ஆத்தூர்: பதவி தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக, கோவை மண்டல சி.எஸ்.ஐ., பேராயர் மீது, ஆத்தூர் வக்கீல் கொடுத்த புகார் மீது, பேராயரின் உதவியாளர், போலீசில் ஆஜரானார்.
22பிப் 2016 06:49
http://65.17.225.99/2012/district_detail.asp?id=1462699
சேலம் மாவட்டம், ஆத்தூர், கடைவீதி, சி.எஸ்.ஐ., பள்ளியின் சொத்து உதவி அலுவலராக, வக்கீல் அலெக்சாண்டர்ஜோசப் உள்ளார். கோவை மண்டல சி.எஸ்.ஐ., பேராயர் தீமத்தேயு ரவீந்தர், ஆத்தூர் ரயிலடி தெரு, சி.எஸ்.ஐ., பாதிரியார் நத்தானியேல்ஜெயராஜ், உதவி மேலாளர் ஜான்சுந்தர்ராஜ் ஆகியோர், வேலை கொடுப்பதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆத்தூர் போலீஸ்: இவர்கள், கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, கோவை மற்றும் சேலம் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். வக்கீல் அலெக்சாண்டர்ஜோசப் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'ஒரு வாரத்திற்குள் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
உயர்நீதி மன்றம்: இதனிடையே, ஜான்சுந்தர்ராஜ் என்பவர், வக்கீல் அலெக்சாண்டர்ஜோசப் மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். நேற்று, கோவை மண்டல சி.எஸ்.ஐ., பேராயர் தீமத்தேயு ரவீந்தரின் உதவியாளர் ரெவரன் சார்லஸ்சாம்ராஜ், உதவி மேலாளர் ஜான்சுந்தர்ராஜ் மற்றும் வக்கீல் அலெக்சாண்டர்ஜோசப் ஆகியோர், ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர். இருதரப்பு புகார் மீது, இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு விசாரணை செய்தார். ஜான்சுந்தர்ராஜ், வக்கீல் அலெக்சாண்டர்ஜோசப் ஆகியோர், அவரவர் கொடுத்த புகார் மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். பேராயர் மீதான மோசடி வழக்கை, நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளும்படி, போலீசார் கூறினர்.
தவறான புகார்: நேற்று, மாலை, 5 முதல், இரவு, 8 மணி வரை, ஆத்தூர் ரயிலடி தெரு கிறிஸ்துவ தேவாலயத்தில், குழந்தைகள் மனம் திடப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மண்டல பேராயர் தீமத்தேயு ரவீந்தரிடம், புகார் குறித்து நிருபர்கள் கேட்டபோது, 'என் மீது தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது' என, கூறிவிட்டு சென்றார். பேராயரின் உதவியாளர் ரெவரன் சார்லஸ்சாம்ராஜ் கூறுகையில், ''நீதிமன்றத்தில், உண்மைக்கு புறம்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. பேராயர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஜான்சுந்தர்ராஜ், அலெக்சாண்டர் ஜோசப் ஆகிய இருவரும், அவர்களது புகாரை திரும்ப பெற்றதால், மேல்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment