லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் பிறப்பித்த பணியிடை நீக்க உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா என்பவரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. [1, 2, 3]
சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் விமலா.. அருண் ஐ.பி.எஸ் உத்தரவு உள்நோக்கம் கொண்டது! ஹகோர்ட் அதிரடி உத்தரவு! By Rajkumar R Published: Sunday, June 28, 2026,
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-stays-inspector-vimala-suspension-questions-dvac-action-812243.html
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா மீதான பணியிடை நீக்க உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் சில தினங்களுக்கு முன் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்தது உள்நோக்கம் கொண்டது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்த பெண் காவல்துறை அதிகாரியைப் பணி இடைநீக்கம் செய்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதுடன், இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக எழுந்த லஞ்ச ஒழிப்பு புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இந்த லஞ்ச ஒழிப்பு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை , கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி இந்த அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை பணி இடைநீக்கம் செய்து கடந்த ஜுன் 17 ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆய்வாளர் விமலா மீதான இந்த இடைநீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்பது முதற்கட்டமாகத் தெரிகிறது.என்று அதிருப்தி தெரிவித்தது.
மேலும், இந்த இடைநீக்க உத்தரவிற்கு வரும் ஜுலை 9 வரை இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாகத் தரப்பு பதிலளிப்பதற்காக வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜுலை 9 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

No comments:
Post a Comment