Saturday, June 27, 2026

அமைச்சர் சரத் - போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ - மறுப்புகளும்

 அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வெளியான நாளிலிருந்து தொடர்ந்து நடந்த சம்பவங்களை கொஞ்சம் கோர்வையாகப் பாருங்கள்…

https://www.facebook.com/photo/?fbid=1507491024756665&set=a.471907934981651

1. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் மறுப்பு தெரிவிப்பது அவரவர் உரிமை.
ஆனால், அந்த மறுப்பைச் சொல்லும்போது தனது மனைவி மற்றும் பெண் பிள்ளையையும் கேமரா முன் நிறுத்துவது அவசியமா என்பதுதான் கேள்வி.
ஒரு பொறுப்பான பொது வாழ்க்கை நபராக, குற்றச்சாட்டுக்கு நேரடியாக விளக்கம் அளித்திருந்தாலே போதுமானது. குடும்ப உறுப்பினர்களை அந்த சர்ச்சைக்குள் இழுப்பது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை. ( அவரது குழந்தை என இந்த வீடியோவில் சொல்லப்படுவது பெண் குழந்தை)
2. அமைச்சர் சரத்தின் நண்பரின் மனைவி எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒரு பெண், சம்பவம் நடந்த நாளில் தானும், தனது கணவரும் உடன் இருந்ததாகவும், குழந்தையை சமாதானப்படுத்த வெளியே சென்றிருந்ததாகவும் கூறி, சரத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆனால், சம்பவத்தின் போது அவரும் உடன் இருந்ததாகக் கூறப்படும்போது, விளக்கம் அளிக்க அவரது மனைவிக்கு பதிலாக சரத்தின் நண்பரே நேரடியாக பேசியிருக்கலாமே?
அதற்குப் பதிலாக ஒரு பெண்ணை முன்வைத்து பேச வைத்தது ஏன்? ஒரு பெண் பேசினால் மக்கள் அதிகம் இரக்கத்துடன் அணுகுவார்கள் என்ற கணிப்பில்தானா இந்த அணுகுமுறை?
3. Vishaka Vlogs என்ற பெயரில் ஒரு சிறுமி, அமைச்சர் சரத்திற்கு ஆதரவாகப் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் கூறப்படும் கருத்துகள் சிறுமியின் சொந்த கருத்துகளா, அல்லது பெரியவர்கள் வழிநடத்தியவையா என்பது தெரியவில்லை. ஆனால், அரசியல் சர்ச்சைகளில் சிறார்களை முன்வைத்து கருத்து சொல்ல வைப்பது அவசியமா என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக, இதுபோன்ற சர்ச்சைகளில் பெரியவர்கள் தங்கள் கருத்தைத் தாங்களே கூறுவதற்குப் பதிலாக, சிறார்களை முன்னிறுத்துவது பொருத்தமான அணுகுமுறையா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ( இந்த வீடியோவில் எடிட்டிங்கில் 81 கட் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று..)
4. அதற்குப் பிறகு, அந்தக் குழந்தைக்கு மருந்து பரிந்துரைத்த மருத்துவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மருத்துவர் சோமசேகர், அந்த மருந்தை தான்தான் பரிந்துரைத்ததாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். வாந்தி பேதி இருந்ததால் இரண்டு வேள மட்டுமே தருவதற்கு ஒரு பாட்டில் சிரப்பை ஏன் வீணாக்க வேண்டும் என மாத்திரை பரிந்துரைத்ததாக சொல்கிறார்..
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை, எந்த மருத்துவப் பதிவையும் காட்டாமல் இவ்வளவு துல்லியமாக எப்படி நினைவுகூர முடிகிறது என்ற கேள்வி எழுகிறது. அதோடு உடல்நலமில்லாத அந்த குழந்தையை ஏன் மேட்ச் பார்க்க கூட்டி போக வேண்டாம் என இந்த்மருத்துவர் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.. ( மருத்துவர் குறப்பிட்ட குழந்தையின் பெயர் சாகித்தியன்.. ஆண் குழந்தை தானே.. ஆனால் சரத்தின் விளக்க வீடியோவில் இருக்பது பெண் குழந்தைதானே.. )
இந்த மருத்துவரின் வீடியோவை பகிர்ந்தது Lt. Col N Thiagarajan Veteran என்ற பொறுப்பு மிக்க மனிதர் 🤷‍♀️
இந்த விளக்கங்கள் அனைத்தையும் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது, அமைச்சர் சரத் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு வெறும் மறுப்பு அளிப்பதைத் தாண்டி, அவருக்கு சாதகமான ஒரு நேர்மறையான பொது பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக இது இருப்பதாகத் தோன்றுகிறது.
இது இன்னும் நிருபிக்கப்படல.. ஆனால், தொடர்ந்து வெளியாகும் ஆதரவு வீடியோக்களின் பட்டியலால் இப்படி ஒரு கேள்வி மனதில் இயல்பாகவே எழும்புகிறது.
- பகிர்வு..

No comments:

Post a Comment

அமைச்சர் சரத் - போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ - மறுப்புகளும்

  அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வெளியான நாளிலிருந்து தொடர்ந்து நடந்த சம்பவங்களை கொஞ்சம் கோர்வையா...