Monday, December 22, 2014

கிறிஸ்துமஸ் கட்டுக் கதைகளும், நிருத்தப்பட்ட கி.பி. - கி.மு. உளறல்களும்

இயேசு கிறிஸ்து எனும் கிறிஸ்துவப் புராணக்க் கதை நாயகன் உண்மையாக வாழ்ந்தார் எனச் சொல்ல எவ்வித நடுநிலை ஆதாரமும் கிடையாது.

கிறிஸ்துவ நண்பர் -என்னய்யா உளறுகிறீர்? பெத்லஹேமில் டிசம்பர் 25 அன்று பிறந்ததை கிறிஸ்துமஸ் என விடுமுறை பெறுகிறாயே? கர்த்தரானவர் பூமியில் கன்னி மகனாய் பிறந்து, மனித குலத்தின் ஒவ்வொருவர் பாவத்திற்காக பலியானவர்- ஏசுவின் ரத்தம் சகல பாவங்களையும் போக்கும்., வரலாற்றையே கிபி - கிமு என மாற்றியவரையே மறுதலிக்கிறாயே? பரிசுத்த ஆவி உன்னை சும்மா விடாது எனச் சாபத்தோடு கத்தினார்.

பைபிள் முழுமையும் படித்தால் மேலுள்ளது  சரி என்றேன். முறைத்தார். விளக்கம் கேட்டபின் அமைதியானார்.
 சுவிசேஷக் கதைகள்படி இயேசு ரோம் கவர்னர் பொன்டியூஸ் பிலாத்துவினால், இயேசு தன்னை கிறிஸ்து- அதாவது யூதர்களின் ராஜா என இயக்கம் நடத்த கைது செய்து, மரண தண்டனை தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமானார்.

இயேசு  மரணம்-  எந்த வருடம் தெரியாது. பொ.கா. 70 வாக்கில், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிக்கதை, ஏசு பஸ்கா விருந்தை வியாழன் கொண்டாட, பஸ்கா பண்டிகை வெள்ளி அன்று, கைதாகி மரணம் என்கிறார்.

பொ.கா. 110 வாக்கில், கடைசியாக வரையப்பட்ட யோவான் சுவிக்கதை, ஏசு பஸ்கா விருந்துக்கு முந்தைய நாள் வெள்ளி அன்று, கைது, மரணம் என்கிறார்.

மரணம் வருடம் தெரியாது, ஊகத்தின் அடிப்படையில் 29, 30 , 33 என பல தேதிகள் தரப் படுகிறது.

ஏசு பிறந்த தேதி சுவிசேஷன்க்களில் கிடையாது. ஏசு பிறப்புக் கதைகளை, மத்தேயு சுவியும் லூக்கா சுவியும் தருகிறது.

மத்தேயு சுவிசேஷக் கதைப்படி -பெத்லஹேமில் வாழ்ந்ததான  யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறையாக யாக்கோபு மகன் ஜோசப்  வாரிசாக ஏசு பிறந்தார். மன்னன் ஏரோது, வெளி நாட்டு ஜோசியர்கள் கூறிட, 2 வயதுக்கு கீழான குழந்தைக் கொலைக்கு பயந்து எகிப்து ஓடுவதாகக் கதை. ஏரோது மரணம் பொ.மு. 4, அதற்கு 2 வருடம் முன்பு எனில் மத்தேயுவின் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வாரிசாக பொ.மு. 6இல் பிறந்திருக்க வேண்டும்.
லூக்கா சுவிசேஷக் கதைப்படி --நாசரேத்தில் வாழ்ந்ததான  யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறையாக ஏலி மகன் ஜோசப்  வாரிசாக ஏசு பிறந்தார். சிரியா கவர்னர் கிரேனியு ஆணையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வர, அப்போது ஒரு விடுதியில் மாட்டுத்தொழுவத்தில் பிறப்பதாகக் கதை. கிரேனியு பதவி ஏற்றது பொ.கா. 6, அதற்குப் பின் மத்தேயுவின் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் வாரிசாக பொ.கா . 8இல் பிறந்திருக்க வேண்டும்.

 இரண்டில் எது உண்மை, இரண்டுமே தவறாகவும் இருக்கலாம்.

ஏசு பிறந்த வருடமும் தெரியாது, இறந்த வருடமும் தெரியாது, யார் பெற்றோர் தெரியாது.
சரி எத்தனை நாள் சீடரோடு இயங்கினார் பார்ப்போமா
If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.
The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) 
Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.

மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.


பைபிளியல் அறிஞர்கள் கூற்று.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives. As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
 
 “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- "The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது 
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

 கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:  The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

 அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

 Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eeminent Biblical scholas regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”

ஏசு பிறந்த வருடமோ, மரணம் அடைந்த வருடமோ, ஏன் சீடர்களொடு எத்தனை காலம் எங்கே சீடர்களோடு இயங்கினார் என்பவை எல்லாமே கிரேக்க மொழி பேசும் சர்ச்சில் தீவைக்கேற்ப மாற்றி மாற்றி புனைந்த கதைகளே சுவிசேஷங்கள்.

கி.பி. - கி.மு. என்பவை கைவிடப்பட்டு அவை பொதுக்காலம் பொ.கா. (பழைய கி.பி.) எனவும், கி.மு. பொதுக்காலத்திற்கு முன் (பொ.மு) எனவும் மாறி 70 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அனைத்து கலைக்களஞியங்களும், பெரும்பாலான பைபிள்களுமே இதைத் தான் பின்பற்றுகிறது.

Monday, November 10, 2014

திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம் .

பைபிள் கதைகள்படி உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்களே ஆகிய நிலையில், 4000 ஆமண்டுகள் முன்பு  உலகமே மூழ்கும் வெள்ளம் வந்திட, கப்பலில் காப்பாற்றப்பட்ட ஒரே குடும்பம் நோவா உடையது.  நோவா மகன்களே வெவ்வேறு இனங்களாக ஆனதாகக் கதை.

ஆப்பிரிக்க மக்களை அடிமைப் படுத்தி கொடுமை செய்ய பயன்பட்டதே பிறப்பால் அடிமை இனவாதம்

கிறிஸ்தவ மிஷனரிகள் எங்கள் வளங்களை கொள்ளை அடித்து எம் சகோதரர்களை கொன்றனர்- ஆப்பிரிக்க கிறிஸ்தவர்கள்

  திராவிடர்கள் பிறப்பினால் தாழ்ந்த முறை தவறி பிறந்தவர்கள் ஆங்கிலேய வெள்ளையருக்கு அடிமை-பைபிள் தொன்மம்- என்கிறது அண்மையில் வெளியான கிறிஸ்தவ பிரச்சார நூல் ஒன்று. ‘India is a Christian Nation’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கிறிஸ்தவ பிரச்சார நூலில். சமீபத்தில் 18-19ம் ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கிறிஸ்தவ பைபிளியல் விஷநரி இறையியலாளர்களிடமும் மிகவும் பரவலாக இருந்த இனவாதக் கோட்பாட்டினை தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி ஒரு பிரச்சார நூலை வெளியிட்டு அதனை கிறிஸ்தவ டயோஸீஸன்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். 

கிறிஸ்தவ விவிலியக் க‌தையில் உல்கை மூழ்கடித்த வெள்ளத்தின் போது (கிறிஸ்தவ நம்பிக்கையின் படி ஏசுவின் தகப்பனான) கர்த்தர் தெய்வத்த்திற்கு  விசுவாசமான நோவா என்பான் காப்பாற்றப் படுகிறான்.   நோவா அதிகமாக சாராயம் குடித்த போதையில் ஆடை விலகி  கிடந்தானாம்-

ஆரியர்கள் வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பவர் அதை வரலாற்று ஆதாரங்களோடு பன்னாட்டு பல்கலைக்கழக தர ஆதாரங்களோடு நிரூபித்தால் 2கோடி

ஆதியாகமம் 9: 22 கானானின் தந்தையான காம்(இளைய மகன்)  ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள். 24 சாராயத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன், “கானான் சபிக்கப் பட்டவன்.    அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.26 மேலும், “சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப் படுவாராக.  கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான். 27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.   தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.  இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான். 

