Saturday, May 30, 2026

திருச்செந்தூர் கோயில் ₹.450 கோடி செலவில் பணிகள் - முழுமையான வெள்ளை அறிக்கை வேண்டும்

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டு பெருந்திட்டவளாக பணி மொத்த செலவு ₹ 306.35 கோடிகள்: திரு சிவநாடார் வாமசுந்தரி இன்வெஸ்ட்மெண்ட்ஸ்  உபயதாரர் நிதி மூலம் ₹ 206.45 கோடி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ‌G.O.157/03.04.23 அரசாணையின் படி ₹ 99.90 கோடிகள். பழைய ஜெயந்திநாதர், வேலவன் விடுதி வளாகத்தை முற்றிலும் இடித்துவிட்டு ஏப்ரல் 2021க்கு முன்பே முந்தைய AIADMK அரசால் திரும்ப கட்டப்பட்டிருந்த (75% முடிவு நிலையிலுள்ளதை Google Earth  படத்தில் காண்க)  விடுதி  வளாகம் ₹ 48.36 கோடி செலவில் முற்றிலும் முடித்து வைக்கப்பட்டதாக (?!?!) அறிவிக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களால் 14.10.24 அன்று திறந்து  வைக்கப்பட்டது. 

ஏற்கனவே செலவிடப்பட்ட பல செலவீனங்களும், இந்து சமய அறநிலை சட்டத்தில் அனுமதிக்கப்படாத செலவுகள் பலவும், குறிப்பாக அரசு செய்ய வேண்டிய கடல்நீர ரிப்பு தடுப்புக் கட்டுமானப்பணி செலவு இந்த அரசாணை  G.O.157இல் உள்ளடங்கியுள்ளதால் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி WP(MD) 1442/2025 பொதுநல வழக்கையும், அதைத்தொடர்ந்து பட்டயக் கணக்காயரடங்கிய உயர்மட்டக்குழு‌வை நியமித்து அக்குழு அனைத்து பெருந்திட்டவளாக வரவு செலவு  கணக்குகளை ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில்   சமர்ப்பிப்பதற்கான  இடைக்கால உறுத்துக்கட்டளையை பிறப்பிக்கக்கோரி WMP(MD)22175 பலவகை மனுவையும் தாக்கல் செய்திருந்தோம். 


இதைத் தவிர அறநிலையத்துறை அமைச்சரகத்தின் செய்தி வெளியீடு 115/09.10.24 லிருந்து மீன் வளத்துறைமூலம் திருச்செந்தூர் கடற்கரையில் பாறைகள் நிரப்பும் பணிக்காக திருக்கோயில் நிதியிலிருந்து ₹ 10 கோடி செலவிடப்படுவது ஊர்ஜிதமாகிறது.     ஆலயம் காப்போம் அமைப்பின் வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மேலும் திருக்கோயில் நிதியிலிருந்து ₹ 19.20 கோடி யாத்ரி நிவாஸ் கட்டுமான பணி செலவுக்காக G.O.294/16.12.2022 என்ற அரசாணையும்,  ₹ 19.80 கோடி கடல்நீரரிப்பு தடுப்புக் கட்டுமானப்பணி செலவுக்காக G.O.23/11.01.2023 என்ற அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆக,‌ இந்த மூன்று அரசாணைகளின் படி திருக்கோயில் நிதியிலிருந்து மொத்த செலவு               ₹.138.90 கோடி,  இத்துடன் கடற்கரையில் பாறைகள் நிரப்பும் பணிச்செலவு ₹ 10 கோடி‌யையும்   கூட்டிப்பார்த்தால் திருக்கோயில் நிதியில்  செலவு மொத்தம்‌  ₹ 148.90 கோடி ஆகிறது. 30.6.19 அன்று திருக்கோயிலின் மொத்த வைப்பு நிதி தொகை ₹ 210 கோடியாக   இருக்கும் நிலையில், கோயில் நீதியிலிருந்து ₹ 148.90 கோடி செலவு செய்யப்படுவது அறநிலைய சட்டத்தின் உபநிதி விதிகளுக்கு  எதிரானது,  அதை எவ்வாறு‌ செய்ய முடியும்? இந்த அனைத்து விதி மீறல்களுக்கும் துணை போன அன்றைய அறநிலையத்துறை ஆணையரே தற்போதைய அரசின் அறநிலையத் துறை செயலாளர் என்பது துரதிர்ஷ்ட வசமானது. சட்ட ரீதியாக  விசாரணையிலுள்ள எங்கள் வழக்குகள் மூலம்  கோயில் நிதியை ஒட்டுமொத்தமாக சுரண்டுவதை எதிர்த்து  வெற்றி பெறுவோம் என்றும், முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று உறுதி மொழியளித்த புதிய தமிழக அரசு இவ்வித முறைகேடுகளுக்கு துணை நிற்காது என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.


