Sunday, January 17, 2021

பாரதிதாசன் சி.என்.அண்ணாதுரை மோசடியை ஜாதியை இழிவு படுத்தி திட்டிய திராவிடம்

பாரதி தாசன் திராவிட இயக்கக் கவிஞர், இவருக்கு மக்களிடம் வசூல் செய்து பணம் கொடுக்க முயற்சியில் சேர்ந்து அந்த பணத்தில்  சிஎன் அண்ணாதுரை பணம் சுரிட்டிட வழக்கு போட்டு வென்றார்.  சிஎன் அண்ணாதுரை பற்றிய பாரதி தாசன் எழுத்துகள் ஜாதிவெறி மிருக திராவிட முகம்

மேலும் படிக்க‌

கீழவெண்மணி -தமிழ் பெண்கள்-குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற கோபால கிருஷ்ண நாயுடு செயல் பற்றி .வெ.ராமசாமி நாயக்கர்

ஈவே ராமசாமி நாயக்கர்- இனவெறி பிராமணர் வெறுப்பு மேடை பேச்சிற்கு 6மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்







THANKS  AB Rajasekaran 11 செப்டம்பர், முற்பகல் 10:46
https://www.facebook.com/rajasekaranab/posts/10215015792175206

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்


குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.
யார் அவர்?
புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.
திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.
பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.
ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.
அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.
’….. கலப்பு மணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி’
என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.
பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.
28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.
பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.
சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?
1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.
கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.
1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18
அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-
இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.
இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.
அடுத்த அறிவிப்பு வருமாறு :-
முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?
எனது பதில் :-
எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.
அதைக் கேளுங்கள்.
அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!
அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.
இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?
பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.
இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.
தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.
எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.
காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.
நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.
இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!
விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?
அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.
(தொடரும்)
2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19
விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.
என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.
அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.
அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.
சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.
சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.
டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.
விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.
பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.
விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.
அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!
அதன் தகவல் என்ன?
பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.
என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.
சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.
திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.
நான் என்ன செய்தேன்?
நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.
(தொடரும்)
3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20
தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.
அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!
என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.
தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.
உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.
அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!
என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.
குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.
கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.
இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!
என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.
அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.
தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.
இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.
அந்தக் கேள்வி என்ன?
கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.
இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.
(தொடரும்)
4. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21
அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.
5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22
என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.
பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.
ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.
என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]
***********************
[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.
அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.
அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.
டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.
திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.
சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணாதுரை யாருக்கு அண்ணா?

"திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை தலைமையில் பிரிந்து வந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். ‘கண்ணீர் துளிகள்’ என்று பெயர் வாங்கிய போதெல்லாம் அந்த கூட்டத்தில் நானும் இருந்திருக்கிறேன். 1949இலிருந்து அண்ணாதுரை நியமிக்கிறவர்தான் கட்சி நிர்வாகியாக இருந்தார். முதன்முதலாக 1954-ல் தான் தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் நடந்தது. அப்போது ‘செட்யூல்டு கேஸ்ட் பெடரேசன்’தொடர்பு இருந்ததினால், சென்னை மாவட்டச் செயலாளராக ஏன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வரக்கூடாது என்ற கருத்து எனக்கும் எனது நண்பர்களுக்கும் உருவானது. காரணம்,அப்போது சென்னை மாநகராட்சி அறுபது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறுபது பகுதிகளில், 40 பகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் தி.மு.க. உறுப்பினர்களாக இருந்தார்கள். அப்போது இளம்பரிதிதான் எங்களுக்குத் தலைவர்.இப்போது(2008) அமைச்சராக இருக்கிறாரே பரிதி இளம்வழுதி அவருடைய அப்பா அவர்.

அப்போது, கட்சியில் பெரிய தலைவராக இருந்தார் சத்யவாணிமுத்து. எங்கள் கருத்தை அவரிடம் கூறினோம். அதற்கு சத்யவாணிமுத்து, மறுப்புத் தெரிவித்தார். இது சாதி மத பேதம் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கப் பாடுபடுகின்ற இயக்கம். இதில் சாதி அடிப்படையில் பேசக்கூடாது என்றார். இன்று அந்த கட்சியைப் பற்றி யாராவது இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வார்கள? ஆனால் சத்யவாணிமுத்து அன்று அப்படிப் பேசினார்.

நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் சாதி பாரட்டவில்லை. சென்னையிலிருக்கும் நாற்பது பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். நிர்வாகிகளின் வாக்கு எங்களுக்கு கிடைக்கும் என்கிற சூழ்நிலையில், நாங்கள் ஏன் போட்டி போடக்கூடாது என்று பேசினோம். இது ஜனநாயக முறைதானே! ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நீங்கள் இளம்பரிதிக்கு வாக்களிக்க வேண்டுமென்று சத்தியவாணிமுத்து அக்காவிடம் கூறிவிட்டு வந்து விட்டோம். மாவட்டச் செயலாளர் தேர்தலில், பரிதியை நிறுத்தினோம். அப்போது சென்னையில் 75 ஓட்டு இருந்தது. மாநில நிர்வாகிகள் எல்லோரும் சென்னையில் இருந்ததால், அவர்களின் ஓட்டுக்களும் எங்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், தலைவர்களிடமும் ஓட்டுக்கேட்டுப் போனோம்.

கலைஞர் - அப்போது அவருக்கு மு.க.என்று பெயர்-மட்டும்தான், நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. எனது ஓட்டு உங்களுக்குத்தான், ஆனால் வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று கூறினார்.

அப்போது அவர் சிறிய தலைவர்தான். வெளிப்படையாக பேச முடியாது. இன்னும் இரண்டு மூன்று ஓட்டு வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டோம். அவர் மறுத்து விட்டார். எப்படியோ கடினப்பட்டு இளம் பரிதியை வெற்றியடையச் செய்து விட்டோம்.

இளம்பரிதியின் மீது அண்ணாதுரைக்குக் கோபம் இருந்தது.ஏனெனில், மாவட்டசெயலாளர் தேர்தலில், அவர் நிறுத்திய கண்ணபிரானை எதிர்த்துதான் இளம்பரிதியை நாங்கள் நிறுத்தினோம்.அவர் ஏற்க்கனவே சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். முதிலியார் சாதியைச் சேர்ந்தவர். தனது சாதிக்காரரைத் தோற்கடித்தவன் என்ற கோபம் அண்ணாதுரைக்கு இருந்தது. எனவே,அவர் எங்களைப் புறக்கணித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று மாவட்டசெயலாளரானாலும் கூட, அலுவலகச் சாவியை அண்ணாதுரையின் ஆள் இளம்பரிதியிடம் கொடுக்கவில்லை. பொதுக்கூட்டம், பிரச்சாரம் நடத்துவதற்குத் தேவையான ஸ்பீக்கர் குழாயைக் கூட கொடுக்கவில்லை. அண்ணாதுரையிடம் புகார் செய்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. அவர் கடும் கோபமாக இருப்பது எங்களுக்குப் புரிந்தது.

1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தார்கள். அந்த பொதுக்குழுவில் ஆர்.டி.அரசு என்பவர் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அண்ணாவும் கருணாநிதியும் மார்டன் தியேட்டர்ஸ் சினிமா கம்பெனி கதைக்குழுவில் சேர்ந்திருந்தனர். புராணப்படங்ளுக்கும் கதைவசனம் எழுத ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்துத்தான்