இந்த பைபிள் வசன‌ங்கள்தான் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தவும் அவர்கள் மீது அளவற்ற கொடுமைகளை செய்த வரலாற்று நிகழ்வுகளை நியாயப்படுத்த கிறிஸ்தவ விஷ‌நரிகளாலும் பாதிரிகளாலும் பயன்படுத்தப் பட்டுள்ளது 

கறுப்பின மக்கள் மீது கிறிஸ்தவம் அவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறையையும் இனப்படுகொலைகளையும் நியாயப்படுத்த இந்த விவிலிய இனவாத போலி ஆராய்ச்சி பயன்படுத்தப்பட்டதை ஸ்டீபன் ஆர் கெய்ன்ஸ் எனும் வரலாற்று பேராசிரியர் அவர் எழுதிய 'நோவாவின் சாபம்: அமெரிக்க அடிமை முறைக்கு விவிலிய அடிப்படையில் ஆதரவு' (Noah's curse: Biblical support for American slavery) எனும் நூலில் விவரித்துள்ளார். அதிலுள்ள சில விசயங்களை பார்த்தால் இந்த மிசிநரி கும்பலின் விவிலிய அடிப்படையிலான இன ஆராய்ச்சியின் பின்னால் இருக்கும் இரத்தம் பருகும் விசமத்தனம் விளங்கும்.

கிறிஸ்துவப் மிஷநரி படுகொலைகசள் 12 கோடி அமெரிக்க செவ்விந்தியர்கள் இனப்படுகொலை 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்நூல் கூறும்  விஷயங்களை தெரிந்து கொண்டு தற்போது இந்தியாவில்  கிறிஸ்துவ மத அறிவுஜீவிகள் பரப்பும் நச்சுக் கருத்துக்களை காணலாம். 

அமெரிக்காவில் அடிமை அமைப்புக்கு எதிர்ப்பு அதிகமாக அதிகமாக அடிமை அமைப்பு ஆதரவாளர்கள் 'நோவாவின் சாபம்' என்பதை தங்கள் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அவர்களது பிரசுரங்களில் அடிமை அமைப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களில் விவிலிய-ஆதியாகமத்தின் 9 ஆவது அத்தியாயம் முக்கியமான இடத்தைப் பெற்றது.அமெரிக்காவில் உள்நாட்டு யுத்த காலகட்ட அடிமை-அமைப்பு ஆதரவு அறிவுசீவிகள் வட்டாரத்தில் ஹாமின் ஆப்பிரிக்க தொடர்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரியமாகி விட்டது. அமெரிக்க அடிமை அமைப்பின் உச்சநிலை காலகட்டத்தில் ஹாமினை ஆப்பிரிக்க கறுப்பின மக்களுடன் தொடர்பு படுத்துவதற்கு எவ்வித சான்றும் கூட தேவை ல்லாமல் அது உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகி விட்டது

கிறிஸ்துவப் மிஷநரி படுகொலைகசள் 12 கோடி அமெரிக்க செவ்விந்தியர்கள் இனப்படுகொலை 


ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக விவிலியத்தை வாசிப்பவர்கள் ஹாமையும் அவன் சந்ததிகளையும் அடிமை அமைப்பினை நியாயப்படுத்தவும் பாலியல் வக்கிரங்கள் பாலியல் ஒழுக்கமின்மை என்பவற்றுக்கு காரணமாகவும் காட்டி வந்துள்ளார்கள். விக்கிர வழிபாட்டு மதங்கள் உருவாக அவர்களே காரணம் என கூறினர். கொடுமை, திருட்டு, கலகங்கள் , தெய்வ நிந்தனை போர் இறைக்கொலை ஆகிய அனைத்துக்கும் அவர்களே காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமந்தார்கள். 

ஆக, அமெரிக்க‌/ஆப்பிரிக்க கறுப்பின மண்ணின் மைந்தரகளின் உண்மை வரலாறு மற்றும் அவர்களது சொந்த தொன்ம/ பாரம்பரியங்கள் ஆகியவை மறக்கடிக்கப்பட்டு கிறிஸ்தவ புனைகதை ஒன்று அவர்களின் வரலாறாக அவர்கள் மீது சுமத்தப்பட்டு அந்த புனனகதையின் அடிப்படையில் அவர்கள் மீதான கொடுமைகள் நியாயப்படுத்தப்பட்டன.


இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கறுப்பின மக்களை அடிமைப் படுத்தவும் மதமாற்றவும் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்த இதே ‘ஆராய்ச்சி’ விசமத்தனம் இன்றைக்கு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது – அதுவும் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் முழு முயற்சியுடன் என்பது அதிசயமாக இருக்கிறதா?இதோ கிறிஸ்தவ டயஸீஸ்களில் விற்கப்படும் ‘India is a christian nation’ எனும் நூலில் காணப்படும் விசமத்தனமான இனவாத பிரச்சாரம்.



