Saturday, June 20, 2026

ரகசிய வலைப்பின்னல்: அண்ணாமலை நிழல் சாம்ராஜ்யமும், சிக்கிய சகோதரி கணவரும்! -

ரகசிய வலைப்பின்னல்: அண்ணாமலை நிழல் சாம்ராஜ்யமும், சிக்கிய சகோதரி கணவரும்! --ஜோதிஜி திருப்பூர்

தமிழக அரசியலில் தூய்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு என்ற கோஷங்களுடன் வலம் வந்த சின்ன கருணா செய்த லீலைகள் வரிசைகட்டி நிற்கிறது. உள்துறை அமைச்சரின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் மாட்டிய சின்ன கருணா கடந்த 13 மாதங்களில் பிதுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுளளதை தமிழகமே புரிந்து கொண்டது.
முழுமையாக புரிந்து கொண்டு சின்ன கருணாவை பத்திவிட்ட காரணத்தால் பாஜக காசில் வாழ்ந்த உடம்பு சட்டை உரித்த பாம்பாக மாறியுள்ளது. செக்யூரிட்டி பாதுகாப்பு புடுங்கப்பட்ட தற்போதைய சூழிலில் ஊரில் புல் புடுங்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டே தான் ஏற்கனவே பார்த்து வந்த பாலியல் மாமா சார்ந்த வாங்க பழகலாம் என்ற பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக தகவல் வந்து கொண்டு இருக்கின்றது.
கூடவே கூலிப்படை வேண்டும் என்பதற்காக ஃபேக் ஐடி புரோகிராம் தனியாக நடந்து வருகின்றது. எட்டிப்பார் கேமரா வை என்ற சிறப்பு செயல்பாடுகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
திடுக்கிடும் புகார்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து வருவதை பார்ப்போம்.

அரசியல் மேடைகளில் நேர்மை கருமை எருமை என்று பேசினாலும், பின்னால் இயங்கும் குடும்பத்தினர் மற்றும் பினாமி நெட்வொர்க்குகள் கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்து வருவதாக சமூக ஊடகங்களிலும், புலனாய்வு ஊடகங்களிலும் ஆதாரங்களுடன் விவாதங்கள் பறக்கின்றன. குறிப்பாக, சகோதரி கணவர் சண்முகம் சிவகுமார் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளைச் சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த மர்ம வலை, தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.



மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை 2024 ஜூன் மாதம் தொடங்கினர். குறிப்பிட்ட தேதிகளாக 2024, ஜூன் 5, ஜூன் 6 மற்றும் ஜூன் 7 ஆகிய நாட்களில் இந்த ரெய்டு தீவிரமாக நடைபெற்றது.
சோதனை நடந்த இடங்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள *சத்திரப்பட்டி* மற்றும் பழனி போன்ற பகுதிகளில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சின்ன கருணா வின் உறவினர் *செந்தில்குமார்* என்பவருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள்.
* சின்ன கருணாவின் சகோதரி கணவர் (மச்சான்) *சிவக்குமார்* என்பவருடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் *செங்கல் சூளை* சார்ந்த வணிக இடங்கள் ஆகியவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனை தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடக செய்திகளின் மூலம் வெளிவந்த முக்கிய விபரங்கள்:
ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்:* சோதனையின் போது கணக்கில் வராத சுமார் *₹11 கோடி ரொக்கப் பணம்* பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
வரி ஏய்ப்பு மதிப்பு:
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் *₹200 கோடி முதல் ₹250 கோடி வரை* வரி ஏய்ப்பு (Tax Evasion) மற்றும் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான டிஜிட்டல் மற்றும் எழுத்துப்பூர்வமான முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுவாக இத்தகைய ரெய்டுகளின் போது வருமானவரித்துறை (CBDT) "ஒரு குறிப்பிட்ட தொழில் குழுமத்தின் மீது சோதனை நடத்தப்பட்டது" என்ற பொதுவான தலைப்பில் செய்திக்குறிப்பு (Press Release) வெளியிடும். இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் வரி விதிப்பு நடவடிக்கைகள் (Assessment Proceedings) வருமானவரித்துறையால் மேற்கொள்ளப்பட்டன. முழுமையான விபரங்கள் உடனே வெளியிடப்பட்டன.
மச்சான் வழி என்பது போல அத்தை வழி என்பது அதுவொரு தனிப்பாதை. அதையும் பார்த்து விடுவோம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) நடைபெற்ற 400 கோடி ரூபாய் மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழலில், சின்ன கருணாவின் அத்தை மற்றும் குடும்பத்தினருக்கு நெருக்கமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. அரசு நிர்ணயித்த டெண்டர் தொகையை விட, ஒப்பந்ததாரர்கள் கூட்டாகச் சதி செய்து (Cartelization) பல மடங்கு கூடுதல் விலைக்கு டெண்டர் கோரியுள்ளனர்.
