Tuesday, April 21, 2026

விளவங்கோட்டில் Congress Candidate கேரள சிஎஸ்ஐ சபை செயலாளர் பிரவீன் scams

 கேரளா வரலாற்றில் எக்கச்சக்கமான ஊழல்கள் நடந்திருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஊழல்களில் ஒன்று காரக்கோணம் மருத்துவக் கல்லூரியில் நடந்த மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் நடந்த ஊழல். ஒவ்வொரு மருத்துவ இடங்களும் பல கோடிகளுக்கு பொய்யான சான்றிதழ்கள் துணையுடன் விற்கப்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்படுத்தி போராட்டங்கள் நடைபெற்றது.

https://www.facebook.com/photo/?fbid=1848393296116478&set=a.115606862728472

அதில் குறிப்பிடத்தக்க வழக்கு ஒன்று இருக்கிறது; அதை தமிழர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்........
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் பெருங்கடவிளை ஊரைச் சேர்ந்த சிஜு மற்றும் மஞ்சு என்ற தம்பதிகளுக்கு பெண் குழந்தை நவம்பர் 8, 2003 அன்று காரக்கோணம் மருத்துவக் கல்லூரியில் பிறக்கிறது. அந்த குழந்தைக்கு உண்டன்கோடு புனித ஜோசப் ஆலயத்தில் வைத்து அக்டோபர் 7, 2004 அன்று அவர்கள் தனுஜா என்று திருமுழுக்கு கொடுத்து பெயர் சூட்டுகின்றனர்.......
சில வருடங்களுக்கு பிறகு, அதாவது மார்ச் 5, 2009 அன்று சிஜுவும் மஞ்சுவும் வழக்காடுமன்றத்தில் விவாகரத்து தீர்ப்பு பெறுகின்றனர். அந்த விவாகரத்து தீர்ப்பின் காரணம் மஞ்சுவுக்கு வேறொரு நபருடன் இருந்த திருமணம் தாண்டிய உறவு என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வருகிறது. அந்த வேறொரு நபர் நெய்யாற்றின்கரை மாவட்டம் பெருங்கடவு கிராமத்தைச் சார்ந்த தாமஸ் நாடார் மகன் பிரவீன் என்று மிகத் தெளிவாக அந்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.........
இதற்கிடையில் பிரவீனுக்கும் சினி என்பவருக்கும் செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு காட்டாக்கடை கத்தோலிக்க ஆலயத்தில் வைத்து கத்தோலிக்க முறையில் திருமணம் நடக்கிறது. பிரவீனுக்கும் சினிக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்களாக குழந்தை இல்லாமல், குமரி மாவட்டத்தில் ராஜாவூர் மிக்கேலாண்டவர் திருத்தலத்தில் நேர்ச்சை செய்து முதல் குழந்தை பிறக்கிறது, அதாவது 2010 ஆம் ஆண்டு.......
முதல் குழந்தை மிக்கேலாண்டவர் அருளால் கிடைத்ததால், பிரவீன் தனது நிறுவனங்களுக்கு மிக்காயேல் கன்ஸ்ட்ரக்ஷன், மிக்காயேல் மெட்டல்ஸ், மிக்காயேல் ஸ்டோன்ஸ் என்று பெயர் இடுகிறார். தனது வீட்டின் முன்பு ஒரு மிக்கேலாண்டவர் குருசடியும் கட்டுகிறார்...
அதன் பிறகு தொழிலிலும் குண்டாயிசத்திலும் கொடி கட்டி பறந்த பிரவீன் சில வருடங்களில் சிஎஸ்ஐ சபை செயலாளராகிறார். அவரது கட்டுப்பாட்டிற்குள் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வருகிறது. அங்கே இருக்கும் மருத்துவ சீட்டுகளை என்ஆர்ஐ கோட்டா மூலம் விற்பனை செய்து கோடிகளில் சம்பாதிக்கிறார் பிரவீன். அதே கல்லூரியில் என்ஆர்ஐ கோட்டாவில் தனுஜா 2021–2022ல் சேர்கிறார்.......
