - கன்னியாகுமரி நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சூர் புறப்பட்டார். அந்த ரெயிலில் குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த சோபு (வயது 29) என்பவரும் பயணம் செய்தார்.
சோபு கப்பியறை பகுதியில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். தன்னை மதபோதகர் என்று அவர் அந்த மாணவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சு கொடுத்துள்ளார். மதபோதகர் என்பதால் அந்த மாணவியும் சகஜமாக அவரிடம் பேசி உள்ளார்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோபு அந்த மாணவியிடம் ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த ரெயில் பெட்டியில் இவர்கள் பயணம் செய்த பகுதியில் வேறு பயணிகள் யாரும் இல்லாததால் சோபுவின் சில்மிஷம் தொடர்ந்து உள்ளது.
பாலக்காடு பகுதியில் அந்த ரெயில் வந்தபோது அந்த மாணவி போன் மூலம் ரெயில்வே போலீசுக்கு இந்த தகவலை தெரிவித்தார். ஆனால் போலீசார் வருவதற்குள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. இதனால் அந்த மாணவி திருச்சூர் ரெயில்வே போலீசுக்கு இதுபற்றி மீண்டும் தகவல் தெரிவித்தார்.
திருச்சூர் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்ததும் அங்கு தயாராக நின்ற போலீசார் சோபுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு திருச்சூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். திருச்சூர் போலீசார் சோபு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சூர் ஜெயிலில் அடைத்தனர்.
No comments:
Post a Comment