https://pagadhu.blogspot.com/2025/12/whistle-blower.html வாராகி - Whistle blower மீதான குண்டர் சட்டம் ரத்து. போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கண்டனம்
சென்னை போலீஸ் கமிஷனர் வாராகி விசில் பிளோயருக்கு போலி வழக்குகள் தொடுத்தார்: விசாரணைக்கு CB-CID-க்கு மாற்றம் – மதுரை உயர்நீதிமன்றம்


சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். கடந்த மார்ச் 28, 2026 அன்று அனுப்பப்பட்ட இந்த உத்தரவில், சவுக்கு சங்கரின் ‘@SavukkuOfficial’ என்ற எக்ஸ் தளத்தை உடனடியாக முடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 94-ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள மூன்று முக்கிய குற்ற வழக்கு எண்களை (Cr. No: 17/2025, 22/2025, 29/2025) சுட்டிக்காட்டியுள்ள போலீசார், அவர் தற்போது தலைமறைவாக இருந்தாலும், தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக விசாரணை மற்றும் வழக்கு முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், சவுக்கு சங்கர் தனது பக்கத்தில் பதிவிட்டிருந்த மூன்று குறிப்பிட்ட பதிவுகள் சட்டவிரோதமானவை என்று கண்டறியப்பட்டு, அவற்றின் இணைய இணைப்புகளையும் (URL) சைபர் கிரைம் பிரிவு எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. மேலும், குற்றவியல் புலனாய்வுப் பணிகளுக்காக கடந்த ஜனவரி 1, 2026 முதல் மார்ச் 25, 2026 வரையிலான காலக்கட்டத்திற்குரிய ஐபி லாக் (IP Log) விவரங்கள், கணக்கைத் தொடங்கும் போது பயன்படுத்தப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர, கணக்கை மீட்டெடுப்பதற்கான மின்னஞ்சல் (Recovery Email) மற்றும் அந்த தளம் பயன்படுத்தப்பட்ட சாதனங்களின் ஐஎம்இஐ (IMEI) எண்கள் உள்ளிட்ட அனைத்து நுட்பமான தொழில்நுட்பத் தரவுகளையும் வழங்க வேண்டும் என காவல்துறை கண்டிப்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது சவுக்கு சங்கர் மீது அவதூறு பரப்புதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் தொடர்பான புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், தற்போதைய விசாரணையைத் தடையின்றி முன்னெடுக்கவும் இந்தத் தரவுகள் அவசியம் என சென்னை காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தலைமறைவாக இருக்கும் சூழலில், தொழில்நுட்ப ரீதியாக அவரைச் சுற்றியுள்ள பிடியை இறுக்குவதன் மூலம் இந்த வழக்கில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எட்ட முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர். சர்வதேச அளவில் செயல்படும் எக்ஸ் நிறுவனம், இந்தியச் சட்ட விதிகளின் கீழ் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments:
Post a Comment