Monday, June 22, 2026

கருணாநிதி - காவிரி ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கர்நாடகம் கட்டிக் கொள்ளட்டும்

 


  '' நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்....கபினி , ஹேமாவதி ,ஹேரங்கி அணைகள் மட்டுமல்ல... இன்னும் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கர்நாடகம்  கட்டிக்கொள்ளட்டும்... எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... நாங்கள்  உங்களைப்போல  [ காங்கிரஸ்காரர்கள் ] நிலச்சுவான்தார்கள் அல்ல... பாட்டாளிகள்... கன்னடர்கள் எங்கள் திராவிட சகோதர்கள்... நாங்கள் அவர்களோடு பேசி தமிழகத்துக்கு தேவையான நீரைப்பெற்றுக்கொள்வோம்... நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம்...''  [ 06.03.1970 அன்று தமிழக சட்டசபையில்  கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரான கருத்திருமன் அவர்களுக்கு அளித்தபதில்.... ]

2.இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் கருணாநிதி....

3. இனி தமிழக அரசை நம்பிப்பயனில்லை என்று காவிரி நதிநீர் விவசாயிகள் சங்கம் இந்திய  அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது...பின்னர் வேறு வழியே இல்லாமல் தமிழக அரசும் உடன்சேர்ந்துகொள்கிறது... அந்த வழக்கை 04.08.1971 அன்று தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி [ சர்க்காரியா கமிஷன் ] காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விடுகிறார் கருணாநிதி..

4..18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி

5. மூப்பனாரைத் தவிர வேறு யார் பிரதமரானாலும் சரி என்று கன்னட வெறியன் தேவகவுடாவை பிரதமராக்க  ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி... நாட்டாமை கிடைத்த நரி வேலையைக்காட்டியது... நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்தவரை மாற்றி , கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவரை தலைவராக நியமிக்கிறார்,....இதனால் நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பங்கு கணிசமாக குறைகிறது...

6. ஒருவழியாக நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 2007 ம் ஆண்டு வெளியாகிறது... ஆனால் 2011ம் ஆண்டுவரை மேற்படி தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்படவில்லை....  பிளாக்மெயில் செய்து பசையுள்ள மந்திரி பதவிக‌ளைப்பெற்று  2ஜியில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்வதில் பிசியாக இருந்த கருணாநிதிக்கு காவிரியைப்பற்றி கவலைப்பட நேரமில்லை...

  காவிரிக்கரையில் பிறந்தவராக இருந்தும் , ஆரம்பம்முதல் கடைசி வரை தமிழகத்துக்கு எதிராகவே செயல்பட்டு , டெல்டா விவசாயத்தை முழுமையாக தொலைத்துக்கட்டி , காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிய கருணாநிதிக்கு வைரவிழா மட்டுமல்ல ...தினந்தோறும் விழாக்கள் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்....

 ஒரே திருத்தம்... விழா எடுக்கவேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல.... கன்னடர்கள்...!

No comments:

Post a Comment

முஸ்லிம் மதவெறி லவ் ஜிஹாத் காதல் வலையில் சிக்கிகையில் குழந்தையுடன் போராடும் புளியங்குடி மஞ்சு பிரியா -முகமது இத்ரிஸ்

  தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் மஞ்சு பிரியா (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் (27) என்பவரை...