ஆர்.டி.அரசு தீர்மானம் கொண்டு வந்தார். “கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கட்சியைச் சேர்ந்தவர் எவரும் திரைப்படங்களிலோ, நாடகங்களிலோ கதை வசனம் எழுதக்கூடது” என்பதுதான் அந்த தீர்மானம். அப்போது அண்ணா அவரைப்பார்த்து “டே...உட்காருடா...இதெல்லாம் ஒரு தீர்மானமாடா... உட்காருடா அரசு” என்றார். ஆனாலும் அரசு விடாமல் “இல்லை அண்ணா..நாங்க கிராமத்திற்கு பிரச்சாரத்திற்குப் போகும்போது ஜனங்கள் அசிங்கமா பேசுறாங்க. உங்க கட்சி கொள்கை ஒன்னு, நீங்க செய்யறது ஒன்னான்னு கேள்வி கேட்குறாங்க. நாங்கதான் மழுப்பி பதில் சொல்ல வேண்டியிருக்கு. அதனால இந்த தீர்மானத்தை அண்ணா பரிசீலிக்கனும்னு கேட்டுக்கிறேன்”என்றார் அரசு. மீண்டும் அண்ணாதுரை “அதெல்லாம் சரிடா... இதையெல்லாம் தீர்மானமா போட முடியாதுடா..உட்காருடா...” என்று சொன்னார். அப்போது இளம்பரிதி, சென்னை மாவட்டச் செயலாளர் என்ற முறையில், “நான் கேட்டுக்கிறேன், அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம், தலை நகரத்தினுடைய தீர்மானம். அதற்கு மதிப்புக்கொடுத்து, அந்த தீர்மானத்தை ஏத்துக்கங்க” என்றார். உடனே அண்ணாதுரை “சென்னை உன் மிராசாடா” என்று இளம்பரிதியைப் பார்த்து கேட்டார். “இல்ல அண்ணா.. இது தலைநகரத்திலிருந்து வந்திருக்கும் தீர்மானம். கொஞ்சம் யோசித்துப்பாருங்க”என்றார் பரிதி. அதற்கு அண்ணாதுரை “சரிடா உட்காருடா... நீ வேற...சும்மா பேசிகிட்டிருக்கிற”என்றார் எரிச்சலாக. உடனே இளம்பரிதிக்கு கோபம் வந்துவிட்டது. “நான் தோழர் அண்ணாதுரையைக் கேட்கவில்லை. பொதுச்செயலாளர் பதில் சொல்லட்டும் என்றார். இதைச் சொன்னவுடனேயே உட்கட்சி தேர்தலில் அண்ணாதுரையால் நிறுத்தப்பட்டு, இளம்பரிதியால் தோற்க்கடிக்கப்பட்ட கண்ணபிரான் எழுந்து, “நாங்கள் இதயத்தில் தெய்வமாக வணங்குகின்ற அறிஞர் அண்ணாவை தோழர் என்று சொல்வதைக் கேட்க இந்த காதுகள் என்ன பாவம் செய்தனவோ” என்றார். அதோடு நிறுத்தவில்லை. எதை எங்கே வைக்கனுமோ அங்கேதான் வைக்கனும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால், அது வாலை ஆட்டிக்கொண்டு மலம் தின்னதான் போகும்”என்றார் கண்ணபிரான்.

இளம்பரிதிக்கு கோபம் அதிகரித்துவிட்டது. “என்னையாடா நாய் என்று சொல்கிறாய் நாயே? என் சாதிக்கு வரலாறு உண்டு; நாயே உன் சாதிக்கு வரலாறு உண்டா?” என்றார். கண்ணபிரான் முதலியார், அண்ணாதுரை முதலியார், நெடுஞ்செழியன் முதலியார், என்.வி.நடராசன் முதலியார், எல்லாம் முதலியார் சாதியைச் சார்ந்தவர்களின் மேலாதிக்கம் அப்போது இருந்தது. நான்கைந்து முறை நாயே நாயே என்று இளம்பரிதி பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மதுரை முத்துதான் சண்டியர். கட்சிக்கு அடியாளாக இருந்தவர். அவர் கையாள்களெல்லாம் திரண்டு, எங்களை தாக்க திட்டமிட்டார்கள். ஆனாலும் கலவரம் நடந்து விடக்கூடாது என்று எண்ணி நாங்கள் ஒவ்வொருவராக பொதுக்குழுவிலிருந்து வெளியேறினோம். அத்தோடு பொதுக்குழுவை முடித்து விட்டார்கள். பி..டி.அரசு முன்மொழிந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாளே, இளம்பரிதிக்கு ஒரு ‘ஷோ காஸ் நோட்டீஸ்’வந்தது. அதில் கட்சிக்கு விரோதமாக நீங்கள் நடந்து கொண்டதால், ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று நோட்டீஸ் வந்தது. நாங்களும் ஒரு வழக்கறிஞரைப் பார்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு ஒன்றரை வருடம் நடந்தது. இறுதியில் நீதிமன்றம் வழவழா தீர்ப்பை அளித்தது. இருவர் பேசியதும் தவறென்றது. எனவே, நாங்கள் இனிமேல் கட்சிக்குள் போகக்கூடாது என்று தனியாக ஒரு கட்சி தொடங்கினோம். அதற்கு ‘ஆதி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயர். அண்ணாதுரையை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். அண்ணாதுரை வீட்டின் முன்பே மாநாடு போட்டோம்.

-சொல்லின் செல்வர். அ.சக்திதாசன்.‘முற்றுகை’ காலாண்டிதழ் (சூலை,2008) நேர்காணலில்.











No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி