Friday, March 6, 2026

UPSC 2025 தேர்வு - ராஜேஸ்வரி சுவே Appolo Study Centreஇல் படித்து அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் -நான் முதல்வன் Sticker

 Appolo Study Centreஇல் படித்து TNPSC Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2024 ஆம் ஆண்டில் Deputy Collector ஆயிருகாங்க இந்த சகோதரி. அதன் பின் தற்போது UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

இதுக்கு எதுக்கு நான் முதல்வன் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க?


 எதை எடுத்தாலும் இவர்கள் செய்யுவது விளம்பரம் தான். திட்டம் அறிவிப்பது ஒன்றாக இருக்கட்டும், ஆனால் அதற்கு பின்னால் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். இங்கே என்ன நடக்கிறது என்றால், யூபிஎஸ்சி தேர்வு எழுதப் போகும் எல்லா மாணவர்களையும் பிடித்து கொண்டு வந்து “நான் முதல்வர்” திட்டத்தில் ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள்.
பிறகு ரிசல்ட் வந்ததும் வழக்கம்போல தமிழ்நாட்டில் இருந்து குறைந்தபட்சம் 50 பேர் அளவுக்கு UPSC தேர்வில் செலக்ட் ஆகி விடுவார்கள். உடனே என்ன கதை தொடங்கும் தெரியுமா? “இந்த மாணவர்கள் எல்லாரும் நான் முதல்வர் திட்டம் இருந்ததால் தான் IAS IPS ஆனார்கள்” என்று பொய் விளம்பரம் ஆரம்பம். அதை மீடியாவில் தினமும் ஊதி ஊதி பெரிய சாதனை மாதிரி காட்ட வேண்டியது.
ஒரு திட்டம் வெற்றி என்று சொல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? ஏற்கனவே நல்லா படிக்கும் மாணவர்களை மட்டும் சேர்த்து அவர்களுடைய வெற்றியை தங்களுடைய திட்டத்துக்கு கிரெடிட் வாங்குவது அல்ல. சாதாரண மாணவர்களை அல்லது ஆவரேஜ் மாணவர்களை அட்மிஷன் கொடுத்து, அவர்களையும் UPSC தேர்வு கிளியர் செய்யும் அளவுக்கு பயிற்சி கொடுத்தால் தான் அது உண்மையான வெற்றி. அதுதான் ஒரு திட்டத்தின் தரத்தை காட்டும்.
இப்போது ஒரு தேர்வில் இரண்டாவது இடம் வந்ததற்கே இவ்வளவு சத்தம் போடுகிறார்கள். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவி UPSC தேர்வில் All India Rank 1 எடுத்த போது கூட இவ்வளவு மேளம் தாளம் அடிக்கவில்லை. அந்த பட்டியல் இதோ.
S. Divyadharshini
• தேர்வு: UPSC Civil Services Examination
• ரேங்க்: All India Rank 1
• ஊர்: Chennai, தமிழ்நாடு
• படிப்பு: Dr. Ambedkar Government Law College, Chennai
• Optional subject: Public Administration மற்றும் Law
அப்போது இந்த அளவுக்கு விளம்பரம் இல்லை. ஆனால் இப்போது என்ன ட்ரிக் தெரியுமா? அந்த மாணவியின் தந்தைக்கு டீடைல் எழுதிக் கொடுத்து, “என் புள்ள ரொம்ப கஷ்டப்பட்டா… பீஸ் கட்ட கூட பணம் இல்லை… நான் முதல்வர் திட்டத்தில் கிடைத்த ஸ்காலர்ஷிப் பணத்தால்தான் UPSC படிச்சா… அதனால்தான் இந்தியாவில் இரண்டாவது இடம் கிடைச்சது” என்று பத்திரிகைகளில் பேச வைக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்ன? அந்த மாணவி ஏற்கனவே TNPSC Group 1 தேர்வு பாஸ் செய்து Sub Collector ஆக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். Sub Collector ஆக இருந்தால் ஒரு decent salary கிடைக்காதா? அதைப் பயன்படுத்தி தான் படிக்க முடியும். ஆனால் இப்போது கதையை எப்படி திருப்புகிறார்கள் என்றால் “இந்த ஸ்காலர்ஷிப் இல்லையென்றால் எங்களால் படிக்க முடியாது” என்று கதை கட்டுகிறார்கள்.
இதுதான் இப்போது நடக்கும் டுபாக்கூர் விளம்பர மாடல். உண்மையான சாதனையை விட கிரெடிட் திருடும் அரசியல் மார்க்கெட்டிங் தான் அதிகம். அதனால் தான் மக்கள் இப்போது சிரித்து கேட்கிறார்கள்… இது திட்ட வெற்றியா, இல்லையென்றால் விளம்பரம் மட்டும் கொண்ட திராவிட மாடலா என்று.

No comments:

Post a Comment

UPSC 2025 தேர்வு - ராஜேஸ்வரி சுவே Appolo Study Centreஇல் படித்து அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் -நான் முதல்வன் Sticker

 Appolo Study Centreஇல் படித்து TNPSC Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2024 ஆம் ஆண்டில் Deputy Collector ஆயிருகாங்க இந்த சகோதரி. அதன் பின் த...