டெண்டர் விபரங்களின்படி (Tender Reference: M-11/2021-22), அரசு நிர்ணயித்த அடிப்படைத் தொகை ₹7,89,750 ஆகும். ஆனால், சின்ன கருணாவின் அத்தைக்குச் சொந்தமான நிறுவனங்கள் உட்பட 16 ஒப்பந்ததாரர்கள் கூட்டுச்சதி செய்து ₹13,72,930 என்ற ஒரே தொகையைக் குறிப்பிட்டு 'L1' தகுதியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ₹63.18 கோடிக்கு பதிலாக ₹99.98 கோடி செலவு ஏற்பட்டு, மிகப்பெரிய நஷ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் Associated Transformers Private Limited மற்றும் Sarayu Engineering ஆகிய நிறுவனங்கள் சின்ன கருணா குடும்பப் பின்னணியோடு நேரடியாகத் தொடர்புடையவை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
சின்ன கருணா நேரடித் தொழில் பின்னணியை அம்பலப்படுத்தும் மற்றொரு முக்கிய நிறுவனம் 'Elem14 Ventures LLP' ஆகும். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ரியல் எஸ்டேட் மற்றும் நில மேம்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில், சின்ன கருணாவின் பெயர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கூட்டாளியாக (Registered Partner) உள்ளார். இவருடன் விஸ்வநாத் கிரண் மற்றும் கார்த்திக் விக்னேஷ் சுவாமிநாதன் ஆகியோரும் பார்ட்னர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனம் பெங்களூருவில் 248 பிரம்மாண்ட ஆடம்பர வில்லாக்களை (Grand Luxury Villas) கட்டும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு வில்லாவின் மதிப்பும் ₹9.0 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு மட்டுமே ₹2,232 கோடிகள் ஆகும்!
இத்தனை ஆயிரம் கோடிகள் முதலீடு எங்கிருந்து வந்தது? என்ற அதிரவைக்கும் கேள்வியை ஊடகங்கள் எழுப்பி வருகின்றன.
சின்ன கருணா சகோதரி அக்கா கணவரான சண்முகம் சிவகுமார் (Shanmugam Sivakumar), சமீபத்தில் 'Golden Powerline Private Limited' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் (பதிவு தேதி: 18-11-2024). இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக 'மாரப்ப கவுண்டர் குணசேகரன்' (Marappa Gounder Gunasekaran) என்பவர் உள்ளார். இந்த குணசேகரன் வேறு யாருமல்ல, வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடைய, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
மேடையில் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் சின்ன கருணா குடும்பத்தினர், திரைக்குப் பின்னால் அதே செந்தில் பாலாஜியின் ஆட்களுடன் கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பில் தொழில் தொடங்கி நடத்துவது எத்தகைய துரோகம் என்பதை இந்த கார்ப்பரேட் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
அரசியல் மேடைகளில் எதிரெதிர் துருவங்களாகக் காட்டிக் கொள்ளும் நபர்கள், நிழல் உலக பிசினஸில் பங்காளிகளாக கைகோர்த்து நிற்கிறார்கள்!
கரூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள், மின்துறை டெண்டர்கள், பெங்களூரு சொகுசு வில்லாக்கள் என சின்ன கருணாவின் சகோதரி கணவர் சிவகுமார் மூலம் பரவியுள்ள இந்த பினாமி நெட்வொர்க் மிகவும் பலமானது. எவ்வளவுதான் மத்திய அரசின் அதிகாரப் பலத்தைக் கொண்டு தற்காலிகமாக தப்பித்தாலும், முறைகேடாகத் திரட்டப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களும், கார்ப்பரேட் பதிவுகளும் (India Filings) இவர்களின் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைத் தெளிவாகக் காட்டுகின்றன.
வாங்க பழகலாம் என்ற என்ஜிஓ முதல் பலவிதமான நிழல் சாம்ராஜ்யம், விரைவில் சட்டத்தின் முன்னால் உடைந்து நொறுங்குவது உறுதி.
துரோகங்கள் என்றும் வென்றதில்லை, அது தோற்கும்!



அரசியல் என்பது வெறும் முகநூல் லைக்குகளிலும், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இயங்கும் ஒரு மாய உலகம் அல்ல. அது அதிகாரப் போட்டிகள், திரைமறைவு பேரங்கள், மற்றும் பண பலத்தால் பின்னப்பட்ட ஒரு நீண்ட தொடர் நிகழ்வு. துரதிர்ஷ்டவசமாக, 30 வயதுக்குட்பட்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலருக்கு இந்த அரசியலின் இருட்டுப் பக்கங்கள் தெரிவதில்லை. அவர்கள் வெறும் 'சோஷியல் மீடியா பிம்பங்களை' மட்டுமே உண்மை என்று நம்பி, விட்டில் பூச்சிகளைப் போல நெருப்பில் போய் விழுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியல் களத்தில் மாபெரும் 'இரட்சகராகக்' கட்டமைக்கப்பட்ட நபர், உண்மையில் ஒரு 'சின்ன கருணாநிதி' என்பதை நாம் தொடர்ந்து ஆதாரங்களுடன் எச்சரித்து வந்தோம். அன்று நம்மை விமர்சித்தவர்கள், இன்று காலம் மாறும் போது உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிற்கிறார்கள்.
மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் அண்மையில் 'மின்னம்பலம்' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, தமிழக அரசியலில் இந்த 'சின்ன கருணா' ஆடிய ஆட்டத்தின் 10 சதவீதப் பக்கங்களை பட்டும் படாமல் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான அரசியல் உண்மைகளையும், டெல்லி தலைமை கண்டறிந்த ஜாதகக் கட்ட மாற்றங்களையும் இங்கு விரிவாகக் காண்போம்.
திரைமறைவு கிங்மேக்கர்களும், காலத்தின் கோலமும்: கோலாகல ஸ்ரீனிவாஸ் முதல் பிரபாகர் வரை
தமிழக பாஜகவுக்குள் யார் பேச வேண்டும், யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மறைமுகக் கட்டுப்பாட்டு மையமாக 2021-2022 காலகட்டத்தில் கோலாகல ஸ்ரீனிவாஸ் போன்ற நபர்கள் இருந்தனர். சென்னையில் நடந்த 'இந்துத்துவா அமைப்பு உரையாடல்' கூட்டத்தில், இன்றைய ஜோதிடர் உள்ளிட்ட குழுவினரைச் சேர்த்துக்கொண்டு, ஒட்டுமொத்தக் கட்சியையும் தங்களுக்குள் சுருக்க நினைத்தார்கள்.
அன்று அந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் பிரபாகர் அவர்களை கலந்து கொள்ள விடாமல் தடுத்ததே இதே ஸ்ரீனிவாஸ்தான். ஆனால் இன்று, அதே ஸ்ரீனிவாஸ் மின்னம்பலம் சேனலில் ChinnaKaruna சுயரூபத்தை அரைகுறையாக உடைக்கத் தொடங்கியது முக்கிய திருப்புமுனை என்றால் அதற்கு முன்பே பிரபாகர் மனம் மாறி ரைமிங் ஆக தினமலர் யூ டியூப் சேனலில் புகழ்ந்து பாடுவதுதான் அரசியலின் ஆகப்பெரும் முரண்நகை!
அரசியலின் அடிப்படை விதி: அதிகாரம், பதவி, பணம் ஆகியவை நுழையும் இடத்தில் கொள்கையோ, நேர்மையோ நிலைப்பதில்லை. ஒருவனுடைய அடிப்படை குணாதிசயத்தையே மாற்றி, அவனை வேறு ஒரு விசித்திரமான உருவமாகத்தான் அது அங்கே நிறுத்தும்.
கட்சியைப் பாதுகாப்புக் கவசமாக்கிய 'கார்ப்பரேட்' அயோக்கியத்தனம்
இந்த 'சின்ன கருணா' செய்த ஆகப்பெரிய தந்திரம் என்னவென்றால், தன்னை விமர்சிப்பவர்கள் அனைவரையும் "பாஜகவின் எதிரிகள், இந்துத்துவாவின் எதிரிகள், மோடியின் எதிரிகள்" என்று முத்திரை குத்தியதுதான்.
தன் சொந்த சுயநலத்தையும், குறுகிய காலத்தில் சேர்த்த மாபெரும் சொத்து மதிப்புகளையும் மறைக்க, கட்சியைத் தன் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்திக் கொண்டதைப் பார்த்து பலரிடமும் சொன்ன போது நம்ப மறுத்தனர்.
பதவியில் இருந்த போது செய்த தவறுகளை எவரேனும் தட்டிக்கேட்டால், அது "கட்சிக்கு ஏற்படும் ஆபத்து" என்பது போல ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைத்து தன் அன்டர்கிரவுண்ட் வேலையை தெளிவாக செய்ய முடிந்தது.
இதனால், தமிழக பாஜகவில் உள்ள பல மூத்த தலைவர்களும், தங்களின் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ, டெல்லி நம்மை ஒதுக்கிவிடுமோ என்ற பயத்தில், 'ஊர் ஓடும் திசையில் தாங்களும் ஓடத் தயாராக' இருந்தார்களே தவிர, உண்மைகளைப் பொதுவெளியில் பேசத் துணியவில்லை. இந்த மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத பயம்தான், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பெரும் பொருளாதாரப் பின்னணியை உருவாக்க உதவியது. பல நண்பர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பேசும் போதே பயந்தனர். இன்று வரையிலும் அவர்களுக்கு அந்த பயம் போகவில்லை. ஜோம்பிஸ் வந்து தாக்கக்கூடும் என்று அச்சப்படுகின்றார்கள்.
