1991 ல் திமுக அரசு கலைப்பு...
அப்போது பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். அவரை முதல்வராக இருந்த கருணாநிதி சந்தித்தார்.
பிறகு சந்திரசேகர் ஒரு அறிக்கையில் - "முதல்வரிடம் தனியறையில் நான் கூறும் விஷயங்கள் உடனே விடுதலைப் புலிகளுக்குச் சென்று சேர்ந்து விடுகிறது"- என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து திரும்பிய இந்திய அமைதிப் படையை (IPKF) வரவேற்க கருணாநிதி போகாதது...
"தமிழச்சிகளை கொன்ற இந்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன்"- என்று கருணாநிதி பகிரங்கமாகக் கூறியது...
டி.ஜி.பி துரை அக்காமடம், தங்கச்சிமடம், உச்சிப்புளி போன்ற இடங்களில் "ஆய்வு" செய்து - "தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை"- என்று அறிக்கை கொடுத்தது...
அதற்கு சில தினங்களுக்குள்ளாகவே சென்னையில் ஜக்ரியா காலனி (கோடம்பாக்கம்) பகுதியில் - ஜன நெருக்கம் மிகுந்த பகுதியில் - பட்டப்பகலில் EPRLF தலைவர் பத்மநாபா உள்ளிட்ட அவருடைய 14 தோழர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டு சாவகாசமாக தப்பித்துச் சென்றது...
காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, சுப்ரமணியம் ஸ்வாமி, துக்ளக் "சோ" போன்றவர்கள் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் பற்றியும், உள்ளூரில் அவர்களுடைய ஆதரவாளர்களின் செயல்பாடைகள் குறித்து எச்சரித்தும் திமுக அரசு மெத்தனமாக இருந்தது...
இப்படிப்பட்ட காரணங்களுக்காக காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து பிரதமர் சந்திரசேகருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக...
திமுக அரசு 1991 ல் கலைக்கப்பட்டது.

No comments:
Post a Comment