வெற்றிவேல்! வீரவேல்! ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

சேகர் பாபு ஏப்பமிட்ட 19 கோடி - திருச்செந்தூர் முருகன் தான் கேட்க வேண்டும்.
திருச்செந்தூர் கோவில் கடற்கரைப் பகுதியில் ஏற்படும் கடுமையான கடல் அரிப்பைத் தடுத்து, பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கும், கோவில் பிரகார அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) சேகர் பாபு அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது திமுக அரசின் மூலம் மூலம் **₹19.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்புப் பலகைகளும் (Flex) வைக்கப்பட்டன.
இருப்பினும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்துப் பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
கடல் அரிப்பு தடுப்பு பணிகள் எங்கு, எவ்வாறு நடைபெறுகின்றன மற்றும் இந்த டென்டரைப் பெற்று பணிகளைச் செயல்படுத்தும் நிறுவனம் எது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, உரிய காலக்கெடுவிற்குள் முறையான பதில்கள் வழங்கப்படவில்லை. இது திட்டத்தின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.
அமலிநகர் பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அங்கு தூண்டில் பாலம் அமைக்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்தது.
உண்மையில் கோவில் அருகே அமைக்கப்பட வேண்டிய கடல் அரிப்பு தடுப்புப் பாலம், அரசியல் அல்லது உள்ளூர் காரணங்களால் சுமார் 500 மீட்டர் தள்ளி அமலிநகர் பகுதியில் அமைக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருக்கோவில் நிதியான ₹19.80 கோடி, அதன் அசல் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படாமல், மீன்வளத்துறையின் திட்டத்திற்காக மறைமுகமாக மடைமாற்றப்பட்டதா என்ற கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். ஆனால் இப்போது முன்னாள் அமைச்சராக மாறிவிட்டார்.
தூண்டில் பாலங்கள் பொதுவாகக் கடல் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவும் அமைப்பவை. ஆனால், அறிவியல் பூர்வமான முறையான திட்டமிடல் இன்றி இவை அமைக்கப்படும் போது, ஒரு பகுதியில் மணல் சேர்வதற்கும் மற்றொரு பகுதியில் கடுமையான மண் அரிப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அடிக்கடி கடல் உள்வாங்குவதற்கும், பக்தர்கள் நீராடும் பகுதியில் ஆபத்தான பெரிய பள்ளங்கள் உருவாவதற்கும் இந்த அமலிநகர் தூண்டில் பாலத்தின் தவறான அமைவிடமே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பக்தர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தற்காலிக ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அதை முழுநேரமும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள Executive Officers மீதும் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை பாய வேண்டும். அவர்களின் கண்காணிப்புத் தவறியதே இத்தகைய முறைகேடுகளுக்குக் காரணம்.
ஒதுக்கப்பட்ட ₹19.80 கோடி நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா, பணிகள் தரைமட்டத்தில் முறையாக நடந்தனவா, அல்லது அது லஞ்ச ஊழலாக மாற்றப்பட்டதா என்பதை அறிய உயர்நிலை தணிக்கை மற்றும் தொழில்நுட்பக் குழு விசாரணை அவசியமாகிறது.

No comments:

Post a Comment

திருச்செந்தூர் கோயில் ₹.450 கோடி செலவில் பணிகள் - முழுமையான வெள்ளை அறிக்கை வேண்டும்

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டு பெருந்திட்டவளாக பணி மொத்த செலவு ₹ 306.35 கோடிகள்: திரு சிவநாடார் வாமசுந்தரி இன்...