Friday, July 10, 2026

தமிழர் - இறைவன் கோவில் (கரூர்) நிலங்கள் உரிமையைப் பறிக்கும் தவெக அரசு ஆணை

 தமிழர் - இறைவன் கோவில் (கரூர்) நிலங்கள் உரிமையைப் பரிக்கும் தவெக அரசு ஆணை

கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்யும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையருக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்துள்ள அறிவிப்பாணை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
https://www.facebook.com/photo?fbid=1607076987449123&set=pcb.1607077734115715

கோயில்  இறைவனுக்கு சொந்தமான இனாம் 13 லட்சம் ஏக்கர் நிலங்களை மீட்பதே தவெக அரசின் முக்கிய முன்னுரிமை: அமைச்சர் தகவல்

https://pagadhu.blogspot.com/2026/06/13.html


இந்த விஷயத்தில் சட்டவிரோதமாகவும், அறத்திற்கு புறம்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் செயல்பட அனுமதித்த தவெக அரசின் இந்து விரோத செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தவெகவை சேர்ந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்கள் கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம் பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாது என்று உறுதிமொழி அளித்தார்.
ஆனால் கரூரில் 3084 ஏக்கர் திருக்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்து தர கரூர் மாவட்ட ஆட்சியரும், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும் பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள செயலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
மதசார்பற்ற சமூகநீதி என சொல்லிக்கொண்டே இந்து விரோத செயல்களை தனது ஆட்சியில் அனுமதிப்பதன் மூலமாகவும், இந்து விரோத செயல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மூலமாகவும் தவெக இன்னொரு திமுக என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நிரூபித்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி தான் மாறி இருக்கிறதே தவிர இந்துக்களுக்கு எதிராகவும், இந்து கோயில்களுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் இந்து விரோத செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டது.
எந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே செயல்படுவது காலக்கொடுமை.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் திருக்கோயில் சொத்துகளைப் பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் மற்றும் அரசின் சட்டப்பூர்வ கடமை என்றும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு உட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆகவே கரூர் மாவட்டத்திலுள்ள மேற்குறிப்பிட்டுள்ள நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,084 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க Chief Minister of Tamil Nadu திரு. @TVKVijayHQ அவர்களும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...