அமித்ஷா கண்டறிந்த 40/40 ரகசியம்: பாஜகவைத் தோற்கடித்த 'சின்ன கருணா'
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர, திரைக்குப் பின்னால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் எப்படி ஒரு பொம்மையாகப் பயன்பட்டாரோ, அதேபோல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றக் காரணமாக இருந்தவர் இந்த 'சின்ன கருணா'தான்!
டெல்லியில் உள்ள அமித்ஷா மற்றும் உளவுத்துறைப் பிரிவினர் ' கட்டங்களை' ஆராய்ந்து இந்த உண்மைகளைக் கண்டறிந்த பிறகுதான் ஒட்டுமொத்த ஆட்டமும் மாறியது. அதுவரையிலும் சேர்த்துக் கொண்டு சொத்துக்களை செங்கல்சூளை ரெய்டு விட்டு ஆவணங்களை வைத்துக் கொண்டார்களே தவிர பெரிய அளவுக்கு கவனம் செலுத்தவில்லை. ஆனால் நம் கட்சியை வைத்து திமுக விடம் வாங்கித் தின்பதனைப் பார்த்து தான் வெறியாகிவிட்டனர்.
திராவிட சித்தாந்தத்தை வேரறுக்க வந்ததாகக் கூறிக்கொண்டு, திரைமறைவில் திமுகவுடன் ஒரு சுமுகமான நல்லுறவைப் பேணி, அதன் மூலம் பெரும் பொருளாதாரப் பலன்களைப் பெற்றதை தாமதமாக கண்டறிந்தனர். அதிர்ச்சித் தகவல்கள் இப்போது கசியத் தொடங்கியுள்ளன.
கொள்கை ரீதியாகப் பாடுபடாமல், தமிழகத்தில் பாஜக என்ற பாரம்பரியமிக்க தேசியக் கட்சியை வளரவிடாமல் தடுத்து, அதைத் தன் சொந்த விளம்பர நிறுவனமாக (Corporate PR Firm) மட்டுமே சுருக்கி பணமாக மாற்றியதை உணர்ந்தனர்.
தேசிய அளவில் மோடியின் அலை வீசியபோதும், தமிழகத்தில் உள்ள எளிய தொண்டர்களின் உழைப்பைத் தன் தற்பெருமைக் கூட்டத்திற்காகப் பலிகொடுத்து, ஒட்டுமொத்தமாக பாஜகவை அட்ரஸ் இல்லாமல் தோற்கடித்தமை அமித்ஷா தாமதமாக புரிந்து கொண்டார்.
1971 கருணாநிதி Vs 2026 'சின்ன கருணாநிதி': இளைஞர்கள் ஏமாறும் மாயை
1971-களில் அன்றைய மு. கருணாநிதி ஊடகப் பலத்தாலும், சினிமா கவர்ச்சியாலும் தன்னை ஒரு மாபெரும் பிம்பமாக மாற்றிக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களோ அல்லது மாற்று ஊடகங்களோ இருந்திருந்தால், அவருடைய இருட்டுப் பக்கங்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தி, அவரை இந்த அளவுக்குப் பிம்பமாக வளர விட்டிருக்க முடியாது.
இன்று மீண்டும் அதேபோல ஒரு தவறான பிம்பம், 'சின்ன கருணாநிதி' என்ற பெயரில் தமிழக இளைஞர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாம் இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து சளைக்காமல் எழுதி வருகிறோம்.
50 வயதைக் கடந்தவர்கள், ஓய்வு நிலையில் வாழ்பவர்கள், அம்மாஞ்சிகள், ஜன்னல் வழியே உலகம் பார்த்து பரவச நிலையில் எழுதிக் கொண்டு இருப்பவர்கள், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நடுவே, முகநூலிலும், ட்விட்டரிலும் யாராவது உணர்ச்சிப்பூர்வமாக எழுதினால் அதற்கு ஒரு 'லைக்' போட்டுவிட்டு, 'ஷேர்' செய்துவிட்டுத் தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான காரணிகளோ, இருட்டுப் பக்கங்களோ புரிவதில்லை.
இதுவரையிலும் சந்திக்காத விமர்சனங்களே இல்லை என்கிற அளவுக்கு பார்த்த போதிலும் இன்னமும் என் கடமை எனக்கான உத்தரவு தந்து கொண்டேயிருக்கிறது. வெளியே வந்த பின்பு எழுதுவோம், பேசுவோம் என்று சொன்ன பலரும் இனி எழுதத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அடுத்த அறுபது நாளில் உங்களுக்கே அதிர்ச்சி அளிக்கக்கூடிய தரமான சம்பவங்கள் நடந்தேற துவங்கும். இப்படியெல்லாம் ஒரு சைக்கோ வாழ முடியுமா? என்று தோன்றும்.
அரசியல் தெரியாத, அப்பாவித்தனமான அந்த விட்டில் பூச்சிகளின் விமர்சனங்களைப் பற்றி நாம் கோபப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அதையே தங்கள் பலம் என்று நம்புகின்றார்கள். நம் மேல் வாந்தி எடுக்கின்றார்கள்.
