திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டு பெருந்திட்டவளாக பணி மொத்த செலவு ₹ 306.35 கோடிகள்: திரு சிவநாடார் வாமசுந்தரி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உபயதாரர் நிதி மூலம் ₹ 206.45 கோடி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் G.O.157/03.04.23 அரசாணையின் படி ₹ 99.90 கோடிகள். பழைய ஜெயந்திநாதர், வேலவன் விடுதி வளாகத்தை முற்றிலும் இடித்துவிட்டு ஏப்ரல் 2021க்கு முன்பே முந்தைய AIADMK அரசால் திரும்ப கட்டப்பட்டிருந்த (75% முடிவு நிலையிலுள்ளதை Google Earth படத்தில் காண்க) விடுதி வளாகம் ₹ 48.36 கோடி செலவில் முற்றிலும் முடித்து வைக்கப்பட்டதாக (?!?!) அறிவிக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களால் 14.10.24 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே செலவிடப்பட்ட பல செலவீனங்களும், இந்து சமய அறநிலை சட்டத்தில் அனுமதிக்கப்படாத செலவுகள் பலவும், குறிப்பாக அரசு செய்ய வேண்டிய கடல்நீர ரிப்பு தடுப்புக் கட்டுமானப்பணி செலவு இந்த அரசாணை G.O.157இல் உள்ளடங்கியுள்ளதால் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி WP(MD) 1442/2025 பொதுநல வழக்கையும், அதைத்தொடர்ந்து பட்டயக் கணக்காயரடங்கிய உயர்மட்டக்குழுவை நியமித்து அக்குழு அனைத்து பெருந்திட்டவளாக வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான இடைக்கால உறுத்துக்கட்டளையை பிறப்பிக்கக்கோரி WMP(MD)22175 பலவகை மனுவையும் தாக்கல் செய்திருந்தோம்.
இதைத் தவிர அறநிலையத்துறை அமைச்சரகத்தின் செய்தி வெளியீடு 115/09.10.24 லிருந்து மீன் வளத்துறைமூலம் திருச்செந்தூர் கடற்கரையில் பாறைகள் நிரப்பும் பணிக்காக திருக்கோயில் நிதியிலிருந்து ₹ 10 கோடி செலவிடப்படுவது ஊர்ஜிதமாகிறது. ஆலயம் காப்போம் அமைப்பின் வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மேலும் திருக்கோயில் நிதியிலிருந்து ₹ 19.20 கோடி யாத்ரி நிவாஸ் கட்டுமான பணி செலவுக்காக G.O.294/16.12.2022 என்ற அரசாணையும், ₹ 19.80 கோடி கடல்நீரரிப்பு தடுப்புக் கட்டுமானப்பணி செலவுக்காக G.O.23/11.01.2023 என்ற அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆக, இந்த மூன்று அரசாணைகளின் படி திருக்கோயில் நிதியிலிருந்து மொத்த செலவு ₹.138.90 கோடி, இத்துடன் கடற்கரையில் பாறைகள் நிரப்பும் பணிச்செலவு ₹ 10 கோடியையும் கூட்டிப்பார்த்தால் திருக்கோயில் நிதியில் செலவு மொத்தம் ₹ 148.90 கோடி ஆகிறது. 30.6.19 அன்று திருக்கோயிலின் மொத்த வைப்பு நிதி தொகை ₹ 210 கோடியாக இருக்கும் நிலையில், கோயில் நீதியிலிருந்து ₹ 148.90 கோடி செலவு செய்யப்படுவது அறநிலைய சட்டத்தின் உபநிதி விதிகளுக்கு எதிரானது, அதை எவ்வாறு செய்ய முடியும்? இந்த அனைத்து விதி மீறல்களுக்கும் துணை போன அன்றைய அறநிலையத்துறை ஆணையரே தற்போதைய அரசின் அறநிலையத் துறை செயலாளர் என்பது துரதிர்ஷ்ட வசமானது. சட்ட ரீதியாக விசாரணையிலுள்ள எங்கள் வழக்குகள் மூலம் கோயில் நிதியை ஒட்டுமொத்தமாக சுரண்டுவதை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்றும், முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று உறுதி மொழியளித்த புதிய தமிழக அரசு இவ்வித முறைகேடுகளுக்கு துணை நிற்காது என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.
வெற்றிவேல்! வீரவேல்! ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!







No comments:
Post a Comment