Tuesday, March 4, 2014

தலித்துகள் சர்ச்சபையில் வேண்டாதவர்கள் -பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி

தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை
ஆங்கில விமர்சனம்: பிரான்சிஸ் ——-—-தமிழாக்கம்: லா.ரோஹிணி 


கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு தலித்துகளும் வனவாசிகளும்படும் துயரமும் துன்பமும்.
எந்த ஒரு சமூகம் அல்லது கலாச்சாரத்தின் சமூக அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இயம்பும் கருவிகளாக கடிதங்கள் இருக்கின்றன. பல மக்கள் தங்கள்  துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடிதங்களை கருவிகளாக பயன்படுத்தி உள்ளனர். பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு  கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
தன்னுடைய “வேண்டப்படாத பாதிரி” என்னும் சுயசரிதையில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பிரச்சனைகளை நேரடியாக அணுகி உள்ளார். அவருடைய எழுத்துக்கள் அவருக்கு  என உள்ள தனிப்பாணியை வெளிப்படுத்து கின்றன. இதுவரை பல மக்களுக்கும் தெரியாத உண்மைகளை, உதாரணமாக  சர்சுகளில் பாதிரியார்கள் வாழ்க்கை, சர்ச் வாழ்க்கை- என பல விஷயங்களை தலித் பாதிரியார் வில்லியம் அவர்கள் விவரித்துள்ளார். இந்த தலித்பாதிரியார் பேனாவை கையில் எடுத்தால் அவர் வார்த்தை ஜாலம் செய்வது இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று உண்மையை போட்டு உடைப்பதுதான் அவர் அணுகு முறை ஆகும். மிகுந்த உணர்ச்சியோடு  அவர் நீண்ட தூரம் சென்று சர்சுகளில் நடக்கும் கேவலங்களை தோல் உரித்துக் காட்டுகின்றார்.
டில்லி ஆர்ச்பிஷப் தலித்பாதிரியார் வில்லியம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதற்கு பதில் எழுதும்போது “சர்ச்சின் நன்கு சுவர்களுக்குள் நடக்கும் மிகப் பெரிய” ஜாதி பாரபட்சம் குறித்து தலித்பாதிரியார் வில்லியம் அவர்கள் விரிவாக குறிப்பிடு கிறார். அவர் பின்வருமாறு ஆர்ச் பிஷப்புக்கு பதில் அனுப்பி உள்ளார்.
“நான் ஒரு தலித் பாதிரியார். பிச்சைக்காரன் அல்ல. சர்ச் சபையில் இடம் கொடுங்கள் என்று நான் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. மங்களூரில் இருந்து வரும் உயர் ஜாதி பாதிரியாராக நான் இல்லை. அப்படி இருந்து இருந்தால் நீங்கள் என்னை கௌரவமாக நடத்தி இருப்பீர்கள். பைபிளை பிரச்சாரம் செய்ய எனக்கு உங்களுடைய அனுமதியோ அல்லது நீங்கள் கொடுக்கும் பதவியோ தேவை இல்லை. என்னுடைய எஜமானர் ஏசுதான். நீங்கள் அல்ல. நான் இயேசுவின் அடிமை. உங்கள் அடிமை அல்ல. சர்ச் சபையில் பதவி வகிக்காமல் இருந்தாலும் கூட இதுவரை நான் செய்த சாதனைகள் எனக்கு முற்றிலும் திருப்தி அளிக்கிறது. நான் ஒரு தலித்பாதிரியார் எனவே கத்தோலிக் தலித்துகளின் கௌரவத்தை காப்பாற்றுவது எனது கடமை ஆகும்.”
இவ்வளவும் பிட்டுவைத்துவிட்டு தலித்பாதிரியார் வில்லியம் தனது கடிதத்தில் மேலும் தொடர்கிறார்.
உள்ளூரில் தலித்பாதிரியராக இருக்கும் எனக்கு தொடர்ந்து நான்கு வருடங்களாக ஏன் சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை? ஆனால் இந்த மாதிரி பதவிகளை டெல்லி கத்தோலிக் சபையில் “மற்ற பாதிரிகளுக்கு” நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எவருமே இந்த பதவிகளுக்கு தேவையான தகுதிகளை பெற்று இருக்க வில்லை. என்னுடைய திறமைகள் குறைவாக இருப்பதால் எனக்கு சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை என்று உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லி உள்ளீர்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்டதாகும். என்னுடைய குறைகள் என்ன என்றும் நீங்கள் சொல்லவில்லை, அவைகளை நீங்கள் நிரூபிக்கவும் இல்லை.
வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் இந்த சுய சரிதை “சர்ச்சுக்குள் நடக்கும் மர்மங்களை”  நீ பெரியவனா நான் பெரியவனா என்று நடக்கும்  தனி மனிதப் போராட்டங்களை அம்பலப்படுத்துகின்றன. சர்சுகள் நடத்தப்படும் விஷயம் குறித்து அந்த புத்தகம் பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. தலித் பாதிரியார்களுக்கு தலித் மக்களுக்கு சர்சுகளில் இழைக்கப்படும் கொடுமைகளை அவருடைய சுயசரிதை புத்தகம் பட்டியல் இடுகிறது. இந்த சுயசரிதை புத்தகம் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. சுர்சுகளைப் பற்றி  மக்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணங்கள், கருத்துகள் எவ்வளவு தவறானவை, யதார்த்தத்திற்கு மாறானவை என்பதை வெளி கொணர்கிறது. சர்சுகளில் உள்ள செல்வாக்கு பெற்ற சிலர் எவ்வாறு “நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் ” என்பதையும் தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிப்படுத்துகிறது .”
டொமினக் இமானுவேல் என்னும் மற்றொரு பாதிரியைப் பற்றி எழுதும்போது தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பிற மொழிகளில் டப்  செய்ய அந்த படத்தை டொமினிக் தயாரித்தார். இதற்கான வரவு செலவுகள் அவரிடம் உள்ளன. அதை டில்லி கத்தோலிக்  அசோசியேஷன்  வலைதளத்தில் அவரை போட சொல்லுங்கள். வரவு செலவு கணக்குகளை அவர் வலைதளத்தில் பிரசுரித்துதான் தீரவேண்டும். இந்த படத்தை தயாரிக்கும் போது “சத்பாவனா” என்ற இயக்கத்தின் பேரும் அதில் சேர்க்கப்பட்டது ஏன் இப்படி செய்யப்பட்டது? இந்த படத்தை டொமினிக் “சேதநாலயா” என்ற அமைப்புக்காக மட்டும்தானே தயாரித்தார்? சத்பாவன  இயக்கம் இந்த படத்தை தயாரிக்க பணம்  கொடுத்ததால் அதன் பெயர் சேர்க்கப்பட்டது என்று டொமினக்  சிலரிடம் கூறியுள்ளார். இது எனக்கு தெரிய வந்துள்ளது.
இதில் இருந்தெல்லாம் என்ன தெரிகிறது? சர்ச்சுக்கு வரும் வரவு செலவுகளுக்கு சரியான கணக்கு இருக்க வேண்டும். இதற்க்கான பெரிய தேவை உள்ளது. இது முற்றிலும் உண்மையான கோரிக்கை ஆகும். இம்மாதிரியே தான் எழுதிய சுச சரிதையில் ஒரு இடத்தில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பாதிரியார் ஒரு சுவாரஸ்யமான  சம்பவத்தை குறிப்பிடுகின்றார். அந்த சம்பவத்தால்தான் அவரது சுயசரிதைக்கே “வேண்டப்படாத பாதிரியார்” என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த சம்பவம் என்ன தெரியுமா?
“நான் ஒரு வேண்டப்படாத, விரும்பப்படாத பாதிரியார். ஏன் என்றால் நான் ஒரு உள்ளூர் தலித்பாதிரியார். ஒரு நாள் நான் வேறு ஒரு பாதிரியருடன் மிகவும் சூடாக விவாதித்துக் கொண்டு இருந்தேன். விவாதம் மிகவும் உச்ச கட்டத்திற்கு போனது. அப்போது அந்த பாதிரியார் என்னைப் பார்த்து “நீங்கள் வேண்டப்படாத பாதிரியார் ” என்று சொன்னார். அதையே தன் சுயசரிதைக்கு தலைப்பாக வைத்து விட்டார்.
தலித்பாதிரியாரின் இந்த புத்தகம் தலித்சகோதரர்களைக் குறித்து சிந்திக்குமாறு ஹிந்து சமூகத்தையும் தூண்டுகிறது. தலித்துகள் சமூக மரியாதையை, சமமான நடத்தையை எதிர்பார்த்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகின்றனர் என்று சொல்லப் படுகிறது. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகு தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக தலித்துகள் நம்புகின்றனர். ஆனால் சர்ச் அமைப்பில் “பாரபட்சம் காட்டுவது” என்பது மிகவும் நாசூக்காக நடக்கிறது. எனவே கிறிஸ்துவர்களாக மாறிய பிறகும் கூட தலித்துகளுக்கு  நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலை காரணமாக வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி போன்ற தலித்கிறிஸ்துவ பாதிரியார்களின் நிலைமை இன்னும் மோசமாக பரிதாபமாக போகிறது. அவரைப் போன்றவர்களுக்கு பாதிரியார்களாக தொடர்வது அனேகமாக இயலாது என்ற நிலைமை உருவாகிறது.
தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பலர் கனவில் கூட சொல்ல பயப்படும் அல்லது ஒப்புக் கொள்ள அஞ்சும் பல விஷயங்களை துணிச்சலாக தன்னுடைய சுயசரிதையில் எழுதி உள்ளார். மதமாற்றம் என்னும் கொடுமையான எதார்த்தம் உள்ளதை அவர் ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதுகிறார்.
“தலித் ஹிந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தனர். ஏழைகளாக இருக்கின்றனர். ஏன் என்றால் உயர்ஜாதி ஹிந்துக்களால் அவர்கள் சுரண்டப் பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் கீழ்த்தரமான வேலைகளை, பணிகளை செய்து கொண்டு இருந்தனர். இப்போதும் செய்து கொண்டு உள்ளனர். அவர்கள் கிறிஸ்துவர்களாக  மதம்மாறிய பிறகும் தலித் கிறிஸ்துவர்கள் கத்தோலிக் சர்ச்சின் அதிகாரிகளால் சுரண்டப்பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகும்  ஹிந்து   தலித்துகளின்  நிலைமை மேன்மை அடையவில்லை. முன் இருந்த மாதிரியேதான் மோசமாக உள்ளது. ஹிந்து சமூகத்தில் இருந்த போது தலித் ஹிந்துக்கள் உயர்ந்த நிலைக்கு வர உயர்ஜாதி ஹிந்துக்கள் அவர்களை அனுமதிக்க வில்லை. தலித்கத்தோலிக்கர்களின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடைந்த தாக இருக்கவில்லை. இப்போதும் மேம்பாடு அடையவில்லை. தலித் கத்தோலிக்கர்களின் வாழ்க்கைத்தரம், சர்ச்சிலோ, வட இந்தியாவிலோ, கிறிஸ்தவர் களாக மதம்மாறிய பிறகு கூட மோசமாகத்தான் இருந்தது. இப்போதும் மோச மாகத்தான் இருக்கிறது.
மேலும் தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் புத்தகம் சர்சுகளில் இருக்கும் இன்னும் சில பாரபட்சங்களைக் குறித்தும்  விவரம் தருகிறது. சர்சுகளில் “தென்னிந்தியர்கள் ஆதிக்கம்” அதிகமாக இருப்பதாக அவர் சொல்கிறார். டில்லி ஆர்ச் டியோசாஸ்  தென்னிந்தியர்கள் குறித்தே அதிக கவனம் மற்றும் அக்கறை காட்டுவதாக தலித்பாதிரியார் குறிப்பிடுகிறார். கத்தோலிக் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் தென்னிந்தியர்கள்தான்  இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அதே சமயத்தில் உள்ளூர் வாசிகளுக்கும், தலித்துகளுக்கும் சர்ச்களில் அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படுவ தில்லை. தங்களுடைய கத்தோலிக்க எஜமானர்களுக்கு அவர்கள் ஏறக் குறைய அடிமைகள் மாதிரிதான் உள்ளனர்.
பிரச்சனைகள் பல மட்டங்களில் உள்ளன. சர்ச்சின் வலிமை, யேசுவிடம் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ள மிக அதிகமான தலித்துகள் மற்றும் வனவாசி மக்களையே சார்ந்து உள்ளது. ஆனால் சர்ச்சின் கட்டமைப்பு உயர் ஜாதி, பணக் காரர்களை சார்ந்ததாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். இது மாற்றப் படாத தால்தான்  “போராட்ட அலைகள்” எழும்பத் தொடங்கி உள்ளன. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரியின் புத்தகம் “ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கம்” குறித்து பேசுகிறது. இந்த அமைப்பு தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகள் குறித்து வலிமையாக அணுகுகிறது. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  அவர்கள் தன்னைக் குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு  விடை அளிக்க சரியான இடத்தைத்தான் தெரிவு செய்துள்ளார்.
தலித்துகளும் வனவாசிகளும் “வெள்ளை அங்கிகளுக்கு பின்னால்” பல “கருப்பு பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு உள்ளனர்”. இதை எல்லாம் சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமய நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்களில் பணி செய்வோர் ஆகியோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் “வேண்டப்படாத பாதிரியார்” மிகவும் உபயோகமாக இருக்கும். “மதமாற்ற அரசியல்” பற்றி தெரிந்து கொள்ள புரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் உதவும். தலித்துகளும், வனவாசிகளும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்தியாவில் சமூக மாற்றம் வரும், சாத்தியமாகும். வெறும் மதமாற்றம் அவர்களின் நிலையை எந்த விதத்திலும் உயர்த்தாது. இந்த எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.http://organiser.org//CAT/In%20Focus_82918.aspx? NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=&PageType=N

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...