அசராமல் நாம் பயணித்து வரும் இந்த நேர்மையான பாதையில், டெல்லி தலைமைக்கு உண்மைகள் உறைக்கத் தொடங்கி, இன்று முகமூடி முழுமையாகக் கிழிந்து தொங்குகிறது. கட்சியை விட்டு வெளியேறி, ரசிகர் மன்றக் கோஷ்டிகளைத் திரட்டி பேக்ஐடி கும்பல்கள் நடத்தும் புதிய நாடகங்கள் இனி தமிழகத்தில் செல்லுபடியாகாது. கார்ப்பரேட் விளம்பரங்களை நம்பி ஏமாறத் தயாராக இருக்கும் இளைஞர்கள், இனியாவது உண்மையான சித்தாந்தத் தெளிவோடும், தொலைநோக்குப் பார்வையோடும் இருக்கும் சரியான அரசியல் பாதையை நோக்கித் திரும்ப வேண்டும்!
அமித்ஷா தமிழகத்தை எந்த அளவுக்கு காப்பாற்றி உள்ளார் என்பதனை இன்னும் சில ஆண்டுகளில் வெறுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இனி ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளி வந்து கொண்டேயிருக்கும்.

ஆறு மாசத்துக்கு முன்னாடியே ராஜினாமா செய்யப் போறேன்னு கட்சித் தலைமைக்கு "ரகசியமா" அறிவித்துவிட்டு இவர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கட்சி தலைமை மிக "நேர்மையாக" அந்த ரகசியத்தை காப்பாற்றி இருக்கிறது
( மன்னிக்கவும் நண்பர்களே இந்தப் பதிவு சற்று நீளமான பதிவுதான் தயவுசெய்து தயவு செய்து சற்று பொறுத்துக் கொள்ளவும் )
குறைந்தபட்சம் அந்த நேர்மைக்காவது இவர் உண்மையாக நடந்து
கொண்டிருக்க வேண்டும்
ஏதோ இந்த நால்வர் கோஷ்டி தான் இவருக்கு சீட்டு கொடுக்காமல் சதி செஞ்சிட்டாங்க என்கிறமாதிரி திட்டமிட்டு டிராமா போட்டிருக்கிறார்
ஆம் இவர் நேரடியாக கெடுதல் எதுவும் செய்யவில்லை உண்மைதான்
கட்சியின் ரெப்பீட்டேஷன் பால் படுவது போன்று மற்றும் இவரது நோக்கத்திற்கு சாதகமாகவும் நடக்கும் விஷயங்கள் எல்லாம் பெரும் ஆனந்தத்துடன் அமைதியாக கண்டுக் களித்திருக்கிறார்
ஹிட்லருக்கு இருக்கும்Orations திறமை அளவிற்கு இவருக்கும் இருப்பது மட்டுமே இவரது மிகப்பெரிய பலம்.
ஆனால் ஹிட்லரது இந்த திறமை 60 லட்சம் யயூதர்கள் உட்பட 90 லட்சம் அப்பாவி மக்களை கொன்று அழிக்க மட்டுமே பயன்பட்டது
ஒருவரது படிப்பு புத்திசாலித்தனம் ஞாபக சக்தி வாயாடும் திறன் (Oratory skill சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை மன்னிக்கவும) போன்றவைகளால் மட்டுமே ஒரு சமூகத்திற்கு பெரும் நலன்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை
படிப்பு குறைவாக இருந்தாலும் பேச்சுத் திறமை கம்மியாக இருந்தாலும் பெரும் விசயஞானியாக இல்லாவிட்டாலும் ஒருவரது நோக்கம் மட்டுமே முக்கியமானதாகும். எடுத்துக்காட்டிற்கு மிகச் சமீபமாக பெருந்தலைவர் காமராசரை குறிப்பிடலாம்.
