மதம் மாற்றம் தேசிய அபாயம் இதை சொன்னவர் விவேகானந்தர்.
தமிழ் பேசுகிற ஹிந்து தர்மத்தை பின்பற்றுகிற எந்த ஒரு நபரும் எனக்கு தமிழ் மொழியை விட ஹிந்து தர்மம் சொல்வது தான் பெரிது என்று சொல்ல மாட்டான்.
காரணம் தமிழும்- இந்து கலாச்சாரமும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.
தமிழில் இல்லையெனில் ஹிந்து தர்மம் தமிழ் மண்ணில் தழைத்திருக்காது.
அதேபோல ஹிந்து தர்மம் இல்லாமல் தமிழ் பண்டைய நூல்கள் எதுவும் இல்லை.
ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படும் மொழியால் தான் தர்மம் நிலைத்தது.
ஆதி அந்தி காலம் தொட்டு- சங்க இலக்கிய காலம்- கடந்த நூற்றாண்டு வரை தமிழால் சைவம் வளர்ந்தது.
சமஸ்கிருதத்தால் வைணவம் வளர்ந்தது.
இந்து தர்மத்தின் வகைப்பாடுகளான சைவம்- வைணவம்- கௌமாரம் சாக்கியம் கணபாத்தியும்- செளரம் ஆகியவற்றை பின்பற்றுபவர்கள் யாரும் தங்கள் தாய் மொழியை விட ஹிந்து தர்மம் பெரிது என்று சொல்வதில்லை.
பாரத நாட்டின் பேசப்படும் மாநில தாய் மொழியும், இந்து கலாச்சாரமும் பின்னி பிணைந்தவை.
என்றைக்கு இந்து தர்மம் தேவையில்லை என்று தமிழகத்தின் அரசியல் களம் இந்த நூற்றாண்டில் ஒதுக்க ஆரம்பித்தார்களோ, அன்றைக்கே தமிழகத்தில் பிழையில்லாமல் தமிழ் பேசுவோரும், கற்போரும் நீதிநெறி படைப்பவரும் அருகி விட்டார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் தமிழ் என்பது அரசியல் , ஆதாய, சுய அடையாள மறைப்பு பிழைப்பு மொழி.
தமிழகத்தில் வாழ்கின்ற தமிழை தாய் மொழியாக கொண்ட எந்த ஒரு வைணவனும் அட்சரம் பிசகாமல் தமிழை பேசுவான் எழுதுவான் நூல்களைப் படைப்பான்.
ஆனால் ஒரு நூற்றாண்டில் மதமாற்றம் என்ன செய்திருக்கிறது என்பதை பாருங்கள்.
No comments:
Post a Comment