பத்திரப்பதிவில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ முறைகேடுகள் இருந்தாலோ எந்த அடிப்படையில் ஆவணத்தை பதிவு செய்தார் என சார்பதிவாளர் விளக்கமளிக்க வேண்டும்.
சரியாக இருப்பின் பட்டா மாறுதல் செய்து தரப்படும்.அதில் விதிமீறல் இருப்பின் வருவாய்துறை ஆணையர் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வார்.. இதற்கு முன்பு வரை பட்டா மாறுதலுக்காக விஏஓ அடுத்து வருவாய் ஆய்வாளர் அடுத்து துணை தாசில்தார் அடுத்து தாசில்தார் பார்த்தால் மட்டுமே பட்டா மாறுதல் கிடைக்கும். தற்போது நேரடியாக பத்திரப்பதிவு செய்த உடனேயே தாசில்தார் நேரடி பார்வையில் பட்டா கிடைக்கிறது. சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு ஆன உடனே 24 மணி நேரத்தில் தமிழ் நிலம் ஆப் மூலம் இந்த ஆவணத்தில் உட்பிரிவு ஏதேனும் இருக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்கிறது. மேலும் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதையும் சோதனை செய்கிறது. ஆவணத்தில் எந்தவித பிரச்சனை இல்லாத பட்சத்தில் 15 நாட்களுக்குள் பட்டாமாறுதலை சம்பந்தப்பட்ட நபர் பெறலாம்..

No comments:
Post a Comment