அந்த வகையில் அண்ணாமலையின் நோக்கம் மிக மிக தீங்கானது
இவரை முழுமையாக நம்பி பெரும் பொறுப்புக்களையும் பெரும் அதிகாரங்களையும் இவருக்கு வழங்கி பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு கட்சிக்கு,
துரோகம் இழைக்கின்ற வகையில் இவரது தீய நோக்கத்தில் மட்டுமே" எப்பொழுதும்" குறியாக இருந்திருக்கிறார் என்ற வகையில் அண்ணாமலை நோக்கம் மிக மிக ஆபத்தானவராகும்
இவர் இதுவரை சொல்லி வந்த கம்ப்யூட்டர் கிளாஸ் முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்ற மாணவி வழியில் கொல்லப்பட்டது இவரது சக ஐபிஎஸ் உயிர் நண்பரின்
திடீர் மரணம் ஆகியவை இவரது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து பொதுவாழ்க்கைக்கு வரத் தூண்டியது போன்ற கதைகளை நானும் கூட இதுவரை நம்பி வந்தேன் தான்
ஆனால் இப்போதுதான் புரிகிறது இது போன்ற கதைகள் எல்லாம் "ஹிட்லரின்" உணர்ச்சிகளை தூண்டும் வாயாடும் திறமைக்கு பயன்படும் புள்ளி விவரங்கள் மட்டுமே
அப்படி எல்லாம் இவர் எமோஷனலாகன மனிதனாக இருக்கும் வாய்ப்பு கிடையாது
இவருக்கு வாழ்க்கை முழுவதுமே "திட்டமிடல்" மட்டுமே எமோஷன் என்ற உணர்வுக்கு எல்லாம் இடமே இல்லை
மோடி என்ற உலக உத்தமத் தலைவருக்கு துரோகம் நினைக்கின்றார் என்றால் இவர் ஒரு எப்படி பட்ட சுயநலமான அட்மினிஸ்ட்ரேட்டராக மட்டுமே
இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்
கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடுகள் ஆகியவை அனைத்தும்
இவரது மறைமுக நோக்கத்திற்கு சாதகமாக இருந்ததினால்
அப்படியே எரிகின்ற எண்ணெயில் "ரகசியமாக" லிட்டர் லிட்டராக நெய் வார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்
எடப்பாடி மிக குறைந்த சீட்டுக்குள் ஒதுக்கியது அதுவும் இவர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் பாரதிய ஜனதாவிற்கே ஒதுக்காமல் போனது
இவையெல்லாம் இவரது ஹிடன் நோக்கத்திற்கு மிக சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார்
குறைந்தபட்சம் நான் போட்டியிடவில்லை என்று எடுத்த முடிவு முழுக்க முழுக்க எனது முடிவு தான் தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகளின் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை என்ற " ஒரே ஒரு" அறிவிப்பை மட்டும் ஆவது செய்திருக்க வேண்டாமா
அந்த நாலு பேரு மீதும் மற்ற மொத்த தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் மீதும் பொது மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் பெரும் வெறுப்பும் விரோதமும் வருகிறார் போல் மிகத் தெளிவாக அவரது வார் ரூம் சைபர் டீமை விட்டு கொடூர தாக்குதலை
அந்த நால்வர் மீதும் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மீதும் நடத்தி இருக்கிறார்
அப்போதுதான் அப்பாவி பாரதிய ஜனதா தொண்டர்களை மொத்தமாக "வழித்துக்! கொண்டு இவர் இயக்கத்திற்கு ஆள் சேர்க்க முடியும் என்று பெரிய சதி செய்து இருக்கிறார்
இவர் மோடியை பார்த்து தான் அரசியலுக்கே வந்தார் பிறகு பாரதிய ஜனதாவில் சேர்ந்தார் என்பதெல்லாம் வெறும் டிராமா தான்
இவரது நோக்கம் மிகத் தெளிவானது- இவர் பாரதிய ஜனதா கட்சியில் "சேர்ந்ததே" இவரது இயக்கத்தை வளர்த்து இவருக்கு வசதியான ஒரு பரம்பரை ஆட்சி செய்யும் வகையில் ஒரு கட்சி தொடங்கி நடத்துவது அவ்வளவுதான்.
அவரது இந்த நோக்கத்திற்கு வசதியாக பயிற்சி எடுத்துக் கொள்ளும் ஒரு இன்ஸ்டியூட் போலவே பாரதிய ஜனதாவை பயன்படுத்தி இருக்கிறார் அதுவும் இவர் எதுவும் செலவு செய்யாமலே அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியின் செலவிலேயே ஆறு வருடம் பயிற்சி பெற்றிருக்கிறார்
இப்படி ஒரு வஞ்சகனின் நோக்கம் தெரியாமல் பாரதிய ஜனதா இவரை "முழுமையான" காரிய கர்த்தாவாக நம்பியதுதான் பாரதிய ஜனதா
செய்த ஒரே தவறு ஆனால் அமித்ஷா போன்ற மிகப்பெரும் சாணக்கியர் கூட இவரின் தீய நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் விட்டது உண்மையிலேயே பரிதாபம் தான்