 கிறிஸ்தவம் எப்போதுமே இனவாதத்தை எதிர்த்ததில்லை என்பது மட்டுமல்ல எப்போதெல்லாம் இனவாத வெறுப்பியல் எழுந்துள்ளதோ அப்போதெல்லாம் அங்கே இனவாத வெறுப்பியலை தனது மத மேலாதிக்கத்துக்காக ஆதரித்துள்ளது. அது அமெரிக்க தோட்டங்களில் வதைக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களை கொடுமை செய்த வெள்ளையராகட்டும், ஹிட்லராகட்டும், ருவாண்டா இனப்படுகொலைகளாகட்டும் அல்லது ஈவெராவாகட்டும் அல்லது மு.கருணாநிதி ஆகட்டும். வெள்ளை மிசிநரி 'ஆராய்ச்சியாளர்கள்' அவர்கள் சென்ற பிரதேசங்களில் வாழ்ந்த வேற்று இன மக்களை ஹாமின் சந்ததிகளாக காட்டும் 'ஆராய்ச்சிகளில்' ஈடுபடுவர். இதன் மூலம் அவர்கள் முறை தவறியவர்கள் நாகரிகத்தில் வெள்ளையர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அதே போல ஆன்மிக புலத்திலும் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் என்பதாகக் காட்டுவார்கள். 

தமிழர்கள் மீது எத்தகைய ஆன்மிக அடிமைத்தளையை விரிக்க எப்படி ஒரு கீழ்த்தர இனவாத புனைவினை இந்த நவீன யுகத்திலும் எவ்வித வெட்கமும் இல்லாமல் முன் வைக்கிறார்கள் பாருங்கள். இத்தனைக்கும் இந்த ஆரிய-திராவிட இனவாதத்துக்கும் சரி நோவாவின் பிள்ளைகளால் உலகில் மக்கள் பரவினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கு நேர் எதிராக உண்மை இருப்பது மரபணு ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ள போதும் இந்த மிசிநரிகளின் போலி ‘ஆராய்ச்சிகள்’ மூலம் மதப் பிரச்சாரம் நடப்பதையும் அத்துடன் தமிழர்களும் அவமானப் படுத்தப் பட்டுள்ளதையும் கவனியுங்கள். 

இந்த இனவெறி திமிர் படைத்த நூலினை சென்னை கத்தோலிக்க பிஷப் லாரன்ஸ் பயஸ் ‘உண்மையைத் தேடுபவர்களுக்கு சிபாரிசு செய்வதில்’ மகிழ்ச்சி அடைகிறார். எஸ்ரா சற்குணம் “இந்த அபூர்வ நூலுக்கு ஆசிர்வாதங்கள்” அளிக்கிறார். ‘Institute of Asian Studies’ என்கிற பெயரில் இந்து பாரம்பரிய அமைப்புகள் குறித்த குழப்பத்தை உண்டுசெய்ய மிகவும் தந்திரமாக அரசு உதவியுடன் இயங்கும் ஜான் சாமுவேலின் முகத்திரையும் கிழிந்துள்ளது. இந்த ஆசாமி கூறுகிறார்: “இந்த நூல் பைபிள் சொல்லும் சிறுவிதை போன்றது. இதைப் போல மேலும் பலர் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.” ஆக தமிழர்களும் திராவிடர்களும் ஹாம் என்கிற தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து சபிக்கப்பட்ட சந்ததிகள் என்று சொல்கிற நூலுக்கு (‘தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து’ இந்த விவிலிய வார்த்தைக்கு தாயை புணர்ந்தவன் என்றும் பொருள் உண்டு. பார்க்க: லேவி. 20:11 மற்றும் லேவி 18:7-8)இந்நிலையில் இந்த மிசிநரி கோட்பாட்டினைக் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறியதை இங்கே பார்க்க வேண்டும்.

