Wednesday, March 4, 2026

திருப்பரங்குன்றம் முத்தமிழ் முருகன் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதே தமிழர் இறைவன் கோயில் மரபு.

திருப்பரங்குன்றம் முத்தமிழ் முருகன் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதே தமிழர் இறைவன் கோயில் மரபு.

1920களில் வந்த ஒரு தீர்ப்பினால் தெளிவாக நாயக்கர் கால மோட்ச தீபம் ஏற்றுவது என உள்ளத் தூணில் முருகர் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது அகநானூறு கூறும் தமிழர் மரபை இழிவு செய்வது ஆகும்.  

1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .

நீதிபதியை திராவிட ஜாதிவெறி பண்ணையாரிய வழியில் விமர்சித்த அரிபரந்தாமனைக் காப்பாற்றுவது தமிழர் மரபை கீழமை செய்வதே

 

பல ஆயிரம் ஆண்டுகளாய் கடற்கரை என இருந்த பீச்சில் தொடர்ச்சியாக இறந்தவர் உடல் (அண்ணாதுரை, ஜெயலலிதா, கருணாநிதி) வைத்து கல்லறைக் கூடமாக மாற்றியது கொடுமை.  அதில் தயிர் வடை, முரசொலி ல்லாம் பேய் வழிபாடு கொண்ட பைத்திய அறிவு ஆகும்,

முத்தமிழ் முருகன் - கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் சொத்தை மீட்பதில் தமிழர் விரோத திராவிட மாடல் திமுக ஆட்சி


ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு; அமைச்சர் ரகுபதிக்கு நீதிபதி கண்டிப்பு

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மதுரை ஆட்சியர், மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் வீம்பான கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதியை நீதிபதி கண்டித்தார். வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில ஊடகச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…

திருப்பரங்குன்றம் வழக்கு: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஆட்சியர்

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்த்கை தீப வழக்கில் மீண்டும் மன்னிப்பு கோரினார் மதுரை மாவட்ட ஆட்சியர். அவரிடம் ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேருக்கு அனுமதி வழங்கினால், நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மார்ச் 4-ல் பதிலளிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதான வழக்கின் மனுதாரர் ராம.ரவிகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

மற்றொரு மனுதாரரான அரசபாண்டி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இந்திய ஆட்சிப் பணி விதிகள் அடிப்படையில் துறைரீதியாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

“திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கக் கோரி பரமசிவம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை ஆட்சியர் பிரவீண்குமார் நேரில் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியதாவ்து:

‘மதுரை ஒரு மத உணர்வுள்ள நகரம். சமீப காலங்களில் மதரீதியான வன்முறை நிகழ்ந்துள்ளது. மதுரையில் மதரீதியான வன்முறை வெடிக்கும் அச்சம் எப்போதும் உள்ளது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அங்கு ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்கள் திரண்டதாலும், அங்கு கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டும், வன்முறை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையிலும், பொது அமைதி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுத்தல், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டியதானது.

கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் இடையே ஏற்பட்ட பதட்டங்களை சுட்டிக்காட்டி மாநகர் காவல் ஆணையர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், பிற காரணிகளைக் கருத்தில் கொண்டும் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு சரியான நேரத்தில் பிறப்பிக்கப்பட்டதால் பெரிய மதரீதியான மோதல் தடுக்கப்பட்டது.

சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கத்தில் மட்டுமே தடையாணை பிறப்பிக்கப்பட்டது. வேறு எந்தக் காரணமும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறேன். நீதிமன்ற உத்தரவுகள் சட்டத்தின் உத்தரவுகள் என்பதை அறிவேன். அதை மீறும் எண்ணம் இல்லை.

நீதிமன்றத்தின் உத்தரவு மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளேன். நீதிமன்றத்தின் அதிகாரம் அரசியலமைப்பு நிர்வாகத்தின் அடித்தளமாக உள்ளது. எந்த நிர்வாக அதிகாரமும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் செயல்பட முடியாது; செயல்படவும் கூடாது. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இதையேற்று நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”

-என ஆட்சியர் கூறினார்.

பின்னர் நீதிபதி, ‘நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஏற்கெனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்றுமாறு கூறவில்லை. இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் உத்தரவிடப்பட்டது’ என்றார்.

அரசுத் தரப்பில், ‘சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை. அதைக் கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை வேண்டும் என்றே நிறைவேற்றாமல் இருக்க நினைக்கவில்லை. அடுத்த கார்த்திகை தீப தினத்துக்கு முன்பு உரிய முடிவெடுக்கப்படும்’ என்று கூறப்பட்டது.

அதயடுத்து,  “நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழு கோயில் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் அருகே 15 நிமிடங்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் (மார்ச் 4) தெரிவிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் ஆஜராக வேண்டாம். மாநகர் காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, அமைச்சர் ரகுபதி கருத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு ஆட்சியர்,  “அமைச்சரின் கருத்து தவறானது” என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு, அமைச்சர் ரகுபதிக்கு எதிரான மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • ஆதாரம்: இந்து தமிழ் திசை

$$$

வேணும்னு பண்ணலைங்கய்யா.. நீதிபதியிடம் மண்டியிட்ட மதுரை ஆட்சியர்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் இருக்கவில்லை எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என ராம.ரவிகுமார், அரசபாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் டிசம்பர் 3இல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் மலைக்கு நேரில் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதன்படி தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்கள், திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை அமலில் இருப்பதாகக் கூறி திரும்ப அனுப்பப்பட்டனர்.

