Sunday, March 8, 2026

லண்டனில் பேருந்தில் சூடான் நாட்டு பெண் தெளிவான மனித உரிமை நிலை நாடினார்

இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய சூடான் நாட்டுப் பெண் தைரியமான பேச்சு. 

https://www.instagram.com/reels/DVi1cAFjQYw/ 
https://www.facebook.com/photo?fbid=122169133574838190&set=a.122109111002838190

இந்த மாதிரி ஒரு வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

லண்டனில் ஒரு பேருந்தில் நடந்த சம்பவம் இது.

ஒரு பெண் பேருந்தில் அமைதியாக தனது காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர்,

நான் ரமலான் நோன்பு இருக்கிறேன்… உணவின் மணம் என் பசியை தூண்டுகிறது. தயவுசெய்து அதை மூடுங்கள் அல்லது சாப்பிடாதீர்கள்” என்று கூறி அவரைத் தடுக்க முயன்றார். 

ஆனால் எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் — நாம் உண்மையாக இறைவனை நினைத்து விரதம் அல்லது நோன்பு இருக்கும்போது, நம் முன்னால் எந்த உணவு இருந்தாலும் அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வராது.

இறைவனுக்காக அர்ப்பணித்து விரதம் இருப்பவர்களுக்கு, முன்னால் எதைக் கண்டாலும் அதில் நாட்டம் வராமல் இருப்பதே உண்மையான விரதத்தின் அர்த்தம்.

ஆனால் அந்தப் பெண் மிகவும் தைரியமாகவும் தெளிவாகவும் பதிலடி கொடுத்தார்.

“நான் உணவு சாப்பிடுவது என் உரிமை. நீங்கள் நோன்பு இருப்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதற்காக நான் என் உணவை நிறுத்த முடியாது. பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வேறு இடத்திற்குச் செல்லலாம்” என்று நேராகக் கூறினார்.

அவர் தொடர்ந்து வாதிட்டபோதும்,

“நீங்கள் விரதம் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். பொதுவெளியில் வந்து மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது” என்று தைரியமாக பதிலளித்தார்.

ஒருவரின் மத நம்பிக்கை அவருடைய தனிப்பட்ட விஷயம்.

ஆனால் மதம் சார்ந்த விஷயங்களில் இப்படிப்பட்ட தலையீடுகள் மற்றவர்கள்மேல் திணிக்கப்படுவது சரியல்ல.

அந்தப் பெண்ணின் தைரியத்திற்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். 👏

உலகம் முழுவதும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு எளிய உண்மை:

“உன் மதம் உன்னோட…

என் உரிமை என்னோட!”

யார் மிரட்டினாலும் தலைகுனியாமல், தன் உரிமையை தைரியமாகக் காக்கும் மனநிலையே சுதந்திர சமூகத்தின் அடையாளம்.

No comments:

Post a Comment

English is important fees Employers