“ஆரியப்படையெடுப்புக் கோட்பாடு என்பது ஒரு புனைவு ஆகும். அது ஒரு வக்கிரம் பிடித்த ஆராய்ச்சியின் விளைவாகும். அது தரவுகளின் அடிப்படையில் உருவானதல்ல. “

என பாபா சாகேப் அம்பேத்கர் கருதினார். அவர் தெள்ளத்தெளிவாக கூறினார்:

“சாதியை குறித்து ‘ஆராய்ச்சி’ செய்யும் ஐரோப்பியர்கள் ஏற்கனவே நிறம் குறித்த முன்முடிவுகள் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவே அதனையே இந்திய சாதி குறித்த பிரச்சனைக்கும் அடித்தளமாக்கினார்கள். ஆனால் உண்மையிலிருந்து இது போல விலகிய விசயம் வேறெதுவும் இல்லை. டாக்டர்.கேட்கர் ‘அனைத்து அரசரும் திராவிட-இனம் என கருதப்பட்டாலும் ஆரிய-இனம் என (இன்றைய ஆராய்ச்சியாளரால் -அநீ) ஆரியரே’ எனக்கூறுவது முற்றிலும் சரியான முடிவாகும். எந்த ஒரு சமுதாயமும் ஆரிய இனமா திராவிட இனமா என்பதெல்லாம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு கேள்வியே இல்லை ஐரோப்பிய ‘ஆராய்ச்சியாளர்கள்’ அத்தகைய பிரிவினையயக் கொண்டு வரும் வரை.”

மேலும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:

“அந்தணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. அந்தணர்கள் திராவிடரெனில் தலித்துகளும் திராவிடரே. அந்தணர்கள் நாகர்களெனில் தலித்துகளும் நாகர்களே. அந்தணர்களும் தலித்துகளும் வெவ்வேறு இனத்தவர் எனும் ஐரோப்பிய கோட்பாடு உண்மைத் தரவுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவு ஆகும்.”

அண்ணல் அம்பேத்கர் வேதங்களையும் இதிகாசங்களையும் சமுதாய யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்து ஆராய்ந்து கூறிய இந்த முடிவினை அறிவியலும் உண்மை என ஒத்துக்கொண்டு உள்ளது.அண்மையில் PNAS வெளியிட்ட ஆய்வு ஒன்று ‘A prehistory of Indian Y chromosomes: Evaluating demic diffusion scenarios’ (January 24, 2006 | vol. 103 | no. 4 | 843-848)
அதன் முடிவினை பின்வருமாறு கூறுகிறது:

“Y க்ரோமோஸோம் தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆரரய்ச்சி முடிவுகள் இந்தியாவிற்குள் பெரும் படையெடுப்போ புலப்பெயர்வோ நடந்தது எனும் கோட்பாட்டுக்கு எதிராகவே அமைந்துள்ளன.”

ஆனால் இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மக்களின் அறியாமையை பயன்படுத்தி மதம் வளர்க்க போலி இனவெறி கோட்பாடுகளை பரப்பும் கிறிஸ்தவ மிசிநரிகளை என்னவென்பது. அல்லது தங்களை கீழ்மைப்படுத்தும் இனவாதக் கோட்பாடுகளை மிசிநரிகள் கூற அதனை ஏற்று அதற்கு ‘ஆமாம் சாமி’ போடும் நம்மூர் ‘தமிழின காவலாளிகளை’ என்னவென்பது?அது போலவே நோவாவின் சந்ததிகள் உலகில் சென்று அங்குள்ள இனங்களானார்கள் என்கிற பிற இனத்தவர், மதத்தவர் மீது மிசிநரிகள் திணித்த கிறிஸ்தவ புனைகதையும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்தே மானுட இனம் பரிணமித்து பரவியது மரபணு ஆராய்ச்சியால் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டீபன் ஓபன்ஹைமர் போன்ற மரபணுவியலாளர்கள் இன்றைக்கு 85000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து பாரதம் வந்த மானுடக்குழுமமே இன்றைய ஆப்பிரிக்கரல்லாத அனைத்து மக்களினங்களின் முன்னோடிகள் என்கிறார். அதாவது ஹாமின் சாபம், நோவாவின் சந்ததிகள் போன்ற புனைகதைகள் மூலம் உருவாக்கப்பட்ட போலி இனவாத ஆய்வுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.எனில் ஏன் இன்றைக்கும் இத்தகைய பொய்யான இனவாதங்களை ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் மிசிநரிகள் பரப்ப வேண்டும்? இதுதான் மிசிநரி கருத்தாக்கங்களின் இரட்டை நிலை. கீழே உள்ள ஓவியத்தையும் புகைப்படத்தையும் பாருங்கள். இவற்றுக்கான தொடர்பு என்னவோ அதுதான் அன்பை போதிப்பதாக கூறும் கிறிஸ்தவத்துக்கும் அது தன் மேலாதிக்கத்துக்காக பரப்பும் இனவாத வெறுப்பியலுக்குமான தொடர்பு.

ஆம் அந்த மேரி-குழந்தை ஏசு ஓவியத்தை வரைந்த ஹிட்லர்தான் யூத தாயையும் குழந்தையையும் சுட்டுக்கொல்லும் நாசி வெறியர்களையும் உருவாக்கினான். அப்போது கிறிஸ்தவ அதிகார பீடங்கள் அவன் புகழ் பாடின. 

மேலே: ஹிட்லர் புகழ் பாடும் லுத்தரன் சர்ச் இதழ்; ஹிட்லருடன் கத்தோலிக்க பெருந்தலை, நாசி மேடையில் கத்தோலிக்க பெருந்தகை, கிறிஸ்தவ ரசிகைக்கு ஆட்டோகிராப் வழங்கும் ஹிட்லர்

கிறிஸ்தவ இறையியல் இல்லாமல் நாசி வெறுப்பியல் இல்லை. மற்ற இனவாத வெறுப்பியல் கோட்பாடுகளான ஹட்டூ-டட்ஸி, திராவிட-ஆரிய இனவாதம் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.உலகையே பாழ்படுத்தும் இந்த வியாதி அழிய மருந்தொன்றிருக்குது. அதுதான் பாரதத்தின் இந்து தருமம்.

அரவிந்தன் நீலகண்டன் 


India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.

Tuesday, November 4, 2014

பழைய ஏற்பாடு- வரலாற்றுக் கதையில்லை பொய் புரட்டுகள்

பழைய ஏற்பாடு(Old Testament) கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். பழைய ஏற்பாடுகிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இது எபிரேய விவிலியம் என்றும் அழைக்கப்படுகிறது. 
 Joshua and the Israelites crossing the Jordan
யூதர்கள் பழைய ஏற்பாட்டின் (எபிரேய விவிலியம்) 39 நூல்களையும் TaNaKh (தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்:
1) தோரா (Torah) (Ta)-மோசே சட்டங்கள் , ஐந்நூல்கள் (Pentateuch) நியாயப் பிரமாணங்கள் 
2) நெவீம் (Nevi'm) (Na)-நபிகள் அல்லது தீர்க்கர்கள் எனப்படும்
3) கெதுவிம் (Ketuvim) (Kh)-எழுத்துக்கள்

 யூத மதத்தின் அடிப்படை கதைகள். 
  1.ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெடுத்து அவர் சந்ததிகளுக்கு இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை தரப்பட்டது. யூதர்கள்- ஆபிரகாம் வாரிசுகள்.
 2.பஞ்சம் வர ஆபிரகாம் பேரன் காலத்தில் பஞ்சம் வர எகிப்து சென்று எபிரேயர்கள் அஙே வாழ்ந்தனர். எகிப்தியர் கொடுமைப் படுத்த யாவே மோசே என்பவர் தலைமையில் பல அதிசயம் செய்து 30 லட்சம் பேர் இஸ்ரேலில் குடியேரினர்.மோசே தலைமையில் வந்தபோது செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட்டது.

3.சில நூற்றாண்டு பின்பு முதலில் சவுல் தலைமியிலும், பின் தாவீதும் பிறகு அவர் மகன் சால்மனும்- முழு இஸ்ரேலை அதாவது - யூதேயா- பாலஸ்தீன இரண்டும் சேர்ந்த இணைந்த சாம்ராஜ்யம் ஆண்டனர். தாவீது தங்கம்- வெள்ளி எனச் சேர்க்க சாலமன் பெரும் ஆலயம் கட்டினான். 
. சாலமன் ஆலயம் பாபிலோனியரால் அழிக்கப்பட மீண்டும் ஆலயம் நெகமியா - எஸ்ரா காலத்தில் கட்டப்பட்டது. பழைய ஏற்பாடு இத்தோடு முடிகிறது. நாம் நான்கு கதைகளையும்- வரலாற்று உண்மைகளையும் காண்போம்.

“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60

இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91

ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்து முள்ளனர்.

 தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

 http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple
There is no direct archaeological evidence for the existence of Solomon's Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.

 செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

 Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times. The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them. Page-77
 எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them. Page-77 The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle. The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further. It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87.
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர். பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.
Image result for BIBLE UNEARTHED 

Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8 இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
 2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
 4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
 5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி