Sunday, August 25, 2024

250 பெண் குழந்தைகளை சூறையாடிய பலாத்கார வழக்கு: அஜ்மீர் தர்கா காதிம் குடும்பத்தின் 6 பேருக்கு ஆயுள் தண்டனை ஃபாரூக் சிஷ்தி

அஜ்மீர் தர்கா -சூபி அறிஞர் காஜா முகையதீன் சிஷ்தி கல்லறை.  அஜ்மீர் தர்கா பரம்பரை முத்தவல்லி (காதிம்) அறங்காவலர் குடும்பத்தை சேர்ந்த ஃபாரூக் சிஷ்தி & நஃபீஸ் சிஷ்தி -  தன் சகோதரிகள் தோழிகளிடம் பழகி - நட்பு வளர்த்து, தங்கள் தர்கா குடும்ப பண்ணை விட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தனர். பெண் குழந்தைகளை நிர்வாணமாக சிஸ்திகள் முத்தமிடும் போட்டோ எடுத்து வைத்து இதை வெளியிடுவோம் என மிரட்டி தொடர்ந்தனர்,

 

 

 ஃபாரூக் சிஷ்தி  -250 பெண்களை பாலியல் வன்கொடுமை முக்கிய குற்றவாளி த்ற்போது அஜ்மீர் தர்காவில் முத்தவல்லியாக நிற்க இஸ்லாமிய முறையில் மக்கள் அவன் கை முத்தம் தருவதும் நிகழ்கிறது 


அப்பெண்களிடம் வேறு தோழிகளைச் சேர்த்துவிட்டால் உங்களை அழைக்கவில்லை என பல பெண்குழந்தைகளை சேர்த்துவிட  செய்து  சிதைத்தனர். தர்கா காதிம் குடும்பத்தின் பல இளைஞர்கள் விபரம் அறிந்து அவர்களும் இணைய 18 முஸ்லிம் பொறுக்கிகள் 250க்கும் அதிகமான மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து சிதைத்தனர்.. 
  
போட்டோ பிரின்ட் போட்டோ ஸ்டுடியோ மூலம் சில உள்ளூர் பத்திரிக்கையாளர்களிடம் படங்கள் கசிந்தன, அவர்கள் சில பெண் குழந்தை பெற்றோரிடம் போட்டோ வெளியிடுவதாக ப்ளாக் மெயில் செய்து பணம் மிரட்டி பெற்றனர். சில மாணவிகள் தற்கொலை நிகழ்ந்தது. 
3 -4  வருடம் தொடர்ச்சியாக 250க்கும் மேற்பட்ட மாணவ பெண் குழந்தைகள் கற்பழிப்பு மிரட்டல் நிகழ்ந்த நிலையில் ஒருவர் பத்திரிக்கையாளர்  சந்தோஷ் குப்தா & ஆர்எஸ்எஸ் நபர் ஒருவரிடம் புகைப்படங்கள் செல்ல.   21 ஏப்ரல் 1992 அன்றுபத்திரிக்கையாளர்  சந்தோஷ் குப்தா பாலியல் சூறையாடல்  பற்றிய முதல் செய்தியை   டைனிக் நவஜோதியில் வெளியிட; இருப்பினும்,1992 ஆம் ஆண்டு மே 15 அன்று வெளியான இரண்டாவது செய்திஅதில் பாதிக்கப்பட்டவர்களின் மங்கலான படங்களை உள்ளடக்கியதுஇது ஒரு பொது எதிர்ப்பை ஏற்படுத்தியது.   இந்த வழக்கு பரவலான கவனத்தைப்  பெற்றது, அஜ்மீர் முழுவதுமாக மூடப் படுவதற்கு வழிவகுத்தது
வழக்கு போடப் பட்ட நிலையில் 250 - 400 இந்து மாணவிகள் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கலாம் எனவும், பலர் ஊரைக் காலி செய்து  விட்டதையும் உணர்ந்தன்ர்.
 செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை. போட்டோ ஸ்டிடியோ ஓனர் மற்றும் மேனஜர் தற்கொலை. 18 மாணாவிகள் தற்கொலை தாண்டி; வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை என்றது 10 ஆண்டு என உயர் நீதிமன்றம் குறைத்து விடுதலை. 4 பேர் 5 வருடம். ஒருவன் தற்கொலை. முக்கிய குற்றவாளி ஃபாருக் மனநிலை பாதித்தவன் என தண்டனை இல்லாமெல் 2004 வரை தப்பியவன், பிறகு தண்டனை பெற்று 6 வருடம் பின்பு உயர் நீதிமன்றம் குறைத்து விடுதலை.
தலைமறைவான 6 பேருக்கு இப்போது போக்சோ சட்டம் கீழ் ஆயுள் தண்டனை

250 பெண் குழந்தைகளை சூறையாடிய  அஜ்மீர் பலாத்கார வழக்கு:  6 பேருக்கு ஆயுள் தண்டனை-32 ஆண்டுக்குப் பின் தீர்ப்பு! 

https://tamil.oneindia.com/news/india/1992-ajmer-sex-scandal-pocso-court-sentences-life-imprisonment-to-6-accused-631619.html
By Mathivanan Maran Updated: Tuesday, August 20, 2024, 
 அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 250-க்கும் மேற்பட்ட பலாத்காரம் செய்து மிரட்டிய நாட்டையே உலுக்கிய 1992-ம் ஆண்டு வழக்கில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இந்தியாவையே அதிரச் செய்த இந்த கொடூர பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ5 லட்சம் அபராதமும் விதித்து அஜ்மீர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
1992-ம் ஆண்டு இந்தியாவையே அதிர வைத்தது அஜ்மீர் பலாத்கார வழக்கு. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்து நிர்வாணப் படங்கள் எடுத்து அவர்களது பெற்றோர்களை மிரட்டிய கும்பல் குறித்து ஊடகங்கள் அடுத்தடுத்து செய்திகளை வெளியிட ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்தது. 
நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜ்மீர் பலாத்கார வழக்கில் சூபி மொய்னுதீன் ஹாசன் கிஸ்டி தர்கா நிர்வாகிகளான காதிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அரசியல் ரீதியாக அஜ்மீர் பலாத்கார வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன. 
இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டாலும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர். சிலரை நீதிமன்றமே விடுதலை செய்தது. ஒரு சிலர்தான் தண்டனையை அனுபவித்தனர்.. அஜ்மீர் பலாத்கார வழக்கில் 'அரசியல் தலை'கள் பலரும் தப்பிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அஜ்மீர் சம்பவத்துக்கு நீதி கோரி பல்வேறு மக்கள் இயக்கங்கள், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 
அஜ்மீர் 1992 என்ற பெயரில் கடந்த ஆண்டு திரைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவிக்க பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. 
 மேலும் அஜ்மீர் போக்சோ நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் 2001-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் கடந்த ஜூலை மாதம்தான் விசாரணைகள் முடிவடைந்தன. இதனால் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 
எந்த கிளாசில் அதிக தண்ணீர் இருக்கு? 5 செகண்ட்தான் டைம்.. 99% பேர் சரியான விடையை கண்டுபிடிக்கல அஜ்மீர் போக்சோ நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக 6 குற்றவாளிகளும் அஜ்மீர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 
 
1992-ம் ஆண்டு அஜ்மீர் பலாத்கார வழக்கில் நஃபீஸ் கிஸ்டி, நசீம் என்ற தர்ஷான், சலீம் கிஸ்டி, இக்பால் பாதி, சோகில் கனில், சையத் ஜாமீர் ஹூசைன் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என அஜ்மீர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. அத்துடன் 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இருப்பினும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பலரும் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யுப் சேனலில் பேசிய காந்தராஜ் மீது வழக்கு- ஏன் முக்தார் மீது இல்லை

 நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யுப் சேனலில் பேசிய காந்தராஜ் மீது வழக்கு- ஏன் முக்தார் மீது இல்லை