ஏற்கனவே 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது உறுதி செய்யப்பட்ட பிறகும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை ஆட்சியர் உள்ளிட்ட மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், அரசபாண்டி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக அகில இந்திய பணிகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) உள்ள அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968ல் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் ஒரு முக்கிய கேள்வியை முன்வைத்தார். அதில், “நான் 15 நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி, 5 நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுமா? என்பதை கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தற்போது நிலுவையில் உள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தரப்பில், “சட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது தான் நிர்வாகத்தின் கடமை. சூழலைக் கருத்தில் கொண்டு தான், செயல்படுத்தப்பட்டது. சட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறேன்.பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன். வேண்டுமென்று கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் என இல்லை. எனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

“கோவில் சொத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சொத்து அல்ல. ஏற்கனவே ஏற்றிய இடத்தில் என்று சொல்லவில்லை, இந்துக்களுக்குச் சொந்தமான பகுதியில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தோம்” என நீதிபதி தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரணை செய்த நீதிபதி, “நீதிமன்றம் சொல்லும் 5 நபர்களை கோயில் மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் இந்த வழக்கையும் முடித்து வைக்கிறேன்” என்று கூறி, இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராகத் தேவையில்லை, நாளை மறுநாள் காவல்துறை ஆணையர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (மார்ச் 4) ஒத்திவைத்தார்.

  • ஆதாரம்: ஒன் இந்தியா

நீதிமன்ற அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர் ரகுபதிக்கு இல்லை: நீதிபதி கண்டனம்

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கக் கோரி பரமசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்னிலையில் விசா​ரணைக்கு (மார்ச் 2) வந்​தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  “அமைச்சர் ரகுபதியின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், மலை உச்சியில் விளக்கு ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அனுமதிக்க முடியாது என்று கூற அமைச்சருக்கு மட்டும் அல்ல, வேறு யாருக்கும் துணிச்சல் கிடையாது” எனவும் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

பொது வெளியில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அதன் இறுதி தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும் அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்ட அமைச்சர் போன்ற உயர் பதவியை வகிக்கும் ஒருவருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப அமைச்சர் ரகுபதி விஷமத்தனம் செய்துள்ளார். அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடிக்க நினைக்கிறேன். ஆயினும், தேவைப்பட்டால் இடையீட்டு மனுவை மீண்டும் விசாரிக்க தயங்கமாட்டேன்

என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  • ஆதாரம்: தமிழ் ஜனம்

$$$

நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது என, தமிழக அமைச்சா் ரகுபதிக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராம.ரவிகுமார், பரமசிவம் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா், காவல் துணை ஆணையா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அமைச்சா் ரகுபதி மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுதாரா்களில் ஒருவரான பரமசிவம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோர் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை காரணமாகவே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பதில் மனு தாக்கல் செய்தனா்.

ஆனால், அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசிய போது, ‘திருப்பரங்குன்றம் தொடா்பாக உயா்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்காவிடில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றியிருப்பா். அப்படி தீபம் ஏற்றியிருந்தால், அதுவே வழக்கமாக மாறிவிடும் என்பதால்தான் தடுத்தோம்’ எனக் கூறினார். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமைச்சா் ரகுபதியையும் சோ்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழக அமைச்சா் ரகுபதியின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதை அனுமதிக்க முடியாது என கூறுவதற்கு அமைச்சருக்கு மட்டுல்ல, வேறு யாருக்கும் உரிமை கிடையாது. நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்குப் பிறகு, அரசுக்கு இருக்கும் ஒரே வழி மேல்முறையீடு அல்லது மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுதான். பொது வெளியில் நீதித் துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், அதன் இறுதித் தீா்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது. முன்பு சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருக்கு இந்த அடிப்படை புரிதல் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.

அமைச்சா் ரகுபதியின் கருத்து வெளிப்படையானது. அதை அவா் இதுவரை மறுக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது உண்மையில் தகன மைதானம் என அவா் கூறிய கருத்து பரவலாக ஏளனத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அவரின் அறியாமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமா்வின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என ரகுபதி கூறினார். இன்று வரை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்காகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ரகுபதி கூறினாலும், மாவட்ட ஆட்சியா் அத்தகைய நோக்கம் எதுவும் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப அமைச்சா் ரகுபதி முயற்சித்துள்ளார். மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பு செயலா? இல்லையா? என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விஷயம். இதை அமைச்சா் மனதில் கொள்ள வேண்டும்.

அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியா் நிராகரித்துள்ளார். இதைக் கவனத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடித்து வைக்கிறேன். தேவை ஏற்படின் இடையீட்டு மனுவை மீண்டும் விசாரிக்கத் தயங்கமாட்டேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்.

  • ஆதாரம்: தினமணி




No comments:

Post a Comment

விமான பணிப்பண்ணை திராவிட மாடல் திமுக கவுன்சிலர் காம சீண்டல்

 "ப்ளீஸ்..! அந்த இடத்துல கை வைக்காதீங்க"- கெஞ்சிய விமான பணிப்பெண்; இரக்கம் இல்லாமல் பா*லியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர்..! நட...