Wednesday, April 22, 2026

நடிகர் பிரகாஷ் ராஜ் கடவுள் ராமர் குறித்து சர்ச்சை பேச்சு.. ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ்

கடவுள் ராமர் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு சிக்கல்.. ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ்  By Mani Singh S Updated: Sunday, April 19, 2026

சென்னை: இந்து கடவுளான ராமன் மற்றும் லட்சுமணன் இருவரும் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள். ராவணனை ஒரு பழங்குடியின மனிதராகவும், ராமாயணத்தில் அவர் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுவதாக நடிகர் பிரகாஷ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாணின் சகோதரர் நடிகர் நாக பாபுவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து இருப்பவர் பிரகாஷ் ராஜ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜ், அரசியல் ரீதியாகவும் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரகாஷ் ராஜ் அனல் பறக்க பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். 

ராமனும், லட்சுமணனும் புலம் பெயர்ந்தவர்கள் 

இந்த நிலையில்தான், பிரகாஷ் ராஜ்ஜிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்து கடவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், பேசியதாக கூறி பிரகாஷ் ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், ராமனும், லட்சுமணனும் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள். 

பிரகாஷ் ராஜுக்கு நோட்டீஸ்

ராவணனை ஒரு பழங்குடியின மனிதராகவும், ராமாயணத்தில் அவர் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. பிரகாஷ் ராஜ்ஜின் இந்த பேச்சு இந்து சமூகத்தினர் மத்தியில் கடும் டென்ஷனை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி தரப்பில் இருந்து, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. 

ராமர், லட்சுமணர் குறித்து அவர் பேசிய கருத்துகள் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்க தவறினால் ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ்ஜின் கருத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் சகோதரர் நடிகர் நாக பாபுவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

பிரகாஷ் ராஜ் விளக்கம் 

ராமர் தர்மத்தின் உருவம் என்று கூறி அவரை குறைத்து பேசுவது அகங்காரம் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் பிர்காஷ் ராஜ்ஜை தெலுங்கு படத்தில் இருந்து நீக்க வேனும் என்றும் நாக பாபு கூறியுள்ளார். இதற்கிடையே தனது பேச்சு தொடர்பாக பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

பிரகாஷ் ராஜ் அதில் கூறியிருப்பதாவது:- "கடவுளை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியில் தான் உரையாற்றினேன். அரசியல் லாபத்திற்காக எனது பேச்சு திட்டமிட்டு திரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/prakash-raj-in-trouble-100-crore-notice-after-remarks-on-lord-rama-spark-outrage-791555.html

No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...