Friday, April 15, 2016

Kanyakumari -Nurse killed inside CSI Mission Hospital, culprits are allowed to escape


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

குமரி சி.எஸ்.ஐ. நிர்வாக பிரச்னை 25 பேர் மீது வழக்கு பதிவு

பதிவு செய்த நேரம்:2016-03-16 12:19:23   http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=548373&cat=504









நாகர்கோவில், : குமரி சி.எஸ்.ஐ பேராய நிர்வாக அதிகாரம் தொடர்பாக சி.எஸ்.ஐ. சபையை சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள  பேராயர் அலுவலகம் முன் திரண்டனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், ரத்தினவேலு, ஆர்.டி.ஓ. மதியழகன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆர்.டி.ஓ. முன்னிலையில் பேசி தீர்வு காணப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே இந்த பிரச்னை தொடர்பாக தற்போது வடசேரி இன்ஸ்ெபக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment