கடைசியாக அவர் செல்போனில் அம்மாவிடம் பேசும்போது திடீரென 'பாபு' என்று கத்தி இருக்கிறார். அதன் பிறகு செல்போன் ஸ்விட்ச் ஆப்.
பாபு என்பது தெலுங்கில் குறிப்பாக சிறுவர்களை மாணவர்களை அழைக்க பயன்படுத்தப்படும் சொல். ஆகையால் ரூபாவின் பள்ளி மாணவர்கள் மீது போலீசாரின் கண்காணிப்பு வளையம் போடப்பட்டது.
மத்தாங்கிளாஸ் மாணவர்கள் இரண்டு பேர் ஏகப்பட்ட பணப்புழக்கம் வித் iphone. கேட்டதற்கு பெற்றோர்கள் பணம் தந்தார்கள் என்று சொன்னார்கள். ஆனால் பெற்றோர் மறுத்து விட்டனர். அடுத்த மாணவர்களை நெருக்கி பதுக்கி வைத்திருந்த பணத்தை கைப்பற்றிய போது அதில் ரத்தக் கறைகள்.
பின்னணி இதுதான்.. தெலுங்கானாவின் நல்கொண்டா நகரத்து புகழ் பெற்ற தனியார் பள்ளி. எக்கச்சக்கமான பணப் புழக்கத்துடன் மாணவர்களின் நடவடிக்கை சரியில்லாததால் அவர்களை ஹாஸ்டலில் இருந்து துரத்துகிறார் முதல்வர் ரூபா.
இதற்கு பழி வாங்க காத்திருந்த மாணவர்கள் இருவரும் தேர்ந்தெடுத்த நேரம் தான் இன்னும் கில்லாடித்தனமான ஒன்று..
பள்ளியில் மாதாந்திர கட்டணத்தை வசூலித்து எப்போது வீட்டுக்கு எடுத்துச் சென்று வைப்பார் என்பதை மாணவர்கள் துல்லியமாக தெரிந்து அதன் பிறகே சென்று கொ.லையை செய்திருக்கின்றனர். இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளை வேறு
கைரேகை படாமல் இருக்க கையில் கிளவுஸ். தடயங்களை அழிக்க தாங்கள் அணிந்திருந்த உடைகளை எரித்துவிட்டனர்.. 27 முறை ஒரு பெண்ணை குத்திக் கொ.ல்லும் அளவுக்கு 16 வயதில் மாணவர்களுக்கு இப்படி ஒரு மிருக வெறி..

No comments:
Post a Comment