Sunday, February 14, 2016

Pastors fight for One woman made church function stopped and people attack as two gangs

விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி திருவட்டார் அருகே பதற்றம் - See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=86187#sthash.XMOzW9tQ.dpuf





http://kumarionline.com/view/31_110932/20160213172348.html

குலசேகரம்: திருவட்டார் அருகே கோஷ்டிமோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.நாகர்கோவில் அருகே திருவட்டார் ஆற்றூர் பள்ளிகுழிவிளை பகுதியில் சர்ச் மற்றும் காவு உள்ளது. இங்கு விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாளாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் ஒரு பிரிவினர் பொங்கல் விழா நடத்துவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மண் நிரப்பியதோடு, செங்கற்கள் இறங்கியும் வைத்துள்ளனர். இன்னொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் பணியை தடுத்து நிறுத்தினர். இன்னொரு பிரிவினர் பிரச்னைக்குரிய இடத்தில் தங்களது பகுதிக்கான எல்லையை சரி செய்யத் தொடங்கினர். எந்த பணியும் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். குலசேகரம் சர்ச் - ஹீலிங் அதிசய நிகழ்ச்சி

இதில் சர்ச்சின் உதவி போதகர் அகினாஸ் (34), ஜாஸ்வின் (22), லிகோ (22) காயம் அடைந்தனர்.இதனிடையே நேற்று இரவு திடீரென ஏராளமானோர் சர்ச் முன்பு திரண்டனர். நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்து என்று கோரி கோஷம் எழுப்பினர். கல், மண் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பிரச்னைக்குரிய இடத்தில் குவிக்கப்பட்டுள்ள கல், மணல் அகற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

ஒரு பெண்ணிற்கு இரண்டு மதபோதகர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குலசேகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை, பெரும்பழதுார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35 பெயர் மாற்றம்) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மற்றும் 7வயதுகளில் இரண்ட பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர், அந்த பகுதியில் உள்ள ஜெபக்கூட்டம் ஒன்றிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

 அதன் பின் உடல்நலம் பெற்றதாக கூறப்படுகிறது. உடனே இந்துவான அவர் கிருத்துவராக மாறிவிட்டாராம்! அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில் நடந்த ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் இவர் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் மனம் கவரும் குரலில் பாடல்கள் பாடியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு அந்த இளம்பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபோல, பிரகாஷின் சாட்சியுடன் கூடிய பிரசங்கம் அந்த இளம்பெண்ணையும் கவர்ந்து விட்டது.


குலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக்  

காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின 

ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா?









No comments:

Post a Comment

2026 TN Assembly election result region wise

Results by region Region Seats TVK SPA AIADMK+ Northern Tamil Nadu 69 44 8 17 Western Tamil Nadu 68 27 17 24 Southern Tamil Nadu 51 25 23 3 ...