Friday, February 21, 2014

திருக்குறள் கடவுள் வாழ்த்து - இயேசு கிறிஸ்து

திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து

  

குறள் 1: 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது

 36 ‘ சட்ட அறிஞர்-போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ‘ என்று கேட்டார்.37 அவர், ‘ உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும்  உன் இஸ்ரேலின் ஆண்டவராகிய கர்த்தரிடம் அன்பு செலுத்து. ‘ 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 

பைபிளின் கொள்கை- அதற்கு தனி சிறு எல்லை தெய்வம் கர்த்தர். முழு உலகுக்கு இல்லை

(திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர். சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.)
குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

கர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தரின் கருணை என்ன?

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
 இயேசு சீடருக்கு சொன்னது
மத்தேயு10:5 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.கானானியப் பெண்ணிடம் 
மத்தேயு15: 24 இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம்  மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் மற்றவ்ர்களுக்கு அல்ல ‘  என்றார். 26 இயேசு  மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.

யூதரல்லதோரை நாய் எனக் கேவலாமாய் கீழ்த்தரமாய் விமர்சித்தார் இயேசு.

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
 மத்தேயு11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘ அவன் பேய்பிடித்தவன் ‘ என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘ இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ‘ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. ‘ 
இயேசு தன் ஐம்புலன் களை அடக்கவே இல்லை

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
 மாற்கு8:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
மத்தேயு8:19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ‘ போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ‘ என்றார்.20 இயேசு அவரிடம், ‘ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ‘ என்றார்.21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ‘ ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ‘ என்றார்.22 இயேசு அவரைப் பார்த்து, ‘ நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் ‘என்றார்.
மாற்கு15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்.

 இயேசு கடவுளும் இல்லை- நல்லவரும் இல்லை

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.’
மு.வ உரை:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மு.வரதராசனார் உரை:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
மு.வரதராசனார் உரை:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
ஏசு தன் வாள்நாளில் உலகம் அழியும் எனத் தெளிவாக பலமுறை புலம்பினார்.  

  • Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.
    Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.

  

ஏசு மிகச் சாதரண மனிதன் மட்டுமே. எபிரேயரான அவரைப் பற்றி அவரை பார்க்கவே இல்லாத நபர்கள் கிரேக்க மொழியில் புனைந்த புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை மிகைப் படுத்தி கடவுளக்குவது பயனற்ற வேலை

6 comments:

  1. மிக்க அருமை. இங்கே வேண்டும் விதத்தில் வசனமும், திருக்குறளின் தேவைக்கெற்ப உரைஆசிரியரை எடுத்து ரீல் விட்டதை அழகாக தவறு எனக் காட்டினீர்.
    http://ivaryaar.blogspot.in/2013/11/blog-post.html

    அனானி

    ReplyDelete
  2. திருக்குறல் தமிழரான திருவள்ளுவ்ர் எழுதியது, அவர் பல இந்தியப் புராணஙளையே தழுவி எழுதுவார். நிச்சயமாய் கிறிதுவத்தையோ- திரியேக கடவுள் கோட்பாடோ திருக்குறளில் இல்லை

    ReplyDelete
  3. இங்குள்ள கட்டுரையை பார்க்கவும்

    ReplyDelete
  4. இங்குள்ள கட்டுரையை பார்க்கவும்
    https://www.facebook.com/LordsGateway/photos/a.197196337087497.48504.194660530674411/197716870368777/?type=1&stream_ref=10

    ReplyDelete
  5. இந்தியாவில் எழுதப்பட்ட குறள் கிறித்துவ பைபிளோடு ஒத்துப் போகது தான்.

    ReplyDelete
  6. “ தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு தரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் ப்ற்றி கவலைப் படாமல் நீதீ கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
    பக்கம் 7 தமிழும் தமிழரும். – EVR
    வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்பொது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள், நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. என்று சொன்னால் -அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கெட்பது ?’ என்று பதில் கூறுவேன்
    EVR விடுதலை(1.6.50)

    ReplyDelete