2003ல் பிறந்த தனுஜாவின் பிறப்புச் சான்றிதழில், 2007ல் திருமணம் செய்து 2010ல் மிக்கேலாண்டவர் ஆலயத்தில் நேர்ச்சை செய்து முதல் குழந்தை பெற்றுக்கொண்ட பிரவீனும் அவரது மனைவி சினியும் தாய் தந்தையராகின்றனர். தனுஜா பி.எஸ். தனுஜாவாக மாறுகிறார். கனடாவில் வசிக்கும் சினியின் தங்கை மினி, தனுஜாவின் கார்டியனாகிறார். அந்த மினிக்கு கிடைத்த என்.ஆர்.ஐ. கோட்டாவில் கல்லூரிக்குள் நுழைகிறார்...........
பிரவீனும் அன்றைய பிஷப்பும் கோடிகளில் பணம் சுருட்டிக்கொண்டிருப்பதும், தகுதியில்லாத மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பதும் அறிந்து மக்கள் கொந்தளிக்கின்றனர். பெரும் போராட்டங்கள் வெடிக்கின்றன. முன்னாள் கம்யூனிஸ்ட் அமைச்சர் தங்கப்பனின் மகன் மோகனன் அவர்கள் பிரவீனுக்கு எதிராக புகார் கொடுக்கிறார். கேரள தலைமை செயலர் டிஜிபிக்கு உத்தரவிட, திருவனந்தபுரம் மாவட்ட கிரைம் பிராஞ்சிற்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது.......
பிரவீன் தமிழ்நாட்டில் குழித்துறை கோர்ட்டில் தனுஜாவுக்காக வழக்கு போட்டு, வீட்டில் பிறந்த குழந்தையாக காட்டி தனது மகள் என்று பொய்யான பிறப்பு சான்றிதழை பெறுகிறார். மஞ்சுவுக்கும் சிஜுவுக்கும் பிறந்த குழந்தை, பிரவீனுக்கும் சினிக்கும் பிறந்த குழந்தையாக போலி சான்றிதழ்கள் மூலம் மாற்றப்படுகிறார். இது அப்படியே இந்த வழக்கைச் சம்பந்தமாக டிஜிபி கொடுத்த ரிப்போர்ட்டில் இருக்கிறது......
இந்த சம்பவமும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரியில் நடந்த கோடிகளிலான ஊழலும், சிஎஸ்ஐ சபைக்குள் பிரவீன் செய்த கையாடல்களும், அவர் மேல் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்த எண்ணற்ற குற்றவியல் வழக்குகளும் அவரை நெருக்க தொடங்கியது. சிஎஸ்ஐ மக்களும் பொதுஜனமும் கொந்தளிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, அமலாக்கத்துறை களமிறங்கியது. பிரவீன் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு தலைமறைவாகிறார். 2023 வரை கேரளவாசியாக இருந்த பிரவீன், தமிழ்நாட்டில் பதுங்குகிறார்....
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கேரள நண்பர்களான கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னித்தலை வழியாக பணத்தை வாரி இறைக்கிறார். இங்கே செல்வ பெருந்தகை மற்றும் ராஜேஷ் குமாரை சரி கட்டுகிறார். விளவங்கோட்டில் ராகுல் காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளராக பொய்யான சான்றிதழ்களை கொடுத்து தேர்தல் களத்தில் நிற்கிறார்........
இன்று ரமேஷ் சென்னித்தலையும் கேசிவேணுகோபாலும் ராகுல் காந்தியும் உம்மன் சாண்டி மகளும் விளவங்கோட்டு தெருக்களில் இந்த கேரளாவின் குற்றவாளிக்காக வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்கள்...
என் தாத்தன்கள் போராடி மீட்ட விளவங்கோடு கேரள அழிமதி ராஜாக்களின் பதுங்கு தலமாக கேரள பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது...
மங்கட்டை பிறப்புகளான விளவங்கோட்டான்கள் கையில் குத்துவோம், கையில் குத்துவோம் என்று புத்திஸ்வாதீனம் இல்லாதவர்களாக விளவங்கோட்டு தெருக்களில் கை அசைத்தபடி சுத்திக்கொண்டிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment