"ப்ளீஸ்..! அந்த இடத்துல கை வைக்காதீங்க"- கெஞ்சிய விமான பணிப்பெண்; இரக்கம் இல்லாமல் பா*லியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர்..!
நடுவானில் விமானப் பணிப் பெண்ணுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் உள்பட இருவரை மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி, சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும், வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணித்துள்ளனர்.
பயணத்தின் போது இருவரும் திராவிட பான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், விமான இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கொண்டு விமானப் பணிப்பெண் ஒருவரிடம் உனது சொந்த ஊர் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு, விமான பணிப் பெண் மதுரை என்று கூறியதும் ஆண்டிபட்டியா? கல்லுப்பட்டியா? என்று கேட்டு கிண்டல் செய்து சிரித்துள்ளனர்.
அதன் பின்னர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பணியின் நிமித்தம் அந்த இரண்டு பேர் இருந்த பகுதிக்கு விமான பணிப்பெண் சென்ற போது, பணிப்பெண்ணின் பின்பக்க இடது தோள்பட்டையில் கைகளை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண், விமானம் டெல்லியை சென்றடைந்ததும் இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அன்றைய தினமே, சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், சம்பவத்தன்று பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, பிப்ரவரி 26ம் தேதி மீண்டும் முறையான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
போலீசார் சம்மன் அனுப்பியும், இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர், அவர்கள் இருவர் மீதும் பா*லியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வ*ன்கொ*டுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, நேற்று மாலை பிரபாகரனும் தியாகுவும் டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த போலீசார், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருவரும் விமானத்திலிருந்து இறங்கியதும், அங்கேயே வைத்து அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன், 2 வயது பெண் குழந்தையை பா*லியல் வ*ன்கொ*டுமை செய்து கொ*லை செய்த வழக்கில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விமான பணிப்பெண்ணுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment