Tuesday, April 28, 2026

தொழுகை, தேர் என மதக் காரியங்களால் சாலை தெருவை மறிக்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்

மத நடவடிக்கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடி​யாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: மத நடவடிக்​கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடி​யாது. சாலையை மறித்​தால் அரசு தலை​யிட முடி​யும் என்று உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இடை​யீட்டு மனு​தா​ரர் சார்​பில் நிஜாம் பாஷா வாதிடும்​போது, “ஹிஜாப் அணிவது கட்​டா​யம் என்ற நம்​பிக்​கை​யில் உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு ஹிஜாப் அணிவது இஸ்​லாத்​தில் கட்​டாய​மாகப் பின்​பற்​றப்​படும் வழக்​கம் இல்லை என்று தீர்ப்பு கூறியது” என்று தெரி​வித்​தார்.

வழக்​கறிஞர் ஏகலைவ துவிவேதி வாதிடும்​போது, “மத சுதந்​திரத்​தின் கீழ் விதிக்​கப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​கள் மத விவ​காரங்​களை நிர்​வகிக்​கும் உரிமைக்​குப் பொருந்​தாது” என்று தெரி​வித்​தார். இந்து தர்ம ஆச்​சார்ய சபா சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் அக்​சய் நாக​ராஜன் கூறும்​போது, “மத நடவடிக்​கை​களில் பொது ஒழுங்கு உள்​ளிட்ட காரணங்​களைக் காட்டி அரசு தலை​யிட முடி​யாது ” என்றார்.

அப்​போது நீதிபதி பி.​வி. நாகரத்னா கூறும்​போது, “மதச்​சார்​பற்ற நடவடிக்​கைகள் பாதிக்​கப்​படும் பட்​சத்​தில் அரசு தலை​யிட முடி​யும். உதா​ரணத்​துக்கு ஒரு கோயி​லில் நடை​பெறும் தேரோட்ட நிகழ்​வுக்​காக அனைத்து சாலைகளை​யும் மறித்து அடைத்து வைக்க முடி​யாது. சாலைகளை மறித்து அடைத்து வைப்​ப​தற்​கும், மதத்​துக்​கும் தொடர்​பில்​லை. அரசு தலை​யிட்டு முறைப்​படுத்த முடி​யும்” என்று தெரி​வித்​தார்.

வழக்​கறிஞர் அஸ்​வினி குமார் உபாத்​யாய் கூறும்​போது, “லட்​சக்​கணக்​கான மசூ​தி​கள் இருந்​தா​லும் மெக்கா​வுக்​கும். லட்​சக்​கணக்​கான தேவால​யங்​கள் இருந்​தா​லும் ஜெருசலேத்​துக்கும் தனி புனிதத் தன்மை உள்​ளது. இது​போல 1,500 ஐயப்பன் கோயில்​கள் இருந்​தா​லும் சபரிமலைக்கு தனி புனிதத் தன்மை உள்​ளது. சம்​ஸ்​கிருதம் ஆங்​கிலத்தை காட்​டிலும் அதி​க​மாக 52 எழுத்​துக்​களைக் கொண்​டுள்​ள​தால் அலு​வல் மொழி​யாக்​கும் மசோ​தாவை டாக்​டர் அம்​பேத்​கர் அறி​முகப்​படுத்​தி​னார்” என்று வாதிட்​டார்.

அப்​போது நீதிபதி ஆர். மகாதேவன் குறுக்​கிட்​டு, ‘‘வழக்கு சார்ந்து மட்​டும் வாதிட வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

நீதிபதி அறிவுறுத்தல்: அரசமைப்பு சாசனத்தை ஆங்​கிலத்​தில் விளக்​கு​வது கடினம் என்று வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் வாதிட்​ட​போது, மற்​றொரு நீதிபதி பி.​வி.​நாகரத்னா குறுக்​கிட்டு “கன்​னட​மும் 52 எழுத்​துகளைக் கொண்​டுள்​ளது. அனை​வரும் சமமே. மேட்​டிமை வாதத்தை முன் வைக்க வேண்​டாம்” என்று அறி​வுறுத்​தி​னார். மற்​றொரு நீதிபதி எம்​.எம். சுந்​தரேஷ் குறுக்​கிட்டு இது​போன்ற வாதங்​களை முன் வைக்​கக் கூடாது என்று கூறி வாதத்தை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.


 

No comments:

Post a Comment