100 தொகுதிகளில் தனித்து போட்டி; அப்ரோ ஜேசுதாஸ் அறிவிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1484159
பெரவள்ளூர்: ''தமிழக சட்டசபை தேர்தலில், 100 தொகுதிகளில், தனித்து போட்டியிடு வோம்,'' என 'அப்ரோ' ஜேசுதாஸ் அறிவித்தார்.அனைத்து மக்கள் மனித உரிமைகள் கழகத்தின் (அப்ரோ) தலைமை அலுவலகம், கொளத்துார் பெரியார் நகர், 15வது தெருவில் உள்ளது.
அந்த கட்சியின், செயற்குழு கூட்டம், கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் ஐ.பி.ஜேசுதாஸ் தலைமையில் நேற்று மாலை நடந்தது. அதில், அவர் பேசியதாவது:'அப்ரோ' கட்சி, கடந்த லோக்சபா தேர்தலில், 10 வேட்பாளர்களை நிறுத்தியது. அதன் அடிப்படையில், சட்டசபை தேர்தலில், ௧௦௦ தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். எங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பெண்கள். எந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர் என்ற அறிவிப்பு, வரும், ஏப்., ௬ம் தேதி அறிவிப்போம். இந்த அரசு எங்களுக்கு இழைத்த அநீதியை மக்களுக்கு தெரிவிக்கவும், சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பெண்கள் முன்னேறவும், இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிடக் கூடாது என, பல கட்சிகள் எங்களை மிரட்டுகின்றன. கடந்த, 2012ல் என் மீது வலுக்கட்டாயமாக வழக்குகள் போடப்பட்டன. அதற்கு முன் என் மீது ஒரு வழக்கு கூட இல்லை. இவ்வாறு ஜேசுதாஸ் பேசினார்.
kindly remove my photos
ReplyDeleteஇந்தியாவில் தான் இப்படி மைனாரிட்டி எனச் சொல்லி கொண்டு, மக்களை ஏமாற்றி ஜெயில் சென்று பின்னும் மீண்டும் இப்படி ஆடலாம்.
ReplyDeleteஇயேசு மன்னிப்பாராக