Monday, February 24, 2014

பாதிரிகளின் பலான சாதனைகள் - ராபர்ட் டி நொபிலி(தத்துவ போதகர்!)

      

உலகம் முழுதும் வியாபாரத்திற்கு வருகிறோம் என நுழைந்து, மதம் பரப்புகிறோம் என நீட்டி பின் சூழ்ச்சிகளால் படைபலத்தோடு நாடுகளைக் கைப்பற்றி, கட்டாய மதமாற்றம் செய்ததாலே தான் கிறிஸ்துவம் வளர்ந்தது. இந்தியா வரும்போது, சீனர் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்க, இயந்திரப் புரட்சியும் கல்விப் புரட்சியும், பைபிள் சிறையிலிருந்து வர ரோப்பாவில் மக்கள் சர்ச்-கிறிஸ்துவத்தை எதிர்க்க முன்போல் ஆயுத பலம் பற்றவில்லை
முன்னேறாத நாடுகளில் பைபிளை ஒரு தூய புத்தகம் என்ற கட்டுக்கதைகள் பாரத நாட்டில் எடுபடவில்லை. அதைவிட ஆயிரம் மடங்கு அற்புதமான இலக்கியங்களையும், வரலாறும் கொண்டது பாரத நாடு -பாதிரியார்களின் மதமாற்றத்திற்குத் தடையாக இருந்தது.
 இந்திய இலக்கியங்களை தாழ்த்துவது ஒரு பக்கமும், போலியான போர்ஜரிகள் மற்றொரு பக்கமும் வந்ததன, அதில் முன்னோடி ராபர்ட் டி நொபிலி[ 1577-1656] என்ற பாதிரியார்.

பாதிரியார்  ராபர்ட் டி நொபிலியின் பலான மதமாற்ற வழிகள்

இத்தாலி நாட்டில் பிறந்து, 1606ல் தமிழ்நாடு வந்தார்சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மூன்றையும் கற்றாராம். அந்தணர்கள் ஒழுக்கத்தோடு இருப்பதையும் மக்கள் அந்தணர்களை மதிப்போடு நடத்துவதையும் பார்த்து, நொபிலியும் பிராமணர் வேடம் அணிந்து  காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு , தனக்கு தானே தத்துவ போதகர் எனப் பெயர் சோல்லி, தான் ரோம ரிஷி என்றும் சொல்லித் திரிந்தாராம்.

இந்திய பிராமணர்கள் ஐந்தாவது வேதம் இருந்ததை மறைத்துவிட்டனர் என ஏசூர் வேதம் அது என ஒரு போலி வேதத்தை போர்ஜரியாய் தயாரித்தார்.
 
உருவாக்கிய  ஏசூர் வேதம் ஏடுகளை ஐரோப்பா எடுத்துச் செல்ல புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு அற்புதமான ஞானநூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் மீட்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர்.
1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டு பிடித்தார். தொடர்ந்து பல ஆதார பூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் ள்ளது.

ஆரம்பத்தில் மதமாற்றத்தில் சிறு வெற்றி கண்டவர், பின் அதிலும் பெரும் தோல்வியே. ஜாதியை வளர்த்தார். மாறியவர்கள் இந்திய பண்பாட்டை பயன்படுத்தலாம் என்றிட, கத்தோலிக்க சர்ச்சில் பெரும் எத்ர்ப்பு வர, ரோம் அழைக்கப்பட்டு வழிமுறைகளை நிறுத்தும்படி ஆணையிடப்பட்டார். மதுரை மிஷனில் வெளியேற்றப்படஇவரது மதமாற்றப் பணியில் சர்ச் உள்ளே ஜாதிய வளர்ர்ப்பு, பாரதீய முறைகளை பின்பற்றுதல் பல பாதிரிகளால் விமர்சிக்கப்பட்டு, எதிர்ப்பு கிளம்பியது. வாடிகன் போப்பரசரிடம் செல்ல, போப் உறவினர் என்பதால் பெரும் தண்டனைகளில் தப்பி, கடும் கண்டனம் எனத் தப்ப விடப்பட்டார் பின் கடைசியில் தனியாக சென்னையில் இறந்தார்.


பொய், பித்தலாட்டம் போர்ஜரி அனைத்துமே சர்ச்சின் வழிமுறை என்பதற்கு  பாதிரியார்  ராபர்ட் டி நொபிலி  ஒரு அருமையான சான்று.
இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச் திருக்குறளிற்கு போலி விளக்கம், போலி ஓலைசுவடிகள் தயாரித்தல் எனத் தொடர்கிறது.
       
 

http://www.apenews.org/newsread.asp?nid=156
https://home.snu.edu/~hculbert/nobili.htm
http://www.newadvent.org/cathen/11086a.htm
http://en.wikipedia.org/wiki/Roberto_de_Nobili
இவை அனைத்தும் அறிந்தும் பொய்களை பரப்பும் இந்திய ஊடகங்கள்.
http://www.hindu.com/2006/12/08/stories/2006120801460200.htm



4 comments:

  1. ஆஹா போப்பின் சொந்தக்காரர் ராபர்ட் டி நொபிலி "ஐந்தாவது வேதம் இருந்ததை மறைத்துவிட்டனர் என ஏசூர் வேதம் அது என ஒரு போலி வேதத்தை போர்ஜரியாய் தயாரித்தார்."

    உருவ வழிபாடு கொண்டவர்கள், ஆர்.சி சர்ச் மோசடிகள் உலகம் அறிந்ததே

    ReplyDelete
  2. இந்திய சர்ச்களில் நடக்கும் சாதியினருக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியம் தரும் பிஷப்புகள்.

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

    http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3261-thoothukudi

    http://24dunia.com/tamil-news/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF.html

    http://article.wn.com/view/WNAT22567303bdaed9c687c54cd1b6868898/

    http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=2062&cls=row4&ncat=TN

    http://saveamericancollege.blogspot.com/2008/05/blog-post.html

    http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=2948
    http://www.dailythanthi.com/article.asp?NewsID=519687&disdate=10/11/2009&advt=2

    ReplyDelete
  3. http://dravidianatheism.wordpress.com/2009/11/09/beschi-who-burned-the-works-of-sivaprakashar/#comment-42
    சிவபிரகாசர் நூல்கள் எரித்த பெஸ்கியின் 330வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

    ReplyDelete
  4. சாதியமே கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை என்று ஒரு புத்தகம் எழுதப்படுகிறது. அதற்கு உரம் சேர்க்கும் கருத்துக்கள் தகவல்கள் இருந்தால் mananimmathi@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

    ReplyDelete