Wednesday, July 8, 2026

ஓசூர் தேன்கனிக்கோட்டை ரோடு சட்ட விரோத CSI கிறிஸ்து நாதர் சர்ச் - இடிப்பு நோட்டீஸ்

 ஓசூர் சாந்தி நகர், தேன்கனிக்கோட்டை ரோட்டில் உள்ள "CSI கிறிஸ்து நாதர் ஆலய" வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டிடக் கட்டுமானங்கள், முறையான திட்ட அனுமதி (Planning Permission) பெறாமலோ அல்லது வழங்கப்பட்ட அனுமதியை மீறியோ (Deviation) கட்டப்பட்டு வருவதாக ஓசூர் புதிய நகர வளர்ச்சிக் குழுமத்தின் (HNTDA) உதவி இயக்குநர்/துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ நோட்டீஸ் (Notice No.01 / கோப்பு எண்: 2351/2025/KD) அனுப்பப்பட்டுள்ளது!

https://www.facebook.com/sam.ebenezar.2025/posts/pfbid027f6CqnMyRnHv6S4iQopURs4Pmk3hBY1nkpmMookNTkK5idWrJXRXuTbXWcAkMA9Kl?__cft__[0]=AZYUjrSzsvslO46D0YDLedYurd11dXJm9tEJGaAn2UVbwiZR_zZ6kZm1VK78CjDj79ZYLMFgZOjTTyxRUcdnRI-bMM_QpiMdlcxgAHNWRDB8D27zGAsK1P67LdYgYpjSmpNifnTUAYEpA5PT3kDxcziU&__tn__=%2CO%2CP-R

இந்த நோட்டீஸில், கட்டிட அனுமதி ஆணை நகல் (Approval Order Copy) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபட நகல் (Approved Drawing Copy) ஆகியவற்றை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம், 1971 (பிரிவு 56, 57)-ன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
₹5 லட்சம் கள்ளக் கணக்கு யாருக்கு? கட்டிட அனுமதி பெறுவதற்காக என்று கூறி, சபை மக்களின் காணிக்கைப் பணத்திலிருந்து சுமார் ₹5 லட்சம் வரை கணக்கு எழுதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. அப்படியென்றால், முறையான அனுமதி பெறாமல் அநியாயமாகக் கட்டடம் கட்டியதோடு, சபை மக்கள் கேட்ட கேள்விக்கு போலி ஆவணங்களையும், உருட்டல்களையும் மட்டுமே பதிலாய் தந்தது ஏன்?
மாநகராட்சி அதிகாரிகளின் மௌனம் ஏன்?
கடைசி நகல் (Copy) ஓசூர் மாநகராட்சி ஆணையருக்கும் (The Commissioner, Hosur Corporation) அனுப்பப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்ய நோட்டீஸ் அனுப்பிய பிறகும், உள்ளூர் அதிகாரிகள் இந்த அநீதியைக் கண்டு கொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்? இந்த ஊழலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் துணை போகிறார்களா என்ற பலத்த சந்தேகம் விசுவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சபை மக்களின் ஏமாற்றம்:
விசுவாசிகளின் வியர்வை மற்றும் காணிக்கைப் பணத்தை கமிஷன் அடிப்பதற்காகவும், கள்ளக் கணக்கு எழுதுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தும் இந்த போலி போதகர்கள் மற்றும் சுயநல நிர்வாகக் கூட்டத்தின் முகத்திரை எப்போது கிழியும்?
ஓசூர் மாநகராட்சி மற்றும் நகர் ஊரமைப்புத் துறை அதிகாரிகள் இனியாவது நேர்மையாகச் செயல்பட்டு, இந்த விவகாரத்தில் உள்ள முழு உண்மைகளையும், தணிக்கை விவரங்களையும் சபை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும்! சட்டவிரோத கட்டுமானங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?


No comments:

Post a Comment

ஓசூர் தேன்கனிக்கோட்டை ரோடு சட்ட விரோத CSI கிறிஸ்து நாதர் சர்ச் - இடிப்பு நோட்டீஸ்

  ஓசூர் சாந்தி நகர், தேன்கனிக்கோட்டை ரோட்டில் உள்ள "CSI கிறிஸ்து நாதர் ஆலய" வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டிடக் கட்டு...