இவருக்கு அமித் ஷாவின் பதவியை தூக்கிக் கொடுத்திருந்தாலும் இவர் தனது தனி இயக்கம் தனிக்கட்சி என்பதில் உறுதியாகத்தான் இருந்திருப்பார்
அப்படி ஒரு உயர்பதவி வாய்ப்பு கிடைத்திருந்தால், கண்டிப்பாக பாரதிய ஜனதாவை ஒரு முழு பரம்பரை கட்சியாக இவரது முழு கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியாக மாற்றி இருப்பார் அல்லது அதில் தோல்வி தான் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டால், இவர் பரம்பரையாக வந்து அமர்ந்து கொள்ள ஒரு இயக்கத்தையோ கட்சியையோ ஆரம்பிக்கும் இவர் நோக்கதை அப்போதும் நிறைவேற்ற மட்டுமே முயற்சி செய்திருப்பார்
எப்படி தமிழக பாரதிய ஜனதாவை ஆறு வருடம் 10 வருடம் என இவரே தலைவராய் இருக்கும் வகையில் இவரது சொந்த கட்சியாக மாற்ற முயற்சித்தாரோ கண்டிப்பாக இவரது நோக்கம் மிகத் தெளிவானது என்பதை புரிந்து கொள்ளலாம்
40,000 புத்தகங்கள் படித்தேன் என்று சொல்லிக் கொள்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் இப்படிப்பட்ட முக்கியமான அடிப்படை கட்சி விதிகள் இருப்பது பற்றி இவருக்கு ஏதும் தெரியாமல் இருந்திருக்கும்
மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கட்சி தலைமை விலகி இருக்கச் சொன்னால் அதே ராணுவ கட்டுப்போடுடன் விலகி இருப்பது தானே முறை - ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர்களை மாற்றும் முடிவு மிக இயல்பாக நடந்திருக்கிறது
ஏன் முதலமைச்சர் உட்பட கடைசி நேரம் மாற்றங்கள் எந்தவித எதிர்ப்புமின்றி நடந்து முடிந்திருக்கிறது
யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை அவரை முதலமைச்சர் ஆக அமர வைத்த பிறகு தான் அவர் சட்டசபை தேர்தலிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்
2017-இல் அவர் முதலமைச்சராக பதவியில் அமர்த்தி வைக்கப்படும் பொழுது அவர் எம்பி பதவி தான் வகித்து வந்தார்
பிறகு மூன்று வருடங்கள் நியமன எம்எல்ஏ வா வா மட்டுமே இருந்தார், பிறகு
2022 இல் மட்டுமே சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்
ஆட்சி அமைக்கும் அளவிற்கு
சட்டசபை தொகுதிகளை ஜெயித்துக் கொடுத்தவர்கள் 39% வாக்குகளை பெற்றுக் கொடுத்தவர்கள்
அமைதியாக ஒதுங்கி நின்று யோகிக்கு வழி விட்டார்கள்
2017 உத்தரப்பிரதேச
சட்டசபைத் தேர்தலில் ஆட்சியையே அமைக்கின்ற வகையில் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த எந்த ஒரு நிர்வாகியும் இப்படி போர்க் குரல் எழுப்பிக் கொண்டு கட்சியை விட்டு விலகிப் போகவில்லை, யோகி எப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் ஆக கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறார் என்பது உலகமே அறியும்
அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து பெற்றுக் கொடுத்த எம் எல் ஏ சீட்டுக்
ஒன்றே ஒன்று வாக்கு
சதவீதம் 2.9% மட்டுமே
இவரது தனிப்பட்ட முடிவில் 2022
தனியாக போட்டியிட்டு உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற சீட்டுக்களின்
மற்றும் 2019ல் அண்ணாமலை பாரதிய ஜனதாவுக்கு வருவதற்கு முன் பெற்ற சீட்டுக்களின் எண்ணிக்கையும் பாருங்கள் மொத்த சீட்டுக்குடன் கம்பேர் செய்து பாருங்கள்
2019 88 5158 ஊ.ஒ.உறுப்பினர்
2019 7 515 மா.ஊ.உறுப்பினர்
2019 3 388 ஊ.ஒ.தலைவர்
2019 0 31 மா.ஊ.தலைவர்
2022 230 4381 பே.வா.உறுப்பினர்
2022 56 1381 ந.வா.உறுப்பினர்
2022 22 1374 மா.ந.வா.உறுப்பினர்
2022 0 21 மேயர்
அப்படி என்ன அபரிமித வெற்றி கண்டு விட்டார் நீங்களே சொல்லுங்கள்
இவரது பேச்சைக் கேட்டு 2024 இல் தனியாக போட்டி யிட்டதில் பாரதிய ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது
நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அமைக்காமல் கூட போயிருக்கும் வாய்ப்பு இருந்து இருக்கிறது
பதினோரு சதவீதம் வெற்றி பெற்றதை பெரும் சாதனையாக கருதும் அவரது ஆதரவாளர்களுக்கு ஒரே ஒரு கேள்வி
