Monday, November 3, 2014

இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா? கட்டுக்கதைகள்

இயேசுவின் பெற்றோர் யார்?

  Vatican nativity does away with the manger

மத்தேயு1: 15எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
மத்தேயு2:5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.
லூக்கா3:23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்
லூக்கா2:4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

இரண்டு கதாசிரியர்களும் இரு வெவ்வேறு (90மைல் தள்ளி உள்ள) ஊரைச் சேர்ந்த தாய் தந்தையைக் கூறுகிறார்கள்.!

இறந்த மனிதர் ஏசுவை, தாவீது பரம்பரை எனக் காட்ட தந்தை வழியிலே முன்னோர் பட்டியலும் மத்தேயு லூக்கா சுவியில் உள்ளது. இரண்டுமே இணைத்து இங்கு பார்க்கலாம்.

இயேசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்   

இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.  யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்.
லூக்கா2:1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரி வசூலை அதிகரிக்க, அவரவர் தொழில் வருமானம் சொத்து அறிய, யாரும் 1000 வருடம் முன்னோர் வாழ்ந்த ஊர் எது என அறிய இல்லை.
Jesus was born before the death of Herod(4BCE) Where as the only Census known in the Period took 10-13 years later, while Qurinius was Roman Governor of Syria. This has suggested to the alternative theory that Jesus who was a Galilean was born in Nazareth, the Story of Birth in "David's City" of Bethlehem being developed later to justify the claim that it fulfulled the Prophecy of Micah(5:2-5) that the Messiah was to issue from 'House of David"
Page-449 Who is Who in New Testament- Ronald Brownrigg

யூதேயாவை பெரிய ஏரோதிற்குபின் அவர் மகன் ஆர்கிலேயு ஆட்சி செய்தார், 10 ஆண்டு பின், அவர் மக்கள் போராட்டத்தை அடக்கவில்லை என ரோம் நேரடி ஆட்சிக்குக் கீழ்வர, சிரியா கவர்னர் கிரேனியு கீழ் யூதேயா வந்தது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு.

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus;Page -27.  J.C.Cadoux,  Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)

பேதுருவின் சீடர் எனப்படும் மாற்கு 70 வாக்கில் வரைந்த சுவிசேஷத்தில் கன்னி கருத்தரித்தல், பெத்லஹேம் கதைகள் கிடையாது.
மாற்கு6: 1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ' என்றார்.
மாற்கு சுவிசேஷக் கதை, கலிலேயாவைச் சேர்ந்த ஏசு, யூதேயாவின் வனாந்திரத்தில்வாழ்ந்த யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும். ஏசுபிறப்புக் கதைகள் கிடையாது. மேலே பார்த்தபடி ஏசுவிற்கு உடன்பிறந்த சகோதரசகோதரிகள் உண்டு.இவை மத்தேயு லுக்கா சுவிசேஷங்களில் முதல் ஓரிரு அத்தியாநங்களாகஉள்ளன.   இவற்றை பைபிளியலில்   குழந்தைப் புனையல்கள் எனப்படும்.

இவை பற்றி   அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக்கலைக்  களஞ்சியம் கூறுவது-"குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில்மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர்கதைகள்- யோவானிடம்  பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்அன்று சொர்கம் சென்றார்   என்பதோடு மட்டுமே இருந்தது.."
There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of  which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia
The  Greek Word in Mark 6:3 for brothers and sisters - that are used to designate the relationship between Jesus and the relatives have the meaning of Full Blood Brothers and Sisters Sisters in the Greek speaking World of the Evangelist's time and would naturally be taken by his Greek readers in this way. Page-337 New Catholic Encyclopedia Vol-9 கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு- பற்றி தெரிந்து கொள்ள உள்ள ஒரே ஒருவழி சுவிசேஷக் கதைகளே.இந்த நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டதுமாற்கு தான். இதன் காலம் பொ.கா. 65-75ல்.


மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.//The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork.

ஏசு பிறந்த வருடம் எது தெரியாது, இறந்த வருடம் எது தெரியாது, சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள் - குழப்பமே- இது இன்றில்லை சுவிசேஷம் புனையப்பட்ட காலத்திலேயே.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus. நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய து கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; ஏழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவான் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும். மத்தேயுவும் லூக்காவும், இவைகளில் ஏசு பிறப்பு அதில் அதிசயம்,  அதாவது திருமணத்திற்கு முன்பே ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட  மேரி கன்னியான நிலையில் கர்ப்பமானதாகக் கதை. கடைசியில்  சர்ச் பாரம்பரியம்படியே பொ.கா.98ல் டிராஜன் ரோமன் மன்னனாபின்   எழுதிய யோவான் சுவியில் கன்னி கருத்தரித்தல் கிடையாது.

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது: Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information. Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது. சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது

“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.
மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜொசப் வீடு, எனவே தான்,  போப்பரசர் பெனடிக்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாட்டுத் தொழுவம்   நீக்கினார்.
 http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

யோவான்19:19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயன்  இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது.

 கிறிஸ்து என்றால் யூதர்களின் ராஜா என்பதே பொருள்.


No comments:

Post a Comment