Saturday, March 1, 2014

இயேசு தண்ணி அடித்தார்? - தண்ணி அடி - செயின்ட் பால்

பைபிள் கதைப்படி - ஏசு யோவான் ஸ்நானனிடம் திருமுழுக்கு பெற்றார். அப்போதே யோவன்ஸ்நானர் ஏசுவை தெய்வீகர் என்றாராம். ஆனால்

மத்தேயு11:2 யோவான் சிறையிலிருந்தபோது இயேசுவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.

மேலும் பேசுகையில்

 மத்தேயு11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ' அவன் பேய்பிடித்தவன் ' என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ' இம் மனிதன் இயேசு பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. ' 

  
ஏசு குடிகாரர் ஏன்பதைக் கண்டோம்

லூக்கா 22:14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
17 பின்பு அவர் மது கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ' இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, மது இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.
இந்த கடைசி விருந்து பேச்சு ஏசு பேசியதில்லை - பால் விட்ட கதை என்பது பைபிளியல் அறிஞர் கருத்து, ஆனால் மது அவர்கள் தினசரி உணவு என்பது தெளிவாகும்.
http://jamestabor.com/2013/12/15/eat-my-body-drink-my-blood-did-jesus-really-say-this/

கர்த்தரும் மது சாரயப் பிரியரே

நமது மக்களுக்கு வசதியாக செயின்ட். பாலின் கட்டளை
 

1திமொத்தேயு5: 23தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு மது-சாராயம் (திராட்சை மதுவும்) பயன்படுத்து.

தண்ணி அடி அது கர்த்தருக்கு தினசரி தேவை



எண்ணாகமம்28: 7 அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்: ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும்.8மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும். காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும்.

6 comments:

  1. நண்பர் ஒருவர் இமெயில் மூலம் நினைவூட்டினார்.
    இயேசுவே தண்ணீரை சரக்காக்கினார்.
    யோவான்2:1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.3 திருமண விழாவில் மது சாராய திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ மது சாராய திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.4 இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார்.5 இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார்.6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.7 இயேசு அவர்களிடம், ' இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.8 பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.9 பந்தி மேற்பார்வையாளர் மது சாரய திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,10 ' எல்லாரும் நல்ல மது சாராயதிராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த மது சாராய இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல மது சாராய இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார்.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம்.

    ReplyDelete
  2. தண்ணி அடி அது கர்த்தருக்கு தினசரி தேவை

    எண்ணாகமம்28: 7 அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்: ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும்.8மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும். காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும்.

    இது டூ மச் சார்

    ReplyDelete

  3. திராட்சை ரசம் என தமிழ் பைபிளிலும், நைன் என உள்ளதை மது சாரயம் என நீங்களாக மொழி பெயர்க்கீறீர்கள்.

    ReplyDelete

  4. இஸ்ரேல் போன்ற பாலைவன நாட்டில் மக்களும் கர்த்தரும் மது குடிப்பது தவறு இல்லையே

    ReplyDelete
  5. http://suvanappiriyan.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், "இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக" விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. இந்த அளவை மீறி ஒரு பானத்தில் ஆல்ஹகால் அதிகமாக கலக்கப்படுமானால் அது போதை ஏற்றக் கூடியதாக மாறி விடுகிறது.

    ReplyDelete
  6. "நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும்"

    நல்ல தெய்வமப்பா

    ReplyDelete

UPSC 2025 தேர்வு - ராஜேஸ்வரி சுவே Appolo Study Centreஇல் படித்து அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் -நான் முதல்வன் Sticker

 Appolo Study Centreஇல் படித்து TNPSC Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2024 ஆம் ஆண்டில் Deputy Collector ஆயிருகாங்க இந்த சகோதரி. அதன் பின் த...