Sunday, August 2, 2026

காவிரி நதியின் பயணம் - K.S.Radhakrishnan

 காவிரி நதியைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பினால், இந்தப் பதிவைப் பொறுமையாக படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

இதுதான் காவிரி நதியின் பயணம்! The Journey of #CauveryRiver
காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் #Mettur அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.
காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை.
ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும்.
காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது.
ஹாரங்கி #Harangi, ஹேமாவதி #Hemavathi மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் #KRS அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.
ஆனால் கபினியின் பயணம் வேறு. #Kabini
கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது.
அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.
இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது.
இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் #Biligundlu அளவிடப்படுகிறது.
பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge)
கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும்.
அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் #Hogenakkal வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.
01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு:
✅Harangi: 127.55/129 அடி – 94%
✅Hemavathi : 100.98/117 அடி – 64%
✅KRS: 91.80/124.80 அடி – 34%
✅Kabini: 56.28/65 அடி – 74%
✅Mettur: 73.82/120 அடி – 39%
✅Bhavani Sagar: 55.32/105 அடி – 18%
✅Amaravati: 28.54/90 அடி – 9%
“சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது.
மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் #Mettur அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன.
அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல.
அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.
சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு.
சுருக்கமாக காவிரியின் பயணம்:
பல மழைப்பகுதிகள்
→ தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள்
→ துணையாறுகள் மற்றும் அணைகள்
→ KRS–கபினி நீர் இணைப்பு
→ பிலிகுண்டுலு அளவீடு
→ ஒகேனக்கல்
→ மேட்டூர்
→ தமிழகத்தின் துணையாறுகள்
→ முக்கொம்பு
→ கல்லணை
→ காவிரி டெல்டா.
ஒரே காவிரி ஆற்றுப்படுகை; ஆனால் அதற்குள் பல துணை நீர்ப்பிடிப்புகள்!
இந்த வரைபடத்தின் நோக்கம், அந்த நீண்ட மற்றும் சிக்கலான காவிரிப் பயணத்தை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதே.
ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நீர்த்தேக்கக் கண்காணிப்புத் தளம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.

Saturday, August 1, 2026

தியாகி வாஞ்சிநாதன் -சுதந்திர போராட்ட வீரர் பற்றி பாசீச விவிலிய கிறிஸ்துவ நச்சு பொய்யை பரப்பும் பவா செல்லதுரை


ஆஷ் படுகொலை
 ராபர்ட் ஆஷ் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தார். வ. உ. சிதம்பரனாரால் நிறுவப்பட்ட "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனம் பெரும்பாலான இந்திய வணிகர்களால் ஆதரிக்கப்பட்டது மற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தது. இதனை ஒடுக்க ஆஷ் பல நடவடிக்கைகளை எடுத்தார். ஆஷ் சிதம்பரனார் மற்றும் சக செயற்பாட்டாளர் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி சிறையிலடைத்தார். 1908 ஆம் ஆண்டு தின்னவேலி எழுச்சியின் போது, ​​வன்முறை மூலம் கலவரத்தை அடக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். குற்றாலத்தில் இந்தியர்கள் குளிக்கத் தடை செய்தார். அவரது செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, புரட்சிகர பிரிவு அவரை படுகொலை செய்ய முடிவு செய்தது. இதற்கு 25 வயதான வாஞ்சிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஞ்சிநாதன் ஆஷின் நடவடிக்கைகளை நெருக்கமாகப் பின்பற்றத் தொடங்கினார். ஆஷ் 1911 ஜூன் 17 அன்று மணியாச்சி தொடருந்து நிலையம் வழியாக சென்னை செல்வார் என்பதை அறிந்தார்.

1911 ஜூன் 17 அன்று, ஆஷ் மற்றும் அவரது மனைவி திருநெல்வேலிலியிருந்து மணியாச்சிக்கு தொடருந்து வழியாக பயணம் செய்தனர். காலை 9:30 மணிக்கு புறப்பட்ட தொடருந்தில் வாஞ்சிநாதனும், சக ஆர்வலர் மாடசாமியும் பயணம் செய்தனர். தொடருந்து மணியாச்சியை 10:35க்கு வந்தடைந்ததும், ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு பெட்டியை நோக்கி நகர்ந்தனர். வாஞ்சிநாதன் தனது மேலாடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆஷை சுட்டுக் கொன்றார். பின்னர் தொடருந்தின் கழிவறைக்குள் ஒளிந்து கொண்டு,தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து வீர மரணம். 

காவல்துறையின் அறிக்கையில், இவர் பிரவுனிங் சிறு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், இந்தத்துப்பாக்கி பாரிசு நகரிலிருந்து பிகாஜி காமாவால் வாங்கப்பட்டு வெங்கடேச ஐயர் மூலம் வாஞ்சிநாதனை வந்தடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவருடன் வந்த சகா கூட்டாளி சம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் சென்றார். வாஞ்சிநாதனின் தந்தை அவரது செயல் பிரமாணர்களுக்கு எதிரானது எனக் கருதி உடலை வாங்க மறுத்துவிட்டார்.  இவரின் உடல் பின்னர் பாளையங்கோட்டை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவரது சட்டைப் பையில் ஒரு கடிதம் காணப்பட்டது, அதில் அவர் ஆங்கிலேயர்கள் சனாதன தர்மத்தை அழிக்க முற்பட்டதாகவும், ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க தனது பங்கைச் செய்ததாகவும் கூறினார்.

இந்தப் படுகொலையானது தென்னிந்தியாவில் இந்திய சுதந்திர இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும். மகாத்மா காந்தியால் பரப்பப்பட்ட மிதவாத இயக்கத்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஆதரித்த புரட்சிகர இயக்கத்தின் எழுச்சியை இது ஆதரித்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதல் மற்றும் கடைசி பிரித்தானிய உயர் அதிகாரி ஆஷ் ஆவார்.

 வாஞ்சிநாதன் ஆஷை சுட்டுக் கொன்ற தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் இவரது நினைவாக வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு, தமிழக அரசு செங்கோட்டையில் இவரின் பிறந்த இடத்தில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. இந்த நினைவிடம் 2013 இல் திறக்கப்பட்டது. பல தெருக்களும், உள்ளாட்சிகளும் இவரது பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் திரைப்படமான கப்பலோட்டிய தமிழன் (1961) இல், வாஞ்சிநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.




https://www.facebook.com/photo/?fbid=1060529036202362&set=a.372277295027543

பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட மனிதநேய மாமனிதர் முன்னாள் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை அவர்களை. நாம் இன்று போற்றி நினைவு கூற வேண்டிய நாள்

சுட்டவன். பார்ப்பான் வாஞ்சிநாதன்..?

⛔பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை,

⛔அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார்.

⛔தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.

⛔அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

⛔ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

⛔குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார்.
தானும் அதே அருவியில் குளித்தார்.

⛔ஒரு முறை தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் கேட்கிறது.

⛔ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று,

⛔சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று,

⛔ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்?

⛔இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ”

⛔அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

⛔அவர்கள் சென்ற இடம், இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு பெண் பிரசவ வலி வேதனையில் கதறுகிறாள்,

⛔சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று?

⛔பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன்,

⛔ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்ல்லகூடாது

⛔அவ்வாறு சென்றால் எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

⛔வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும்,

⛔ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம்.

⛔ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன்,

⛔என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான்,
ஆஷ்.

⛔அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி,

⛔வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து.

⛔அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.

⛔மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து ஆஷ் துரையை சுட்டுக் கொன்றனர்.

⛔அப்போது வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

⛔இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

⛔இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். இவர்களுக்கு பெயர் சுதந்திர போராட்ட தியாகியா....?

சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்..!
காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதனை இந்த உண்மையினை உலகறிய செய்யுங்கள் மக்களே...!

பகிர்வு - மதிவாணன் தமிழ்நாடு

கபிலர் குன்று


 

Supreme Court JUdge selection by Collegium doing inJustice - Jus. Yjjal Bayan





GST collection grows at 15.4% to 2.11 Lakh Crores


தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை பற்றிஇழிவாக டிரெய்லர் சன் குழும ஆதித்யா TV மன்னிப்பு

  சுதந்திர போராட்ட தியாகி, ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்ட சன் குழுமத்தின் ஆதித்யா தொலைகாட்சி மீது, என...