இவரது ஓவர் வாய் துடிக்கின் காரணமாக அண்ணா திமுகவின் கூட்டணி முறியாமல் இருந்திருந்தால் பாரதிய ஜனதாவுக்கு குறைந்தபட்சம் 4 எம்பி சீட்டுகள் கிடைத்திருக்கும் அண்ணா திமுக குறைந்தபட்சம் 15 சீட்டுகள் கிடைத்திருக்கும் தீய சக்தி திமுக நாப்பது சீட்டுக்களும் வெற்றி பெறும் வாய்ப்பு அமைந்திருக்காது
இவர் கிட்டத்தட்ட ஆறு வருடம் பாரதிய ஜனதாவில் பயணித்திருக்கிறார் 2026 ல்
ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தும் பெற்ற சீட்டுக்களும் வாக்கு சதவீதமும் எவ்வளவு
கூட்டணி தவறான கூட்டணி சீட்டுகள் குறைவான சீட்டு தொகுதிகள் மோசமான தொகுதி இதை காரணமாக சொல்வீர்களா
விஜய்க்கு எல்லாம் லட்டு போல சீட்டுகளாக கிடைத்தது லட்டு போல தொகுதிகளாக கிடைத்தது
தெரிகிறதா அவர் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தாலும் அவரது ஆதரவாளர்களுக்கு மிகத் தெளிவாக மிகத் தெளிவான செய்தியை சொல்லி இருக்கிறார் யாரும் பிஜேபிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள் என்று Reading between lines என்று சொல்வார்கள்
ஹிட்லர் போன்ற வாயாடல் காரர்களுக்கு தான் என்ன சொன்னால் மக்கள் என்னவாக புரிந்து கொள்வார்கள் என்று தெளிவாகத் தெரியும் that is completely in between him and his
அந்த நால்வர் அணி மீது எப்படி உச்ச பட்ட வெறுப்பை தூண்ட வேண்டும் என்று அவருக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது
அதற்கு சோசியல் மீடியாவில் இது போன்ற பதிவுகள் பரவ விட வேண்டும் என்பதற்கும் சூத்திரதாரியே அவர்தான் அதற்குத் தகுந்தார் போல அவர் தேர்தலிலேயே போட்டியிட தவிர்த்ததும் அதற்காகத்தான்
அதனால் தான் அவரது ஆதரவாளர்கள் அத்தனை பேரும் விஜய்க்கு ஓட்டு போட்டது தான் விஜய்க்கு யாருமே எதிர்பாராத அவ்வளவு பெரிய வெற்றி அமைய காரணம் ஆயிற்று
கட்சியின் நீண்ட கால நலன்களை கொண்டு கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளை ஒரு மிகக் கீழ்ப்படிதல் உள்ள தொண்டனாக ஏற்றுக் கொள்வது தான் கட்சியின் மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கும்
இவரை தற்காலிகமாக ஒரு பதவியில் இருந்து விலகி இருக்கச் சொன்னால் அதில் இவருக்கு சற்று உடன்பாடு இல்லை என்றால் அதற்காக கட்சியின் நலன்களுக்கு எதிராக குழிபறிக்கும் வேலையில் இறங்குவாரா
கடந்த ஒன்றரை வருடங்களாக மிகத் தெளிவாக கட்சியின் ரெபிடேஷனை கெடுக்க பெரும் சதி செய்து மிகச் சாதுரியமாக காரியங்களை செய்து இருக்கிறார்
இவர் துவக்கப்போகும் இயக்கத்தில் எம் பி எம் எல் ஏ பதவிகளில் ஒருவரே தொடர்ந்து இருக்க முடியாது என்கிறார்
இப்படிப்பட்ட ஒரு உன்னதமான கட்சியின் சட்ட விதிகள் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே இருக்கும் பொழுது இவர் எதற்கு புதிதாக கட்சி தொடங்க வேண்டும்
ஏற்கனவே பாரதிய ஜனதாவில் கட்சித் தலைவர் போன்ற உயர்மட்ட பதவி உட்பட அப்படி யாருக்கும் எந்த நிரந்தர பொறுப்பும் இல்லை என்பது தானே பாரதிய ஜனதாவின் அடிப்படை சட்ட விதி.
பரம்பரை ஆட்சி ஏற்படாமல் இருக்க அதுதானே "மிக உயர்ந்த" வழியாக இருக்க முடியும்
உண்மையிலே இவரது நோக்கம் உயர்வானதாக இருந்தால் பாரதிய ஜனதாவை போலவே இவரது கட்சியிலும் இவர் கூட தொடர்ந்து மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகு கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்க முடியாதது போல நேர்மையான சட்ட விதிகளை உருவாக்குவாரா.
அப்படி ஒரு உயர்ந்த சட்ட விதி ஏற்படுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - போன்ற பரம்பரை கட்சி தானே உருவாவதற்கு வழிவகுக்கும்
அப்புறம் எதற்கு வி த லீடர் போன்ற போலி மற்றும் கவர்ச்சி பெயர்கள் எல்லாம்

No comments:

Post a Comment

ரகசிய வலைப்பின்னல்: அண்ணாமலை நிழல் சாம்ராஜ்யமும், சிக்கிய சகோதரி கணவரும்! -

ரகசிய வலைப்பின்னல்: அண்ணாமலை நிழல் சாம்ராஜ்யமும், சிக்கிய சகோதரி கணவரும்! -- ஜோதிஜி திருப்பூர் தமிழக அரசியலில் தூய்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு...