Friday, May 29, 2026

திருச்செந்தூர் கோவிலில் அமைச்சரிடம் ரூ.4000 வாங்கி ஸ்பெஷல் தரிசனம் என சிக்கினர்


அமைச்சர் ரமேஷ், சாதாரண பக்தரைப் போல மாஸ்க் மற்றும் கருப்பு உடை அணிந்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் கோவிலுக்குள் சென்று ஆய்வை மேற்கொண்டார்.லஞ்சம் அம்பலம்: அப்போது வி.ஐ.பி தரிசனத்திற்காக அமைச்சரின் உதவியாளரிடமே சிலர் பணம் கேட்டது அம்பலமானது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட ஆய்வில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட ஐயப்பன் ஐயருக்கு, மறு உத்தரவு வரும் வரை கோயிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் இந்த நடடிக்கை வரவேற்கிறோம், தமிழகத்தில் இந்து சமய அறநிலிஅயத் துறை மேற்பார்வை கீழ் உள்ள பெரும்பாலான கோவில்களில் (90% அந்தண பூசாரி இல்லை- பெரிய கோவில்கள் ஆன மேல் மலையனூர், சிறுவாச்சூர் போல) கட்டண தரிசனம், கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.
அரசு கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை களைய உளபூர்வமாக விரும்புகிறதென்றால் கோவிலுக்குள் மொபைல் போண் கொண்டு செல்லக் கூடாது என்கிற தடையை நீக்க வேண்டும். கர்ப்பகிரக முன் மண்டபம் தவிர மற்ற பிரகாரங்களில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதை செய்தாலே அமைச்சர் கண்டுபிடித்த ஒரு குற்றத்தைப் போல ஓராயிரம் குற்றங்கள் தினம் வெளிவர ஆரம்பிக்கும். இதற்காக அமைச்சர் இத்தனை மெனக்கெட வேண்டியதில்லை. புனரமைப்பு என்ற பெயரில் பழம் பெரும் கோவில்கள் சிதைக்கப்படும் அவலங்கள் மொபைல் போண் தடையால் வெளியே தெரியாமல் போகிறது. தவறுகளை சுட்டிக் காட்டினால் அரசு நினைத்தால் சட்டத்தை மீறியதாக, நீங்கள் கோவிலுக்குள் எப்படி புகைப்படம் எடுத்தீர்கள் என உங்கள் மீதே வழக்கு பதிய முடியும். கோவிலுக்குள் மொபைல் கொண்டு சென்றால் கோவிலின் புனிதம் கெட்டு விடும் என்கிற வாதம் அங்கு நடக்கும் அப்புனிதத்திற்கு விரோதமான பல விஷயங்களை மறைக்கவே உதவுகிறது.

 தமிழரின் மரபை ஒட்டி திருச்செந்தூர் கோவில் உட்பட பிற கோவில்களுக்குமான நல்ல தீர்வை சொல்கிறார் Bcak Nayar ஜி.
_____________________________________
திருசெந்தூர் கோவிலில் தரிசனம் செய்து வைப்பது அக்கோவில் அர்ச்சகர்கள் அல்ல. 
மூலஸ்தான அர்ச்சகர்கள் துளு பிராமணர்கள். அவர்கள் இருப்பதே தெரியாது. இது தவிர ஆதி சைவர்கள் வேறு ஒரு சந்நதியில் உள்ளனர்.
 பெரும்பாலும் தரிசனம் செய்து வைப்பது திரிசுதந்திரர் என்று அழைக்கப்படும் ஸ்தலத்தார். இவர்கள் குறைந்தது 500 வருடங்களாக அங்கு இருக்கின்றனர். நூற்றாண்டுகள் முன்பே கோவிலை காக்க போராடி உள்ளனர். இவர்கள் தேவஸ்தான ஊழியர்கள் அல்ல.
 இவர்கள் மண்ணின் மைந்தர்கள்.  பூர்வ குடியினர். 
இவர்களுக்கு தரிசனம் செய்து வைக்கும் உரிமை உண்டு என்றே நான் நம்புகிறேன். 
அரசே இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளுக்கு 10 நபர்களை அழைத்து போகும் உரிமையை கொடுக்கலாம். 
பிற பாரம்பர்ய அர்ச்சகர்களுக்கும் , கோவிலின் மரபு சார்ந்த பழைய சேவை குடிகளுக்கும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் தரிசனம் செய்து வைக்க அனுமதி கொடுக்கலாம். 
ஒரு கோவில் பிரபலமாகும் போது  அக்கோவிலை சார்ந்த பழைய குடிகளுக்கு சில சலுகைகள் கொடுப்பதில் தவறில்லை. 
திரி சுதந்திரர்கள் தங்களை நிர்வகிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களுள் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போன வாரம் இதே கோவிலில் போலி  ஸ்பெஷல் ரூ.100 ரூபாய் தரிசன டிக்கெட் விற்பனையில் சுமார் 25 லட்சம் ரூபாய் மோசடி ன ஒரு தற்காலிக ஊழியர் சஸ்பெண்ட் என்பதில் ஏன் போலீஸ் புகார் FIR இல்லை. இதன் பின்னர் ஒரு பெரும் கும்பல் உள்ளதை கண்டுபிடிக்க வேண்டும்

 

முருகன் கோயிலில் 100 ரூபாய் தரிசன டிக்கெட் விற்பனையில் சுமார் 25 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அலுவலக உதவியாளர் கட்டுக்கட்டாக பணத்தைப் பதுக்கி வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த முறைகேட்டில் அவருக்கு மட்டுமே தொடர்பிருப்பதாக கூறப்படுவதை மக்கள் நம்ப மறுக்கின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோயிலில், டிக்கெட் வருவாய் குறைவதை நிர்வாகத்தினர் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. டிக்கெட் எண்ணிக்கையை பதிவு செய்யும் லெட்ஜர், அதை சரிபார்க்கும் கண்காணிப்பாளர் மற்றும் இணை ஆணையர் என ஒவ்வொரு நிலையிலும் முறையான தணிக்கை இருந்திருக்கும்.
அப்படியிருக்கையில், இத்தனை மாதங்களாக இந்த தொடர் மோசடி நடைபெறுவதை யாரும் அறியவில்லை என்பது, ஒரு மெகா கூட்டணி அமைத்து இந்த ஊழல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. மேலதிகாரியின் அனுமதி இன்றி போலி டிக்கெட் விநியோகம் சாத்தியமில்லை என்பதால், உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரது துணையும் இதில் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இந்த முறைகேடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், வெறும் மேலோட்டமான விசாரணையோடு நிறுத்தாமல், முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துக்களையும், பக்தர்களின் காணிக்கையையும் பாதுகாப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டிய தருணம் இது.
https://newstamil.tv/article/districtnews/lattu-fraud-in-rameswaram-temple-rs-35-crore

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதத் திட்டத்தில் சுமார் ₹3.40 கோடி அளவுக்குப் பெரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடி நடைபெற்றுள்ளது மே 2026-ல் கண்டறியப்பட்டது. [1, 2]
இந்த மோசடி தொடர்பான முக்கியத் தகவல்கள் இதோ:
  • மோசடியின் விதம்: பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய லட்டுகளை, கோவில் ஊழியர்கள் சிலர் சட்டவிரோதமாகக் கட்டணக் கவுண்டர்களில் விற்றுப் பணத்தைச் சுருட்டியுள்ளனர். இதற்காக வெளியில் இருந்து மூலப்பொருட்களைக் கொண்டு வந்து தனியாக லட்டுகளைத் தயாரித்துக் கோவிலின் அதிகாரப்பூர்வ இருப்போடு கலந்து மோசடி செய்துள்ளனர். [1, 2, 3, 4]
  • காலக்கட்டம்: 2023 முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 11.4 லட்சம் லட்டுகள் இவ்வாறு முறைகேடாக விற்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. [1, 2]
  • நடவடிக்கை: இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட 6 நிரந்தர ஊழியர்கள் (இளநிலை உதவியாளர்கள், டிக்கெட் விற்பனையாளர்கள் உட்பட) பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். [1, 2, 3, 4, 5]
  • தொடர்புடைய நபர்கள்: இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி என்பவர் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இவருடன் லாவண்யா, அம்பிகா, செல்வி, சிவனேஸ்வரி மற்றும் விக்ரம் ஆகிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. [1, 2, 3, 4, 5]
இது தொடர்பாகக் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) உத்தரவிட்டுள்ளது. [1, 2, 3]

 



No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...