Friday, June 19, 2026

கல்வி நிறுவன சேவை பெயரில் - 20 கோடி இந்தியரைக் கொன்று, ரூ.6000 லட்சம் கோடி கொள்ளை அடித்த கிறிஸ்துவ விஷநரிகள் சதி தொடர்கிறது

 

















சர்ச்சுக்கு பணம் கொடுத்து வெறும் ஜெபிப்பது மட்டுமல்ல இறைப்பணி. மக்களுக்கு கல்வியை கொடுக்க, ஆயிரக்கணக்கான பள்ளிகளை நிறுவி, குருகுலங்கள் மறுத்த கல்வியை கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்ததில்தான் உண்மையான இறைப்பணி என்று பங்களிப்பு செய்ததால்தான் தமிழ்நாட்டில் கல்வி காலூன்றியது. பல ஊர்களில் உள்ள செயின்ட் சேவியர், செயின்ட் மேரிஸ், சேக்ரெட் ஹார்ட், செயின்ட் ஜோசப் என பள்ளிகளும் கல்லூரிகளும் அமைக்கப் பட்டதால் தான் மக்கள், சாதிய அடிமைத்தனத்திலிருந்து் விடுபட்டு கல்வி கிடைக்கப்பெற்று தமிழகம் வளர்ச்சியை கண்டது. பல நூற்றுக்கணக்கான மிஷன் ஆஸ்பத்திரிகளை கட்டி மருத்துவம் பார்த்ததால்தான் மக்களுக்கு நல்வாழ்வு கிடைத்தது. இது அனைத்தும் தனி நபர்கள் கொடுத்த கொடையால் நடந்தது, சர்ச்சின் மேற்பார்வையில். கோயில்களில் “விஷ்ணு சகஸ்கரநாமம்” பாராயணம் செய்வதற்கு மட்டுமே கோயில் சொத்தை பயன்படுத்துவதால் மக்களுக்கு என்ன பயன்? அதுவும் கோயில்கள் அரசுகளால் கட்டப்பட்டவை, உருவாக்கப்படவை. அந்தந்த கோயில்களுக்கு சொத்தை தானம் கொடுத்தவர்களும் , கடவுளின் பெயரால் இந்த சொத்துகள் மக்களுக்கு பயன்தரட்டும் என்கிற நோக்கத்துடன்தான் கொடுத்தார்கள். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் எல்லாம் மக்களுக்கு பயன்தரக்கூடியவைதான், கோயில் நிதியில் கட்டப்படுவதால் அநேக இந்துக்களுக்கும் பயன் தரும். வணிக வளாகங்கள் கோயிலுக்கு வருமானம் தரும். கபாலீஸ்வரர் Tech Park என்று இருந்தால் அந்த சாமி கோவித்துக் கொள்வாரா? இல்லை, உண்மையில் மகிழ்ச்சி அடைவார், தன் பெயரால் தன்னுடைய பக்தர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதே என்ற கபாலீஸ்வரர் மகிழ்ச்சி அடைவார். மக்களுக்கு இறைநம்பிக்கை இருக்கவேண்டும் என்றால் கோயில்கள் மக்களுக்கு பயன்கொடுக்கும் வகையில் நிர்வகிக்கபட வேண்டும். தேவையில்லாமல் செய்யப்பட்ட செலவுகளை நிறுத்துவது அவசியம், ஆனால் மற்றவை?


No comments:

Post a Comment

'Minority welfare schemes are unconstitutional' - Case in Suprme Court by Minorities

'Minority welfare schemes are unconstitutional' By SYED FIRDAUS ASHRAF   January 23, 2020 https://www.rediff.com/news/interview/min...