Sunday, July 5, 2026

இலங்கையில் மீண்டும் எழும் முஸ்லிம் அடிப்படைவாத வஹாபியம்-

 "அஸ்மின் ஜப்பர்" எனும் வஹாபிச இசுலாமிய அடிப்படைவாதியை புரிந்துகொள்ளல்!!

https://www.facebook.com/photo?fbid=122219745356304594&set=a.122109317366304594

இவனது சமூகவலைத்தளத்தை முழுமையாக அலசி ஆராய்ந்தால், 2018 வரை சாதாரணமான இருந்தவன், பின்னர் இசுலாமிய அடிப்படைவாத வஹாபிச சிந்தனையில் உள்வாங்கப்பட்டடிருப்பதும், இவனும் "தவ்ஹீத் ஜமாத்" ஐ சேர்தவன் என்ற அடி்படையில் சஹரானின் அத்தனை கொள்கைகளோடும் இவன் ஒத்துப்போயிருக்கும் அதே நேரம் சஹரான் உருவாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத்' (National Thowheeth Jama'ath - NTJ) இன் சில கொள்கைகளுடன் மாத்திரம் முரண்பட்டிருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.

2019 "சஹரான்" தமிழ் கிருத்தவர்களை குறிவைத்து கொ*லை செய்தபின்னர், "அஸ்மின் ஜப்பர்" இன் செயற்பாடுகளில் வஹாபிச தீவிரவாத போக்கு கடுமையாக வெளிப்பட்டிருக்கிறது. இதன் பின்னர்தான் இவன் கட்டாருக்கு சென்றிருக்கிறான். கட்டார் சென்றபின்னர் இவனது வஹாபிச போதனைகள், சூபிக்கள் மற்றும் ஷியாக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது மாத்திரமன்றி, அடங்கிக்கிடந்த சஹரான் ஆதரவாளர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளதாகவே கணிக்க முடிகிறது.
தற்போது சஹரான் 2.0 வாக முகநூலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் "அஸ்மின் ஜப்பர்" இன்று வெளியிட்டிருக்கும் காணொளியில் "தான் புலிகளை எதிர்ப்பதாகவும், சிறிலங்காவை நேசிப்பதாகவும், புலிகளை பயங்கரவாதிகள் என விமர்சிப்பது எப்படி இனப்பிரச்சினையை தூண்டுவதாக அமையும்" என்று கேள்வி எழுப்பி, தன்னுடைய வஹாபிச அடிப்படைவாதத்தை மடைமாற்ற முயற்சி செய்திருக்கிறார். இதே போலத்தான் சஹரானும் "சிறிலங்கி" வேடம் போட்டு,2021 எப்ரல் 21 இல் சிறிலங்காவில் வைத்து இசுலாமியரல்லாத தமிழர்களை குறிவைத்து கொ*லைவெறித்தாக்குதல் நடத்தியிருந்தான்.
புலிகளை பயங்கரவாதிகள் என்பதோ, தடைசெய்து வைத்திருப்பதோ அதை திரும்பத்திரும்ப பேசுவதோ தமிழர்களை ஒருபோதும் காயப்படுத்தாது. விடுதலைக்காக போராடும் இனம் ஒருபோதும் தனது போராட்டத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. பலஸ்தீனிய விடுதலை, குர்தீஸ் விடுதலை முதல் காஸ்மீர் விடுதலை வரை அத்தனை தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டத்திற்கும் இதுதான் நிலை. வஹாபிசத்தைத் தவிர வேறெந்த உரோமமும் தெரிந்திராத, இனம் என்றால் என்னவென்றே தெரியாத இசுலாமிய அடிப்படைவாதியிடம் எதையும் எதிர்பாக்கக் கூடாது.
தற்போது "அஸ்மின் ஜப்பர்" , தன்னை "சிறிலங்கி" என அடையாளப்படுத்திக் கொண்டு, சிறிலங்கிகளாக வாழும் சூபி மற்றும் சியா முசுலீம் பிரிவினர் மீதும், சுனி முசுலீம் பிரிவினராக இருந்து வஹாபிசத்தை எதிர்க்கும் முற்போக்காளர்கள் மீதும் அச்சுறுதலை விடுத்து அவர்களுக்கு எதிராக "சஹரானை"ப் போலவே வஹாபிச தீவிரவாதத்திற்கு ஆட்களை மூளைச்சலவை செய்வதும் இணைய ஆட்சேர்ப்புச் செய்வதும் உடனடியாக சிறிலங்கா காவல்துறையின் கவனத்திற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.
"புலிகளை எதிர்க்கிறேன் அதனால் நான் சிங்களவனுக்கு ஆதரவானவன், சிறிலங்காவிற்கு விசுவாசி" என்ற புலுடாக்களெல்லாம், "சிறிலங்கி"யாக இருந்து, சிறிலங்கா இராணுவ பயிற்சி எடுத்த சஹரான் என்கிற இசுலாமிய அடிப்படைவாத தீவிரவாதி செத்துப்போனதோடு அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. ஒரு இசுலாமிய அடிப்படைவாதி தன்னை தீவிர "சிறிலங்கா" விசுவாசியாக காட்டுகிறான் என்றால் அவன் மிக ஆபத்தானவன். அதன் கட்டமைப்புக்குள் புகுந்து கொள்வதற்கு முயற்சிக்கிறானக் என்று அர்த்தம்.
இசுலாமிய அடிப்படைவாதி தான் நம்பும் தீவிரவாதத்தை நம்புவானே தவிர ஒருபோதும் மண்ணையும் மக்களையும் நேசிக்கமாட்டான் என்பது, வரலாறு. சிறிலங்கா அதை ஏற்கனவே அனுபவித்துவிட்டது. விரைந்து நடவடிக்கை எடுப்பதே இந்த போலி சிறிலங்கிகளிடமிருந்து சிறிலங்காவை காப்பாற்றும்.
"அஸ்மின் ஜப்பர்" இன் பதிவுகளோடு ஒத்துப்போகும் நபர்களை கூர்ந்து கவனியுங்கள் அவர்கள் இனைப்போலவே மிகத் தீவிரமான இசுலாமிய அடிப்படைவாதியாகவும், ஒரே மாதிரியான அடையாளங்களுடனும் காணப்படுகிறார்கள்.
யூலை 4, 2026
ஆதவன் துலா

No comments:

Post a Comment